Announcement

Collapse
No announcement yet.

7 vidanga & sthanams of Lord Shiva

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 7 vidanga & sthanams of Lord Shiva

    Courtesy:Smt.Prabha


    நடனசபாபதி - 7




    சப்த விடங்க தலங்கள்:-


    வ.எண் தலத்தின் பெயர் இறைவனின் பெயர் நடனத்தின் பெயர்
    1. திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்
    2. திருநள்ளாறு நகர விடங்கர் அ) உரை விடங்கர் உன்மத்த நடனம்
    3. திருநாகைக்காரோகணம் சுந்தர விடங்கர் வீசி நடனம்
    4. திருக்காறாயில் ஆதி விடங்கர் குக்குட நடனம்
    5. திருக்கோளிலி அவனி விடங்கர் பிருங்க நடனம்
    6. திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்
    7. திருமறைக்காடு புவனி விடங்கர் அம்சபாத நடனம்



    சப்த ஸ்தான தலங்கள்:-


    வ.எண் தலத்தின் பெயர்
    1. திருவையாறு
    2. திருப்பழனம்
    3. திருச்சோற்றுத்துறை
    4. திருவேதிக்குடி
    5. திருக்கண்டியூர்
    6. திருப்பூந்துருத்தி
    7. திருநெய்த்தானம்


    Names of ashtami in waning phase of moon
    Posted: 21 Aug 2016 11:25 PM PDT
    மாதந்தோறும் வரும் அஷ்டமிகளின் பெயர்கள்



    வ.எண் மாதம் தேய்பிறை அஷ்டமியின் பெயர்
    1.சித்திரை அநாதனாஷ்டமி
    2. வைகாசி சதாசிவாஷ்டமி
    3. ஆனி பகவதாஷ்டமி
    4. ஆடி நீலகண்டாஷ்டமி
    5. ஆவணி ஸ்தாணுவாஷ்டமி
    6. புரட்டாசி சம்புகாஷ்டமி
    7. ஐப்பசி ஈஸ்வராஷ்டமி
    8. கார்த்திகை ருத்திராஷ்டமி
    9. மார்கழி சங்கராஷ்டமி
    10. தை தேவதாஷ்டமி
    11. மாசி மகேஸ்வராஷ்டமி
    12. பங்குனி த்ரம்பாகாஷ்டமி


    How to worship Shiva in Shiva temple?
    Posted: 21 Aug 2016 11:20 PM PDT
    சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:-


    முதலில் உங்கள் வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் முன்னர் உங்களின் குலதெய்வத்தினை வேண்ட வேண்டும்.
    பின்பு சிவாலயத்தின் அருகே சென்றவுடன் கோவிலின் கோபுரத்தினை இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.
    பிறகு ஆலயத்தினுள் சென்று முழு முதற் கடவுளாகிய விநாயகப்பெருமானை வணங்க வேண்டும்.
    அதன் பின்னர் கொடி மரத்தினை வணங்க வேண்டும்.
    கொடி மரத்தினை வணங்கிய பின்பு பலிபீடத்தினை வணங்க வேண்டும்.
    அதன் பின்னர் நந்தி பெருமானை வணங்க வேண்டும்.
    மற்ற கடவுளர்களை வரிசையாக தரிசித்து வணங்க வேண்டும்.
    பின்பு அம்பிகையை வணங்க வேண்டும்.
    அம்பிகையை வணங்கிய பின்பு சிவபிரானை கண்டு தொழ வேண்டும்.
    அதன் பின்னர் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
    பின்பு சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.
    அதன் பின்பு துர்க்கையை வணங்க வேண்டும்.
    பின்பு பைரவ பெருமானை வணங்க வேண்டும்.
    அதன் பின்னரே நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.
    பின்பு கொடிமரத்தின் அருகே நின்று நமது வேண்டுகோள்களை வேண்ட வேண்டும்.
    பிறகு கொடிமரத்திற்கு நேராக தரையில் விழுந்து வணங்க வேண்டும்
    சண்டிகேஸ்வரரை மானசீகமாக வணங்கி விடைபெற வேண்டும்.
    பின்பு ஆலயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும்.
    அதன் பின்னர் வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் வீடுகளுக்ககோ செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
    தென்னாடுடைய சிவனே போற்றி…!


    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
Working...
X