Announcement

Collapse
No announcement yet.

Nayagi swamigal & Azhwar songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Nayagi swamigal & Azhwar songs

    Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
    திருவடி பெருமை


    continues
    அதுமட்டுமல்ல


    சவமாய் உடலம் தரை சாய்ந்திடுமுன்
    புவனம்தனில் புத்தூர்தனில் சென்றடையுங்கள்
    அடையுங்கள் அடையுங்கள்
    ஆண்டாள் திருவடி அடையுங்கள்-நம்
    ஆண்டாள் திருவடி அடையுங்கள்


    செத்துப்போம் யாக்கை நித்யம் என்று இருக்காமல்
    சித்திதரும் புத்தூர்தனில் சென்றடையுங்கள்
    எண்ணம் பலவழி நண்ணி கெட்டு அலையாமல்
    புத்தூர் தன்னை சென்றடையுங்கள்


    ஆண்டவனின் பல அவதாரங்களை நமக்கு எடுத்துச் சொல்லி திருமாலைப் பார் பார் எனத் ததூண்டுவார்.


    உபய காவேரி நடுவார் அபயஹஸ்தனைப் பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    நரசிங்கமான ஸ்ரீமன் நாராயணனைப் பாராய்
    பரமபதநாதன் பக்தவச்சலனைப் பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    காளிங்கன் மேல் ஆடிய நம் கருமுகிலைப் பாராய்
    நாளிங்கே பாழாகுதே நம் நாயகனைப் பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    உலகளந்த திருவடி உடையவனைப் பாராய்
    அலர்மேல் மங்கைநாதனுக்கு ஆளாகலாம் நீ பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    பாற்கடலின் மேல் பரவும் பரமனை நீ பாராய்
    பார்க்க அனந்தம் கண் வேண்டும் பக்தியுடன் ப்ராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    துக்கவினை நீங்கிட நம் தோழி நீ போய் பாராய்
    அக்கப்பாடு செய்திடாது எம் ஆசை தீரப் பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    புண்டரீகக் கண்ணனைப் போது போமுன்னம் பாராய்
    தொண்டருளமே கோயிலாகக் கொண்டவனடி பாராய்
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    சொக்குதே சொக்குதே கிருஷ்ணன் தோள் அழகில் தோழி
    திக்கு வேறில்லை இல்லை சேவடி மலர்கள் வாழி
    கபம் வந்தடையும் நேரத்திலே காப்பவன் யார் பாராய்


    என்று அறிவுறுத்துவார்.








    தேகம் என்பது அநித்யம் கேளாய் மோகத்தை விட்டுவிடு
    தேகம் என்பது அநித்யம் கேளாய் – கடல் காகம் போல்
    கலங்காது பால்சாகர சயனனைத் தாகமுடன் தொழும்
    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே


    அரங்கன் எப்படிப்பட்டவன் என்பதை மிக அழகாகச் சொல்வார் தனது பாடலில்.


    உபய காவேரிவாசா உலகுண்டு உமிழ்ந்த நேசா
    அபய ஹஸ்தம் தாராய் எங்கள் அன்பனே
    உருகும் அன்பால் உன் அருகில் வந்து பாட
    திருவுளம் வைப்பாய் தென்னரங்கனே
    வலைமான் போல மாயை தன்னில் மய்ங்கும் எம்மை
    அலைய விடாது ஆள்வாய் அச்சோவே


    நாயகிபாவனையில் பாடும் பாவத்தைக் கேளுங்கள்


    காரிருள் மேனியனே என்று கதரும் நம்மை
    பாரிலே கைவிடா பர்த்தாவே
    உரக சயனா இங்கே ஓடிவா என்று ஓதும் நம்
    இருவினை தீர்த்து ஆளாய் என் கோவே


    என்ற இருவினையைக் களைய வேண்டும் என்று வேண்டுகிறார் நாயகி சுவாமிகள்.


    பார்த்துப் பழவினையைத் தீர்த்து அருளாய் என்று
    ஏத்தித் தொழுவோம் நாங்கள் எப்போதும்
    அண்டபிண்டங்களை உண்டாக்கும் அரியே – இம்
    மண்டலத்தார் கண்டிட வா மகிழ்வோடு


    அவர் மேலும் முறையிடுவார்


    கபடமில்லாதவனாய்க் காத்தருள்வாய் எம்மை
    கபட சூத்திரதாரியே


    திருமழிசையும் இறைவனை மிக அழகாகத் துதிப்பார்.
    அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு
    இன்பாவாய் எல்லாமும் நீ ஆவாய் – பொன்பாவை கேள்வா
    கிளரொளி கேசவனே – கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் ஆள்
    என்பார்.
    தமிழ் மொழியின் சிறப்பை திருமழிசை ஆழ்வார் மூலம் நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.


    கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
    குதையும் வினை ஆவி தீர்த்தேன் – விதையாக
    நற்றமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைததாய்
    கற்ற மொழியாகிக் கலந்து
    என்பார்.


    நல்ல தமிழாகிய உன்னை நான் கற்றேன். நல்ல தமிழ் சொற்களோடு ஒன்றாக உன்னுடன் கலந்தேன். அப்படி தமிழால் பாட எனக்கு வரமளித்தாய். என் மனம் உன்னை அடையும் நுழைவாயிலாக மாறியது. அந்த நுழைவாயிலை பார்க்கும் கண்ணை எனக்குக் கொடுத்தாய். தடுமாறும் மனத்தை நான் கட்டுப்படுத்தினேன். என்று அழகாகக் கூறுவார்.
    தான் திருமாலைத் தொழுவதால் சிவபெருமானுக்கு நேரானவன் என்றும் பெருமையுடன் கூறுவார் ஆழ்வார்.
    பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடு
    எதிர்வன் அவன் எனக்க நேரான்
    என்பார். மாறுபடம் மனம் எனக்கு இல்லை. நான் திருமாலைத் தொழுகிறேன். அறிவாற்றலில் சிவபெருமானுக்கு நிகராவேன். ஆனால் சிவபெருமான் எனக்கு நிகராகான் என்று பெருமையுடன் பேசுகிறார் ஆழ்வார்.


    உணவுப் பழக்கவழக்கங்களைக் கூட பல பாடல்களை வலியுறுத்தியிருக்கிறார்.


    வெங்காயம் பூண்டு முள்ளங்கியைச் சமைக்கவே கூடாது
    பச்சரிசி உணவைச் சமையுங்கள் அது கோவிந்தனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்
    எருமைப்பாலை விட்டுவிடுங்கள்
    நந்தகோபனுக்கு உகந்தது பசும்பால் தான்


    புகையிலை சுருட்டு பொடி ஆகியவை கூடாது
    பச்சையிலை புகைப்போதை ஏற்கக் கூடாது






    உணவு குறைந்தால் உடலில் பலம் குறையும்
    அரி பக்தி இல்லையென்றால் ஞானம் குறையும்.


    அமர்ந்து தான் தண்ணீர் அருந்தவேண்டும்
    நின்று கொண்டு குடிக்கக் கூடாது


    மேற்கில் அமர்ந்து ஜெப்ம் செய்யக்கூடாது
    வடக்கில் அமர்ந்து மூன்று வேளை ஜபம் செய்யாமல் இருக்கக் கூடாது


    தலைமுடி மற்றும் நகத்தில் இருந்து சிதறும் நீர் மற்றவர் மேல் படக்கூடாது
    சூரியனைப் பார்த்து எச்சில் துப்பக் கூடாது
    குரு மற்றும் சான்றோர்கள் எதிரில் எச்சில் துப்பக்கூடாது
    குயுக்தியுடன் பேசாதே. குயுக்தியுடன் காரியங்களைச் செய்யாதே
    நான் தான் பெரியவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது
    எண்பதாண்டு நிறைவடைந்தால் பெரியவர்கள் அல்ல
    ஆன்மஞானம் உணர்ந்தவர்களே பெரியவர்கள்


    இப்படி வாழ்க்கை நெறியை பலவிதங்களில் நமக்கு எடுத்துச் சொன்னவர். நான் சிறிதளவு தான் கூறியுள்ளேன்.


    குருபத்தியில் திளைத்த மாதிரியே இறைவனது அடியார்களிடமும் மிக்க ஈடுபாடு கொண்டவர் இவர். பகவத் பக்தியைக் காட்டிலும் பாகவத பக்தி மேம்பட்டது என்பது வைணவர்கள் அனைவருக்கும் தெரியும்.
    இதை வலியுறுத்தும் விதத்தில்
    அய்யன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்


    அடியார்களை நிந்தித்து அபசாரப் படலில் வீழ்ந்து அழியாதே
    அல்லல் ஒழியாதே பொல்லாப் பழி இது


    மாதவன் அடியாரை மனம் நோகச் செய்தால்
    மாடு ஆடு ஜென்மம் தான் கிடைக்கும்
    பாதகம் வேறு இல்லை
    யாதவன் அடியாரைப் பழிப்பது பாவம்
    என்று கூறுவார்.


    நாமசங்கீர்த்தனம் செய்யாதவனை பேயன் என்றும் அதைக் கேட்காமல் இருப்பது பேய்த்தனம் என்றும் அறிவுறுத்துவார்.


    கோவிந்த நாம சங்கீர்த்தனம்
    நவிலாதிருப்பது பேய்த்தனம்
    நடனகோபால நாம சங்கீர்த்தனம்
    கேட்காமல் இருப்பது பேய்த்தனம் என்று கூறுவார்.


    நான் யார் நான் யார் எனச் சிந்தித்து இறப்புக்கு அப்பால் என்ன நடக்கும் என்பதை உணராமல் ஆன்மபோதம் பெறாமல் இருப்பவர்களைப் பார்த்து அருமையாகக் கேட்பார்.


    நீங்கள் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறீர்களே
    ஜீவாத்மா பராமாத்மா பேதத்தை அறியாமல் இருக்கிறீர்களே
    எருமையின் மீது எமன் உயிரை எடுக்க வந்தால்
    என்ன செய்வீர் என்ன சொல்வீர்


    என்று நமக்குப் புரியும்படி கேட்பார்


    வளர வளர வேப்பமரத்தின் கசப்பு அதிகம் ஆவதைப் போல
    மனிதன் வளரவளர ஆசைகள் வளருகின்றன
    மூவாசையை விட்டுவிட்டு திருவடியால் மூவலைகை அளந்தவனிடம் மனதை வை என்று அறிவுறுத்துவார்.


    எனவே விடியற்காலையில் எழ வேண்டும். எழுந்ததும் கண்ணை மூடுங்கள் . தியானம் செய்யுங்கள். நன்றாக மூச்சை இழுங்கள். சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். பிறகு வெளியே விடுங்கள். இதே வேளையில் இறைவனையும் நினையுங்கள். வாழ்க்கையில் துயரம் வரவே வராது. இறைவனை மனக் கண்ணில் நிறுத்தும் பழக்கம் சிறிதுசிறிதாக முயற்சி செய்தால் வரும். முயற்சி திருவினையாக்கும்.
    திருமாலின் படத்தை நேரில் வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மூடுங்கள் சங்கு சக்கரம் மட்டும் மனக்கண்ணில் கற்பனை செய்யுங்கள். வரும். பிறகு சங்கு சக்கரம், கதை-வாள் ஆகியவற்றுடன் நிற்பது போல் கற்பனை செய்யுங்கள். சங்கு தெரியும். சக்கரம் தெரியும். கதை தெரியும். வாள் தெரியும். இவையெல்லாம நாம் கண்டவை. ஆனால் உருவம் தெரியாது. பிறகு வைஜயந்தி மாலை – சிந்தாமணிமாலை – துளசிமாலை ஆகியவற்றைக் கற்பனை செய்யுங்கள். உறுதியாகத் தெரியும். இறுதியில் மேகவண்ணனை – கருமை நிறக் கண்ணனை – கார்முகில் வண்ணனைக் கற்பனை செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் நம் கண் முன்னால் வருவான். முயற்சி திருவினையாக்கும்.


    இக்கருத்தையே நடன கோபால நாயகி சுவாமிகள் மிக அருமையாகக் கூறுகிறார்.


    கோவிந்தா கோபாலா என்று இன்றே பஜனை செய்யுங்கள்
    நாளை இருப்பது என்ன நிச்சயம்?
    நாம் நாளை இருப்பது என்ன நிச்சயம்?


    நோயினால் இந்த உடல் அழியலாம்
    அச்சத்தினால் அழியலாம் இந்த உடம்பு
    ஏதோ ஒரு காரணத்தால் அழியலாம் இவ்வுடம்பு


    எனவே கூர்ந்து கேளுங்கள். அரியைத் தியானம் செய்யுங்கள். அரியை நேரில் காணலாம். மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும் ஆகிய இந்தப் பிறவிப் பிணியில் இருந்து மீளலாம். இறைவன் திருவடியைச் சேரலாம் என்பார்.


    கோவிந்தா கோபாலா மெனி
    ஹிந்தோஸ் பஜன கேரி
    சொந்தோ ரனி காய் நிஜமு


    ரோக் ஹால் சரீர் ஜேடை
    தாக் ஹால் சரீர் ஜேடை
    காய்தி ஒண்டே சாக் ஹால் மெளி சரீர் ஜேடைரே


    வாக் ஐகி – தூ அத்தோ தேவுக்
    தெக்கத்தொக் தியானும் சா
    பவரோகு மொரனு ஜிவனு ஜேடைரே




    ஆலிலைப் பாலகன் பற்றி முன்னர் நாம் திருமங்கை ஆழ்வார் கூறியதைப் படித்தோம். அதே கருத்தை திருப்பாணாழ்வார் எளிமையாகக் கூறுவதைக் கேளுங்கள்.
    ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
    ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
    கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
    நீலமேனி ஐயோ – நிறை கொண்டது என் நெஞ்சினையே.


    திரு வாழத்
    திரு ஆழி வாழ சங்கம் வாழத்
    திரு அனந்தன் கருடன் சேனையர்கோன் வாழ
    அருண் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ
    அளவில் குணத்து எதிராசன் மற்றும் அடியார்கள் வாழ
    இருநான்கு திருவெழுத்தின் ஏற்றம் வாழ
    ஏழுலகும் நான்மறையும் இனிது வாழப்
    பெருவாழ்வு தந்தருளும் அரங்கநாதனே
    அரங்கத்து அம்மானே அருள வேண்டும்
    சரணம் சரணம்


    நீராழி நிறத்து அரங்கன் அடிகள் வாழ
    நெடுமகுடப் பணி வாழக்
    கருடன் வாழப்
    பேராழி செலுத்திய சேனையர்கோன் வாழ
    பேய் பூதன் பொய்கை முதல் பதின்மர் வாழ
    ஓராழிக் கதிர் வாழத்
    திங்கள் வாழ
    உம் அடியார் மிக வாழ
    உலகம் உய்யச்
    சீராழி சங்கு கதை சிலை வாள் வாழச்
    சீரங்க நாயகியே அருள வேண்டும்
    சரணம் சரணம்


    குட திசை முடியை வைத்துக்
    குண திசை பாதம் நீட்டி
    வடதிசை பின்பு காட்டித்
    தென்திசை இலங்கை நோக்கி
    கடல் நிறக் கடவுள் எந்தை
    அரவணைத் துயிலுமா கண்டு
    உடலெனக் குருகுமாலோ
    என் செய்கேன் உலகத்தீரே
    -தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை 19


    தொடர்ந்து இரு வாரங்களுக்கு இப்படி நமது குருநாதர் நடனகோபால நாயகி சுவாமிகள் அவர்களைப் பற்றியும் ஆழ்வார்கள் கருத்துகளையும் நாம் கேட்டோம். பொறுமையாக நீங்கள் அனைவரும் அமைதி காத்து இறை உணர்வுடன் கருத்துகளைக் கேட்டதற்கும் நடுநடுவே உங்களது கருத்துகளைத் தெரிவித்ததற்கும் மிக்க நன்றி. மீண்டும் தொடர்வோம்.


    2012 சனவரி மாதம் 8ம் நாளன்று நமது குருநாதர் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிய பாடல்கள் குறித்தும் ஆழ்வார்கள் பாடல்கள் குறித்தும் நடைபெற்ற சத்சங்கத்தின் போது ஆற்றப்பட்ட உரை,.




    இறைவனின் திருவுருவங்கள் பல திருக்கோவில்களில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உளிகொண்டு சிற்பிகள் உருவாக்கியவை. ஆனால் ஈசனே தானே மனம் உவந்து பக்தர்களை உய்விக்க சில இடங்களில் எழுந்தருளிகிறான். இப்படித் திருமால் தானே தான்தோன்றியாக அருளும் இடங்கள் பாரதத் திருநாட்டில் எட்டு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அவை


    1. திருவரங்கம்
    2. திருமுட்டம் என்னும் திருமுஷ்ணம்
    3. திருப்பதி
    4. சாளக்கிராமம்
    5. நைமிசாரண்யம்
    6. வானமாமலை என்னும் தோதாத்ரி
    7. புஷ்கரம்
    8. நரநாராயணாச்ரமம் என்னும் பதரிகாச்ரமம்
    இவைகளிலே வைணவத்திலே முதலில் வைத்து எண்ணப்படுவது திருவரங்கமே. அரங்கநாதரே அர்ச்சாவதார மூர்த்திகளிலே முதலாமவர்.
    பிரமன் தனது திருஆராதன மூர்த்தியான திருவரங்க நாதனை இச்வாகு அரசனுடைய தவத்துக்கு இரங்கி அளித்தான். சூரியகுல அரசர்களாகிய இச்வாக குல மன்னர்கள் இத்தெய்வத்தைப் பரம்பரைபரம்பரையாகத் தொழுதார்கள். இராமபிரானின் விபீடணினின் அன்பை மெச்சி அவனுக்கு அளித்தார். ஆனால் விபீடணன் அதை இலங்கைக்குக் கொண்டுபோக பிரயாணம் செய்தபோது திருவரங்கம் வந்தவுடன் அரங்கநாதர் இங்கேயே தங்கிவிட்டார். திருமாலே திருமனம் உவந்து தங்கி உள்ள இடமே திருவரங்கம். எனவே தான் ஆழ்வார்கள் மனம் உவந்து ஏறத்தாழ 247 பாடல்கள் வரை அரங்கநாதன் மேல் பாடி உள்ளார்கள். சேர, சோழ, பாண்டிய, விசயநகரப் பேரரசர்கள், கர்நாடக அரசர்கள் போன்ற மன்னர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இத்தலத்திற்குப் பல கைங்கைரியங்களைச் செய்திருக்கிறார்கள். பூலோக புவர்லோகம் போன்ற லோகங்களின் பெயர்களில் ஏழு பிரகாரங்கள் இக்கோயிலிலே உண்டு. இங்கே தான் பல புகழ்பெற்ற மடங்கள் அமைந்து திருமாலுக்குத் தொண்டு செய்து வருகின்றன. இதேபோல பல்லாயிரக்கணக்கான ஆயிரந்திரு நாமாக்களைக் கூறி அற்புதமான பாடல்கள் மற்றும் தோத்திரங்களை அரங்கநாதன் மீது பலர் இயற்றி உள்ளார்கள். இவைகளிலே எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடப்பட்ட தொகுப்பு ஒன்று உள்ளது. அதுவே திருவரங்கநாத திவ்யமணி பாதுகைகள் என்ற பாடல் தொகுப்பு. மிக அற்புதமானது. பல ஆயிரம் பாடல்கள் உள்ளது. இவற்றில் நாம் சிலவற்றை மற்றும் பார்ப்போம்.
    எம்பெருமானின் திருவடிகளைப் போற்றாத ஆழ்வார்களே இல்லை என்று சொல்லலாம்.


    "குல தொல்லடியேன் உன்பாதம் கூடுமாறு கூறாயே"
    "ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே"
    "அண்ணலே உன் அடிசேர அடியேற்கு ஆவா என்னாயே"
    "பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே"
    "உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே"
    "நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே"
    "அந்தோ அடியேன் உன் பாதம் அகலகில்லேன் இறையுமே"
    "புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே".
    ஆழ்வார்கள் மட்டுமா? நாயன்மார்கள் கூட அவ்வாறு தான் பாடி உள்ளார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக, உத்திரமேரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமாகறல். இங்குள்ள சிவபெருமானை பாடிய நாயன்மார்களும் "திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினை தீரும் உடனே", "புன்சடையினுள் அலைகொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே", "நீறு புனைவான் அடியை ஏத்த வினை மறையும் உடனே", "மேலது உரி தோலுடைய மேனி அழகர் ஐயனடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள்" எனத் தொடர்ந்து ஒரு பதிகத்தில் ஐந்து பாடல்களில் திருவடிப் பெருமை பேசப்படுகிறது. இன்னும் பல பதிகங்கள் இப்படி உள்ளன. நம்மாழ்வார் நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்பதற்காக யஜுர் வேத சாரமாக திருவாசிரியம் என்ற நூலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதிலே திருவடித் தாமரைக்கு மங்களாசாசனம் செய்கிறார். நான்காவது பாடலிலே
    ஊழி தோறு ஊழி ஓவாது
    வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்
    யாவகை உலகமும் யாவரும் இல்லா
    மேல்வரும் பெரும் பாழ்க்காலத்து
    இரும்பொருட்கு எல்லாம் அரும் பெறல் தனிவித்து
    ஒருதான் ஆகித் தெய் நான்முகக் கொழுமுளை ஈன்று
    முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி
    பூவுலகம் விளைத்த உந்தி
    மாயக்கடவுள் மாமுதல் அடியே


    நாராயணனின் திருவடிகளையே பற்றி எல்லாக் காலங்களிலும் இடைவிடாமல் பல்லாண்டு பாடி வணங்குவோம். நாம் உய்வு அடைவதற்க அத்திருவடிகளே மூலகாரணம் ஆகும் என கூறி அவைகளைத் தொழுது வாழிய என்று பாடி வணங்குகிறார் நம்மாழ்வார். நாராயணனே தனி வித்தாக இருப்பவன். உலகுகள் உண்டாக மூவகைக் காரணமாக இருப்பவன் அவனே. அதென்ன மூவகைக் காரணம்? நிமித்த காரணம் – உண்டாக்குகிறவன். சஹகாரி காரணம் – உண்டாக்குவதற்க உபயோகப்படும் துணைக் காரணம் , உபாதான காரணம் – மூலப்பொருள் உபாதான காரணம். எம்பெருமான் திருமாலே – அவர் ஒருவரே இந்த மூவகைக் காரணங்களாகவும் உள்ளார். அதென்ன நான்முகக் கொழுமுளை – மிகச் சுவையான தொடர் இது. ஒரு மரம் வளர்ந்து வேர், தண்டு, இலை, பூ, காய், கனி போன்றவை வேண்டுமென்றால் முளை வேண்டும். மூலகாரணம் முளையே ஆகும். அதுபோல தேவர்கள், தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோர் படர்ந்துள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் மூலகாரணம் – முளை பிரமன். எனவே தான் நான்முகனை நான்முகக் கொழுமுளை என்று சொல்லுகிறார். அவர் இல்லையேல் மறைகள் இல்லை – தேவர்கள் இல்லை – சிறு தெய்வங்கள் இல்லை – மனிதர்களும் இல்லை. இதைப் போல சிருஷ்டியிலே இருவகை உண்டு. அத்வாரக சிருஷ்டி மற்றும் சத்வாரக சிருஷ்டி. பகவான் தானே நேரடியாகப் படைப்பது அத்வாரக சிருஷ்டி. இறைவன் தனக்குத் துணையாக ஒருவரை நியமித்து படைக்கச் செய்வது சத்வாரக சிருஷ்டி ஆகும். அண்டங்களைப் படைத்து பின் பிரமனைப் படைக்கும் வரை உள்ளது அத்வாரக சிருஷ்டி. பிரமன் மூலமாகப் படைக்கப்பட்டவை சத்வாரக சிருஷ்டி. இதேபோல நம்மாழ்வார் அதர்வண வேதத்தை எண்பத்தியேழு பாடல்களிலே பெரிய திருவந்தாதி என்ற தொகுப்பிலே தந்துள்ளார். மிக இனிமையான பாடல்கள் இவை. அதிலே 45வது பாட்டிலே மிக அழகாகத் திருவடிப் பெருமையைப் பேசுவார். தினை அளவாக உள்ள சிறிய நேரத்தைக் கூட நான் வீணாகக் கழிக்க விரும்பவில்லை. தீவினைகள் என்னை சுட்டுப் பொசுக்கின்றன. அந்த துன்பங்களை எண்ணி எண்ணி அஞ்சுகிறேன். அடியேன் இறைவனைத் துதிக்கிறேன். தனித்தலைமை பொருந்திய எம்பெருமானது திருவடியின் பெருமையை என்னால் கூற இயலாது. இருந்தாலும் எனக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு துதிக்கிறேன் என்பார்.
    வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
    தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது
    வாசகத்தால் ஏத்தினேன்
    வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
    பொன்னடிக்கண் நான்.




    Continues
Working...
X