Announcement

Collapse
No announcement yet.

கண்களை சுற்றி கருவளையன்களா? தீர்வு.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண்களை சுற்றி கருவளையன்களா? தீர்வு.

    அன்பர்களே,
    அயராது உழைத்தல்,தூக்கமின்மை,ஆகிய காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம் உண்டாகிறது.அது நம்மை சோர்வுள்ளவராகவும்,சக்தியற்றவராகவும் காண்பிக்கிறது.கருவளையங்களை போக்க சில வழிகளை பார்ப்போம்.
    வரதராஜன்




    கரு வளையங்களுக்கு 5 நிமிடங்களில் தீர்வு

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் உங்களை எப்போதும் சோர்வாகவும் மற்றும் இயலாதவராகவும் காண்பிக்கிறது. உங்கள் கண்கள் தன்னை கவனிக்கும் படி சொல்வதற்கு இதுவும் ஒரு வழியாகும். எனவே உங்கள் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, உங்கள் உணவை புதிய காய்கறிகள் மற்றும் பழங்களுடன் செறிவூட்டுவதுடன், நீங்கள் கருவளையங்களைப் போக்க இயற்கையான தீர்வுகளையும் முயற்சி செய்யலாம். உங்கள் கண்களை ஆற்றவும், மற்றும்க் கருவளையங்களை எதிர்த்து போராடவும், அத்தகைய ஒரு பலனுள்ள வீட்டுத் தீர்வு, உருளைக்கிழங்கை உபயோகிப்பது தான்

    அது எப்படி உதவும்?

    உருளைக்கிழங்குகள்,தோலின் நிறத்தை வெளிரச் செய்து, கருவளையங்களை குறைத்து உதவும் அதன் இயற்கையான அழிப்பான் பண்புகளுக்கு நன்கு அறியப்படுவது. எனினும், அது பயனுள்ள முடிவுகளை அடையஒரு வழக்கமான அடிப்படையில்செய்ய வேண்டும்.

    எப்படி உபயோகிப்பது?

    உருளைக்கிழங்கை உபயோகித்து உங்கள் கருவளையங்களைப் போக்க இரண்டு வழிகள் உள்ளன. அவை :-

    உருளைக்கிழங்கு துண்டுகள்:ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து அதை நன்றாக குழாய் நீரில் அதில் உள்ள அசுத்தங்களை போக்க கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும். அதில் ஒரு துணனை 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். இந்த் துண்டுகளை குளிரியூட்டியில் 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல் 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். தினமும் இதை நல்ல பலன் பெற தொடர்ந்து 10 நாட்களுக்குச் செய்யுங்கள். இதைத் தவிர, உங்களுக்கு கருவளையங்களிலிருந்து விடுபட 8 குறிப்புகள் இங்கே.

    உருளைக்கிழங்கு சாறு:உங்கள் வீட்டில் குளிரூட்டி இல்லையெனில் நீங்கள் உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சிறிய அளவுள்ள உருளையைத் துறுவி அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதைப் பிழிந்து சாறு எடுக்கவும். ஒரு பருத்திப் பந்தியின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை படுப்பதற்கு முன் வழக்கமாக கருவளையங்கள் வெளிர வைக்கச் செய்து வரவும்.

    குறிப்புe:ஆலிவ் எண்ணை தோலை இறுக்கமாக வைககவும் மற்றும் ரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதாலு, தேன் ஒரு இயறிகையான ஈரப்பதனி முகவராக செய்லபடுவதாலும், நீங்கள் தேன் மற்றும் ஆலிவ் எண்ணையை உருளை சாற்றுடன் சேர்த்து பூசலாம்.
Working...
X