Announcement

Collapse
No announcement yet.

படிப்படியாக..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • படிப்படியாக..

    படிப்படியாக..
    அகிலத்தில் உள்ள அனைத்து உயிகளிலும் அம்பிகை இருக்கிறாள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் கொலு. படிகளை எப்படி அமைக்க வேண்டும் என்று தேவி பாகவதம், தேவி மகாத்மியம் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.
    கொலுப்படிகளை ஒற்றைப்படையில்தான் அமைக்க வேண்டும்.
    * முதல் படியில், ஓரறிவு உயிகளான செடி, கொடி, பூங்கா, தோட்டம் போன்றவற்றின் வடிவங்களை வைக்கலாம்.
    * இரண்டாவது படியில், ஈறறிவு உயிர்களான அட்டை, நத்தை, சங்கு, ஊறும் பூச்சியின் வடிவங்களை வைக்கலாம்.
    * மூன்றாவது படியில், மூவறிவு உயிர்களின் வடிவங்களை ( கரையான், எறும்பு ) வைக்க வேண்டும்.
    * நான்காம் படியில், நான்கறிவு உயிர்கள் ( சிறு வண்டு, பறவைகள் ) வைக்கலாம்.
    * ஐந்தாம் படியில் : ஐந்தறிவு உயிர்கள் ( பசு, நாய், சிங்கம் போன்றவைகளை ) வைக்கலாம்.
    * ஆறாம் படியில் : ஆறறிவு உயிர்கள் ( மனித வடிவிலான பொம்மைகள், வாத்தியக்குழு, செட்டியார் பொம்மை, திருமண கோஷ்டி போன்றவைகள் ).
    * ஞானிகளுக்கு ஏழாவது அறிவும் உண்டு என்று சொல்வார்கள்.( மகான்கள், ஞானிகள், தபசிகளின் வடிவங்களை வைக்கலாம் ).
    * எட்டாம் படியில் : தெய்வ அவதாரங்களை வைக்க வேண்டும்.
    * ஒன்பதாம் படிதான் முக்கியம். அதில் பூரண கும்பம் வைத்து நிறைவு செய்யலாம்.
    -- பிருந்தா சீனிவாசன்.( ஆனந்த ஜோதி. உள்ளத்தின் உண்மை ஒளி. சிறப்புப் பகுதி. ஆன்மிகம் )
    -- ' தி இந்து ' நாளிதழ்.வியாழன், அக்டோபர் 3, 2013. .
    Posted by க. சந்தானம்
Working...
X