Announcement

Collapse
No announcement yet.

First stanza with meaning of 12 thirumurai

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • First stanza with meaning of 12 thirumurai

    பன்னிரு திருமுறை:முதல் பாடல்கள்
    Courtesy:https://drdayalan.wordpress.com/2015...%8D-%E0%AE%AA/
    இந்து மதச்சாரம்,திருமுறை முதல் பாடல்கள், தேவர பாடல்கள், தேவரம் பாடல்கள்,பன்னிருதிருமுறைகள்


    நமச்சிவாய
    பன்னிரு திருமுறைகள் (18,266 பாடல்கள்; 1,254 தலைப்புகள்)
    ***அருளாளர்கள் அளித்தவை பல, எனினும் அவைகளில் நமக்கு, இப்போதைக்கு இதை வைத்துக்கொள், என்று இறைவன் தந்தவைகள் சில.
    ***பன்னிறு திருமுறைகளின் 18,266 பாடல்களை பராயணம் செய்ய நாள் நேரம் உள்ளதா? நினைக்கதான் நாள் மனம் அம்சம் உள்ளதா?உமையொருபாகா, உள்ளம் உள்ளது ! முதலில், முதலை முனைவோம் முக்கண்ணன் முன்னேற்றுவான்.
    திருமுறைகள்:1-7; தேவரம் (8250 பாடல்கள்)


    (A)சம்பந்தர் (திருஞானசம்பந்தர்) தேவாரம்-4158 பாடல்கள்
    (1) முதல் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1469பாடல்கள்
    தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
    காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
    பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.(திருமுறை முதல்பாடல்)
    ***தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
    (2)இரண்டாம் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1331பாடல்கள்
    செந்நெல் அங்கழனிப் பழனத்தய லேசெழும்
    புன்னை வெண் கிழியிற் பவளம் புரை பூந்தராய்
    துன்னி நல்லிமையோர் முடிதோய் கழலீர் சொலீர்
    பின்னு செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே,
    ***செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.
    (3) மூன்றாம் திருமுறை:சம்பந்தர் தேவாரம்-1358பாடல்கள்
    ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
    நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
    பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடைப்பனி கால் கதிர் வெண்டிங்கள்
    சூடினாய் அருளாய் சுருங்க எம தொல் வினையே.
    ***நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும் ஆட்டப் பெற்றவனே ! தில்லை வாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும் அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத் திருக்கூத்தாடும் ஞானவெளியாகக் கொண்டு வாழ்பவனே ! கொன்றைப் பூமாலையை விரும்பிச் சூடியவனே ! நான் மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே ! பலவாகிய சடைமேல், குளிர் பனியைச் சொரிகின்ற வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே ! எம் தொல்லை வினை இல்லையாம்படிதிருவருள் செய்க.
    (B)அப்பர் (திருநாவுக்கரசர்) தேவாரம்-3066பாடல்கள்
    (4)நான்காம் திருமுறை:அப்பர் தேவாரம்-1070பாடல்கள்
    கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்
    ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
    ***திருவதிகை வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்.
    (5) ஐந்தாம் திருமுறை:அப்பர் தேவாரம்-1015பாடல்கள்
    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்
    பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
    என்னம் பாலிக்கு மாறு கண் டின் புற
    இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே.


    ***பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பேரின்ப நிலையை எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ ?
    (6)ஆறாம் திருமுறை:அப்பர் தேவாரம்-981பாடல்கள்
    அரியானை அந்ணர் தம் சிந்தை யானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
    தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
    கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
    பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
    ***எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும் மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றிஉரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
    (C)சுந்தரர் (சுந்தரமூர்த்தியார்) தேவாரம்-1026பாடல்கள்


    Continues
Working...
X