Announcement

Collapse
No announcement yet.

மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத இதி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத இதி&

    இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும், மகாபாரதத்தில் வரும்
    ஒரு இறப்பில்லாத இதிகாச கதாநாயகன் பற்றி நீங்கள் அறிவீர்களா?
    கேட்க அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது தானே?
    ஆனால் மிகப்பெரிய இந்திய இதிகாசமாக மகாபாரதத்தில்
    இவ்வகையான மர்மம் கலந்த கதைகளும் நிகழ்வுகளும் ஏராளம்.
    இந்த இதிகாசத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒரு மர்மம்
    இணைந்திருக்கும். அதனால் தான் என்னவோ உலகத்திலேயே
    மிக நீளமான இதிகாசமாகவும், சுவாரஸ்யமான இதிகாசவும்
    இது விளங்குகிறது.

    பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய
    போர் வீரர் பல பேருக்கு மகாபாரதம் என்பது மிகவும் குழப்பமான
    கதையாக விளங்கும். அதற்கு காரணம் மகாபாரதத்தில் அத்தனை
    கதாபாத்திரங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும்
    ஒருவரோடு ஒருவர் சம்பந்தமுடையவராக இருப்பார்.

    இந்த புராணத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என
    புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால்,
    மற்ற கதாபாத்திரங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
    ஆனால் இந்த புராணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர்.
    அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் அஸ்வத்தாமா.

    அஸ்வத்தாமா யார்? அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும்
    கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின்
    புதல்வனாவார். துரோணாச்சாரியார் மற்றும் அவருடைய
    மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா.
    அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல்
    பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும்
    இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது. வில்வித்தை மற்றும்
    இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த
    போர் வீரராக அவர் வளர்ந்தார்.

    உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது
    அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட
    துரோணாச்சாரியார், தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டார்.
    அப்போது திரிஷ்டட்யூம்னரால் அவர் கொல்லப்பட்டார்.

    திரௌபதிக்குப் பிறந்த ஐந்து மகன்களும் தேவலோக விஸ்வாக்களாவர்.
    அவர்களின் பெயர்கள் பிரிதிவிந்தியன், சூதசோமா, சுரூதகீர்த்தி,
    சதானிகா, மற்றும் சுரூதசேனா ஆகும். -

    தன தந்தை துரோணரை பழி வாங்கிய பாண்டவர்களை பழி வாங்க
    நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவின் போது,
    பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின்
    ஐந்து புதல்வர்களையும் கொன்றார். தன் தவறை உணர்ந்த அவர்,
    பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை
    பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த
    வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார்.

    ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி வைப்பது
    என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின்
    கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல
    அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை
    அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.

    அஸ்வத்தாமா தன்னுடைய ஆசிரமத்தில் உட்கார்ந்திருந்தபடியே
    பிரம்மாஸ்திரத்தை விட்டு விட்டார் – உத்தரையின் கர்ப்பத்திலிருந்த
    சிசுவை நசிக்க வேண்டி!

    இதுவும் மந்த-மதியின் லக்ஷணம்! எனக்கு ஒரு கண் நொள்ளையானாலும்
    பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போய் விட வேண்டும்.

    பிரம்மாஸ்திரம் ஆகாய-மார்க்கமாக வந்து கொண்டிருந்தது. மஹாராணி-
    உத்தரை கண்டு கொண்டு விட்டாள் – மந்திரத்தில் பிரம்மாஸ்திரம் இருந்தது.
    அவள் அலறிக் கொண்டே கோவிந்தனின் சரணங்களில் விழுந்து விட்டாள்.

    पाहि पाहि महायोगिन् देवदेव जगत्पते ।
    नान्यं त्वदभयं पश्ये यत्र मृत्युः परस्परम् ॥

    ‘கிருஷ்ணா , என்னை ரக்ஷியுங்கள்! கோவிந்தா, என்னைக் காப்பாற்றுங்கள்!’
    कामं दहतु मां नाथ मा मे गर्भो निपात्यताम् ॥
    ‘இந்த பிரம்மாஸ்திரம் என்னை எரித்து பஸ்மமாக்கி விடுமே – என்று நான்
    கவலைப்படவில்லை! ஆனால், என் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையைக்
    காப்பாற்றுங்கள்!’

    கோவிந்தன் சூக்ஷுமரூபத்தை எடுத்துக் கொண்டு உத்தரையின் கர்ப்பத்தில்
    பிரவேசித்து விட்டார்! நான்கு புஜங்களைத் தரித்துக் கொண்டு, அவளுடைய
    கர்ப்பத்திலிருந்த சிசுவை ரக்ஷணை செய்து விட்டார்! கோவிந்தன்
    தன்னுடைய கதையை சுதர்ஸன-சக்கரத்தைப் போல சுழற்றினார்.
    குழந்தையைக் காப்பாற்றி விட்டார்!

    ‘பகவான் கர்ப்பத்தில் பிரவேசித்து, குழந்தையைக் காப்பாற்றினார்
    என்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை! பகவானோ எல்லோருடைய
    அணுவணுவில் இருக்கிறார்! யாருடைய கர்ப்பத்திலாவது அவர்
    பிரகடனமாகி, குழந்தையைக் காப்பாற்றினார் என்றால்,
    அதில் ஆச்சிரியம் என்ன இருக்கிறது?’

    சௌனகாதி ரிஷிகள் சொன்னார்கள், ‘எங்களுக்கு ஆச்சிரியமாகப்படுவது
    – பகவான் கர்ப்பத்தில் பிரவேசித்து, குழந்தையைக் காப்பாற்றி விட்டாரே
    என்பது தான்! நீங்கள் சொல்கிறீர்கள் – இதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை!’

    ‘என்ன ஆச்சிரியம்? அவர் எறும்புக்குள்ளும் இருக்கிறார்; யானைக்குள்ளும்
    இருக்கிறார்; சர்வ இடங்களிலும் வாசம் செய்கிறார். கர்ப்பத்தில் பிரவேசம்
    செய்து, யாரையாவது காப்பாற்றி விடுவதில் ஆச்சிரியம் என்ன இருக்கிறது?’

    இருந்தாலும், இந்தக் கிளை கதையில் ஒரு ஆச்சிரியம்
    என்னவோ நடந்திருக்கிறது!

    சூதரிஷி சொல்கிறார், ‘பகவான் கர்ப்பத்தில் பிரவேசித்து,
    குழந்தையைக் காப்பாற்றினார் என்பதில் ஆச்சிரியம் இல்லை.
    ஆச்சிரியம் என்னவென்றால் – கர்ப்பத்திலிருந்த அந்த பாலகன்
    எவ்வளவு பெரிய பாக்கியசாலி! அவன் இந்த உலகத்தில் ஜென்மம்
    எடுத்தது பின்னால்! பகவானுடைய தரிசனத்தை முதலிலேயே
    செய்து கொண்டு விட்டான்! இது தான் ஆச்சிரியம்!’

    உலக-சரித்திரத்தில் இது முதலும், கடைசியுமான சம்பவம்!
    நாம் வேறு எங்கேயும், எந்தக் கதைகளிலும் கேட்டிருக்க மாட்டோம் –
    கர்ப்பத்தில் பிரவேசித்து, பரமாத்மா யாரையாவது ரக்ஷணை செய்தார்
    என்று! நாம் எங்கேயுமே கேட்டதில்லை – கர்ப்பத்திலிருக்கும்
    ஒன்பது-மாச பாலகன் உலகத்தைப் பார்ப்பதற்கு முன்னால்,
    கர்ப்பத்திலேயே பகவானை தரிசித்துக் கொண்டிருந்தான் என்று!
    இப்படிப்பட்ட கதை, இந்தக் கதை மாத்திரமே! இது பரீக்ஷித்ராஜாவின்
    கதை! யார் கர்ப்பத்திலேயே பகவானைத் தரிசித்து விட்டாரோ,
    அவர் தானே பரீக்ஷித்ராஜா!

    ஒரு ரூபத்தில் பகவான் நின்று கொண்டிருக்கிறார்; இன்னொரு
    ரூபத்தில் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார், ‘மகளே, உனக்கு
    சிரமமெதுவுமில்லையே? உனக்கு கஷ்டமெதுவுமில்லையே?’

    அவர் கர்ப்பத்தில் போய், குழந்தையின் பிராணனைக் காப்பாற்றி விட்டார்.
    அஸ்வத்தாமாவின் இந்த குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர்,
    தன் பாவத்தை சுமக்கும் விதமாக, அஸ்வத்தாமா முடிவற்ற காலம் வரை
    இந்த பூமியை வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார்.
    எப்போதுமே அவர் யாருடைய அன்பையும் பெற முடியாது.
    அதே போல் யாராலும் அவர் வரவேற்கப்பட மாட்டார்.
    அவரின் நெற்றியில் உள்ள இரத்தினக்கல்லை திருப்பி கொடுக்கும் படியும்
    கிருஷ்ணர் கூறினார். அதனால் அவர் நெற்றியில் ஏற்பட போகும் புண்
    என்றும் ஆறாது என்றும் சாபமளித்தார். அதனால் தான் மோட்சத்தை தேடி
    இன்னமும் அஸ்வத்தாமா இந்த உலகத்தில் சுற்றி திரிகிறார்.

  • #2
    Re: மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத இத&#30

    மோட்சத்தை தேடி இன்றும் அலைந்துகொண்டிருக்கும் அஸ்வத்தாமா எங்கு இருக்கிறார் . எதோ ஒரு ரூபத்தில் இருக்கவேண்டும் அல்லவா .அதைப்பற்றி தெரிந்தால் சொல்லவும்

    Comment


    • #3
      Re: மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத இத&#30

      well narrated.
      tks for the story.
      anbudan
      jai

      Comment

      Working...
      X