Announcement

Collapse
No announcement yet.

தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை

    தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை
    தாயுமானவர் ராமேஸ்வரம் சென்றபோது மழையே இல்லை, ஒரே வரட்சி. காய்ந்து கருகிப்போன பூமியில் வசிக்கும் மக்களின் அவல நிலையைக் கண்டு மனம் உருகினார். உடனே இப்படிப் பாடினார்:

    சைவ சமயம் சமயம் எனில் அச் சமயத்
    தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில்—ஐவரை வென்
    றானந்த இன்பில் அழுந்துவது முத்தி எனில்
    வானக்காண் பெய்மின் மழை.

    இந்த வெண்பாவைப் பாடிய உடனே பெரு மழை கொட்டித் தீர்த்தது. மக்கள் எல்லோரும் தாயுமானவரின் பெருமையை உணர்ந்தனர்.
Working...
X