Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் Continues

    1#8. பராசக்தி
    “முழு முதற்கடவுள் விஷ்ணு என்பர் சிலர்.
    முழு முதற்கடவுள் சிவன் என்பர் சிலர்.
    முழு முதற்கடவுள் சூரியன் என்பர் சிலர்.
    முழு முதற்கடவுள் வருணன் என்பர் சிலர்.
    சக்தி ஆற்றுகின்றாள் முத்தொழில்களை!
    சக்தி விகசிக்கின்றாள் மூன்று விதங்களாக!
    உள்ளாள் படைக்கும் சக்தியாக பிரமனிடம்;.
    உள்ளாள் காக்கும் சக்தியாக விஷ்ணுவிடம்;.
    உள்ளாள் அழிக்கும் சக்தியாக சிவனிடம்;.
    உள்ளாள் ஒளிரும் சக்தியாக சூரியனிடம்;.
    உள்ளாள் உந்தும் சக்தியாக வாயுவினிடம்;.
    உள்ளாள் எரிக்கும் சக்தியாக அக்கினியிடம்;.
    உள்ளாள் குண்டலினி சக்தியாக மனிதனிடம்;.
    உள்ளாள் உயிர்ச் சக்தியாக உயிரினங்களிடம்;
    செய்ய முடியாது எச்செயலையும் சக்தியின்றி!
    செய்வாள் சக்தி செயலைத் தன்னிச்சைப்படி!
    உபாசிக்கின்றனர் தேவியை மோக்ஷ காமிகள்,
    உபாசிக்கின்றனர் தேவியை இகபோக காமிகள்,
    தருவாள் தேவி அறம், பொருள், இன்பம், வீடு.
    தரமாட்டாள் தண்ணருளை அவிவேகிகளுக்கு.
    தொழுவர் பராசக்தியை மும்மூர்த்திகளும்;
    பெறுவார் தம் தொழிலுக்கு உகந்த சக்தியை.”
    பிரமனுக்கு இதை கூறியவர் விஷ்ணு;
    பிரமன் இதைக் கூறினான் நாரதருக்கு;
    வியாசருக்குக் கூறினார் நாரத முனிவர்;
    வியாசர் விளக்கினார் சூதமுனிவருக்கு.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
Working...
X