Announcement

Collapse
No announcement yet.

கடவுள் எதற்காக?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடவுள் எதற்காக?

    கடவுள் எதற்காக?


    மனிதனே எல்லாவற்றையும் தன்னுடைய முயற்சியால் சம்பாதித்துக் கொள்கிறான் என்றால் கடவுள் எதற்காக?
    உங்களுக்காக கண்ணதாசன் சொன்னதைக் கேளுங்கள்...


    பிறப்பின் வருவது யாதெனக்
    கேட்டேன்
    பிறந்து பாரென இறைவன்
    பணித்தான்


    அறிவெனச் சொல்வது யாதென
    கேட்டேன்
    அறிந்து பாரென இறைவன்
    பணித்தான்


    அன்பெனப்படுவது யாதென
    கேட்டேன்
    அளித்துப் பாரென்றான்


    மனையாள் சுகமெனில் யாதெனக்
    கேட்டேன்
    மணந்து பாரென்றான்


    பிள்ளை என்பது யாதெனக்
    கேட்டேன்
    பெற்றுப் பாரென்றான்


    முதுமை என்பது யாதெனக்
    கேட்டேன்
    முதிர்ந்து பாரென்றான்


    இறப்பின் பின்னது ஏதெனக்
    கேட்டேன்
    இறந்து பாரென்றான்


    அனுபவித்தே அறிவது
    வாழ்க்கையெனில்
    ஆண்டவனே நீ ஏன் எனக்
    கேட்டேன்


    அந்த அனுபவமே நான்தானே
    என்றான்.
    -- ஸ்ரீ கேள்வி பதில்.
    -- தினமலர். பெண்கள்மலர் இணைப்பு. 21-12-2013.
    Posted by க. சந்தானம்
Working...
X