Announcement

Collapse
No announcement yet.

சப்பாணி ,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சப்பாணி ,

    Vasumathi Rangarajan
    பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை '
    இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோத'
    கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க'
    சரந்தொட்ட கைகளால் சப்பாணி ,
    சார்ங்கவிற்க் கையனே சப்பாணி '
    'அப்ரமேயோ மஹாததி ' என்பது போல
    ஒருவராலும் எல்லைக்காண முடியாத
    ஆழமான இரத்தினங்களைக் கொண்ட
    சமுத்ரமானது , ஸ்ரீலங்கைட்குப் போக
    வழிவிடுக! என்று சரண்புகுகையில்
    மேலே ! மேலே ! அலையெறிகிற திறை
    கள் மோதி ! மோதச்செய்து முகங்காட்
    -டாது மறைந்து நின்ற சமுத்திரம் கீழ்
    மண் மேலேயும் , மேல் மண கீழேயும்
    எறிந்து கலங்க' செய்வதறியாதுதிகைக்க
    பிறகு இளையபெருமாளைப்பார்த்து
    லக்ஷ்மணா ! வில்லையும் நாகம் போல்
    கொடிய கணைகளையும் எடுத்து வா ! என சீறி சரம் தொட்ட கைகளால் சப்பாணி ' அப்போது சார்ங்கமாகிய வில்
    தனை தரித்தவனே ! சப்பாணி ,
Working...
X