Announcement

Collapse
No announcement yet.

திருமூல நாயனார்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமூல நாயனார்.

    Courtesy:Smt.Uma Balasubramanian


    திருமூல நாயனார்.

    அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
    முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
    இந்திரன் மால் அயன் முதல்ஆம் இமையவர்க்கு நெறி அருளும்
    நந்தி திருஅருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.

    திருக்கைலாயத்தில் நந்தியெம்பெருமானுடைய உபதேசம் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. அவர்களுள் ஒரு சித்தர் , பொதிய மலையில் இருந்த தமிழ்ப் புலவர் அகத்தியரைப் பார்த்துவிட்டுச் சிலகாலம் அவருடன் தங்கலாம் என்ற எண்ணத்தில் அவர் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டார். அப்படிச் செல்லும் வழியில் இருந்த திருக்கேதாரத்தை வழிபட்டு , பிறகு நேபாளத்தில் வீற்றிருக்கும் பசுபதியையும் வணங்கி , பின் கங்கைக் கரை வந்து சேர்ந்தார். கங்கையில் நீராடிவிட்டு , காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதரைத் தரிசித்துக் கொண்டார். அதற்குப் பின் ஸ்ரீசைலம் சென்று இறைவனைப் போற்றிப் பின் , திருக்காளத்தி நோக்கிச் சென்றார் . அங்கு காளத்தியப்பனைத் தரிசனம் செய்துகொண்டு , தென்திசை நோக்கிப் பயணமானார்.
    திருவாலங்காடு , காஞ்சீபுரம் ,போன்ற தலங்களையும் கண்டு , அங்குள்ள யோகிகளுடன் கூடி அளவளாவி அவர்களுடன் சிலகாலம் தங்கினார். அப்பால் திருவதிகை என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டுவிட்டுத் தில்லை நோக்கிச் சென்றார். தில்லையை அடைந்தவுடன் , அங்குள்ள கோயிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானைத் தொழுது வணங்கியபோது , அத் தலத்திலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அப்படி அவர் நினைத்தாலும் மேலும் தன் பயணத்தைத் தொடர்வதே நல்லது எனத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். . அப்படிப் புறப்பட்டுச் செல்கையில் அந்த ஊர் காவிரிக் கரையில் பல பசுக்கள் கூட்டம் கூட்டமாக வெகு தொலைவில் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்.
    அருகில் , அந்தணர்கள் வாழ்கின்ற சாத்தனூர் என்னும் ஊரில் வாழ்ந்து கொண்டிருந்த மூலன் என்னும் பெயருடைய ஆயன் , அந்தப் பசுக் கூட்டங்களை அங்கே அழைத்து வந்து மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . அன்றும் அவன் அப்படி மாடுகளை மேய்க்கும் பொழுது , அவனுடைய வாழ்நாளுக்கு இறுதி வந்ததால் திடீரென்று அங்கேயே இறந்து போனான். அவன் உடல் கீழே கிடக்க , ஆவினங்கள் அந்த உடலைச் சுற்றிச் சுற்றி வந்து தம் நாவால் வருடிக் கொண்டும் . , மோர்ந்து பார்த்தும் . பின் கண்ணீர் விட்டும் , ஏதோ ஆகிவிட்டது என நினைத்து பெருமூச்சுவிட்டன.
    அந்தக் காட்சியைக் கண்ட சித்தர் மனம் இரங்கினார். இந்தப் பசுக்களின் துன்பம் போக்க ஏதாவது வழி இருக்கிறதா? என ஆராய்ந்தார். மீண்டும் ஆயன் உயிர் பெற்று எழுந்தாலன்றி இந்தப் பசுக்களின் துன்பம் தீராது என்பதை நன்கு அறிந்தார். தம்முடைய யோக ஆற்றலினல் தம் உடம்பை ஒரு இடத்தில் கிடத்திவிட்டு , இறந்த ஆயன் உடலுள் புகுந்தார். ஆயன் எழுந்தான் .



    'இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா' என்று
    அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
    தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
    பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்.

    தம்மைப் பாதுகாப்பவன் எழுந்தவுடன் ,பசுக்கள் துள்ளிக் குதித்து அவனை நக்கி , மோர்ந்து பார்த்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி பின் முன் போல் மேயச் சென்றன. திருமூலர் அந்தப் பசுக்கள் இருக்கும் இடம் சென்று அவற்றை மேய்த்து விட்டுப் பிறகு தண்ணீர் காட்டிப் பாதுகாத்து ஆயன் செய்வது போல் எல்லா வேலைகளையும் செய்தார். கதிரவன் மறைந்தவுடன் பசுக்கள் தங்கள் கன்றுகளை நினைத்துச் சாத்தனூரை நோக்கிப் புறப்பட்டன . திருமூலரும் அவற்றின் பின்னே சென்றார். ஒவ்வொரு மாடும் தன் தன் வீடு புக, அவரும் அதன் பின்னே அது வீட்டைச் சேரும் வரை நின்றார். . ஆயனின் மனைவியோ தன் கணவர் வருவதற்கு நேரமாகிவிட்டதே என்று கலங்கி வாசலில் நின்று காத்துக் கிடந்தாள். திருமூலரைக் கண்டவுடன் அவள் ," ஏன் இவ்வளவு தாமதம் . உடம்பிற்கு ஏதேனும் தீங்கு வந்ததோ ? " என்று சொல்லி அவரைத் தொடர்ந்தாள். அவள் அவரை நெருங்கவும் அவளிடமிருந்து அவர் சற்றே விலகினார் . உடனே மனைவியும் ," என்ன வந்தது , ஏன் இப்படி இருக்கிறீர்கள் ? " என்று கேட்டாள். " இனி எனக்கும் உனக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை " என்று திருமூலர் கூறிவிட்டு அவ்வூரில் உள்ள பொது மடத்திற்குச் சென்று யோகத்தில் அமரத் தொடங்கினார்.
    இரவெல்லாம் துயிலாமல். இதே நினைப்புடன் இருந்த மூலனின் மனைவி
    காலையில் எழுந்தவுடன் திருமூலரின் மாறுபட்ட போக்கை அவ்வூர்க்காரர்களுக்கு விரைவாகத் தெரியப்படுத்தினாள் . அவர்கள் யாவரும் அந்த மடத்திற்குச் சென்று பார்த்தால் மூலன் யோக நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அதைக்கண்ட மக்கள்மிகவும் வியப்படைந்தனர். " இவருக்குப் பித்துப் பிடிக்கவில்லை , வேறு ஒரு பெண்ணிடத்தில் வைத்த அன்பினாலும் இவளைப் புறக்கணிக்கவில்லை. சித்த விகற்பம் நீங்கித் தெளிந்த சிவயோகத்தில் இருக்கிறார் .பழையபடி இனி உறவு கொள்ளல் தகாது " என்று அந்தப் பெண்ணிடம் கூறி அவளை வீட்டிற்கு அனுப்பினார்கள்.
    திருமூலர் யோகம் தெளிந்து பசுக்களுடன் திருவாவடுதுறைக்குச் சென்றார்.. அங்கு மறைத்துவைத்திருந்த உடலைப் பார்த்தபோது அது அங்கு காணவில்லை . திருமூலர் வாயிலாகச் சிவாகமப் பொருள் தமிழில் வெளிவரவேண்டுமென்பது சிவபெருமானின் திருவுள்ளமாதலின் அவ்வுடம்பை மறைத்தருளினான் . இதனை ஞானப் பார்வையால் உணர்ந்த திருமூலர், திருவருளின் வழியே நடக்க எண்ணி , திருவாவடுதுறைக் கோயிலை அடைந்தார். அக்கோயிலில் உள்ள தலவிருட்சமாகிய அரச மரத்தின் அடியில் உட்கார்ந்து சிவயோகம் செய்யத் தொடங்கினார்.
    யோக நிலையில் இருந்த திருமூலர் ஓராண்டு காலம் யோகம் செய்து கண் விழிப்பார் பின் ஒரு பாடல் பாடுவார் , மறுபடியும் யோக நிலைக்குச் சென்றுவிடுவார் மறுபடியும் ஒரு பாடல். இப்படியே ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார்.

    முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி,
    மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து,
    சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
    தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.

    அவை திருமந்திர மாலை என்று அரிய நூலாய் விளங்கிற்று. மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து , பிறகு இறைவன் திருவருளால் மீண்டும் திருக்கைலாயம் சென்று எம்பெருமானைப் பிரியாமல் உறையும் பெரு வாழ்வு பெற்றார்.
    திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திரமாலை, திருமந்திரம் என்றும் வழங்கப் பெறும். அது சரியை , கிரியை , யோகம் , ஞானம் எனும் நான்கைப் பற்றியும் கூறும் ஒன்பது தந்திரங்கள் அமைந்தது. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் இது பத்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை எலாம்
    மலர்ந்த மொழித் திருமூல தேவர் மலர்க் கழல் வணங்கி
    அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
    தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்.
Working...
X