Announcement

Collapse
No announcement yet.

தெய்வ தரிசனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வ தரிசனம்

    06. நாராயணா என்னும் நாமம்
    (குறும்பா)

    நாராய ணாவென்னும் பேரினிலே
    வேராக உள்ளிருக்கும் சீரினிலே
    . ஏறிநிற்கும் பொருளெல்லாம்
    . ஊறிநிற்கும் அருளெல்லாம்
    ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1

    நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
    நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
    . அயனமெனில் இருப்பிடமாம்
    . வியனுலகின் பிறப்பிடமாம்
    உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2

    நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
    விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
    . காற்றதுவே தீயாகி
    . நீராகி நிலமாகும்
    நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3

    நாரமதே நாரணனின் உறைபொருளாம்
    காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
    . அஞ்சுபூதம் இயல்தனியே
    . அப்புவெனும் பெயரிலினிலே
    பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4

    [பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

    உயிருள்ள உருவுள்ளே நாரணனே
    உயிரற்ற உருவுள்ளே நாரணனே
    . உயிருள்ளதோ இல்லாததோ
    . பெயருள்ளதோ இல்லாததோ
    பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5

    நீராடும் போதினிலே நாமமென
    நாராய ணன்நாமம் சேமமென
    . எட்டெழுத்து மந்திரமே
    . கட்டுமனம் தந்திடுமே
    வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6

    [ஏமம் = களிப்பு, இன்பம்]


    நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
    வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
    . கருமமுறும் சோதனையோ
    . கருமமறு சாதனையோ
    சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7

    ஓம்நமோ நாராய ணாயவென்றே
    போம்வினைப் பாராய ணமாமென்றே
    . எட்டெழுத்து மந்திரமே
    . உட்டுளையாய் வந்துறினே
    நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8

    [உட்டுளை = உள்+துணை]

    --ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

Working...
X