Announcement

Collapse
No announcement yet.

Tirunavaloor temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tirunavaloor temple

    Tirunavaloor temple
    மகாவிஷ்ணு வழிபட்ட தலம்: இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நிரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.
    கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம் நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
    திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.
    இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் கெடில நதியும், கோமுகி தீர்த்தமும் ஆகும். கெடிலநதி ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ தூரத்திலும், கோமுகி தீர்த்தம் கோயிலுக்கு மேற்கிலும் இருக்கின்றன.
    சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் இறைவன் திருவெண்ணைநல்லூரில் மூல ஆவணம் காட்டி தன்னை அடிமை கொண்டதையும், இறைவனால் "வன்றொண்டன்" என்னும் பெயரைப் பெற்றதையும் குறிப்பிடுகிறார். "நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்" என்று தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

  • #2
    Re: Tirunavaloor temple

    Click image for larger version

Name:	G_T9_685.jpeg
Views:	1
Size:	6.6 KB
ID:	33995Click image for larger version

Name:	G_T3_685.jpeg
Views:	2
Size:	4.8 KB
ID:	33996Click image for larger version

Name:	T_500_685.jpeg
Views:	3
Size:	76.6 KB
ID:	33994
    Here are some photos of Thirunavaloor Temple. Bakthajaneshwar Temple.Click image for larger version

Name:	G_T3_685.jpeg
Views:	2
Size:	4.8 KB
ID:	33998Click image for larger version

Name:	G_T4_685.jpeg
Views:	1
Size:	7.9 KB
ID:	33999
    varadarajan


    Attached Files
    Last edited by R.Varadarajan; 05-11-16, 17:40.

    Comment

    Working...
    X