Announcement

Collapse
No announcement yet.

காணாமல்போனவை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காணாமல்போனவை

    தெரிந்ததும் தெரியாததும்
    By : ஜெயராஜன் |
    நாம் அன்றாட வாழ்வில் புரியாமல் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு அறிஞர் கி.வா. ஜெகநாதன் எழுதிய விடைகள் ஆயிரம் என்ற நூலில் விடைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
    *அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர்.அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
    *சீதை அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
    *பாவை என்பது பொம்மையைக் குறிக்கும்.பொம்மை போல வண்ணங்களுடன் அழகாக இருப்பதால் பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர்.அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
    *கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
    *பொய்கை என்பது இயற்கையான நீர்நிலை.தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
    *தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு.அகத்தில் நட்பின்றி,புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
    *மனிதன் உண்பது உணவு.விலங்குகள் உண்பது இரை .
    *ஜல்பம்,விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு.வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம்.தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.ஒரு கோவிலில் கர்ப்பக் கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும்,மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.

    *'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்று பொருள்.
Working...
X