Announcement

Collapse
No announcement yet.

சிரார்த்தம், தர்ப்பணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரார்த்தம், தர்ப்பணம்

    நமஸ்காரம்
    சிரார்த்தம், தர்ப்பணம் குறித்து.சில சந்தேகங்கள் உள்ளது..
    சந்தேகம்:
    1. அண்ணன் தம்பி இருவரும் வேறு வேறு ஊரில் பணி நிமித்தம் வசிக்கும் போது. அண்ணன் தம்பி இருவரும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டுமா? அல்லது அண்ணன் மட்டும் செய்தால் போதுமா? அண்ணனுக்கு மட்டுமே கர்மாதிகாரம் உள்ளது அதனால் அவர் மட்டும் செய்ய வேண்டும் என சிலர் கூறியதால் இந்த சந்தேகம்.
    2. அண்ணன் தம்பி இருவரும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யும் போது தந்தை வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், தந்தையின் தாத்தா ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். அண்ணன் இறந்து, அவர் மகன் செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றில் இறந்து போன அண்ணன் வஸு ருபமாகவும், தந்தை ருத்ர ருபமாகவும் தாத்தா ஆதித்ய ருபமாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆனால் தம்பி செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றில் தந்தை வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், தந்தையின் தாத்தா ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். ஓருவரே இரு ரூபமாக இருக்க வாய்ப்பில்லை. இது குறித்து சாஸ்த்ரம் என்ன சொல்கிறது. சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவை செய்ய அண்ணணுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு, தம்பிக்கு இல்லை என்பது சாஸ்த்ரம் என்றால் இந்த குழப்பம் இல்லை.

  • #2
    Re: சிரார்த்தம், தர்ப்பணம்

    ஶ்ரீ:
    அண்ணன் தம்பி அநேகம்பேர் இருந்தாலும் தனித்தனியாக வசிக்க ஆரம்பித்தபின் தனித்தனியே ச்ரா, தர்பணாதிகள் பண்ணவேண்டும்.
    ஆப்தீகம் வரையில் மட்டுமே மூத்தவனுக்கு மட்டும் அதிகாரம்.
    ஒருவரே ஒருவனுக்கு அப்பாவாகவும், மற்றொருவனுக்கு தாத்தாவாகவும் இருக்க இயலும் அல்லவா?
    வஸு, ருத்ர, ஆதித்ய என்பது முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை (பித்ரு குழுமங்களைக்) என்பதைக்குறிக்கும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: சிரார்த்தம், தர்ப்பணம்

      நமஸ்காரம்
      அண்ணன், தம்பி இருவரும் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் அவர்களின் தகப்பனார் வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், முத்ததாத்தா (அதாவது தகப்பனாரின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். அண்ணன் இறந்த பிறகு அவரின் பையன் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் பையனின் தகப்பனார் (முன்பு அண்ணனாக இருந்தவர்) இப்போது வஸு ருபமாகவும், அவரின் தந்தையாக இருந்தவர் (முன்பு வஸு ரூபமாக இருந்தவர்) ருத்ர ருபமாகவும், அவரின் தாத்தா (அதாவது அண்ணனின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் (முன்பு ருத்ர ரூபமாக இருந்தவர்) மாறிவிடுகிறார்கள். ஆனால் தம்பி உயிருடன் இருக்கும் வரை அவர் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் தகப்பனார் வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், முத்ததாத்தா (அதாவது தகப்பனாரின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் தொடர்ந்து இருப்பார்கள். அதாவது ஒருவரே இருவேறு நிலைகளில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருவரே இருவேறு நிலைகளில் அதாவது அண்ணனின் பையன் (அண்ணன் இறந்த பிறகு) செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் ஒரு ரூபமும்(நிலை) உயிருடன் இருக்கும் தம்பி செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் ஒரு ரூபமும்(நிலை) எப்படி இருக்கமுடியும். நிச்சயமாக இது போன்ற நிலைகளை நமது சாஸ்த்திரம் யோசித்து அதற்கு ஒரு தீர்வும் இருக்கும். அத்தகய தீர்வு என்ன என்பது தான் என் கேள்வி/சந்தேகம்.

      Comment


      • #4
        Re: சிரார்த்தம், தர்ப்பணம்

        Originally posted by Krish8350 View Post
        நமஸ்காரம்
        அண்ணன், தம்பி இருவரும் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் அவர்களின் தகப்பனார் வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், முத்ததாத்தா (அதாவது தகப்பனாரின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். அண்ணன் இறந்த பிறகு அவரின் பையன் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் பையனின் தகப்பனார் (முன்பு அண்ணனாக இருந்தவர்) இப்போது வஸு ருபமாகவும், அவரின் தந்தையாக இருந்தவர் (முன்பு வஸு ரூபமாக இருந்தவர்) ருத்ர ருபமாகவும், அவரின் தாத்தா (அதாவது அண்ணனின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் (முன்பு ருத்ர ரூபமாக இருந்தவர்) மாறிவிடுகிறார்கள். ஆனால் தம்பி உயிருடன் இருக்கும் வரை அவர் செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் தகப்பனார் வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், முத்ததாத்தா (அதாவது தகப்பனாரின் தாத்தா) ஆதித்ய ருபமாகவும் தொடர்ந்து இருப்பார்கள். அதாவது ஒருவரே இருவேறு நிலைகளில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருவரே இருவேறு நிலைகளில் அதாவது அண்ணனின் பையன் (அண்ணன் இறந்த பிறகு) செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் ஒரு ரூபமும்(நிலை) உயிருடன் இருக்கும் தம்பி செய்யும் சிராத்தம், தர்பணம் முதலியவற்றில் ஒரு ரூபமும்(நிலை) எப்படி இருக்கமுடியும். நிச்சயமாக இது போன்ற நிலைகளை நமது சாஸ்த்திரம் யோசித்து அதற்கு ஒரு தீர்வும் இருக்கும். அத்தகய தீர்வு என்ன என்பது தான் என் கேள்வி/சந்தேகம்.
        ஶ்ரீ:
        "ரூபம்" என்ற வட சொல்லுக்கு "காட்சி" என்று தமிழில் பொருள்.
        உதாரணத்திற்கு உங்கள் தாத்தா உயிருடன் இருக்கும்போது உங்கள் தகப்பனார் இறந்திருந்தால்,
        தாங்கள் செய்யும் தர்பணத்தில் உங்கள் அப்பா வசு ரூபமாகவும், உங்கள் முத்தாத்தா ருத்ர ரூபமாகவும், அவருக்கு அப்பா ஆதித்ய ரூபமாகவும் இருப்பர்.
        இடையில் உங்கள் தாத்தாவும் இறந்துவிட்டால், அடுத்த தர்ப்பணத்தில் உங்கள் அப்பா வசு ரூபமாகவும், உங்கள் தாத்தா ருத்ர ரூபமாகவும், உங்கள் முத்தாத்தா ஆதித்ய ரூபமாகவும் மாறுவர்.
        அடியேன் "நிலை" என்று குறிப்பிட்டது "Relationship status" - உறவுவு நிலை ஆகும்.

        பித்ருக்களை - "பித்ரு லோகாத் ஸ்வர்க லோகம் கச்சத:" என்று சாஸ்த்ரம் குறிப்பிடுகிறது
        அதாவது பித்ரு நிலை கழிந்தபின் ஸ்வர்கத்தை அடைவர்.
        இப்படியாக பூலோகத்தில் உள்ள பங்காளிகளுடன் வசு, ருத்ர, ஆதித்ய ரூப பந்தம் (relationship) தொடரும் வரை பித்ரு லோகத்திலும்,
        உங்கள் முத்தாத்தாவின் அப்பா ஆதித்ய ரூப பந்தத்திலிருந்து உங்கள் தாத்தாவின் மறைவிற்குப்பின் விடுவிக்கப்படுகிறார் - அதுபோல்
        அனைத்துப் பங்காளிகளின் பந்தத்திலிருந்து விடுதலையானபின் ஸ்வர்க லோகத்திற்கும் செல்கிறார்கள் என்பது சாஸ்த்ரம்.

        மீண்டும் காட்சிக்கு வருவோம், உங்களுக்கு யார் வசு ரூபமாக காட்சியளிக்கிறார்களோ அவரே
        உங்கள் அண்ணன் பிள்ளைக்கு ருத்ர ரூபமாகக் காட்சியளிப்பதில் முரண்பாடு ஏதுமில்லை.

        அத்வைத சித்தாந்தப்படி உலகில் உள்ள அனைத்தும் காட்சிகளே (உண்மையல்ல).
        அடியேனுக்கு யார் "நாராணயனாகக்" காட்சியளிக்கிறாரோ, அவரே தங்களுக்கு "சிவனாகக்" அல்லது வேறொரு ரூபமாகக் காட்சியளிப்பதைப்போல.

        NVS


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: சிரார்த்தம், தர்ப்பணம்

          நமஸ்காரம்
          விளக்கத்திற்கு மிக்க நன்றி. தெளிவு பெற்றேன்

          Comment

          Working...
          X