Announcement

Collapse
No announcement yet.

சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயி

    திருப்பதி : சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை, ஏழுமலையான் கோவில், 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. மார்ச், 9 காலை, 5:34 மணி முதல், 9:08 மணி வரை, சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன், கோவில் நடை சாத்தப்படும் என்பதால், மார்ச், 8 இரவு, 8:30 மணிக்கு, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட உள்ளது.சூரிய கிரகணம் முடிவுற்ற பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்து, புண்ணியாவசனம் நடத்திய பின், கோவில் நடை திறக்கப்படும். அதன் பின், பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, மார்ச், 9 காலை நடைபெற இருந்த, ஸஹஸ்ர கலசாபிசேகம் ரத்து செய்யபட்டுள்ளது. தோமாலை, அர்ச்சனை, சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள், அன்றைய தினம், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Working...
X