Announcement

Collapse
No announcement yet.

Benefits of vibhooti

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Benefits of vibhooti

    Courtesy:Sri.GS.Dattatreyan
    திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள்
    என்ன.?-- ஓரு அறிவியல் பூர்வ உண்மை.!
    ---------------------------------------------
    ----------------------
    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின்
    சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி
    வெயிலில் காயவைக்க வேண்டும். பின்
    இதனை உமியினால் மூடி புடம் போட்டு
    எடுக்க வேண்டும். இப்போது இந்த
    உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும்.
    இதுவே உண்மையான திருநீறாகும்.
    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும்
    திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள்
    இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த்
    தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
    எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்
    கொள்ளுகின்றது.
    திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
    கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில்
    உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக்
    கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம்
    காணப்படுகின்றது.
    இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய
    பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த
    நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும்
    வெளியிடப்படுகின்றது, உள்
    இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின்
    சக்தியை இழுத்து சரியான முறையில்
    உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு
    செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில்
    இடுவார்கள்.
    தனது உடலிலே சாம்பல் சத்துக்
    குறைந்துவிட்டால், இலங்கை போன்ற
    வெப்பமான நாடுகளில் வளரும் கோழி
    இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக்
    கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை
    தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா!
    அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி
    தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை
    உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு
    செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற
    பலவகையான புல்வகைகளை உண்டு தனது
    உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம்
    தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண
    மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக்
    கொடுக்கின்றது.
    இதைவிட இரு புருவங்களுக்கும்
    இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய
    நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்
    அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம்
    இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே
    மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில்
    திருநீறு, சந்தனம் போன்றவை
    இடப்படுகின்றன.
    சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும்
    வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம்
    கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில்
    பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத்
    தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள
    மூளையின் புறணி (frontal cortex) என்னும்
    இடத்தில் அணியப்படும் சந்தனமானது
    வெப்பம் மிகுதியால் ஏற்படும்
    மூளைச்சோர்வை நீக்குகின்றது.
    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில்
    இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில்
    ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்
    மூளை பின்புற மேடு (Hippocampus)
    என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான
    முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின்
    புறணி சிறப்பான முறையில் தொழிற்படும்.
    உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை
    நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும்
    இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி
    நகைச்சுவையாகப் பார்வைக்குத்
    தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில்
    உண்டு பார்த்தீர்களா!
    நெற்றியின் இரு புருவங்களுக்கும்
    இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே
    பட்டும்படாமலும் சுண்டுவிரலை
    நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு
    தோன்றும். அந்த உணர்வை அப்படியே
    வைத்துத் தியானம் செய்தால்
    மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை
    தெளிவுபெறும், எதையும் தெளிவாகப்
    புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.
    அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க
    வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான
    மருந்து.
    இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி
    விளங்கவைக்க முடியாத மக்களுக்கு
    நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி
    திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்ற
    ார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான
    விளக்கத்தை மறைத்துக் கூறிய
    விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம்
    மறைந்தது.
    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும்,
    பலன்களும்
    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின்
    ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது
    சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக
    அன்பைப் பெறலாம். மேலும், பூதியை
    எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது
    மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம்
    உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று
    அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே
    கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு
    உள்ளது............................
    எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப்
    பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும்
    பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை
    உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால்
    தூய்மையாக, அறநெறியில்
    இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென
    உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற்
    கடவுளான சிவனை இது குறிப்பதாக
    சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும்
    நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின்
    எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே
    என்பதை விபூதி குறிக்கின்றது.
    திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில
    நேரங்களில் ஈரமான விபூதி அணிய
    வேண்டுமென்றும் , சில நேரங்களில் ஈரமில்லா
    திருநீர் அணிய வேண்டும் என்று நம்
    முன்னோர்கள் கூறுவார்கள். இது முரண்பாடாக
    உள்ளதே என்ன்று கருதலாம். திருநீர்
    அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது
    இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு
    விளக்கம் கூறுவது , மிகவும் அவசியம்.
    நம் முன்னோர்கள் இதற்கு பதில்
    சொல்லவில்லை என்றாலும் திருநீறின்
    மருத்துவ குணங்களை பற்றி அவர்கள்
    நன்கறிந்திருந்தனர்.
    அதிகாலையில் எழுந்து கை, கால், முகம்,
    கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி
    எடுத்து நெற்றியிலும் , பின் மாறிடத்தும் .இரு
    புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும்
    பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை
    சிலராவது பார்த்திருப்போம் . மாலைப்
    பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து
    நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு, ஆனால்
    குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து
    உடலில் பூசி வந்தனர் . இப்படி இரண்டு
    வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும்
    போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது
    நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும்
    சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில்
    மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும்
    சக்தியும் உண்டென்பதாகும்.
    இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில்
    காலையிலும் , மாலையிலும் மட்டும் ஏன்
    அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது
    என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு
    நபர் தூங்கும் போது அவர் படுக்கையில்
    லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும்
    என்று விஞானம் கூறுகிறது.அதே போல்
    மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற
    நோயனுக்கள் உலாவுகின்றன என்பது
    அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .
    அதனால் காலையும் மாலையும்
    நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க
    ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.
    குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம்
    காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப்
    போக்கில் அது வாயிலாககொழுப்பு
    அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக
    மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும்
    நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த
    உடன் ஈரமான திருநீர் அணிவது.


    To be cont'd

  • #2
    Re: Benefits of vibhooti

    well done swami good information

    Comment

    Working...
    X