Announcement

Collapse
No announcement yet.

ஆழ்வார்கள் அளித்த அமுதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆழ்வார்கள் அளித்த அமுதம்

    ஆழ்வார்கள் அளித்த அமுதம் அனுபவிப்போம் வாருங்கள்

    பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பு
    உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
    தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
    ஒருவனையே நோக்கும் உணர்வு

    (பொய்கை ஆழ்வார்)

    நதி கடலையே நோக்கும். தாமரைப்பூ சூரியனை நோக்கும். உயிர் எமனை நோக்கிச் செல்லும். உணர்வு மட்டும் பகவானைச் சென்றடையும் என்னும்போது ஆத்மா என்பது அழிவில்லாதது, அதன் குறிக்கோள் பகவானைச் சென்றடைவது என்கிற அடிப்படை இந்தக் கருத்து வெளிப்படுகிறது.

    ஆழ்ந்த கருத்துகளை அழகான தமிழ் மொழியிலே அளிக்கிறார் பொய்கை ஆழ்வார்.

    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு

  • #2
    Re: ஆழ்வார்கள் அளித்த அமுதம்

    பிரபந்தங்களிலோ அல்லது தமிழ் இலக்கியங்களிலோ ஆழ்ந்த அறிவில்லாத ஒருவன் வைணவ ஆன்மீக இலக்கியங்களை படித்துவரும்போது ஆழ்வார்களின் மொழி அழகிலும் ஆழ்ந்த ஆன்மீக கருத்துக்களிலும் ஈர்க்கப்பட்டு இவ்வானந்தத்தை மற்றவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலினால் எழுது கிறேன். தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார்களின் பணி மகத்தானது.


    இதோ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய இரண்டாம் திருமொழியிலிருந்து ஒரு பாடல் :

    குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
    வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
    கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
    உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.


    இப்பாடலுக்கு விளக்க உரையை அளிக்குமாறு ஸ்ரீமான் NVS அவர்களை வேண்டுகிறேன்
    நமஸ்காரம்
    ப்ரஹ் மண்யன்
    பெங்களூரு

    Comment


    • #3
      Re: ஆழ்வார்கள் அளித்த அமுதம்

      ஶ்ரீ:
      திருமிகு.ப்ரஹ்மண்யன் அவர்களே!
      ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு வ்யாக்யானங்கள்
      பூர்வாசார்யர்கள் நிறைய நிறைய அருளிச்செய்துள்ளார்கள்.
      இதுவிஷயமாக ஸமீபத்தில் அடியேன் ரசித்த வ்யாக்யானத்தை
      அதாவது விளக்க உரையை அந்த இணைய தளத்தின் உரிய பக்கத்தை
      இந்தச் சட்டத்தின் வாயிலாக நேராகக் காணத் தருகிறேன்.
      அனைத்து பெருமைகளும் அவர்களுக்கே உரித்தாகுக.


      courtesy: http://dravidaveda.org


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: ஆழ்வார்கள் அளித்த அமுதம்

        மே தகு ஸ்ரீ NVS அவர்கட்கு
        நமஸ்காரம்,
        ஸ்ரீ ஊ வே மகாவித்வான் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமிகள் அளிக்கும் விளக்கவுரை அற்புதமானது
        நன்றி
        ப்ரஹ்மண்யன்
        பெங்களூரு

        Comment

        Working...
        X