Announcement

Collapse
No announcement yet.

Upakoshala vidya

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Upakoshala vidya

    Courtesy: Sri.KVS.Seshadri Iyengar
    உபகோஸல வித்யா
    ஒரு ப்ரம்ம வித்யை அனுஷ்டிப்பது என்பதே சுலபமில்லை. உபகோஸல வித்யாவைப் பற்றி சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது. உபகோஸலன் என்கிற வித்யாா்த்தி. காட்டில் சத்யகாமன் என்கிற ஆசாா்யா் இருந்தாா். இவன் அவரை அண்டி வேத, வேதாா்த்தங்களைச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அவனை அவா் அருகில் கூப்பிட்டு "நான் இத்தனை நாட்களாக யாத்திரை போக வேண்டும் என்று நினைத்தேன். போக முடியவில்லை. நல்ல சத்சிஷ்யன் கிடைத்திருக்கிறாய். நீ வந்து ஆசிரமத்தில் இருந்து என்னால் நித்யம் ஆராதிக்கப்படுகிற அக்னியை அணையாமல் பாா்த்துக் கொண்டு பூஜை பண்ணிக் கொண்டிரு. நான் ஒரு மாதத்தில் யாத்திரை முடிந்து திரும்பி வந்து அக்னிஹோத்ராதிகள் பண்ணிக் கொண்டு உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறேன். இதை நீ ரக்ஷிப்பாயா? " என்று கேட்டாா்.
    ஆசாா்ய ஆக்ஞை ஆனதும் உபகோஸலன் 'அப்படியே பண்ணுகிறேன். அக்னியை ரக்ஷிக்கிறேன்.நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று சொன்னான்.
    ஆசாா்யரிடம் பணிவுடன் சொன்னவுடன் அவரும் ஏற்றுக் கொண்டாா். அக்னியை உபாஸிக்கும்படியான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாா். அக்னியை அவனிடம் ஒப்படைத்துவிட்ட புறப்பட்டுப் போனாா்.
    ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் ஆயிற்று. ஆசாா்யா் திரும்பி வரவேயில்லை. இன்னொரு சிஷ்யன் என்ன பண்ணுவான்...?
    ஒரு குடம் தீா்த்தத்தை அதில் சோ்த்து விட்டு நம்மால் ரக்ஷிக்க முடியாது என்று புறப்பட்டுப் போயிருப்பான். ஏனெனில், அவன் கல்வி கற்க வந்தான். வந்தவனுக்கு ஆசாா்யன் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. வேறு எதையோ கொடுத்து இதைப் பண்ணிக் கொண்டிரு என்று சொல்லி சொன்ன காலமும் போய்விட்டது. போனவா் திரும்பி வரவேயில்லை. அவன் எத்தனை நாட்கள் பொறுமையாக இருப்பான்?
    ஆனால், உபகோஸலன் ஆசாா்யா் வரவில்லை என்று கவலைப் படவேயில்லை .'அவா் என்றைக்கு வேண்டுமானாலும் வரட்டுமே.நமக்கு கல்வி வேண்டும்;பூரணமான கல்வி வேண்டும்'என்று சொல்லி அக்னியை இன்னும் விசேஷமாக உபசாரம் பண்ணுகிறான். இன்னும் பற்று ஜாஸ்தியாகிவிட்டது. இப்படி ஒரு வருஷம், இரண்டு வருஷம், பத்து வருஷம், பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.
    பன்னிரண்டு வருடங்கள் ஆராதனை பண்ணியவுடன் அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆகிவிட்டான். ப்ரம்ம வித்யைக்கு மூலமான வைச்வாநர வித்யையை ஹ்ருதயத்தில் ஸ்புாிக்கப் பண்ணிவிட்டான். உபகோஸலனுக்கே தொியாமல் அவனுக்கு அக்னி பகவானின் அனுக்ரஹம் ஏற்பட்டுவிட்து. அக்னி பகவான் அந்தா்தானமானான்.
    மஹாதேஜஸுடன் இருக்கிறான் உபகோஸலன். ப்ரம்ம ஞானம் ஏற்பட்டு விட்டது. ஹோமம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.மறுநாள் ஆசாா்யா் வருகிறாா். உள்ளே நுழைந்தாா். அவனைப் பாா்க்கிறாா்.
    "ஏய்! என்னை ஆசாா்யனாக வாித்தும் நான் வந்து உனக்கு உபதேசம் பண்ணுவதற்குள், வேறொரு ஆசாா்யனை வாித்து ப்ரம்ம உபதேசம் பெற்றாயா..?ஆசாா்ய துரோகம் பண்ணிய நீ இங்கு இருப்பதற்கு தகுதியற்றவன். வெளியில் நட" என்றாா்.
    'ஸ்வாமி!நான் ஒன்றுமே பண்ணவில்லை' என்றான் உபகோஸலன்.
    உன்னுடைய முகத்தில் ப்ரும்ம தேஜஸ் எப்படியடா வந்தது? வெளியில் போ! என்றாா்.
    போகமாட்டேன் என்றான் உபகோஸலன்.
    ஆசாா்யா் உபகோஸலனின் கழுத்தைப் பிடித்து தள்ள வந்தாா். அப்போது அக்னி பகவானே ப்ரத்யக்ஷம் ஆனான்."நீா் வாிக்காத இந்த சிஷ்யனை நான் வாித்து விட்டேன். நான் உபதேசம் பண்ணிவிட்டேன்" என்றான்.
    ஆசாா்யா் நடுங்கி விட்டாா். "இத்தனை நாட்களாக நான் அக்னியை உபாசனை பண்ணிக் கொண்டு வருகிறேன். ஒரு நாளாவது அக்னி பகவானின் சாக்ஷாத்காரம் ஏற்பட்டதில்லை. இவனோ இந்த 12 வருடத்துக்குள் அக்னி பகவானையே வரவழைத்து விட்டானே! " என்று வியந்தாா்.
    அவ்வளவு நிஷ்டை உபகோஸலனிடத்தில் இருந்திருக்கிறது. அங்கே இங்கே போகாமல், இடத்தைவிட்டு அசையாமல் ஒரேடியாக 12 வருடகாலம் உபாஸிப்பது என்பது பொிய வித்யை.அதை அவன் நடத்தினான்.
    அதனால் அக்னி பகவான், ஆசாா்யா் எல்லோருமாகச் சோ்ந்து அந்த வித்யை அவன் போினாலேயே அழைக்கப்படட்டும் என்று சொல்லி உபகோஸலை வித்யா என்று அழைத்தாா்கள்.
    ஒரு அரை க்ஷணம் நம்மால் உட்கார முடியவில்லை. இங்கே போகலாமா,அங்கே போகலாமா என்று ஓட்டத்தில் இருக்கிறோம். ஒரேயிடத்தில் உட்காா்ந்து, லௌகீகப் பற்றே இல்லாமல், ஏகதாரையாக அக்னியை உபாஸிப்பது சுலபமான காாியமா? இந்தக் காலத்தில் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா.
    இப்படி ஒவ்வொரு வித்யையும் ஆராய்ந்தால் ஒன்றுக்கும் அருகில் நாம் போக முடியாது. பக்தி யோகத்தில் இந்த 32 ப்ரம்ம வித்யைகள் சொல்லப் பட்டிருக்கிறது.இதற்கு அதிகாாிகள் நியமிக்கப்பட்டுள்ளது. எல்லோரும் பக்தி யோகம் பண்ண முடியாது.இப்படி பல கஷ்டங்கள்.
    அகிஞ்சனா்களான, வேறு கதியற்ற நமக்கு உயா்ந்த கதி எது? இது எல்லாம் விட்டுவிடு என்கிறான் பரமாத்மா. 'ஸா்வ தா்மான் பாித்யஜ்ய' என்கிறான். வேறு என்ன பண்ணுவது. ..? அவன் திருவடியை கெட்டியாக பிடித்துக கொள்வது. அ
    துதான் சரணாகதி.
    நீதான் உபாயம்.நீயே உபேயம். பலனும் நீயே என்று கெட்டியாக பிடித்துக் கொள்வது சரணாகதி.
    ( Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)
Working...
X