Announcement

Collapse
No announcement yet.

Teertha yatra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Teertha yatra

    Teertha yatra - Ramakrishna Paramahamsa


    Courtesy:Sri.Vemban Panchapakesan





    ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை
    பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.
    வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது
    பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.
    கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!
    –ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.
Working...
X