Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் continues

    1#10b. சுகர்
    மண்ணில் தோன்றுவர் மக்கட்செல்வம்
    பெண்ணுடன் ஆண் இணையும் போதே.
    எண்ணமிட்டார் வியாசர் இதைப் பற்றி
    பண்ண முடியாது தவத்தைத் தியாகம்.
    விண்ணில் கண்டார் ஒரு மின்னல்கொடி!
    கண்டதும் மோஹித்தார் வியாச முனிவர்!
    அசைந்தன அவள் அழகிய அங்கங்கள்;
    இசைந்தன நெளியும் இரு புருவங்கள்.
    அலை பாய்ந்தன வட்டக் கருவிழிகள்
    அல்லாடின கொடியில் பருத்த கனிகள்.
    சிற்றிடையோ கொடியிலும் மெல்லியது
    விற்புருவம் எய்தது காமன் கணைகளை.
    கரிய கூந்தல்; மூன்றாம் பிறை நெற்றி;
    எரித்தன தைத்த பஞ்ச மலர் பாணங்கள்.
    தவத்தையும் கைவிட முடியவில்லை
    தாபத்தையும் கைவிட முடியவில்லை
    இல்லறத்தால் கிடைக்கும் புத்திரப்பேறு
    இல்லறம் அழித்துவிடும் துறவறத்தை
    செய்வது அறியாமல் திகைத்து நின்றார்
    தெய்வச் செயலாக வந்தவளைக் கண்டு.
    கட்டழகியோடு கூடி மகிழ்வதென்றுத்
    திட்டமாக முடிவு செய்தார் வியாசர்.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...
X