Announcement

Collapse
No announcement yet.

Bank job - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bank job - Periyavaa

    Courtesy: Sri.Raghavan Vanaja Srinivasan
    ''என்ன உத்தியோகம்?''
    அன்று ரொம்ப உத்சாகமாக ஒரு நண்பர் தாத்தாவை பார்க்க வந்தவர் பாட ஆரம்பித்தார். ''கருணை தெய்வமே கற்பகமே'' ஆலாபனை பண்ணி முடித்தார்.

    ''பேஷ்'' கருணை தெய்வம் என்னை பொறுத்தவரை கஞ்சி மகான் தான்.
    ''இன்னிக்கு என்ன சப்தரிஷிக்கு இவ்வளவு உத்சாகம். இதுவரை என்னை சந்தித்தபோது பாடிக்காட்டியதே இல்லையே.''
    ''என் மகனுக்கு பாங்க்லே வேலை கெடைச்சிருக்கு. பெரியவா அனுக்ரஹம்''
    வாஸ்தவம். பெரியவ அனுக்ரஹத்தாலே இன்னொருத்தருக்கும் பாங்க்லே வேலை கிடைச்ச விஷயம் இருக்கே''
    சொல்லுங்க சார் அதைக் கேக்கணும்''

    திருச்சி பக்கத்துலே ஒரு ஊர். அங்கேயிருந்து கணபதி என்று ஒரு பக்தர். காலேஜ் படிக்கும்போதே பெரியவா கிட்டரொம்ப பக்தி. அவருக்கு வேலை கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. எங்கெங்கோதேடிய்ம் சரியாக ஒரு வேலை கிடைக்கவில்லை.
    அப்பா அம்மாவைக் கூட்டிண்டு பெரியவாளை தரிசனம் பண்ண .காஞ்சிபுரம் போனார்.
    பெரியவா கிட்ட தரிசனம் பண்ற நேரத்திலே மனதிலே இதே நெருடல்
    மகானிடம் அதை எப்படிச் சொல்றது என்று தயக்கம் கணபதிக்கு.
    ''உன் பேர் என்ன?''
    ''கணபதி சுப்ரமணியன்''
    எங்கே உத்தியோகம் பண்றே?''
    ''இன்னும் சரியா எதுவும் கிடைக்கலே''
    எங்கே இருக்கே நீ இப்போ?
    திருச்சி பக்கத்திலே.
    சரி, திருச்சிலே நிறைய பெரிய பாங்குகள் எல்லாம் இருக்கே''
    "'இருக்கு பெரியவா''
    ''அப்படின்னா என்ன உனக்கு அதிலே எதிலேயாவது ஒண்ணுலே கிடைக்குமே''..
    ''பெரியவா அனுக்ரஹம்''
    பிரசாதம் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினகணபதிக்கு சில நாட்கள் கழித்து இரண்டுஇடங்களில் வேலைக்குச் சேரும்படி ஆர்டர்வந்தது. சென்னையில் ஒன்று-
    திருச்சியில் ஒன்று- சென்னை வேலை நிரந்தரம்.திருச்சியில் தற்காலிகமானது. எதில் சேருவதுஎன்று குழம்பிப்போன கணபதி காஞ்சிக்குஓடினார். அங்கே பல மணி நேரம் காத்திருந்துபெரியவா தரிசனம் கிடைத்தது. மகானை அணுகியோசனை கேட்டார்.


    "திருச்சி பாங்க் உத்யோகத்திலேயே போய்ச் சேர்"
    கணபதிக்கு உள்ளூர உதைப்பு. பெரியவா திருச்சியிலேயே டெம்பரரி பாங்க் உத்தியோகத்திற்குப் போகச்சொல்கிறாரே 'மனத்தில் கலக்கத்தோடு பாங்க்உத்தியோகத்திற்குப் போனார். திருச்சி பாங்க்லேஅவருக்கு கிடைச்ச தற்காலிக வேலை யாரோ ஒருவர் லீவில் போய்விட்டவருக்கானஉத்தியோகம். அவர்
    திரும்பவும் வந்து உத்தியோகத்தில்சேர்ந்துவிட்டால் கணபதி மீண்டும் வீட்டிற்குத்திரும்ப வேண்டியதுதான்!
    கணபதி என்ன செய்வது என்று தெரியாமல் கவலையோடு அந்த உத்தியோகத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தார். என்னிக்கு இந்த உத்தியோகம் போகப்போறதோ?
    என்ன ஆச்சர்யம் ? லீவில் போனவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன்பலனாக அந்த நல்ல பாங்க் வேலை கணபதிக்குக்
    கிடைத்தது.
    கருணைக்கடலே கற்பகமே ....பெரியவாளின் தீர்க்கதரிசனத்தை எண்ணி கணபதி ஆனந்தக் கண்ணீர்வடித்தார்
    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராகஇருந்தாலும், மகானிடம் நன்மை ஒன்றையே அடைந்திருக்கிறார்கள் என்பது அனுபவம்.
    Last edited by soundararajan50; 22-09-15, 18:49.
Working...
X