Announcement

Collapse
No announcement yet.

Benefits of vibhooti 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Benefits of vibhooti 2

    Benefits of vibhooti
    Courtesy:Sri.GS.Dattatreyan
    Continues
    அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
    ---------------------------------------------
    ------------
    மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய
    பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி
    வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது
    ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின்
    சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்
    வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
    அதனால்தான் நெற்றியில் திருநீறு
    பூசுகிறார்கள்.
    மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும்
    சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே
    நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்,
    அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும்
    வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
    செய்துவிடலாம். மனோ தத்துவம்,
    ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம்
    போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன
    எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
    கண்ணேறு என்று சொல்லப்படும்
    தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை
    தடுக்கவும் திருநீறு இடப்படும்.
    ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக
    வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய
    இங்கே சந்தனம் பூசுவார்கள்.
    மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான
    ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை
    தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
    ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை
    தூண்டத்தான். இது தொடக்கம்.
    நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
    எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
    இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல்
    என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி
    தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
    போது அது நீறத்துவங்கும் கொதிக்கும்,
    நெருப்பு இல்லாமல் புகையும், அதில்
    நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை.
    அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
    எடுக்கப்பட்டது திருநீறு.
    [தொகு]ஆக்ஞா (நெற்றி) தியானம்
    மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற
    வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்,
    அதாவது சுண்டு விரலை நமது
    நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும்
    நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு
    ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து
    தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி)
    தியானம், இது குண்டலினி யோகாவின்
    தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா
    யோகோ போன்ற இடங்களில் சென்றால்
    சொல்லித்தருவார்கள்.
    பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்
    வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
    இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள்
    சீர்படும், மற்றவரை விட அதிகமாக
    சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும்.
    எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்,
    காரிய சித்தி உருவாகும்.
    இதை முறையாக செய்யவேண்டும், இந்த
    தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி
    தியானமும் செய்யவேண்டும்,
    இல்லையென்றால் அது ஒற்றைத்
    தலைவேதனையில் கொண்டுவந்து
    விட்டுவிடும்.
    இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
    செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா
    நெற்றி பாழ்.
    கற்றது கையளவு கல்லாதது உலகளவு
    பலன்கள்
    திருநீறு அணிவதால் தடையற்ற இறைச்
    சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
    செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
    எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
    உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
    பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
    ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
    அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
    பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
    அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
    வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
    பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
    கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்கார மான திருவடி சேர்வரே!
    தந்தை என்பது சிவபெருமானால்
    தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில்
    ஒன்றாகும். இப்பசுவானது சிவனது
    சத்தியோசாத முகத்திலிருந்து
    தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது
    கபில நிறத்தினை உடையது. இப்பசுவின்
    சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு
    விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.
    "மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர்,
    திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
    மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின்
    எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற
    சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
    புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம்
    உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக
    எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில்
    தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே
    சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண்
    முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின்
    மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில்
    துரியவெளியுள்ளது. அவ்விடத்தில்
    அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு
    இடுவர்.
    இது தற்பொழுது உள்ள குறிப்பு.
    1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக
    நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது.
    அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக
    வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே,
    நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண்
    போன்றவற்றை இடுவது வழக்கம்.
    2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது
    இல்லை. அது கபாலக் குகைக்குள்தான்
    தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக்
    கபாலக் குகைக்குள் நுழைய முடியும்
    என்பதைக் குறிக்க வேண்டுமாகில்
    திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
    மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய
    பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி
    வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது
    ஒரு வர்ம ஸாதனம் கூட.
    சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி
    வழியாக கடத்தும் வேலையை திருநீர்
    செவ்வனே செய்யும், அதனால்தான்
    நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
    மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும்
    சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே
    நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்,
    அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும்
    வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
    செய்துவிடலாம். மனோ தத்துவம்,
    ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம்
    போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன
    எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
    கண்ணேறு என்று சொல்லப்படும்
    தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை
    தடுக்கவும் திருநீறு இடப்படும்.
    ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக
    வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய
    இங்கே சந்தனம் பூசுவார்கள்.
    மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான
    ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை
    தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
    ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை
    தூண்டத்தான். இது தொடக்கம்.
    நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
    எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
    இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல்
    என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி
    தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
    போது அது நீறத்துவங்கும் கொதிக்கும்,
    நெருப்பு இல்லாமல் புகையும், அதில்
    நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை.
    அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
    எடுக்கப்பட்டது திருநீறு.
    ஆக்ஞா (நெற்றி) தியானம்
    மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற
    வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்,
    அதாவது சுண்டு விரலை நமது
    நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும்
    நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித
    உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே
    வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி)
    தியானம், இது குண்டலினி யோகாவின்
    தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா
    யோகோ போன்ற இடங்களில் சென்றால்
    சொல்லித்தருவார்கள்.
    பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்
    வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
    இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள்
    சீர்படும், மற்றவரை விட அதிகமாக
    சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும்.
    எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்,
    காரிய சித்தி உருவாகும்.
    இதை முறையாக செய்யவேண்டும், இந்த
    தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி
    தியானமும் செய்யவேண்டும்,
    இல்லையென்றால் அது ஒற்றைத்
    தலைவேதனையில் கொண்டுவந்து
    விட்டுவிடும்.
    இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
    செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா
    நெற்றி பாழ்.
    கற்றது கையளவு கல்லாதது உலகளவு
    To be cont’d
Working...
X