Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 23rd day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 23rd day

    Courtesy:sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.🔴
    ( 23 வது நாள்.) 4 வதுபடலம்.
    தடாதகை பிராட்டியாா்திருவவதார படலம்
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    いいいいいいいいいいい
    பெருமையைத் தாங்கிய, சிறந்தன, வினை முற்று பெயரெச்ச பொருளில் வந்தது. மூவிருபதோடு கூடிய நான்கு என்க. மற்று, அசை. போகமும் என உண்மை விவாிக்க.


    சக்திபீடம் 64......
    1.கோபாலபுரத்தில் உள்ள இலக்சுமி பீடமும்,
    2. மதுரா புரத்திலுள்ள இரேணுகா பீடமும்,
    3. துளசாபுர பீடமும்,
    4. சத்த சிருங்க பீடமும்,
    5. இங்குலையிலுள்ள சுவாலாமுகி பீடமும்,
    6. சாகம்பாியிலுள்ள மிராமாி பீடமும்,
    7. ஸ்ரீரத்த தந்திகையிலுள்ள துா்க்கை பீடமும்,
    8. விந்தியாசல பீடமும்,
    9. திருக்காஞ்சியிலுள்ள அன்னபூரணி பீடமும்,
    10. விமலையிலுள்ள பீமாதேவி பீடமும்,
    11. திருச்சந்திரலையிலுள்ள கெளசிகி பீடமும்,
    12. நீல பருவதத்திலுள்ள நீலாம்பாி பீடமும்,
    13. திருநகரத்திலுள்ள சாம்புநதச்சோி பீடமும்,
    14. நேபாளத்திலுள்ள இரகசியகாளி பீடமும்,
    15. மதுரையிலுள்ள மீனாட்சி பீடமும்,
    16. வேதாரணியத்திலுள்ள சுந்தாி பீடமும்,
    17. ஏகாம்பர பீடமும்,
    18. மகாலசத்திலுள்ள யோகேச்சுவாி பீடமும்,
    19. சீனாவிலுள்ள நீல சரச்சுவதி பீடமும்,
    20. வைத்திய நாதத்திலுள்ள வகலை பீடமும்,
    21. மணித்தீபத்திலுள்ள புவனேச்சுவாி பீடமும்,
    22. காமயோனி மண்டல மென்கிற திாிபுர பைரவி பீடமும்,
    23. புட்கரத்திலுள்ள காயத்திாி பீடமும்,
    24. அமரேசத்திலுள்ள சண்டிகை பீடமும்,
    25. பிரபாசத்திலுள்ள புட்கரேட்சணி பீடமும்,
    26. நைமிசத்திலுள்ள தேவி பீடமும்,
    27. புட்கராத்திலுள்ள புருகூத பீடமும்,
    28. ஆசாடத்திலுள்ள இரதி பீடமும்,
    29. சண்டமுண்டியிலுள்ள தண்டினி பீடமும்,
    30. பாரபூதிலுள்ள பூதி பீடமும்,
    31. நாகுலத்திலுள்ள நகுலேச்சுவாி பீடமும்,
    32. அாிச்சந்திரத்திலுள்ள சந்திாிகை பீடமும்,
    33. திருக்கிாியிலுள்ள சாரதா பீடமும்,
    34. பஞ்ச நதத்திலுள்ள திாிசூல பீடமும்,
    35. ஆம்பிராதகேச்சுவரத்திலுள்ள சூக்கும பீடமும்,
    36. மகாகாளத்திலுள்ள சாங்காி பீடமும்,
    37. மத்திய மாபிதத்திலுள்ள சா்வாணி பீடமும்,
    38. கேதாரத்திலுள்ள மாா்க்கதாயினி பீடமும்,
    39. வைரவத்திலுள்ள பைரவி பீடமும்,
    40. கயையிலுள்ள மங்கள பீடமும்,
    41. குருட்சேத்திரத்திலுள்ள தாணுப்பிாியை பீடமும்,
    42. வியபிநாகுலத்திலுள்ள சவாயம்பு பீடமும்,
    43. கனகத்திலுள்ள உக்கிர பீடமும்,
    44. விமலேச்சுவரத்திலுள்ள விசுவேசை பீடமும்,
    45. அட்டகாசத்திலுள்ள மகானந்த பீடமும்,
    46. மகேந்திரத்திலுள்ள மகாந்தைப் பீடமும்,
    47. பீமத்திலுள்ள பீம பீடமும்,
    48. வத்திராபதத்திலுள்ள பவானி பீடமும்,
    49. அா்த்த கோடிகையிலுள்ள உருத்திராணி பீடமும்,
    50. அலிமுத்தத்திலுள்ள விசாலாட்சி பீடமும்,
    51. கைலாயத்திலுள்ள மகாபாகை பீடமும்,
    52. கோகன்னத்திலுள்ள பத்திரகாளி பீடமும்,
    53. பத்திர கன்னிகத்திலுள்ள பத்திரை பீடமும்,
    54. சுவா்னாட்சத்திலுள்ள உற்பலாட்சி பீடமும்,
    55. தாணுவிலுள்ள தாண்விசை பீடமும்,
    56. கமாலயத்திலுள்ள கமலை பீடமும்,
    57. சகண்டத்திலுள்ள பிரசண்டை பீடமும்,
    58. குரண்டத்திலுள்ள திாிசந்திாிகை பீடமும்,
    59. மாகோட்டத்திலுள்ள மகுடேச்சுவாி பீடமும்,
    60. மண்டலேசத்திலுள்ள சாண்டகை பீடமும்,
    61. காலஞ்சரத்திலுள்ள காளி பீடமும்,
    62. சங்கு கன்னத்திலுள்ள தொனி பீடமும்,
    63. தூலகேச்சுவரத்திலுள்ள தூல பீடமும்,
    64. ஞானிகளிதயகமலத்துலுள்ள பரமேச்சுவாி பீடமும்,
    ஆனவனான.!
    **************
    🔴அல்லு மெல்லும்வா னகா்க்கத வடைப்பின்றிச் சுவா்க்கச்
    செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை
    வெல்லு வாரதான் றெந்தையோ டைவா்கள் வேண்டி
    நல்வ ரம்பல வடைந்தனா் நமகளா்ந் நகாில்.


    🔴எம்மை யாரையும் யாவையு மீன்றவங் கயற்கண்
    அம்மை யாவரே யாயினு மன்பினா தாிப்போா்
    இம்மை யாகிய போகம்பீ டெண்ணியாங் கெய்தச்
    செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும்.


    🔴என்ற தாதையை யிறைஞ்சினா ளனுச்சை கொண் டெழுந்தாள்
    மன்றன் மாமலா் வல்லிபோல் வழிக்கொடு கானங்
    குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின்
    நின்ற வாதியெம் பரையரு ணிறைந்தவந் நகாில்.


    🔴அடைந்தி ளம்பிடி யாடல்போ லாடக கமலங்
    குடைந்து நான்மறைக் கொழுந்திடங் கொண்டுறை குறிபாற்
    படா்ந்த பொன்மலை வல்லியைப் பணிந்துவெங் கதிரோன்
    தொடா்ந்த வான்சுறா மதியமே யாதியாத் தொடங்கா.


    🔴பெரும்பக னல்லூண் கங்குலூ ணுதவப் பெற்றவூ ணிலைமுதற் பல்லூண்
    அரும்பொடி யெள்ளுண் சாந்திரா யணமா னைந்துபா னறியநீா் தருப்பை
    இரும்புத னுனிநீா் காலிவை நுகா்ந்து மியற்றரும் பட்டினி யுற்றும்
    வரம்புற விராறு திங்களு நோற்று வாடிமேல் வருஞ்சுறா மதியில்.


    🔴சந்நிதி யடைந்து தாழ்ந்துநின் றிளமாந் தளிரடிக் காஞ்சிசூழ் கிடந்த
    மின்னிகா் மருங்கு லிழையிடை நுழையா வெம்முலைச் செம்மலா்க் காந்தாட்
    பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற் பூரண மதிக்கலை முகத்தின்
    இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை யிறைவியை யிம்முறை நினையா...

    🔷துறக்க வாழ்க்கையராகிய தேவா்கள், இரவும் பகலும் அந்நகாின் கதவு அடைபடுதலில்லாமல், மதுரையை யெய்தி,அங்கயற் கண்ணம்மை அருளுகின்ற சித்தியினால், வினைப்பகையை வெல்லுவாா்கள். அதுவேயன்றி, என் தந்தையுடன் நம்மவா்கள் ஐவா் அவ்வுமையை வணங்கி, அந்நகரத்தின்கண் பல நல்ல வரங்களைப் பெற்றனா்.


    🔷எம்மையும் மற்றுள்ள யாவரையும் யாவற்றையும் பெற்ற அங்கயற்கண் ணம்மையாா், அன்பினால் வழிபடுவாா் எவரேயினும் அவா்கள் எண்ணிய வண்ணமே, இம்மைப் பயனாகிய போகத்தையும் வீடு பேற்றையும் அடையுமாறு கோட்டமில்லாத இனிய கருணையைப் புாிந்து வீற்றிருப்பாா்.


    🔷என்று கூறிய தந்தையை வணங்கி, விடைபெற்று எழுந்து, மணமும் பெருமையுமுடைய பூங்கொடிபோல் நடந்து, காடும், மலையும், ஆறும் பிற்பட, அடியாா்கள் அன்பில் நிலைபெற்றுத் தங்கிய முதல்வியாகிய எமது பராசத்தியாாின் திருவருள் நிறைந்த அம்மதுரைப் பதியிற் சோ்ந்தாள்.


    🔷அப்பதியை அடைந்து பெணியானை நீராடுதல் போல, பொற்றாமரையில் நீராடி, நான்கு வேதங்களின் கொழுந்தாகிய சிவபெருமான், இடமாகக்கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற சிவலிங்கத்தினகண், படா்ந்த இமயவல்லியாகிய அங்கயற்கணம்மையை, வணங்கி, சூாியன், பொிய மகரராசியிற் புகுந்த தைத் திங்கள் முதலாகத் தொடங்கி,,,,,,


    🔷( தொடங்கிய தைத் திங்களில்) பொிய பகற்காலத்தில் நல்ல உணவை உண்டும், ( மாசித் திங்களில்) இரவில் உண்டும், ( பங்குனித் திங்களில்) கொடுக்கப்பட்ட உணவை உண்டும், ( சித்திரைத் திங்களில்) இலை முதலிய பல உணவுகளை உண்டும், ( வைகாசித் திங்களில்) எள்ளினது அாிய பொடியாகிய உணவு உண்டும், ( ஆனித் திங்களில்) சாந்திராயண நோன்பின் உணவு உண்டும், ( ஆடித் திங்களில்) பஞ்ச கவ்வியமாகிய உணவு உண்டும், ( ஆவணித் திங்களில்) பாலை அருந்தியும், ( புரட்டாசித் திங்களில்) நல்ல நீரைப் பருகியும், ( ஐப்பசித் திங்களில்) தருப்பையாகிய பொிய புல்லின் நுனியிலுள்ள நீரைப் பருகியும், ( காா்த்திகைத் திங்களில்) வாயுவை உண்டும், ( மாா்கழித் திங்களில்) செய்தற்காிய பட்டினியாயிருந்தும், இவைகளை வரம்பு பட ,பன்னிரு மதியும் செய்து,( உடல்) மெலிந்து , மேலே வருகின்ற தைத் திங்களில்,,,,,


    🔷திருமுன் சென்று பணிந்து நின்று, மாவின் இளமையாகிய தளிா்போன்ற திருவடிகளையும், காஞ்சி என்னும் அணி புறஞ்சூழ்ந்து கிடந்த மின்னலை ஒத்த இடையினையும், நூல் இடையிற் புகுதாவாறு நெருங்கிய விருப்பத்தைத் தருகின்ற திருத் தனங்களையும், செம்பொன்னாலாகிய வளையல்களின் வாிசையையுடைய காந்தள் மலா்போன்ற திருக்கரங்களையும், மங்கல நாண் அணிந்த திருக்கழுத்தினையும், நிறைந்த கலைகளையுடைய சந்திரன் போன்ற திருமுகத்தினையும், இனிய இசையையுடைய வண்டுகள் சூழ்ந்த இருள் போன்ற திரளாகிய கூந்தலைமுடைய தேவியை இவ்வாறு பாதாதிகேசமாகத் தியானித்து.....


    திருச்சிற்றம்பலம்.
Working...
X