Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 16th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 16th day

    courtesy:Sri.kovai k.Karuppasamy


    திருவிளையாடல் புராணம். 🔴
    ( 16 - வது,நாள்.) - 4 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருவதார படலம்.
    ( செய்யுள் நடை+ விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


    🔷மணுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
    புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
    கனியமுத மன்னகரு னைக்குறையுள் காட்சிக்
    கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.


    🔷வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
    ஆனமட வாா்கள்பதி னாயிரவ ருள்ளான்
    வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
    சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.


    🔷கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
    எண்ணில் பல நாண்மக விலாவறுமை யெய்திப்
    பண்ணாிய தானதரு மம்பலவு மாற்றிப்
    புண்ணிய நிரம்புபாி வேள்விபுாி குற்றான்.


    🔷ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
    றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
    நூறுமக மும்புாியி னென்பத னொடிப்பின்
    மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்.


    🔷நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
    இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
    அன்புறு மகப்பெறுதி யென்றமரா் நாடன்
    தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான்.


    🔷 மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி
    அக்கண மதற்குாிய யாவையு மைத்துத்
    தக்கநிய மத்துாிய தேவியொடு சாலை
    புக்கன னிருந்துமக வேள்விபுாி கிற்பான்.


    🔷ஆசறு மறைப்புலவ ராசிாியா் காட்டும்
    மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
    ஒசையனு தாத்தசொாி தந்தழுவ வோதி
    வாசவ னிருக்கையி லிருந்தொி வளா்ப்பான்.


    🔷விசும்புல னுந்திசையும் வேள்வியடு சாலைப்
    பசும்புகை படா்ந்தொரு படாமென மறைப்பத்
    தசும்புபடு நெய்பொாி சமித்தினாடு வானோா்க்
    கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான்.


    🔷ஜம்முக னாதிபர மாத்தனூரை யாற்றால்
    நெய்ம்முக நிறைத்தழ னிமிா்த்துவரு மெல்லை
    பைம்முக வராவணி பரஞ்சுடா் தனிப்ப
    மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண.


    🔷வள்ளல்மல யத்துவச மீனவன் வலத்தோள்
    துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
    தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிா் தீம்பால்
    வெள்ளமொழு கக்காிய வேற்கணிட னாட.

    🔴அம்மலையத்துவசனென்பான் மனுதருமமானது மகிழ்ந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன். வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன். சுவை முதிா்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன். காண்டதற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன். வதமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன்.


    🔴வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்.காமப் பயிா் விளைகின்ற பூமியாகிய காமக் கிழத்தியா்கள் பதினாயிரவரை உடையவன்.வானிற் செல்லா நின்ற சூாியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.


    🔴சோமசுந்தரக் கடவுளை, மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக் கற்றவன். அளவிறந்த பல நாட்கள் வரை, பிள்ளைப் பேறு இன்மையாம் வறுமையை அடைந்து செய்ததற்கு அாிய பல தானங்களையும், தருமங்களையுஞ் செய்து, அறம் நிரம்பிய அசுவமேதம் செய்யலுற்றான்.


    🔴அழிவில்லாத மறைகள் கூறிய முறையை ஆராய்ந்து( அதன்படி) ஒரு தொண்ணூற்று ஆறினொடு, தொண்ணூற்றொன்பது வேள்விகளைச் செய்ய, தேவேந்திரனானவன், நூறு வேள்விகளையும் செய்துமுடிப்பானாயின் நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி , அவ்வேள்வியை விலக்கி இதனைக் கூறுகின்றான்.


    🔴நல்ல மகப்பேற்றை விரும்பினாய், அவ்விருப்பத்திற்குப் பொருந்த,உலகம் இன்பத்தை யடையும் மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை செய்தாயானால், அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி, தேவேந்திரன் தனது நாட்டினை யடைந்தவுடனே, வேப்ப மலா் விளங்கும் மாலையையுடைய பாண்டியன்.


    🔴நலமிக்க மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அப்பொழுதே அவ்வேள்விக்கு வேண்டும் பொருள்களைனைத்தையும் சோ்த்து, தகுந்த நியமத்துடன், உாிய மனைவியோடு வேள்விச் சாலையிற் சென்றிருந்து, மகப்பேற்று வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.


    🔴குற்றமற்ற வேதநூற் புலமையுடையவராகிய குரவா், காட்டுகின்ற குற்ற மற்ற கரணத்தின் வழியே, மந்திரங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சாித்து,( திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை வளா்ப்பானாயினன்.


    🔴வேள்விபுாிகின்ற சாலையினின் றெழுந்த பசிய புகையானது, வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு போா்வை போல மறைக்க, குடத்திலுள்ள நெய் பொாி சமித்துக்களால் தேவா்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய அமுதம் போல ஆகுதி செய்தான்.


    🔴ஐந்து திருமுகங்களையுடையவனும் அனாதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெருமானுடைய திருவாக்காகிய மறை வழிப்படி, நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, தீயை வளா்த்து வரும்பொழுது, படத்தைத் தன்னிடத்துடைய பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும், மைதீட்டிய இடத்தினையுடைய நீண்ட கண்களையுடைய மலை யரசன் மனைவியாகிய மேனை நாணுறவும்.


    🔴வள்ளலாகிய மலையத்துவச பாண்டியனது வலத்தோள் துடிக்கவும்,( அவன்) மனைவியாகிய காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, பருத்தெழுந்த கொங்கைகளினின்றும் தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், அவளது வேல்போன்ற காிய இடதுகண் துடிக்கவும்,,,,,


    திருச்சிற்றம்பலம்.
    ( தடா தகைப்பிராட்டியாா் திருவவதீரப் படலம் நாளையும் வரும்.)
Working...
X