Announcement

Collapse
No announcement yet.

Guru & sishya

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Guru & sishya

    எப்படிப்பட்ட சிஷ்யனை குரு நல்ல சிஷ்யன் என்றுகூறுவார்.குரு முக்கியமாக இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு.
    உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை
    பொறுமையைக்கடை கடைபிடித்தல்
    கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்
    உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை இரண்டையும் சேர்த்தே பார்க்கலாம்.
    ஒரு மாணவன் ஒரு குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அவருடைய குருகுலத்துக்குச் சென்று அவரைப் பணிந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். குரு மற்ற மாணக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே நாளை வா பார்க்கலாம் என்றார்.சிஷ்யன் போய்விட்டு மறுபடியும் மறு நாளைக்கு வந்து கேட்டான் . இந்தநாளும் குரு நாளைக்கு வா பார்க்கலாம் என்றார்.இது மாதிரி சிஷ்யன் 21 நாட்கள் வந்து வந்து விடாமுயற்சியோடு குருவை வணங்கி கேட்டுக்கொண்டிருந்தான்.குருவும் நாளைக்கு வா என்று கூறிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டுவந்தார்.
    கடைசியாக குரு, சிஷ்யனின் பொறுமைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்து அவனை சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்ள தீர்மானித்து அவனுடைய உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் சோதிக்க விரும்பினார்.சரி மாணவனே நாளையிலிருந்து நீ வகுப்புக்கு வா. ஆனால் வரும்போது காலை பூஜைக்கு அக்னி வளர்க்கவேண்டும் ஆகையால் நீ வரும்போது உன் இருகைகளிலும் அக்னி தனலைக் கொண்டு வந்து என் முன்னால் இருக்கும் ஹோமகுண்டத்தில் போடவேண்டும் என்றார். மாணவனும் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றான்.
    மறுநாள் காலை சிஷ்யனை எதிர்பார்த்து குரு அக்னி குண்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தார்.மற்ற மாணாக்கர்களும் என்ன குரு இப்படி ஒரு செயலைச் செய்யச் சொல்லியிருக்கிறர் நம் குரு, அதை எப்படி இந்த புது சிஷ்யன் செய்யப் போகிறான் என்று பயத்துடன் இருந்தனர். அப்போது சரியான நேரத்தில் சிஷ்யன் இரு கைகளிலும் அனல் பறக்கும் நெருப்புத்துண்டங்களைக் கொண்டுவந்து குருவின் முன்னால் இருக்கும் குண்டத்தில் சமர்ப்பித்து குருவை வணங்கி நின்றான்.குரு அதைப்பார்த்ததும் சிஷ்யனை அழைத்து அன்புடன் தழுவிக்கொண்டு நீதான் உத்தம சிஷ்யன் என்றார்.21 நாட்கள் உன்னை அலைக்கழித்தும் பொறுமையைக் கடைபிடித்து எப்படியாவது கற்க வேண்டும் என்ற ஆசையினால் வந்து கொண்டிருந்தாய்.அதே மாதிரி உனக்கு உன்னுடைய உணர்ச்சிகளை சோதனை செய்யவைத்த சோதனையிலும் வெற்றி பெற்று விட்டாய்.எல்லோரும் நினத்துக்கொண்டிருந்தார்கள் நீ உன் இருகைகளிலும் நெருப்பை அப்படியே கொண்டுவந்து கொட்டி கைகளைச் சுட்டுக் கொள்ளப் போகிறாய் என்று.ஆனால் நீயோ உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருகைகளிலும் மணலை நிரப்பச்செய்து அதில் நெருப்புத்துண்டங்களை வைத்து கைகளை சுட்டுக்கொள்ளாமல் புத்திசாலிதனத்துடன் செய்து முடித்தாய்.இன்றுமுதல் உனக்கு பாடம் ஆரம்பிக்கிறேன் என்று கூறி அவனை சிஷ்யனாகச் சேர்த்துகொண்டார்
    இதே மாதிரிதான் கர்ணனும் பரசுராமரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளச் சென்றபோது அவரும் அவனை அலைக்கழித்து அவனது பொறுமையைச் சோதனை செய்துதான் சிஷ்யனாகச் சேர்த்துக்கொண்டார்.பின்பு அவர் கர்ணன் மடியில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தபோது தேவர்களின் சூழ்ச்சியால் வண்டு வந்து கர்ணனின் தொடையை துளையிட்டு ரத்தபெருக்கையும், கடுமையான வலியையும் ஏற்படுத்திய போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவண்ணம் இருந்தான்.ஆகவே அவனும் இரண்டு சோதனைகளில் வெற்றிபெற்றாலும் உண்மைகூறவில்லை என்ற தவறைச் செய்து அதன் பலனை அனுபவித்தான்.
    இனி மூன்றாவது குணமான லட்சியத்தை மட்டும் அடைவது என்பதைப் பார்ப்போம். இந்த குணத்துக்கு நல்ல உதாரணமாக இருப்பது துரோணரும் அர்சுணனும்தான். வில்வித்தை கற்றுக்கொடுக்கும்போது ஒரு பெரிய மரத்திலுள்ள பலகிளைகளில் ஒருகிளையைக்காட்டி அதில் ஒரு இலையை மட்டும் காட்டி அம்பு எய்யச்சொன்னபோது பலபேர்கள் ஆச்சார்யன் சொன்ன இலையைத்தவிர பலவிஷயங்களை பார்த்துச் சொன்னபோது அர்ச்சுணன் ஒருவன் மட்டுமே தன் கண்களில் தெரிவது மரம் இல்லை, கிளைகளும் இல்லை. மற்ற இலைகளும் இல்லை ஆசார்யர் ஆன துரோணர் சொன்ன இலை மட்டும்தான் என்று சொல்லி லட்சியத்தை அடைவது மட்டும்தான் சிஷ்யனின் குறியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவன்.
    நல்ல குருவைப் பற்றியும் நல்ல சிஷ்யனைப் பற்றியும் தெரிந்த நாம் இனி எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்
Working...
X