Announcement

Collapse
No announcement yet.

How to see GOD?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How to see GOD?

    கடவுளை காண விலகி போ
    ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
    நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .
    உடனே புறப்பட்டான் .
    போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
    அவர் கேட்டார் .
    " எங்கே போகிறாய் ?"
    " கடவுளை காண போகிறேன் !"
    " எங்கே ? "
    " கோவிலில் !"
    " அங்கே போய் ........"
    " அவரை வழிபட போகிறேன் ! "
    " அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
    " தெரியாது "
    " எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
    " அப்படியென்றால் "
    " உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
    அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்
    ஞானி தெளிவு படுத்தினார்
    " ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
    " நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
    " நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
    " அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
    " அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
    " அதற்க்கு வழி ?"
    " தியானம்"
    " தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"
    " இல்லை "
    மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
    " தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "
    அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .
    தன்னுடைய தேவையை சொன்னார் :
    " I WANT PEACE"
    ஞானி சொன்னார்:
    " முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
    ' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
    ' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .
    வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .
    " சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
    " எப்படி அது ?"
    " ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"
    அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
    ஞானி கேட்டார்
    " அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
    " ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
    உற்சாகமாக சொன்னான் .
    " உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
    "இல்லை "
    " அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
    " யார் அவர் "
    " அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
    வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
    " சரி , சுவாமி . நான் வர்றேன் !"
    சோர்வோடு நடந்து போனான் .
    அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .
    ஞானி கேட்டார் :
    " எங்கே போகிறாய் ? "
    " வீடுக்கு !"
    " கோவிலுக்கு போகவில்லையா ?"
    " இல்லை "
    " அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
    " ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
    'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
    ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .
    " ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "


    -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

  • #2
    Re: How to see GOD?

    Originally posted by soundararajan50 View Post
    கடவுளை காண விலகி போ
    ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?
    நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .
    உடனே புறப்பட்டான் .
    போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்
    அவர் கேட்டார் .
    " எங்கே போகிறாய் ?"
    " கடவுளை காண போகிறேன் !"
    " எங்கே ? "
    " கோவிலில் !"
    " அங்கே போய் ........"
    " அவரை வழிபட போகிறேன் ! "
    " அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
    " தெரியாது "
    " எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
    " அப்படியென்றால் "
    " உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
    அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்
    ஞானி தெளிவு படுத்தினார்
    " ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
    " நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
    " நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
    " அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
    " அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
    " அதற்க்கு வழி ?"
    " தியானம்"
    " தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"
    " இல்லை "
    மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
    " தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "
    அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .
    தன்னுடைய தேவையை சொன்னார் :
    " I WANT PEACE"
    ஞானி சொன்னார்:
    " முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
    ' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
    ' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .
    வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .
    " சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
    " எப்படி அது ?"
    " ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"
    அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
    ஞானி கேட்டார்
    " அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
    " ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
    உற்சாகமாக சொன்னான் .
    " உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
    "இல்லை "
    " அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
    " யார் அவர் "
    " அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
    வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .
    " சரி , சுவாமி . நான் வர்றேன் !"
    சோர்வோடு நடந்து போனான் .
    அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .
    ஞானி கேட்டார் :
    " எங்கே போகிறாய் ? "
    " வீடுக்கு !"
    " கோவிலுக்கு போகவில்லையா ?"
    " இல்லை "
    " அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
    " ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
    'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
    ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .
    " ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "


    -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
    can anyone please translate this in hindi?
    A physician without a knowledge of Astrology has no right to call himself a physician.

    Comment

    Working...
    X