Announcement

Collapse
No announcement yet.

Shiva doing upadesam - Temples

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Shiva doing upadesam - Temples

    *ஈசன் உபதேசம்...*
    *1, ஓமாம்புலியூர் –*
    தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
    *2, உத்திரகோசமங்கை*
    பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
    *3, இன்னம்பர் –*
    அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
    *4, திருவுசாத்தானம்*
    இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
    *5, ஆலங்குடி*
    சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
    *6, திருவான்மியூர்*
    அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
    *7, திருவாவடுதுறை*
    அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
    *8, சிதம்பரம்*
    பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
    *9, திருப்பூவாளியூர்*
    நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
    *10, திருமங்களம்*
    சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
    *11, திருக்கழு குன்றம்*
    சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
    *12, திருமயிலை*
    1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
    *13, செய்யாறு*
    வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
    *14, திருவெண்காடு*
    நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
    *15, திருப்பனந்தாள்*
    அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
    *16, திருக்கடவூர்*
    பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
    *17, திருவானைக்கா*
    அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
    *18, மயிலாடுதுறை*
    குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
    *19, திருவாவடுதுறை*
    அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
    *20, தென்மருதூர்*
    1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
    *21, விருத்தாசலம்*
    இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
    *22, திருப்பெருந்துறை*
    மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
    *23, உத்தரமாயூரம்*
    ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
    *24, காஞ்சி*
    ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
    *25, திருப்புறம்பயம்*
    சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
    *26, விளநகர்*
    அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
    *27, திருத்துருத்தி*
    சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
    *28, கரூர்*
    ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
    *29, திருவோத்தூர்*
    ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்
Working...
X