Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1 #3. புராணங்கள் பதினெட்டு


    1. பிரம்ம புராணம்
    2. பத்ம புராணம்
    3. விஷ்ணு புராணம்
    4. சிவ புராணம்
    5. வாமன புராணம்
    6. மார்க்கண்டேய புராணம்
    7. வராஹ புராணம்
    8. அக்னி புராணம்
    9. கூர்ம புராணம்
    10. பாகவத மஹா புராணம்
    11. லிங்க புராணம்
    12. நாரத புராணம்
    13. ஸ்கந்த புராணம்
    14. கருட புராணம்
    15. மத்ஸ்ய புராணம்
    16. வாயு புராணம்
    17. பவிஷ்ய புராணம்
    18. பிரம்மாண்ட புராணம்


    1#4a. குருவிகளின் பாசம்


    வசித்து வந்தார் வியாசர் சரஸ்வதி தீரத்தில்;
    வியந்தார் ஊர்க்குருவிகள் குலாவுவது கண்டு.
    முட்டையிட்டது கருத்தரித்த பெண் குருவி.
    முட்டையிலிருந்து வெளிவந்தன குஞ்சுகள்.
    கொஞ்சி மகிழ்ந்தன குருவிகள் குஞ்சுகளை;
    கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டின உணவை.
    அணைத்துக் கொஞ்சின; ஆசை முத்தமிட்டன;
    ஆரவாரம் செய்து மகிழ்ந்தன பிரேம பாசத்தால்!
    வெறும் குருவிகள் தானே என்று எண்ணாமல்
    பரவசம் அடைந்தார் வியாசர் அதைக் கண்டு.
    புத்திரனுடைய சரீரத்தைத் தழுவிக் கொள்வதே
    உத்தமமான சுகம் என்று உரைப்பது உண்மையே!
    புத்திரன் இல்லாதவன் அடைவான் துர்கதி.
    பத்திரன் உள்ளவனே அடைவான் நற்கதி.
    புத்திரப் பேறு இல்லாது போனால் வாழ்வில்
    எத்தகைய இன்பமும் இல்லை என்றுணர்ந்தார்.
    பேராவல் கொண்டார் சத் புத்திரனை அடைய.
    மேருமலைச் சிகரம் அடைந்தார் தவம் புரிய.
    யாரைக் குறித்துத் தவம் புரிய வேண்டும்?
    விரைவில் மகிழ்வடையும் ருத்திரனையா?
    பிரமதேவனையா? விஷ்ணு மூர்த்தியையா?
    சூரியன், இந்திரன், வருணன், கணேசனையா?
    வந்தார் நாரதர் மஹதி வீணையை மீட்டியபடி!
    வரவேற்று உபசரித்தார் வியாசர் தேவரிஷியை.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X