Announcement

Collapse
No announcement yet.

Sankalpa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sankalpa

    சங்கல்ப தாத்பர்யம்


    ஞாணேந்த்ரியங்கள்,கர்மேந்த்ரியங்கள
    ப்ரதி ஜீவிக்கும் இருக்கும் ,


    அதனால்தான் நித்திரை மைதுணம் அனைத்து ஜீவனுக்கும் சமமானதாய்
    இருக்கும்.


    ஆனால் சங்கல்ப விகல்பத்திர்கு காரணமானது மனஸ் ,இது 11ஆவது
    இந்த்ரியம் .


    இது மானிடனுக்கு மாத்ரமே இருக்கும்
    இதனால் தர்மம் எது ,அதர்மம் எது என
    நிர்ணயம் செய்து கொள்வான்.


    மனஸ் சஞ்சலமானது ,அதற்க்கு ஸ்திரத்வம் இருக்காது ,அதனால்தான்
    மனமானது குரங்கை போல் என்றனர் .


    குரங்கு ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்கு தாவுவதை போல் ,


    மனமானதும் ஒரு விஷயத்தில் இருந்து மரு விஷயத்திர்க்கு தாவுகின்றது ,


    மனதை நிஷ்சலம் செய்ய தெரி்ந்தவன் சமாதி ஸ்திதி வந்தவனாவான் ,


    மனஸ் என்பது காமனா சக்தியாகும் ,


    அதன் அதிஷ்டானன் மன்மதன் ,


    மனஸ்சில் மன்மதன் 11 கர்மகாரகமாக உள்ளான் .


    1>காமம்


    2>சங்கல்பம்


    3>விகல்பம்


    4>ஸ்ரத்தா


    5>சத்யம்


    6>த்ருதி


    7>அத்ருதி


    8>ஸ்ரீஹி


    9>ஹ்ரீஹி


    10>பீBheஹி


    11>தீDheஹி #


    இதை கொண்டு அவனவன் கர்ம பலத்திர்க்கு ஏற்ப மனமான மன்மதன்
    மாயகடலில் சாதாரண மானிடர்களை மூழ்கடிப்பான் ,


    இந்த மன்மதனை ஒடுக்கும் சக்தி சாட்சாத் பரமேஷ்வரீ பரமேஷ்வரனே .


    அம்பிகையின் இடது கையில் கரும்பு தனுஸும் ,பரமேஷ்வரரின் வலது கையில் பாணமுமாக ,


    தன்னை உபாசிக்கும் பக்தனை நெருங்காதே என்பது மன்மதனுக்கு அம்பிகை சொன்ன வாக்கு .


    ஏன் ஸ்ரீவித்யையில் மன்மதனுக்கு ப்ராமுக்யம் என்பது புரிகிறதா,


    சரி இதற்க்கு மேல் சொல்ல விரும்பவில்லை ,


    சங்கல்பத்திர்கு வருகிறேன் ,


    இடது கை ஜீவாத்மா ,வலது கை பரமாத்மா,


    இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கைய்யை மூடினால்
    அதனுள் ஈரேழு பதினான்கு லோகங்களும் அடக்கம் ,


    அதை வலது காலின் பாகம் மேல் வைத்தால் ,ஜீவ ப்ரம்ம ஐக்ய தத்வம் ,
    பரமேஷ்வரி பரமேஷ்வர ஐக்யமத்யம் ஆகும் ,


    அங்கு போய் இங்கு போய் நமது இரு கையிலேயே ஸ்ரீசக்ர ரஹஸ்யம் புலப்படுகிறதா,


    சங்கல்ப முத்திரையை சரியாக வைத்து மனதில் ஒரே எண்ணமாக எதை நினைகிரீர்களோ அது நிச்சயம் நிறைவேரும் ,

    இந்த சங்கல்ப முத்திரையை ஸ்தித ப்ரக்ஞனாக ஒரே திடமாக எண்ணியதை நினைத்தாலே அது நிறைவேரும்
Working...
X