Announcement

Collapse
No announcement yet.

Kothumbi from Thiruvasagam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kothumbi from Thiruvasagam

    Courtesy:Sri.GS.Dattatreyan


    இறையன்பர்களுக்குப் பணிவுடன் ,
    சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனைக்
    கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
    ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்
    சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ !
    மாணிக்கவாசகர் .
    ....................................................................
    " சட்டோ நினைக்க மனத்து அமுதாம்
    சங்கரனை மறப்பேனோ ! மறந்தால்
    கெட்டேன் ! கேடுபடாத் திருவடியை
    ஒட்டாத பாவி நாம் தொழும்பரை உரு
    அறியோம் " என்கிறார் .
    இந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்கு
    நமச்சிவாயப் பதிகம் தான் நினைவுக்கு
    வந்தது .
    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கல்லால்
    நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்
    குலமிலராகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே .
    நாவுக்கரசர் .
    " சந்தித்த கோவணத்தர் வெண்ணூல்
    மார்பர் சங்கரனைக் கண்டீரோ " எனக்
    கேட்க " பந்தித்த வெள் விடையில் பாய
    ஏறி படுதலையில் என்கொலோ ஏந்திக்
    கொண்டு சென்ற சங்கரனைக் கண்டோம் " என்றனர் . அத்தகைய
    சங்கரன் என் மனத்துள் ஊறும் அமுது .
    அவனைக் கண்டும் அவனோடு ஒட்டிச்
    செல்லாத பாவியானேன் .
    இப்படிப்பட்ட சங்கரனை மறக்கலாமா !
    நினைத்தொறும் , காண்தொறும் ,
    பேசும்தொறும் அனைத்து எலும்பும் உள்
    நெக ஆனந்தத் தேன் சொரியும் அம்பலவன் அல்லவா ! அவன் !
    அவனை நினைக்க நினைக்க மனத்திலே அமுது ஊறும் . இன்பத்
    தேன் சொரியும் . அத்தகைய சங்கரனை மறந்தால் கெடுவேன் .
    பொலிகின்ற அவன் திருவடி என் மனதுள் புகுதப் பெற்று ஆக்கையைப்
    போக்கப் பெற்று மெலிகின்ற என்னை
    ஆட்கொண்ட பெருமான் . மன்னும் திரு
    உத்தரகோசமங்கைத் தலைவன் .
    வினையேன் மனத்து அவன் ஊறும் தேன் . ஞானக் கரும்பின் தெளிவு அவன் . பழச் சுவையும் அவனே !
    சித்தம் புகுந்து தித்திக்க வல்ல பெருமான் . என் பிறப்பு அறுத்து ஆட்
    கொண்ட வள்ளல் . வண்ணப்பணித்து
    என்னை வா என்று கருணை செய்த
    கருணாகரன் . அவன் மெய்த் தேவன் .
    பித்த உலகில் பிறப்பொடு இறப்பு
    என்னும் சித்த விகாரக் கலக்கம்
    தெளிவித்த வித்தகத் தேவன் .
    இப்படிப்பட்ட சிவபெருமான் அன்று
    திருப்பெருந்துறையில் , தனது கேடு
    படாத் திருவடியைக் காட்டினான் .
    அத்திருவடிகளை ஒற்றிக் கொண்டு
    அவனோடு செல்லாமல் நின்ற பாவி
    ஆனேன் . அன்று அவன் திருவடியைப்
    பற்றிச் சென்றிருந்தால் இத்தனை காலம் நான் அலைந்து திரிந்து
    இருக்க வேண்டாம் . இதுவும் அவன்
    செயல் .
    திருவடியை பற்றிச் செல்லவில்லை
    ஆயினும் , அவனோடு வந்த
    அடியார்களைத் தொடர்ந்தாவது நான்
    சென்றிருக்க வேண்டும் . அதனையும்
    விடுத்தேன் .அவன் திருவடி ஒன்றையே
    பற்றி வாழும் , தொழும்பர் கூட்டத்தை
    மதிக்கத் தவறிவிட்டேன் . சங்கரனை
    மறந்தேன் . சங்கரன் திருவடியை தம்
    ஆழ் மனதில் பதித்து வாழும் அடியார்
    கூட்டத்தையும் மறந்தேன் .
    " மாறி நின்று என்னை மயக்கிடும்
    வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து
    அமுதே ஊறி நின்று என்னுள் எழும்
    பரஞ்சோதியாய் " நின்றான் . அதனை
    மறந்தேன் . கெட்டேன் . இனி எந்தக்
    காலத்தும் இது நடவாது பார்த்துக்
    கொள்வாய் பரம்பொருளே !
    யாம் செய்த வல்வினையைக் கழிதரு
    காலமுமாய் எம்மைக் காப்பவனே !
    உணர்வாய் என் உள் கலந்து தேனாய்
    அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய்
    வானோர் அறியா வழி எமக்குத்
    தந்தருளும் தேனார் கொன்றைச் சிவனை இனி மறவேன் என்றார் .
    மயக்கங்கள் கொண்ட மனத்தோடு
    அன்று உன்னை ஒட்டாத பாவிக்கு ,
    உனைப் பிரிந்து வாழும் இச்சிறியேன்
    தனக்கு , " வா என்று உன் ஞானத்தால்
    தெளிந்த அடியார் கூட்டம் காட்டாயேல் "
    மிகவும் வருந்துவேன் . தளர்ந்து
    ஒடிந்து உருகா நிற்கும் இந்த உயிர்க்கு
    இரங்கி அருள் புரிவாய் .
    அறிவின் சிகரமே ! ஆற்றலுடைப்
    பெருமானே ! வாழ்வின் மூலமே ! என்
    வாழ் முதலே ! என பெருமான் திருவடியில் சென்று அவன் புகழ்
    பாடுவாய் , வண்டே என்கிறார் .
    " சிட்டாய சிட்டர்க்கே சென்று ஊதாய்
    கோத்தும்பீ "
    ( சிட்டாய -- அறிவுடைப் பொருளாகிய )
    ....................................................................
Working...
X