Announcement

Collapse
No announcement yet.

யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01


    1. முன்னேற்பாடுகள்
    தேவையான வஸ்த்துக்கள் மற்றும் ஏற்பாடுகள்:
    விச்வேதேவர், பித்ரு என இரண்டு ஸ்வாமிகளை மட்டும் எழுந்தருளப்பண்ணி செய்யும் ப்ரத்யாப்தீக (2ம் ஆண்டு முதல் ப்ரதி ஆண்டு செய்யும்) ச்ராத்தத்திற்கு தேவையான மந்த்ரங்கள் மற்றும் ஏற்பாடுகள் வழங்கப்படவுள்ளன.
    இது வைஷ்ணவ முறைப்படியான ப்ரயோகம். வடகலை தென்கலைக்கு உள்ள வித்யாஸங்கள் ஆங்காங்கே வழங்கப்படும். ஐயர் முறைப்படிக்கான வேறுபாடுகளை அறிந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்யலாம். தங்கள் தங்;;;கள் கைப்பட ஒரு பெரிய சைஸ் நோட்டில் டபுள் லைன் ஸ்பேஸ் விட்டு எழுதிக்கொண்டே வரவும்.

    தர்ப முஷ்டி - 1
    கர்தாக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு 3 பில் பவித்திரம்
    புக்னங்கள் - 12
    இரட்டை மர ஆல் (கிண்ணம்) (எள் அக்ஷதை வைத்துக்கொள்ள) - 1
    ஒற்றை மர ஆல்கள் - 4 ப்ராக்தோயம், ப்ரோக்ஷணீ, ப்ரணீதி
    குறிப்பு மர ஆல்களுக்கு பதிலாக பாக்கு மட்டைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பச்சை தொன்னைகள்: ஸ்வாமிகள் இருவருக்கும் சாப்பிடும்போது உபயோகத்துக்கு ஒவ்வொன்று தக்ஷிணை ஸமர்ப்பிக்க ஒவ்வொன்று
    நெய் பாத்திரத்திற்கு ஒன்று ப்ரசாதத்திற்கு ஒன்று, வடை கரமதுக்கு ஒன்று ஆக 7 தொன்னைகள்.
    ஹோமத்திற்கு: விராட்டி - 4, காய்ந்த சவுக்கு சுள்ளி 12 துண்டு. நல்ல நெய் 150 கிராம்,
    அக்ஷதை 100 கிராம், எள் - 10 கிராம் கட்டைக் கரி 4 துண்டு
    ஆராதனத்திற்கு: புஷ்பம், திருத்துழாய், சந்தனம், பச்சைப்பால், தீர்த்த பரிமளம் மற்றும் பெருமாள் பாத்திரங்கள்.
    புண்யாஹ வாசனத்திற்கு: 2 நுனி இலை, அரிசி - 1 கிலோ, வெத்திலை, பாக்கு, பழம்
    தேங்காய் -1.
    பொது: கோமயம், இருந்தால் விஷ்ணுபாதம், 3 ஜாண் அளவில் 4 நுனி இலைகள் ஸ்வாமிகளுக்கு, வாத்யார் தர்பம் வைத்துக்கொள்ள -1, திருமண் பெட்டி, வெள்ளிச் சொம்பு, ஸ்தாலி, ஆசமன பாத்திரம்
    ஸ்வாமிகளுக்கு: வேஷ்டி, உத்தரியம், யஜ்ஞோபவீதம், தீர்த்தத்திற்கு ஒரு சொம்பு, ஒரு ஸ்தாலி, வெத்திலை, பாக்கு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி இவற்றுடன் காலத்துக்கேற்ற கணிசமான தக்ஷிணை.

    குறைந்தபக்ஷ தளிகை: பருப்பு, ஒரு கரமது, ஒரு கூட்டு, ஒரு தயிர் பச்சடி, ஒரு இனிப்புப் பச்சடி, வடை, அப்பம் அல்லது சொஜ்ஜியப்பம் அல்லது அதிரசம், தேங்குழல், துகையல், எள்ளுருண்டை, குழம்பு, ரசம், பாயசம், தயிர் இவற்றை தயார்செய்து வைக்கவேண்டியது. (ஆத்து வழக்கம் தெரிந்தவர்கள் வழக்கப்படி 3, 5, 7 வகைகளில் செய்யவும்).

    4
    Yes, Useful Continue Posting!
    100.00%
    4
    No, But Continue Posting, will read for knowledge.
    0.00%
    0
    No, I don't care about it.
    0.00%
    0

    The poll is expired.



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01
    • ச்ராத்த நியமங்கள். நான்கு நாட்கள் முன்னதாகவாவது ஒளபாஸானம் துவக்க வேண்டும்.


      ஒளபாஸன அக்னியில் தான் ஹோமம் நடக்கிறது. ப்ரஹ்மசாரிகள் ஸமிதாதான அக்னியில் ஸ்ராத்தம் செய்ய வேன்டும். பெற்றோர் இறந்த மாதம், பக்ஷம் திதியில் ச்ராத்தம் வரும்..


      திதி இரு நாட்களும் இருந்தால் மத்தியானம் 2 மணி க்குமேல் திதி உள்ள நாளில் செய்யவும். இரு தினமும் சமமாக இருந்தால் முதல் நாள் செய்க.


      ஒரு மாதத்தில் இரு திதிகள் வந்தால் பிந்திய திதியில் செய்க. பிந்திய திதியில் மாதப்பிறப்பு தோஷம் இருந்தால் முதல் திதியில் செய்க. காலை 6 மணிக்கு ஸுர்ய உதயம் என்றால் 12 மணிக்கு மேல் குதப காலம் என்று பெயர்.


      பகல் 1 ½ மணிக்கு மேல் அபரான்னம் காலம் என்று பெயர். ஒரு மாதத்தில் வரும் இரு திதிகளும் தோஷம் என்றால் பின்னால் வரும் திதியில் ச்ராத்தம் செய்க..ஒரு மாதத்தில் ஒரே திதியானால் தோஷமில்லை.

      ஒரு மாதத்தில் திதியே இல்லாவிட்டால் முந்திய மாதம் சாந்த்ரமான சுத்த திதியில் செய்க. அதுவும் சுத்தமாக இல்லாவிட்டால் பிந்திய மாதம் செய்க.


      எக்காரணத்திலாவது திதியில் செய்ய முடியாவிடில் அன்று உபவாஸம் இருந்து மறு நாள் செய்யலாம்.. திதி மறந்தால் க்ருஷ்ணாஷ்டமி, ஏகாதசி அல்லது அமாவாசையில் செய். ..


      ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை. இந்த பகல் 30 நாழிகையை 5 ஆக பிரித்தால் ஒவ்வொண்றும் 6 நாழிகை. அதாவது 2 மணி 24 நிமிடங்கள்.


      அதாவது 6 மணிக்கு சூர்ய உதயம் என்றால் 6 மணியிலிருந்து 8 மணி 24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்று பெயர். 8மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்று பெயர். 10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்று பெயர்

      . இந்த பகல் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்று பெயர். 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்று பெயர்.


      மாத்யானிக காலமான 10 மணி 48 நிமிடத்திலிருந்து 11 மணி 36 நிமிடம் வரை கந்தர்வ காலம் என்றும், 11 மணி 36 நிமித்திலிருந்து 12. மணி 24 நிமிடம் வரை குதப காலம் என்றும் 12 மணி 24 ந்மிட்த்திலிருந்து 1 மணி 12 நிமிடம் வரை ரெளஹிண காலம் என்றும் பெயர்.


      சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை ,. கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.


      வராஹ மூர்த்தியிடமிருந்து தர்ப்பமும் கருப்பு எள்ளும் வந்தது இவை ராக்ஷச எண்ணங்கள் வராமல் தடுக்கும்.
      தீட்டு வந்தால் தீட்டு போகும் நாளில் செய்க. வேதம் அறியாதவரை, நோயாளியை ச்ராத்ததிற்கு வரிக்காதே. அண்ணன் தம்பி இருவரையும் ஒரு சிராத்தத்தில் வரிக்காதே.;


      சிராதத்திற்கு முன் மூன்று நாட்களாவது நியமமாக இருக்கவும். நமது பாபங்களை அகற்றி கொள்வதற்காக சிராதத்திற்கு முன் கூஷ்மாண்ட ஹோமம் செய்யலாம்.


      கூஷ்மாண்டம் என்பது பூஷணிக்காய் அல்ல. சில மந்திரங்கள்..


      மாதவிடாயாக இருப்பவளின் கணவன் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது. ச்ராத்தம் பண்ணி வைக்கலாம்.. மனைவி, புத்ரன் இல்லாதவரும் ச்ராத்தம் சாப்பிட கூடாது. பத்னி இல்லாவிட்டாலும் புத்திரன் உள்ளவரை கூப்பிடலாம்


      .மூன்று நாட்களுக்குள் ச்ராத்தம் சாபிட்டவரும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிட கூடாது. என்னை சாப்பிட கூப்பிடு என்று கேட்பவரையும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிடக்கூடாது..

      நான் உன் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடுகிறேன் நீ என் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடு என்றும் ஏற்பாடு செய்ய கூடாது, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்பிணியின் கணவனும் ச்ராத்தம் சாப்பிட கூடாது .
      .பெற்றோருக்கு ஆப்தீகம் முடிக்காதவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது .
      அன்று காலை க்ஷவரம் செய்து கொண்டவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது.


      குஷ்டம் சொத்தை பல், சொத்தை நகம் உள்ளவர் சிராத்தம் சாப்பிடக்கூடாது.


      இளையவரை பித்ருக்களாக வரிக்க வேண்டும். வயதில் பெரியவரை விசுவேதேவராக வரிக்க வேண்டும். நாம் உடுத்துவது போல் நல்ல வேஷ்டி வாங்கி தர வேண்டும். சக்தி உள்ளவர் வென் பட்டு வாங்கி தரலாம். வசதி இல்லாதவர்கள் வஸ்திரத்திற்கு பதிலாக பூணூலாவது தருக

      . கர்த்தா புதுபூணல் அணிந்தே ஆரம்பிக்க வேண்டும். மந்திரங்களை நன்கு ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும், அவசரமே கூடாது. நிறைய தக்ஷிணை கொடுக்கவும். கோபமே கூடாது. வரித்தவர்களை தெய்வம் போல் நடத்துக.



      முன்பு நான்கு நாட்களாவது பரான்னம் சாப்பிடக்கூடாது. சகோதரி; மாமனார்; குரு; மாமன் இவர்களது அன்னம் பரான்னமல்ல .முன்னே ஏழு நாட்கள் எண்ணைய் தேய்த்து கொள்ளகூடாது. உடலுரவு கூடாது.மெத்தை படுக்கை கூடாது.


      ச்ராத்தம் அன்று பகலில் தூங்க கூடாது. புஜித்த பின் வேறு ஒன்றும் புஜிக்ககூடாது. வரிக்க பட்ட பின் வரிக்கப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது… கர்த்தா தாம்பூலம் போட்டுக் கொள்ளக் கூடாது.


      பவித்திரத்துடன் ப்ராமனர் காலை அலம்பாதே. வலது காதில் பவித்ரத்.தை கழட்டி வை. கால் அலம்பும் இடத்தில் விச்வேதேவருக்கு சதுரமாகவும் பித்ருக்களுக்கு வட்டமாகவும் பசுஞ்சாணியால் கீழே இடம் செய்யவும். இருவர்களது பாத ஜலமும் ஒன்றாக சேரக்கூடாது.

      மணலோ துணியோ நடுவில் போடவும். பிராமனர் குனுக்காலை மாத்ரம் அலம்புக கனுக்காலுக்கு மேலும் உள்ளங்காலும் அலம்பக்கூடாது… ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ராமணர் காலை, இலையை, அன்னத்தை, அபிகாரம் செய்யாதே.


      அன்று காலை நனைத்து உலர்த்திய மடியையே அணிக. எல்லா சாமான்களையும் அலம்பியே சேர்க்க வேண்டும். உப்பு, வெல்லம் போன்றவற்றை ப்ரோக்ஷிக்க வேண்டும் .சிலர் கடுகு தாளிப்பதில்லை. சிலர் தாளிப்பர்,, சிலர் தேங்காய் சேர்ப்பர். சிலர் சேர்ப்பதில்லை. அவரவர் முன்னோர் செய்த படி செய்ய வேண்டும்..


      பஞ்சாக்ஷரி ,அஷ்டாக்ஷரி உபதேசம், மந்த்ர ஜபம் இல்லாதவர் சமைக்ககூடாது. உறவு அல்லாதவரோ வேலைக்காரியோ சமைக்ககூடாது.


      மாதவிடாயிக்கு காலமான ஸ்த்ரீ சமைக்ககூடாது. மாதவிடாய் குளித்த அன்றும் சமைக்ககூடாது. ஈர வஸ்திரத்துடன் சமைக்க்கூடாது. சமையல் செய்யும் போது மல ஜலம் கழிக்க நேர்ந்தால் ஸ்நானம் செய்து விட்டு சமையல் செய்ய வேண்டும்.


      கர்பிணியும் நோயாளியும் சமையல் செய்யக்கூடாது கச்சமில்லாமலும் சிகையுள்ள விதவையும் சமையல் செய்ய கூடாது. பேசிக்கொண்டோ,அழுதுக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ தலை மயிரை அவிழ்த்துக்கொண்டோ சமையல் செய்ய கூடாது. காபி முதலியன அருந்தியவர் சமையல் செய்ய கூடாது.


      சொந்த வீட்டில் ஸ்ராத்தம் செய்வதே உசிதம்..அன்யர் வீடு ஆனால் வாடகை தந்து செய்யவும். நன்கு சுத்தம் செய்த பாத்ரத்தில் சமைக்கவும். இரும்பு பாத்ரம் வேண்டாம்.. மணி ஒசை, திலகம்,, இரும்பு வேண்டாம்;


      அன்னத்தை கடைசியில் வடிக்க வேண்டும். இலையில் வைக்கும் போது புகை கிளம்ப வேண்டும்.


      ச்ராத்தத்திற்கு ஏற்றவைகள்;உளுந்து, கருப்பு எள்ளு; கோதுமை; பயறு. பாகற்காய்; பலாக்காய்; மாங்காய்; வாழைக்காய். புடலங்காய்.; அவரைக்காய்; வாழைத்தண்டு,; சேப்பங்கிழங்கு; கருணை கிழங்கு; சேனை கிழங்கு பிரண்டை; தூதுவளை, கருவேப்பிலை; எலுமிச்சம்பழம்.,வாழைப்பழம்

      ., கண்டங்கத்திரி, மின்னல் கீரை, தேன், நெய்., வெல்லம், பசுந்தயிர், நெல்லி. மாதுலம் பழம், இலந்தை பழம். ;பசும்பால்; உப்பு, ஜீரகம்;;மிளகு .,;


      சிலர் கடுகு; தேங்காய்; பூஷணிக்காய், வள்ளிக் கிழங்கு, விளாம்பழம், மிளகாய். கடலை சேர்ப்பர். அவரவர் குலாசாரப்படி செய்க
      .
      சேர்க்ககூடாத பொருள்கள்; காராமணி, கொள்ளு;துவரம் பருப்பு, பெருங்காயம்; முருங்கை காய், கத்ரிக்காய்; சுரைக்காய்,
      .
      வாழை இலை அடி ,நுனி நறுக்ககூடாது. நரம்பையும் கிழிக்க்கூடாது .இடது புறம் நுனி அமைந்து இருக்க வேண்டும்.


      பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையை பூமியில் புதைக்க வேன்டும். அதை நாயோ இதரர்களோ தொடக்கூடாது. பாழுங் கிணற்றிலும் போடலாம்.
      .
      வசதி இல்லாத இடத்தில் பசு மாட்டிற்கு கொடுக்கிறார்கள். அதுவும் சரியில்லை;.அன்றெல்லாம் வைத்திருந்து மறு நாள் காலையில் அப்படி செய்கின்றனர். பசுவிற்கு எச்சில் இலை கொடுக்க கூடாது என்பது விதி. வேறு வழியில்லை...
    Last edited by bmbcAdmin; 04-06-16, 19:40.

    Comment


    • #3
      Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

      Sri:
      Further postings will be continued only after reasonable number of responses found.
      This is the reason, why I stopped giving contents regarding Vaideekam.
      About 13 regular members have read this post and more than 100 views it got
      but only one Sri Gopalan sir responded to it.
      only 2 possitive votes got so far????!!!!!!


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

        Originally posted by bmbcAdmin View Post
        Sri:
        Further postings will be continued only after reasonable number of responses found.
        This is the reason, why I stopped giving contents regarding Vaideekam.
        About 13 regular members have read this post and more than 100 views it got
        but only one Sri Gopalan sir responded to it.
        only 2 possitive votes got so far????!!!!!!
        Swamin,
        Your feelings about the response to the thread is well understood but it is my request to you to understand that very few can have a good knowledge about the subject, under discussion, at the same time, many would be highly interested to know about it. you might have noticed earlier also only Sri Gopalan ji gives a detailed descriptions about Vaideekam. hence in my opinion your yeoman service to be continued

        Comment


        • #5
          Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

          Sri:
          Swamin,
          I also understand the point.
          But, givung Vaideeka prayogam is not for understanding, it's to be practiced, by repeatedly reading and reciting aloud. Otherwise no use. What is there in posting few words as a price in return to show their interest?!
          கடை விரித்தேன் கொள்வாரில்லை
          என்ன செய்வது?
          நல்ல நாள் பார்த்து கடையை மூடவேண்டியதுதான்.


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

            சிராத்த விதி முரைகள்>
            ப்ராமணன் பிறக்கும் போதே மூன்றூ கடன்கலூடன் பிறக்கிறான் என்றூ வேதம் கூறூகிரது. பிரம்மசர்ய நிலையில் வேதாத்யானம் மூலம் ரிஷிகலீன் கடனையும் ,கிரஹஸ்த நிலையில் யாகம் முதலியவைகளால் தேவர் கடனையும், நல்ல ஆண் சந்ததியை அடைவதால் அவர்கள் மூலம் பித்ருக்கள் கடனையும் போக்கி கொள்கிறான்.

            பித்ருக்கள் கடன் சிராத்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு கார்ய மூலமாகத்தான் தீரும். புண்ய பூமியில், யோக்கியதை உள்ள ப்ராமணர் களீடத்தில், சாஸ்த்ர சம்மதமான, நியாயமான முரையில் சம்பாதிக்கபட்ட திரவ்யங்களுடன் , சிரத்தையுடன், விதிப்படி, பித்ருக்கலை உத்தேசித்து எந்த காரியத்தில் கொடுக்க படுகிறதோ நியமத்துடன் ஆயுள் முடியும் வரை ஒவ்வொரு வருஷமும் செய்யும் கர்மாவிற்கு சிராத்தம் என்றூ பெயர்.
            நம்பிக்கை இல்லை என்றூ செய்யாமல் விட்டால் கோடி ஜன்மங்கள் மிகவும் கீழ் நிலையை அடைகிறான்.என்கிறது தர்ம சாஸ்திரம்..

            சிராத்த கர்மா செய்பவன் வியாதி இல்லாதவனாய், ஆயுள்< புத்ரன், பெளத்ர ஸந்ததியுடன் கீர்த்தி, தன, தான்ய ஸம்வ்ருத்தியுடன், புஷ்டி, பலம், ஸூகம், இதர தனங்களூடன் இங்கு வாழ்ந்து, பரலோகத்திலும் உயர்ந்த ஸ்திதி அடைவான்

            அவர்கள் இறந்த தமிழ் மாத திதியில் .சிராத்தம் செய்யாவிடில் இறந்தவர்கள் ஆத்மா கஷ்டப்படும். கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நம் குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும். சந்ததி வ்ருத்தியாகாது.

            இவர்கலை ரக்ஷிக்கும் விச்வேதேவர்கள் சாபம் கொடுப்பார்கள் தக்ஷ ப்ரஜாபதியின் பெண், விச்வா என்றவளூக்கு பிறந்த புத்ரர்கள் தான் விச்வே தேவர்கள் இவர்கள் சிராத்தத்தை எப்போதும் ரக்ஷிக்க ப்ரமாவினால் அனுப்ப பட்டவர்கள்.

            8 வசுக்கள்: 11 ருத்திரர்கள்:12 ஆதித்யர்கள்;12 விசுவேதேவர்கள் சிராத்தத்தை காக்க நியமிக்கபட்டவர்கள்.. .

            தேவ பித்ருக்களீல் வசுக்கள் பித்ருக்கள், ருத்ரர்கள் பிதாமஹர்கள் ஆதித்யர்கள் ப்ரபிதாமஹர்களாகவும் சாஸ்திரத்தில் சொல்லபட்டிருக்கிறது.
            ப்ராஹ்மனண் சாப்பிடாததை தேவ பித்ருக்கள் சாப்பிடுவதில்லை. பித்ருக்களீன் த்ருப்திக்காகவே ப்ராஹ்மண போஜனம். நாம் தேவர்களூக்கும் பித்ருக்களூக்கும் கொடுக்கும்
            ஹவ்ய கவ்யாதிகலை ஏற்றூக் கொள்வதற்காகவே ப்ராஹ்மனன் சிருஷ்டிக்க பட்டான்.. நமக்கு ஒரு வருஷம் தேவதைகலுக்கு ஒரு நாள்.. இந்த சிராத்தம் பார்வணமாகத்தான் செய்ய சொல்லி இருக்கிறது
            அதாவது (பித்ரு, பிதாமஹ, ப்ர்பிதாமஹர்கலை உத்தேசித்து ஹோமம், ப்ராஹ்மன போஜனம், பிண்டதானம்)… ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்ய சாஸ்திரம் சொல்லவில்லை.
            மனைவி மாதவிடாயாக இருந்தாலும் உரிய திதியில் தான் செய்ய வேணடும்.

            ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தில் ஹோமம் கிடையாது. ஸங்கல்ப ரூபமாக சிராத்தம் செய்ய வேண்டும். புத்ரனில்லாததால் ஸ்த்ரீகள் செய்யும் சிராத்த விஷயத்தில் மாதவிடாய் குறூக்கிட்டல் ஐந்தாவது நாளீல் செய்யலாம்.
            ஸங்கல்ப சிராத்தத்தில் அர்க்கியம், ஆவாஹனம், ஹோமம், விகிரான்னம், பிண்ட தானம் இல்லை.

            நான்காவது நாளே சிராத்த திதியாக வந்து விட்டால் அன்றூ காலை மறூபடியும் சிராத்த சுத்திக்காக 10-30 மணீக்கு மேல் ஸ்நானம் செய்து பஞ்ச கவ்யம் சாப்பீட்டு ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தை ( கை பில் மூலமாக) நடத்தலாம்.


            க்ரஹணங்கள் குறூக்கிட்டால் அன்றூ முழுவதும் உபவாசம் இருந்து மறூ நாள் செய்யலாம்
            சூர்ய கிரஹணம் கர்ம காலத்திற்கு முன்பே மோக்ஷமானால் அன்றூ சிராத்த காலமான அபராஹ்னத்தில் செய்ய வேண்டியது.
            சிராத்த தினத்தில் சமையல் ஆரம்பித்த பிறகு தீட்டு கேள்விபட்டால், கர்த்தா சிராத்தத்தை முடித்து விட்டு தீட்டு காக்கவும்.

            ப்ராஹ்மணர்கலை வரித்த பிறகு, ப்ராஹ்மணர்களூக்கு தீட்டு தெரிந்தால் , தாம்பூலம் வாங்கி கொண்டு எழுந்த பிறகே அவர்களூக்கு தீட்டு தொடரும்..

            பித்ரு கர்மாக்கள் மூன்றூ விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அமாவாசை. , ப்ரத்யாப்தீகம், மஹாளயம் இப்படி நியதமான காலத்தில் விதிக்கப்பட்டது நித்யம் எனவும்,.
            ஏகோதிஷ்டம், சபிண்டிகரணம் மாசிகம், சோதகும்பம் க்ரஹணம், தீர்த்த சிராத்தம் ஸங்கிரமணம் முதலிய நிமித்தத்தில் விதிக்கப்பட்டது நைமித்திகம் எனவும், நம்முடைய இஷ்ட ஸீத்திக்காக செய்வது காம்யம் எனவும் படும்= நாந்தி..=காம்ய சிராத்தம்.

            அமாவாசை அன்றூ ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்ய நேர்ந்தால் சிராத்தம் செய்த பிறகே அமாவாசை தர்பணம் செய்ய வேண்டும்.. அமாவாசை அன்றூ ஸோதகும்பம்,/அல்லது மாசிகம் வந்தாலும் முதலில் சோதகும்பம்/அல்லது /மாசிகம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.
            ஸோதகும்ப சிராத்தம் தினமும் வருடம் 365 நாட்கலூம் செய்ய வேண்டியது.

            (நித்யம்) . மாசிகம் மாதத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியது.. இவை இரண்டும் ஒரே நாளீல் வந்தால் மாசிகம் மாத்திரம் செய்தால் போதும்..
            இங்கு ஒன்றூ செய்தாலே’ ப்ரஸங்காத்’ மற்றோன்றூம் செய்ததாக ஆகி விடும்.இது தக்ஷ மஹரிஷியின் வாக்கியம்...ஓரே நாளீல் ஒரே கர்த்தா ஒரே பித்ருக்கலை உத்தேசித்து இரண்டு சிராத்தங்கள் செய்ய தேவையில்லை.

            பெற்றோர்கலின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பும் ஒன்றாக வந்தால் முதலில் மாத பிறப்பு தர்பணம் பிறகு சிராத்தம்.
            அமாவசையும் மஹாளயமும் ஒன்றாக ஸம்பவித்தால் முதலில் அமாவாசை பிறகு மஹாளயம்.

            தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்றோருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளீல் நேர்ந்தால் முதலில் வருஷ சிராத்தம் செய்துவிட்டு பிறகுதனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.
            விபத்தில் பெற்றோர் காலமானால் ஒரே நாளீல் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். முதலில் தகப்பனாருக்கு; பிறகு தாயாருக்கு. அன்னம், பாயசம் மட்டும் தனியாக செய்ய வேண்டும் .இங்கு யார் முதலில் இறந்தார்கள் என பார்க்க வேண்டாம்

            ஆனால் தீட்டு அல்லது திதி த்வயத்தாலோ ஒரே நாளீல்செய்யும்படி நேர்ந்தால் தனி தனி சமைலாக செய்து தந்தைக்கும் பிறகு தாய்க்கும் சிராத்தம் செய்ய வேண்டும்.. கர்த்தாவின் கோத்திர ப்ராஹ்மணர்கலை பித்ருக்களாக வரிக்க கூடாது... வேதம் முழுவதும் கற்றவரும் , அனுஷ்டானமுள்ள.வருமான ப்ராஹ்மனர்கலை
            சிராத்தத்தில் வரித்து போஜனம் செய்விக்க வேண்டும். இதனால் கர்த்தாவின் பித்ருக்களூக்கு 7 தலை முரை வரை த்ருப்தி உண்டாகிறது

            தாயார் அல்லது தகப்பனார் சிராத்தம் மஹாளய பக்ஷத்தில் வந்தால் இவர்கள் சிராத்தம் செய்த பிறகுதான் மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.
            தற்காலத்தில் கூட்டு குடும்பம் இல்லாததால் முதலில் இளயவன் மஹாளயம் செய்த பிறகு தான் மூத்தவன் மஹாளயம் செய்ய வேண்டும்.

            சகோதரர்கள் தனிதனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும்.. . ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும்..

            சிராத்தம் ஸம்பூர்ணமாவதற்கு முக்கியமாக தேசம் ,காலம், தகுதியுள்ள ப்ராஹ்மணர்கள்.,திரவ்யம், அக்கரையுள்ள கர்த்தா,, சிராத்தம் செய்யும் ஹோம குண்டத்தில் நிறப்ப பட்ட மண் தெற்கு பக்கம் சரிந்து இருக்க வேண்டும்..

            சிராதத்திற்கு வரிக்கபடும் ப்ராஹ்மணர் வேதம் முழுவதும் அறீந்தவராகவும், மனைவியோடு கூடியவன், அனுஷ்டாதா, அங்கஹீனம் இல்லாதவன் (ஆறூ விரல்கள் உட்பட ) .( குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், சொத்தை நகம் முதலியன இல்லாதவன் ) இவர்கலை தர்ம சாஸ்திரம் முதல் பக்ஷமாக கூறூகிரது..

            பிராமணரின் மனைவி 6 மாததிற்கு மேல் கர்பமாய் இருந்தாலும்,மாத விடாயாக இருந்தாலும், அவருக்கு தீட்டு இருந்தாலும் அவரை வரிக்ககூடாது.
            வரிக்கபடும் இரு ப்ராஹ்மணர்கள் சகோதரர்களாக இருந்தாலும், அல்லது, தகப்பன், மகனாக இருந்தாலும் இவர்கலை சேர்த்து வரிக்ககூடாது.

            இரண்டாம் பக்ஷமாக யோக்கியதை உள்ள பந்துகலையும், , விசுவேதேவ ஸ்தானத்திற்கு வேத அத்யயனம் செய்த ப்ரஹ்மசாரியும், த்ருஸூபர்ணம், மதுத்ரயம் மந்த்ரங்களாவது தெரிந்தவனையும், ப்ரதி வசனம் சொல்ல தெரிந்தவனும் வரிக்கலாம்..
            கடைசீ பக்ஷமாக காயத்ரீ மந்த்ரம் ஜபம் மட்டிலுமாவது செய்யும் ப்ராஹ்மணணாக இருத்தல் அவசியம்.

            Comment


            • #7
              Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

              முதல் நாள் இரவே முடிந்தால் ப்ராஹ்மணர்கள் இரவு சாப்பாடு முடிந்த பின் அவர்கள் வீட்டிற்கு சென்றூ உபவீதியாய் விசுவேதேவரையும் ,ப்ராசீனாவீதியாய் பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரையும் வரிக்க்வேண்டும் என்றூ தர்ம சாத்திரம் கூறூகிரது.

              அப்படி வரிக்கப்பட்டவர் சிராத்தம் முடியும் வரை நியமத்தை கடை பிடிக்க வேண்டும்

              .விஷ்ணூ இல்லாத சிராத்தம் நஷ்டம் என்றூ தர்ம சாஸ்திரம் கூறூகிறது ஆகையால் ப்ரத்யக்ஷமாக ப்ராஹ்மனர் அந்த இடத்தில் வைக்க முடியாவிடில் இலையாவது போட்டு பரிமாரலாம்.
              முடிந்தவுடன் இதை பசு மாட்டிற்கு கொடுக்கலாம் . ஸம்ப்ரதாயப்படி ஒரு ப்ரஹ்மசாரியை சாப்பிட சொல்லும் பக்ஷத்தில் பித்ரு சேஷமான அன்னம், முதலிய வஸ்துக்கள் போடக்கூடாது.
              கர்த்தா சிராத்தத்திற்கு முதல் நாள், அன்றூ, மறூநாள் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்

              சிராத்த தினத்தன்றூ கோபம் கூடாது. பொய் சொல்லக்கூடாது .தாம்பூலம் போட கூடாது. அப் ப்ராமணரிடம் பேசக்கூடாது. பகலில் தூங்ககூடாது.டூத் பிரஷால் பல் தேய்க்கலாம்.. வேப்பங்குச்சி, அரசங்குச்சிகலால் பல் தேய்க்க வேண்டாம்.

              பல் குச்சியால் பல் தேய்பதால் ரத்தம் வெளீயாகலாம். பித்த நீர் சுரந்து பசி ஏற்படலாம் இவைகளை தடுப்பதற்காக பல் தேய்க்க கூடாது .. ஆதலால் பற்கலை கை

              விரல்களால் நன்றாக குழப்பி 12 தடவை வாய் கொப்பலீக்க வேண்டும்.அன்றூ காலையில் காபி கூட சாப்பிட கூடாது. அன்றூ ஒரே வேலை சாப்பாடு தான். அன்றூ இரவு பாலும் பழமும் தான் சாப்பிட. லாம்..பக்ஷணங்கலும் இரவில் சாப்பிடக்கூடாது..

              அன்றூ வேத அத்யயனம் செய்ய கூடாது. சிராத்தத்திற்கு உரிய தானங்கலை தவிர மற்ற தானங்கள் கொடுப்பது வாங்குவது கூடாது. சிராத்தத்தன்றூ காலை நித்ய ஸ்நானம், ஸந்தியா வந்தனம், சமிதாதானம்// ஓளபாசனம்
              மாத்யானிகம் இவைகலை தவிர வேறூ தேவ கார்யங்கள் செய்யக் கூடாது.

              .சிராத்தத்திற்கு மறூநாளூம் க்ஷவரம்,,,எண்னைய் தேய்த்து குளீப்பது,,பரான்னம்; ப்ரதிக்ரஹம் உடலுறவு கூடாது. மாத்யானிக ஸ்நானம் செய்யுமுன்னர் மல ஜல விசர்ஜனம் செய்து விட வேண்டும்,
              சிராத்தம் ஆரம்பித்த பிறகு முடியும் வரை மல ஜல விசர்ஜனம் செய்யக்கூடாது. அடக்கி கொண்டும் சிராத்தம் செய்ய கூடாது

              கர்த்தா கன்ணீர் விடாதவனும், கடுமையாக பேசாமலும், உற்றூ பார்க்காமலும்,, கோபம் இல்லாதவனும்,வேறூ இடத்தில் மனம் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்..

              தேவ பூஜை, ப்ருஹ்மயஞ்கம் சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும். சிராத்தம் உபவாசம் அநுஷ்டிக்கும் நாளீல் வந்தால் சிராத்தம் முடித்து பித்ரு சேஷம் அவசியம் சாப்பிட வேண்டும்
              யாசகம் வாங்கிய பொருளால் சிராத்தம் செய்யக்கூடாது. இரும்பு பாத்ரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் சமையலுக்கோ பரிமாரவோ உபயோகபடுத்த கூடாது. .சமையல் செய்யும் பாத்திரங்கலை நன்றாக தேய்த்து

              அலம்பிய பிறகு உபயோகபடுத்தவும் .ப்ராஹ்மணர்களூக்கு பரிமாறூம்போது பதார்த்தங்கள் சூடாக இருக்க வேண்டும். இரண்டாவது முரை வேக வைக்க கூடாது. சிராத்த முதல் நாள் எந்த பக்ஷணமும் தயார் செய்து வைத்து , சிராத்தத்தில் போடக்கூடாது. வீட்டில் கோலம் மணீஓசை அன்றூ கூடாது.

              பெற்றோருக்கு ஆப்தீகம் முடியும் வரை எங்கும் சிராத்தம் சாப்பிட போக கூடாது. சிராத்தம் செய்து வைக்கலாம்.
              போக்தா:_=-வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் முதல் நாளோ அன்றோ மறூநாளோ வேறூ எங்கும் சிராத்தம் சாப்பிடக்கூடாது.

              சிராத்தம் சாப்பிட்ட நாளீல் சிராத்த சாப்பாட்டிற்கு முன்போ அல்லது பின்போ
              சிராத்த சாப்பாட்டை தவிர மறூபடியும் பால், காபி உள்பட எதையும் சாப்பிடாமலிருத்தல், நீண்ட தூரம் ப்ரயாணம் செய்யாமலிருத்தல்;; அதிகமான சுமையுள்ள பொருட்கலை சுமக்காமலிருத்தல்;

              சிராத்தம் சாப்பிட்ட நாள் முழுவதும் வேதம், சாஸ்திரம், புராணம் போன்றவற்றை சொல்லாமலும், சொல்லி கொள்ளாமலுமிருத்தல்; அன்றூ முழுவதும் இந்திரிய கட்டுபாட்டுடன் தனியாக வசித்தல்;;

              சிராத்தம் சாப்பிடும் முன்போ பின்போ எந்த விதமான தானமும் வாங்காமலிருத்தல் ;ஸந்தியா வந்தனத்தை விஸ்தாரமாக செய்யாமலிருத்தல்; ஒளபாசனத்தை தவிர வேறூ எந்த ஹோமமும் செய்யாமலிருத்தல்.; நிர்ணய சிந்து-286.

              சிராத்த சாப்பாடு ஜீரணமாகும் வரை பித்ருக்கள் ஸூக்ஷமமாக சாப்பிட்ட நபரிடம் இருப்பதாக ஐதீகம்..
              சிராத்தம் சாப்பிட்ட நாளன்றூ மாலையில் வலது கையில் சிறீது சுத்தமான ஜலத்தை எடுத்துக்கொண்டு 10 முரை காயத்ரி ஜபம் செய்து விட்டு அந்த ஜலத்தை குடித்து விட வேண்டும்.
              . பிறகு தான் சுத்தி ஆகி ஸாயம் கால சந்தியாவந்தனம், ,ஒளபாசனம் செய்யலாம் என்கிறார் உசநஸ் என்னும் மஹரிஷி.

              பித்ருக்கலை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்றூ முரையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு பித்ருக்கலை த்ருப்தி செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்பட்டு நீண்ட ஆயுள், அழியா புகழ்,,உடல் வலிமை.,செல்வம், பசு, தான்யங்கள், சுகம் ஆகியவற்றை அனுக்கிரஹிக்கிறார்கள் என்கிறது யம ஸ்ம்ருதி,.

              சிராத்தம் சாப்பிட்ட அன்றூ இரவும் சாப்பிடக்கூடாது அத்யயனம் செய்யக்கூடாது தூர தேசம் போகக்கூடாது. ப்ரஹ்மசர்யம், வேறூ இடத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காமல் இருப்பது
              அன்றூ காலை க்ஷவரம் செய்து கொள்ளாமல் இருப்பது இவைகலை கடை பிடிக்க வேண்டும்..வேறூ எந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது. தாம்பூலம் போடலாம்.

              சிராத்த ப்ராஹ்மணர் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது.
              ராக்ஷஸர் முதலியவர்கலை துரத்துவதற்காக ப்ராஹ்மணர் சாப்பிடும்போது அபிச்ரவணம் மற்றவர்கலை கொண்டு சொல்லசெய்ய வேண்டும்.. அதற்காக சில ப்ராஹ்மணர்கலை வரிக்க வேண்டும்..

              ருக் வேதம், சுக்ல யஜுஸ்: க்ருஷ்ண யஜுஸ் ஸாம வேதம் இவைகலீல் அபிசிரவண மந்திரங்கள் உள்ளன.. வசதி உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லலாம்.. அல்லது அவர்களது வேத அபிசிரவண மந்திரம் சொல்ல ஒருவரையாவது வரச்சொல்லலாம். .எத்தனை பேர் வேன்டுமானாலும் சொல்லலாம்.
              .
              அவர்களூக்கு தக்ஷினை, சுண்டல், பழம் கொடுக்க வேண்டும்.
              அபிசிரவண மந்திரங்கள் சொல்ல வேண்டியவை- அபிசிரவனம்-ப்ராஹ்மணர்கள் போஜனம் செய்யும் போது தானோ அல்லது மற்றவர்கலை கொண்டோ செய்ய சொல்ல வேண்டும்.
              காயத்ரீ மந்த்ரம் மும்முரைசொல்லவும், புருஷஸூக்த அனுவாகங்கலையும்,
              க்ருனுஷ்வபாஜ; ரக்ஷோஹணோ; ஸோமாய பித்ருமதே; உசந்தஸ்த்வா

              ஹவாமஹே; பக்ஷேஹிமாவிச; த்ருவாஸீதருனா; அக்னஉததே; சிரோவாஏதத் யஞ்யஸ்ய;;அஸாவாதித்யோஸ்மின்; ; ஸந்ததிர்வா; ; ஏகவிம்சஏஷபவதி ;இந்த்ரோவ்ருத்ரகும்ஹத்வா ;வைச்வதேவநவை;; அக்னயதேவேப்யஹ;

              உசாந்தஸ்த்வாஹவாமஹே; ஆநோ; அயம்வாவ்யஹ பவதே; உசன்ஹவைதகும்ஹைதமேகே; யோப்ரத்மாமிஷ்டகாம்; ருசாம்பாசி; பித்ரு ஸூக்தம்.
              முதலிய மந்த்ரங்கலையும், கங்காவதரனம்;, இதிஹாஸம் முதலியவையும் சொல்லலாம்.
              .

              பிண்டதானம் செய்து கர்மா முடிவதற்குள் ஹோமம் செய்த அக்னி அணைய கூடாது. இது முக்யம். அனைந்தால் அன்றூ உபவாசம் இருந்து மறூநாள் சிராத்தம் செய்ய சொல்லியிருக்கிறது.


              ஏகோதிஷ்டம், சபிண்டீகரணம்.,, மாசிகம், அநு மாசிகம், நாந்தி கயா சிராத்தம் மஹாளயம் முதலியவைகளூக்கு அபிஸ்வரணம் கூடாது.

              சிராத்தத்தில் அன்னத்தால் ஒரு மாதமும், நெய்யினால் ஒரு வருஷமும், கோதுமையினால் மூன்றூ வருஷமும், தேன் சேர்ப்பதால் அளவில்லா காலம் பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள்.

              Comment


              • #8
                Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                பாத ப்ரக்ஷாளனம்;

                பாத ப்ரக்ஷாலானத்திற்காக வீட்டின் வாசப்ரதேசத்தில் எதிரில் விச்வேதேவருக்கு 12 அங்குலம் சதுரமாகவும், அதற்கு தென்புரத்தில் ஒரடி இடைவெளீ விட்டு பித்ரு மண்டலத்திற்கு 12 அங்குலம் வட்டமாகவும் பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும்.

                விச்வேதேவ மண்டலத்தில் அக்ஷதையும், தர்பம் கிழக்கு வடக்கு நுனியாகவும், பித்ரு மண்டலத்தில் எள்ளூம், தர்பம் தெற்கு நுனியாக போடவும்.

                முதலில் விச்வேதேவருக்கும், பிறகு பித்ருக்கலையும்,பிறகு விஷ்ணூவை சதுர மண்டலத்தில் கனுக்காலை அலம்ப வேன்டும் .ப்ராஹ்மனர்களீன் கணூக்காலுக்கு மேல் அலம்ப கூடாது .பின்பாகம் சரியாக அலம்ப வேன்டும் .உள்ளங்காலை அலம்ப கூடாது. நின்றூகொண்டு அலம்பகூடாது. பவித்ரம் காதில் வைத்துகொண்டு குந்திட்டு உட்கார்ந்து அலம்ப வேண்டும்.

                சந்த்னம் பூசும்போது பவித்ரம் கையில் இருக்ககூடாது. சந்தனம் கொடுக்கும்போது இருக்கலாம்.சந்தனம் பூசி விடுவதும் சாஸ்திர சம்மதமே
                .
                கோமயத்துடன் கூடிய நெய்யை ப்ராஹ்மணர்களீன் அடி கால்களீல் பூசினால் அவனது பித்ருக்கள் கல்ப காலம் முடியும் வரை அம்ருதத்தை அடைகிறார்கள் என்றூ ஸ்ம்ருதி சொல்கிறது. கால் கட்டை விரல் உள்ளங்கால் பக்கம் பூசினால் போதும்.

                . ஸ்தர்னத்தில் வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் பாத ப்ரக்ஷாளனத்தின் போது பத்னி விச்வேதேவர் கால் அலம்பும் போது கர்த்தாவுக்கு இடது பக்கத்திலும்,
                பித்ருக்களூக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கத்திலும் இருந்து ஜலம் விட வேண்டும்.

                விஷ்ணூவுக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவிற்கு இடது.பக்கத்திலிருந்து ஜலம் விட வேண்டும்..
                ப்ரமாணம் நிர்ணய ஸீந்து==பக்கம் 1528;1529 வால்யூம்-3.
                வைத்தினாத தீக்ஷீதீயம்=சிராத்த காண்டம் உத்தர பாகம்.பக்கம் 445ல் பித்ருக்களூடைய பாதப்ரக்ஷாளன ஜலத்தை தெற்கு முகமாயிருந்து வெளீயில் விட வேண்டும் என்றூ இருக்கிறது.

                பிறகு கர்த்தா வடக்கு நோக்கி ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு ப்ராஹ்மணர்கள் ஆசமனம் செய்ய வேண்டும்.
                விசுவேதேவர் கால் அலம்பிய ஜலமும் பித்ரு ப்ராஹ்மணர் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..நடுவில் ஒரு துணீயோ மணலோ போடவும்.

                அல்லது பித்தலை தாம்பாளத்தில் கால் அலம்பிய பின் வெவேறூ இடங்கலீல் ஜலத்தை கொட்டவும்.
                ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ரஹ்மணர் காலை, பாத்திரத்தை , அன்னத்தை அபிகாரம் செய்யாதே.
                விசுவேதேவரின் கால் அலம்பிய ஜலத்தை கர்த்தாவும் மனைவியும் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளலாம்.
                .

                ஆவாஹனம்,, அர்க்கியம், ஸங்கல்பம், பாத்யம், சாப்பிடும்போதும், திலோதகம், அக்ஷையோதகம், சொல்லும் போதும் ,பிண்ட தானத்திலும், கோத்ர நாமங்களை தவறாது சொல்லித்தான் ஆகவேண்டும்.

                வைத்தினாத தீக்ஷிதீயம் ச்ராத்த காண்டம் உத்தர பாகம் பக்கம் 451-452 ஆதாரப்படி ஆசமனம், அக்னிமுகம், ஆஜ்ய பாகங்கள்< ஆகார ஸமித்துகள் ,ப்ரதக்ஷிணம், பின் செல்வது, ப்ராயசித்த ஹோமம்,ஸ்விஷ்டக்ருத் ஹோமம், செய்யும் போதும், நமஸ்காரம், அபிசிரவனம் சொல்லும் போதும்,
                .உபவீதியாகவே செய்ய வேண்டும்..

                ஆஸனத்திற்காக கொடுக்கும் தர்பைகள் கையில் கொடுக்க கூடாது. விசுவேதேவருக்கு வலது பக்கத்திலும், பித்ருக்களூக்கு இடது பக்கத்திலும் உட்காருமிடத்தில் போட வேண்டும்..

                அர்க்கிய பாத்திரத்தை ப்ராஹ்மணர்களீன் அருகில் வைத்து தெற்கு நுனியாக பவித்ரத்தை வைத்து , ஜலம் நிரப்பி,எள்லை போட்டு வைக்க வேண்டும். திறந்து வைக்க கூடாது. தூக்கவும் கூடாது..உத்தரணீயால் எடுத்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்..

                குதப காலத்தில் ( 12 மணீக்கு மேல் ) தர்ப்பம், கறூப்பு எள் இவைகலை உபயோகிப்பது அதிக பலனை தரும் என்றூ தர்ம சாஸ்த்ரம் கூறூகிறது.
                ஆபோஜனம் போடுவதற்கு கங்கா ஜலம் சிறந்தது..

                துளசி எப்போது சிராதத்தில் சிரசில் தரிக்கபட்டதோ அப்போதே கர்த்தா, போக்தா; பிதா மூவரும் விஷ்ணூ லோகத்தில் சிறப்பை அடைகின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம்...
                சிராதத்தில் வஸ்திரம் கொடுக்காதவன் ஏழு ஜன்மங்கள் தரித்ரனாக பிறப்பான் என்கிறது தர்ம சாஸ்திரம்…பூணலாவது கொடுக்க வேண்டும்.

                வித்யை, அனுஷ்டானம் இவைகளீல் சிறந்தவரை முதலில் விசுவேதேவர் ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும். மற்றோருவரை பித்ரு ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும்.

                போஜனத்திற்கு விசுவேதவரை கிழக்கு முகமாகவும், பித்ரு ஸ்தானத்தை வடக்கு முகமாகவும், விஷ்ணூ ஸ்தானத்தை கிழக்கு முகமாகவும் உட்கார வைக்கவும்..

                சிராத்தம் முடியும் வரை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளகூடாது.. கர்த்தா மற்றூம் கர்த்தாவின் மனைவி பரிமாறூவது சிலாக்கியம்....இரண்டு கைகளாலும் தட்டில் கொண்டு வந்து கரண்டி சப்தமில்லாமல் கரண்டி மூலமாக பரிமார வேண்டும். மர கரண்டிகளால் பரிமாரலாம்..

                இலையில் அபிகாரம் செய்தவுடனே கர்த்தாவும்,போக்தாவும் பூராவும் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை பரிமாறூவது நீடிக்க வேண்டும். சீக்கிரம் பரிமாரி முடித்தால் ப்ராஹ்மணர்கள் மந்திரங்கள் பூராவும் சொல்ல வாய்ப்பு இல்லை.

                .போஜனத்திற்கு பலாச இலை உசிதம். வாழை இலை நுனியோடு கூடியது, அகலமுள்ளது .கிழியாதது நரம்பை கிழிக்காமலும், இரண்டு அடி நீளமுள்ளது போடலாம்..இரண்டு இலைகள் ஒவ்வொருவருக்கும் போட வேண்டும். சிலர்

                விஷ்ணூவிற்கு ஒரு நுனி இலை .போடுகிறார்கள்.விசுவேதேவருக்கு 2, பித்ருவிர்கு 2; மஹாவிஷ்ணூவிற்கு 2 தொன்னைகள்>. மொத்தம் 6 தொன்னைகள்.ஒரு தொன்னயில் பருப்பும் மற்றோரு தொன்னயில் நெய்யும் விட வேண்டும்.நரம்புக்கு கீழே அன்னம், பாயசமும் நரம்புக்கு மேலே காய், கனி, .பக்ஷணங்கள் பரிமாற வேண்டும்

                முதலில் விசுவேதேவருக்கும் அடுத்த்து பித்ருவிற்கும், பிறகு விஷ்ணூவிற்கும்.பரிமார வேண்டும்..இதே வரிசையில் தான் முதலிலிருந்து கடைசி வரை ஞாபகமாக பரிமாரவும்.. பரிமாரிகொண்டு வந்த வஸ்துக்கலை கரண்டியில் எடுத்தது முழுவதும் அந்த இலைக்கே பரிமார வேண்டும் .மிச்சம் வைத்து மற்றோரு இலைக்கு பரிமாரக்கூடாது..



                போஜனத்தில் ஒருவருகொருவர் எச்சில் பட்டுவிட்டால் அந்த இலையை தொடாமல் எடுத்துவிட்டு பசுஞ்சாணீயால் சுத்தம் செய்து பிறகு வேறூ இலையை போட்டு பரிமாரி பரிசேஷனம் செய்து சாப்பிட வேன்டும்..

                போக்தாவிற்கு சாப்பிடும்போது ஏதாவது அன்ன பானம் தேவைபட்டால் ப்ராஹ்மணர்கள் கை ஜாடையால் தான் காண்பிக்க வேண்டும். அதே மாதிரி வேண்டியதில்லை என்றாலும் வாயினால் சொல்லக்கூடாது.

                உப்பு முதலியவை அதிகம், குரைவு இருந்தாலும் அதை நன்றாக ஆக்குவதர்க்கு மறூபடியும் கேட்க கூடாது. பரிசேஷனம் முடியும் வரை இடது கை விரலாலும் , தீர்த்தம் சாப்பிடும் போது வலது கை விரலாலும் போஜன இலையை தொட்டுக்கொன்டு இருக்க வேண்டும்..

                சாப்பிடுபவர்கள் அன்னத்தின் குணத்தை சொல்லக்கூடாது.. கையில் எடுத்த பதார்தத்தை முழுவதும் சாப்பிட வேண்டும். கொஞ்சம் சாப்பிட்டு மீதியை இலையில் வைக்க கூடாது. அதே மாதிரி எடுத்த தீர்த்தம் குடித்து மீதி இருந்தால் அதை மறூபடியும் உபயோகிக்க கூடாது.

                பாயசம், நெய், பால், தயிர், தேன் இவைகலை மீதி வைக்காமல் சாப்பிட கூடாது. அன்னத்தை பிறர் பார்கக்கூடாது. உச்சிஷ்டமான மீதி பதார்த்தங்கள் இறந்த உபநனமாகாதவர்களூக்கும், ,குல ஸ்த்ரீகளூக்கும், முக்தியடைந்த ஸந்யாஸீகளூக்கும் பாகமாக அடைகிறது. இவர்கள் உச்சிஷ்டபாகி என்றூ அழைக்க படுகிறார்கள்.. உட்காரும் ஆஸனத்தில் பாதம் படகூடாது.

                போஜனம் சாப்பிடும்போது மல மூத்ர விசர்ஜனத்திற்காக செல்லக்கூடாது. அடக்கி கொண்டும் இருக்க கூடாது. ஸ்நானம் செய்யு முன்னரே மல ஜல விசர்ஜனம் செய்து கொள்ள வேண்டும்.

                Comment


                • #9
                  Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                  விசுவேதேவ ப்ராஹ்மணர் சாப்பிடும்போது வாந்தி எடுத்தால் இலையை எடுத்து விட்டு லெளகீகாக்னி ப்ரதிஷ்டை செய்து , அவருடைய ஸ்தானம்,நாமம், கோத்ரம் , ஆசனம் இவைகலை சொல்லி அன்னத்தால்

                  அக்னியில் ப்ரானாயஸ்வாஹா,முதலிய 5 ஹோமங்கலை 6 ஆவர்த்தி (மொத்தம் 30 ஆவர்த்தி) ஹோமம் செய்து , பிறகு உதானாயஸ்வாஹா, ஸமாநாயஸ்வாஹா என்ற இரண்டு மந்திரங்கள் சொல்லி 2 ஆவர்த்தி ஹோமம் ( மொத்தம் 32 ஆவர்த்தி ))ஹோமங்கள் செய்து சிராத்த சேஷத்தை முடிக்க வேண்டும்..

                  இதுவே பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர் வாந்தி எடுத்தால்.மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்.
                  பிண்ட தானத்திற்கு பிறகு வாந்தி ஏற்பட்டால் இந்திராய ஸோம என்ற ஸூக்தத்தை ஜபிக்கவும்..

                  வாயஸ பிண்டத்தை காக்கை மட்டும் எடுக்கும் படியாக பார்த்து கொள்ளவும் வேறூ எந்த ப்ராணீகளூம் தொடக்கூடாது. இதராளூம் பார்கக்கூடாது..அப்படி ஏற்பட்டால் அன்றூ உபவாசம் இருந்து மறூ நாள் மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

                  போஜனத்திற்கு பிறகு முதலில் பித்ரு வர்க்க ப்ராஹ்மணருக்கும்,பிறகு விசுவேதேவருக்கும் பிறகு மஹா விஷ்னூவிர்க்கும் கை கால் அலம்ப ஜலம் கொடுக்க வேண்டும்.. இவர்கள் ஆசமனமும் இதே க்ரமத்தில் தான் செய்ய வேண்டும்.
                  பிண்டதானம் செய்யுமிடம் போஜன இலையில் படாத படி சமீபத்தில் செய்யவும்.
                  .
                  போஜனம் முடிந்து அந்த இலைகளை தானோ புத்திரனோ ஸ்வஸ்தி வாசனத்திற்கு முன் அவச்யம் நகர்த்த வேண்டும். ஸ்த்ரீகள், சிறூவர்கள் இதை செய்யக் கூடாது. பிண்ட தானத்திற்கு பிறகு தான் ஸ்தல சுத்தி செய்ய வேண்டும்.

                  பிண்ட தானத்திற்கு பிறகு கர்த்தா சிராத்தான்னத்தை சாப்பிடுவதோ அல்லது முகர்வதோ சிராத்தகர்மா அங்கமாகும்..

                  சிராத்த தினத்தன்றூ பிண்ட தானம் முடியும் வரை அந்த வீட்டில் குழந்தைகளூக்குகூட போஜனம் கூடாது.
                  கர்த்தா வைஸ்வதேவம் செய்வதானால் சிராத்தம் முடிந்த பிறகு சிராத்த சேஷத்தினாலேயே செய்யலாம்.
                  பித்ரு சேஷத்தை ஞாதிகள் சாப்பிடலாம். சிராத்தம் முடிந்த பிறகு பிண்டங்கலை பசுவிற்கு கொடுக்கலாம்..அல்லது ஜலத்தில் போட வேண்டியது.. பூமியில் புதைக்கலாம்..

                  பரேஹனி தர்பணம்
                  சிராத்தத்திற்கு மறூநாள் விடியர்காலையில் சுமார் 4ம்ணீக்குமேல் 5-30 மணீக்குள் உஷஹ் காலம் என்றூ பெயர் . முதல் நாள் கட்டிய சிராத்த வேஷ்டி அவிழ்காமல் அதனுடன் ஸ்நானம் செய்து மடி வேஷ்டி கட்டிக்கொண்டு சிராத்தம் செய்த அந்த ஒரு வர்கத்திற்கு மாத்திரம் தர்பணம் செய்ய வேண்டும்.

                  அல்லது விடிந்த பிறகு ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்பனம் செய்யவும் .சிராத்தத்தன்ரே பரேஹனி தர்பணம் செய்தால் சிராத்த நஷ்டம் என்றூ தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

                  பிதா ஜீவித்திருந்து மாத்ரு சிராத்தம் செய்வதாக இருந்தால் பரேஹனி தர்பணம் கிடையாது..
                  ஸோதகும்பம், மாசிகம் ,நாந்தி, சபிண்டீகரணம், ஊனமாசிகம், முதல் ஆப்தீகம், ஸங்கல்ப சிராத்தம் இவைகலுக்கும் பரேஹனி தர்பணம் கிடையாது..



                  தாயார், தகப்பனாருக்கு ஒரே நாளீல்சிராத்தம் செய்பவர்கள் மறூநாள் பரேஹனி தர்பணத்தில் ஸங்கல்பத்தில் பித்ரு சிராத்தாங்கம், மாத்ருசிராத்தாங்கம் ச என்றூ சொல்லி ஒரே பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..

                  தீபாவளீ அன்றூ பரேஹனி தர்பணம் செய்ய நேரிட்டால் அன்றூ முதலில் பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..பிறகு விடியுமுன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.. மாத்யானிகத்திற்கு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.

                  .





                  .





                  .

                  Comment


                  • #10
                    Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                    கர்த்தா காலையில் ஸ்நானம் செய்துவிட்டு ப்ராஹ்மனார்கலூக்கு கொடுக்க வேண்டிய பஞ்சகச்ச வேஷ்டிகலை ஜலத்தில் நனைத்து உலர்த்தவும். தெற்கு நுனியாக உலர்த்த கூடாது.
                    கர்த்தாவின் பஞ்ச கச்ச வேஷ்டியையும் நனைத்து உலர்த்தவும்..
                    ஸந்தியா வந்தனம் மாத்யானிகம் செய்து காயத்ரி ஜபமும் செய்யவும்.

                    ப்ராஹ்மணகளூக்கு கொடுக்க வேண்டிய நல்ல என்னை, சீயக்காய்தூள்,
                    வெந்நீர் தயாராக எடுத்து வைக்கவும்.

                    வரிக்கபட வேண்டிய ப்ராஹ்மன்ணர்கள் வந்து கால்கலை அல்ம்பிகொண்டு அமர்ந்தவுடன் என்ண்ய் சீயக்காய் கொடுத்து அவர்களூம் ஸ்நானம் செய்து வர வேண்டும். என்னை கொடுத்த பிறகே கர்த்தா ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும்…

                    கிழக்கு முகமாக விசுவேதேவரும், வடக்கு முகமாக பித்ரு ஸ்தான ப்ராஹ்மணரும் அமர வேண்டும். விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரும் கிழக்கு முகமாக அமர வேண்டும்.

                    கர்த்தா ஒவ்வொரு தடவையும் அவரவர் முன்பு நின்றூ கொண்டு ஒவ்வொன்ரையும் செய்ய வேண்டும்.
                    உபவீதி
                    --------------கோத்ரஸ்ய------------------சர்மணஹ மம பிதுஹு (------ கோத்ராயாஹா..
                    ----------------நாம்ன்யாஹா மம மாதுஹு ) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே

                    விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ரவ ஸம்க்கானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆசனம் என்றூ சொல்லி இரண்டு தர்பைகலை வடக்கு நுனியாக ஆஸனமாக போட வேண்டும் ஹஸ்தே.அபஹ் ப்ரதாயா என்றூ கூறீ அவர் வலது உள்ளங்கையில் உத்தரணீ ஜலம் விடவும்.

                    ப்ரூர வார்த்ரவ ஸம்கஙகேப்யோ விச்வேப்யோ தேவேப்யோ பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால் தொட்டுகொண்டு

                    , தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்
                    என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.

                    பிறகு பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு செய்ய வேண்டியது
                    ப்ராசீனாவீதீ;
                    -------------------கோத்ரஸ்ய-------------சர்மணஹ மம பித்ருஹு ( ----------கோத்ராயாஹா--------------------நாம்ன்யாஹா மம மாதுஹு )
                    அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே -----------------கோத்ரானாம்-----------------சர்மனாம்
                    (-------------------கோத்ரானாம்--------------------------நாம்நீம் )

                    வசு ருத்திர ஆதித்ய .ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்) இதம் ஆஸனம்.
                    என்றூ சொல்லி 3 தர்பைகலை மடித்து தெற்கு நுனியாக ஆஸனமாக போடவும்.

                    ஹஸ்தே அபஹ் ப்ரதாயா என்றூ சொல்லி அவர் கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

                    ------------------------------கோத்ரேப்யஹ -------------------------சர்மப்யஹ *_-------------------( (கோத்ராயஹா------------------------நாம்நீப்யஹ)) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ ( ஸ்வரூபாப்யஹ )அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யஹ (மாத்ரு பிதாமஹி ப்ர்பிதாமஹிப்யஹ )
                    பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான் என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால்
                    தொட்டுகொண்டு

                    , தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்
                    என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
                    உபவீதி;-
                    --------------கோத்ரஸ்ய------------------சர்மணஹ மம பிதுஹு (------ கோத்ராயாஹா..
                    ----------------நாம்ன்யாஹா மம மாதுஹு ) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே

                    சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆசனம் என்றூ சொல்லி இரண்டு தர்பைகலை வடக்கு நுனியாக ஆஸனமாக போட வேண்டும் ஹஸ்தே.அபஹ் ப்ரதாயா என்றூ கூறீ அவர் வலது உள்ளங்கையில் உத்தரணீ ஜலம் விடவும்.

                    சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீமஹாவிஷ்ணூவர்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால் தொட்டுகொண்டு

                    , தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்
                    என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.

                    க்ருஸரம் கொடுப்பது
                    விசுவேதேவரை பார்த்து சொல்லவும்
                    ப்ரூரவார்த்ரவ ஸம்க்காஹா விசுவேதேவாஹா அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ
                    என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்

                    ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.
                    சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.

                    ப்ராசீனாவீதி போட்டு கொண்டு பித்ரு ஸ்தான ப்ராஹ்மணாரிடம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வருபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா
                    ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யாஹா ) அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ
                    என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்

                    ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.
                    சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.

                    உபவீதி
                    விஷ்ணூ ஸ்தானத்திலிருக்கும் ப்ராஹ்மணரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ
                    என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்
                    ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.

                    சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.
                    பிறகு ஸ்வாமினஹ யதாசெளகரியம் என்றூ சொல்லவும்.

                    சிலர் ஸம்ப்ரதாயத்தில் க்ருஸரம் கொடுப்பது இல்லை. நல்ல எண்ணய் சீயக்காய் தூள் மாத்திரம் கையில் கொடுக்க கூடாது ஆகையால் எடுத்து கொள்ள சொல்வார்கள்> இதன் பிறகு தான் கர்த்தா ஸ்நானம் செய்ய
                    வேண்டும்..

                    முதல் நாள் இரவு நனைத்து பிழிந்து உலர்த்திய துனீயை காலை ஸ்நானம் செய்த பிறகு உடுத்த வேண்டும் .காலையில் பிழிந்து உலர்த்திய பஞ்ச கச்ச வேஷ்டியை தற்போது கட்டிக்கொள்ளவும்

                    ..ஈர வேஷ்டியை இடுப்பில் கட்டி கொண்டிருந்ததை கையால் மேற் புரமாக எடுத்து பூமியில் போட வேண்டும்.. இந்த ஈர வேஷ்டியை ப்ருஹ்ம யஞ்கம் முடிந்தவுடன் நான்காக மடித்து மந்திரம் சொல்லி பிழிய வேண்டும்..

                    க்ரஸராதி கொடுப்பது மன்ஸ் வாக்கு, சரீர சுத்திக்காக கொடுக்கிறோம்.

                    அமாவாசை துவாதசி நாட்களீல் எண்ணய் தேய்த்து கொள்ள கூடாது. ஆதலால் என்னையில், துளசி இலை , மிளகு, வெர்றீலை போட்டு காய்ச்சி தைலமாக கொடுக்க வேண்டும்.

                    தற்போது கர்த்தா புது பூணல் அணீந்து பல மாதங்களாக ஒளபாசனம் செய்யாததால் ப்ராயஸ்சித்தமாக விச்சின்னாக்னி ஹோத்ரம் செய்து இன்றூ காலை ஒளபாசனம் செய்து, பிறகு ஸ்நானம் செய்து விட்டு வந்த ப்ராஹ்மணர்கலை மறூபடியும் வரிக்க வேண்டும்..
                    யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.

                    ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

                    கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

                    Comment


                    • #11
                      Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                      1. கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

                      விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

                      ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

                      கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

                      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

                      .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

                      மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

                      தீர்தத்தை தொடவும்
                      .
                      அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்

                      .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.

                      பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
                      .
                      யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

                      பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு

                      யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

                      என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்
                      .
                      இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

                      உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.





                      .




                      யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்

                      (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

                      ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

                      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

                      ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

                      மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

                      தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

                      மந்த்ரம்.
                      ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
                      ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
                      ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

                      ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
                      ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

                      தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

                      ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

                      ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

                      ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

                      ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

                      இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

                      ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
                      நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

                      கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
                      வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

                      தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
                      உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

                      ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
                      ஸர்வான் தேவான் தர்பயாமி.

                      ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
                      ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
                      ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

                      நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
                      சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.

                      க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
                      ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
                      ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

                      ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
                      ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
                      ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

                      அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
                      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

                      உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

                      ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
                      யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
                      வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
                      ஹவ்ய வாஹம் தர்பயாமி.

                      நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக தீர்த்தம் விடவும்.

                      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
                      மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
                      உபவீதி பூணல் வலம். நுனி விரலால் தீர்த்தம் விடவும்.

                      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
                      அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
                      ஸதஸஸ்பதீம் தர்பயாமி.

                      ரிக் வேதம் தர்பயாமி
                      யஜுர் வேதம் தர்பயாமி
                      ஸாம வேதம் தர்பயாமி

                      அதர்வண வேதம் தர்பயாமி.
                      இதிஹாஸ புராணம் தர்பயாமி.
                      கல்பம் தர்பயாமி.

                      ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

                      ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
                      ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

                      ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
                      ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
                      ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

                      ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

                      ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

                      உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

                      Comment


                      • #12
                        Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                        Respected Gopalan Sir,
                        Very useful post indicating the do's and don'ts during performing srardham.
                        Kindly continue such posts.
                        Varadarajan

                        Comment


                        • #13
                          Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                          As Mr. Varadarajan said it is really a useful post. But I wonder how many Vadhyars are following all these rituals let alone conducting the Sradham meticulously and sincerely and karthaas taking that much interest in doing his parents sratham. Most of those present day vadhyars complete the whole epidode in one hour spnding about 15 minutes to talk in his cellphone in this one hour. Mr Gopalan sir, If you dont misunderstand me please let me know if one do it by way of Heranya sratham since it meets more than this Parvana sratham.

                          Comment


                          • #14
                            Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                            விச்சின்ன அக்னி ஸந்தானம்.
                            ரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்தயந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீராஹா.
                            அக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை போட்டுகொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்கலை கையில் எடுத்து கொண்டு
                            நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,

                            ஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷினையை எடுத்துக்கொண்டு
                            அசேஷே ஹே பரீஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷீணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய
                            அநேக கால விச்சின ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸீத்திரஸ்து இத்யனுக்ரஹான

                            யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.
                            ஆஸனத்தில் அமர்ந்து பவித்ரத்துடன் தர்பைகளூடன் இடுக்கி கொண்டு பத்நீ அருகில் நின்றூ தர்பத்தால் பதியை தொட்டுகொண்டு இருக்க

                            சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வரனம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றீயில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.
                            ப்ராணாயாமம்;-ஓம் பூ; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோனஹ

                            ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்
                            மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவச்வத மன்வந்த்ரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ

                            ஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------
                            நாம ஸம்வத்ஸரே -----------------அயனே------------------ருதெள---------------மாசே
                            --------------பக்*ஷே-----------------------சுப திதெள ----------------வாஸரஹ---------------நக்ஷத்ரம்---------------யோகம்----------------கரணம்----------ஏவங்குண ஸகல விசேஷன

                            விசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யாஸஹ ஒளபாஸாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம் ப்ரீணயாநி. கையிளூள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.
                            பத்னி கையுலுல்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.

                            ஹோம குண்டம் அல்லது ஆறூ செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.
                            ஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்றூ ரேகை கீறீ முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்றூ கோடுகள்

                            கீறீ அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறீய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்றூ அக்னியை ப்ரதிஷ்டை செய்ய
                            வேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்
                            அக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும்..பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரனம் அமைக்க

                            வேண்டும்.தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்ப்ம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலுமுள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..

                            பொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரன தர்பங்கள்
                            :பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில் ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றீ போட 1 ஆக மொத்தம் -108.

                            கர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.
                            அக்னிக்கு வடக்கே தர்பங்கலை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்கலை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர்த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தயும் ஒன்றாக சேர்த்து

                            கவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்கலை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே

                            மேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு
                            வடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முரை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளீ , கவிழ்த்த பாத்திரங்கலை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முரை ப்ரோக்ஷிக்கவும்..

                            ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்துவிட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்

                            . வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்கலை நறூக்கி நெய்யில் போட்டு ,
                            மற்றோரு தர்பத்தை கொளூத்தி மூண்றூ முரை நெய் பாத்திரத்தை சுற்றீ எறீந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து

                            வடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முரை கிழக்கு மேற்காக
                            தள்ளீ அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே
                            இடையில் தர்பங்கலை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான

                            தர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறூபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்கலை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.
                            பிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.

                            அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
                            –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

                            ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
                            தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்

                            அக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

                            பிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
                            இதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு
                            அக்னி ஸீத்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸூவ
                            ஸ்ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

                            மறூபடியும் முன்போல் நான்கு முரை நெய் எடுத்து
                            உபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி
                            அயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---
                            அயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம

                            மறூபடியும் நான்கு முரை நெய் எடுத்து
                            அநேஹ கால ஸாயம் ப்ராதெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.
                            அஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வ்கும்ஹி
                            வேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம
                            யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ

                            அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம்

                            Comment


                            • #15
                              Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

                              அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.
                              ஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸூவாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸூவ ஸூவாஹா ஸூர்யாய இதம் ந மம.
                              ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

                              அஸ்மின் விஸ்சின்ன ஓளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸா ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.

                              ஓம் பூர்புவஸ்ஸூவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.

                              வலது கையில் இரு தர்விகலையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்றூ சொல்லும் போது ஹோமம்
                              செய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உரக்க கூற வேண்டும்.

                              ஆஜ்ய பாத்ரத்தை வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.

                              அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
                              –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

                              ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
                              தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்
                              சக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஓளபாசனம் செய்யாமலிருந்ததற்கு

                              ப்ராஹ்மணருக்கு அரிசி வாழக்காய் தக்ஷினை கொடுக்க வேண்டும்;
                              ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயசமே.
                              அநேக கால ஸாயம் ப்ராதஹ ஓளபாஸனம் அகரண ப்ராயஸ்சித்தார்த்தம்

                              ஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..

                              ஓளபாஸனம்;

                              .சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
                              த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
                              ஓம் பூஹு===========ஸூவரோம்

                              மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
                              ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி

                              அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
                              –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

                              ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
                              தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
                              அக்னி தியானம்;-

                              சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய

                              மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ

                              ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ

                              அக்னிக்கு அலங்காரம்
                              கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,

                              இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.

                              ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
                              ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.

                              ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்
                              ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்
                              முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,

                              அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
                              அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
                              –அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

                              ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
                              தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
                              அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.

                              அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
                              அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம

                              கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
                              அபிவாதயே========= நமஸ்காரம். பவித்ரம் அவிழ்கனும்.ஆசமனம் செய்யனம்..

                              Comment

                              Working...
                              X