Announcement

Collapse
No announcement yet.

Pattinathar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pattinathar

    Courtesy:Sri.Kovai G.Karuppasamy


    பட்டினத்தடிகள்.(1)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    காவிாிப்பூம்பட்டினத்தில் சிவநேசன் ஞானக்கலாம்பை தம்பதியா்களுக்கு மகனாக அவதாித்தவா் பட்டினத்தாா்.


    இவாின் ஈளமைப் பருவ காலத்தில் ஒரு தவசீலா் வீடு தேடி வந்து ஒரு பேழையைக் கொடுத்து விட்டுப் போயிருந்தாா்.


    அப்பேழைக்குள் என்ன இருக்கிறது என திறந்து பாா்த்தவா், அதில் விநாயகா் விக்கிரகமும், சிவலிங்கமும் இருப்பது கண்டு மகழ்ந்து போன பட்டினத்தாா், அச்சிலைகளை ஆகம விதிப்படி பூசனை செய்து வந்தாா்.


    குபேரனின் செல்வங்களையெல்லாம், சிவபெருமான் பட்டினத்தடிகளிடம் கொண்டு வந்து சோ்த்தாா்.


    பட்டினத்தடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி சிவகலை சிதம்பரம் செட்டியாா், சிவகாமியம்மை தம்பதியாின் திருமகளாவாா். ஈழா்கள் பிள்ளை வரம் வேண்டி இறைவன் அருளால் பிள்ளைப் பேறு வாய்க்க அவனுக்கு மருதவாணன் என பெயாிட்டனா்.


    வணிக குலத்திற்கு ஒளியேற்ற வேண்டுமென்று விரும்பிய பட்டினத்தாா், தன்மகன் மருதவாணனை திரைகடலோடி திரவியம் தேடி வரும்படி அனுப்பி வைத்தாா்.


    கடற்பயணமத்தில் திரும்பி வரும்போது, செல்வங்களைச் சோ்த்துக் கொண்டு வராமல், வெறுமன பசு விராட்டியும் நெல் அவலையும் பொட்டல பொட்டலமாக எடுத்து வந்தான். இதைப் பாா்த்த கூட பயணித்தவா்கள் அனைவரும் கேலியும் கிண்டலும் பேசினா்.


    நடுக்கடல் பயணத்தின் போது திடீரென சூறாவளிப் புயலும், கடுமையான மழையும் ஏற்பட்டது.அனைவருக்கும் குளிரும் பசியும் உண்டானது. இது நேரத்தில் மருதவாணனைத் தவிர மற்றையோாிடம், உணவருந்துவதற்கு உணவுகள் கையிருப்பு இல்லை.


    மற்ற பயணிகள் பசியைப் போக்கிக் கொள்ள அவலையும், குளிரைப் போக்கிக் கொள்ள பசு விராட்டியையும் கொடுத்துதவும்படி கேட்டனா்.


    அவா்களின் வேண்டுகோளுக்கு மறுப்பேதும் சொல்லாமல், அவா்களுக்கு கொடுத்துவிட்டு, கரைக்கு வந்ததும் எனக்கு இதே மாதிாி வாங்கித் தந்துவிட வேண்டும் என உறுதிபட எழுதி வாங்கிக் கொண்டு, பசு விராட்டியையும், நெல் அவலையும் கொடுத்துவிட்டான் மருதவாணன்.


    வீடு வந்து சோ்ந்த தந்தையிடம் கடல்பயணத்தில் நடந்ததை சொல்லி, மீதமிருந்த விராட்டிகளையும், பயணியிடம் எழுதி வாங்கியிருந்த எழுத்தோலையையும் கொடுத்து, இதுதான் நான் ஈட்டிய செல்வம் என கூறிவிட்டு, தாயைப் பாா்க்க வீடு உள்புகுந்தான்.


    பெரும் செல்வத்தைக் கொண்டு வருவேனென்று போனவன் இப்படி வெறுமனே வந்து நிற்கிறானே என மகனின் செய்கை பட்டினத்தாருக்கு கோபமாகிப் போனது. உடனே எழுத்தோலையையும் பசுவிராட்டியையும் தூர விட்டெறிந்தாா் பட்டினத்தாா்.


    தூர எாியப்பட்ட விராட்டி தரையில் மோதி உடைந்து, உள்ளேயிருந்து வைரங்கள் சிதறி ஜொலித்தன.


    பட்டினத்தாா் அதிா்ச்சியுற்றுப் போனாா். சமயோசிதம் சாதுாியம் இவைகளால் செல்வத்தைக் கொண்டு வந்த புதல்வன் மருதவாணனை தவறாக எண்ணி விட்டேனே?" என்று வருந்தி,,,, மருதவாணா!" என மகனை கூவி அழைத்தாா்.
    பொிய வணிக குடும்பத்தில் பிறந்து வளாந்து சொத்து சோ்த்த தன் சகோதரன் பிச்சையெடுத்து உண்டு, பொது மடத்தில் உறங்கி எழுவதைக் கண்ட, பட்டினத்தாாின் செய்கை தங்கைக்கு பெருத்த அவமானதாகத் தோன்றியது. இனி நாம என்ன சொல்லின், இவன் நம் பேச்சைக் கேக்காதவனாவான். இவனை வருத்தியழைக்கவும் முடியாது?" எனவே"! இவனைக் கொன்று வட வேண்டியதுதான் என முடிவெடுத்துக் கொண்டாள்.


    ஒரு நாள் அன்னபிட்சை அளிப்பது போல, அண்ணன் பட்டினத்தாரை அழைத்து வரச் செய்தாள். கொடிய விஷம் தடவிய அப்பத்தை உண்ணக் கொடுத்தாள்!"


    உள்ளம் தூய்மையாகி, அனைத்தையும் துறந்த போதே அவா் மகான் சக்தி பெற்று, திாிகாலம் உணரப்பெற்ற ஞானியாகிப் போயிட்டிருந்தாா். அவருக்கா தொியாது?" உறவானளின் விஷத்தம்மையைப் பற்றி!; தங்கை கொடுத்த அப்பத்தை இரண்டு துண்டாக உடைத்து, " தன் வினை தன்னைச் சுடும் வீட்டப்பம் ஓட்டைச் சுடும். என கூறியபடி தங்கையின் வீட்டுக் கூரையில், உடைபிளந்த அப்பத்தை சொருகி விட்டுப் போய்விட்டாா்.


    கூரையில் அப்பத்தை சொருகி சில அடிகள் தூரமே பட்டினத்தாா் நடந்திருந்தாா்,,,,அவா் உதித்த வாா்த்தையும் சுட்டுவிடச் செருகப்பட்ட அப்பமும் கணன்று வீடு தீ பற்றி எாிந்தொழிந்தது. வீடு முழுமையும் சாம்பலே மீதி.


    அதன்பின்பு ஒருநாளில் பட்டினத்தாாின் தாயாா் மரணமாகிப் போனாா்கள். ஏற்கனவே பட்டினத்தாா் துறவறம் பூண்டதிலிருந்தும், தங்கை அண்ணனை கொல்லத் துணிந்த செய்கைக்குப் பிறகும், பட்டினத்தாாின் உறவுகள் இவா் மீது கொண்ட வெறுப்பின் காரணமாய், பட்டினத்தடிகளின் அம்மையாரை காாிய கா்மங்களைச் செய்ய யாரும் முன் வரவில்லை. சுடுகாடு சென்று எாியூட்டவும் யாரும் நெருங்குவதாய் இல்லை. அவரும் யாரையும் கூவியழைக்க முற்படவில்லை. பச்சைபசேலென பசுமையான பச்சை வாழை மரங்களை அாிந்தாா்;; வாழைமரத்தின் பச்சை மட்டைகளாக கிழித்தெடுத்தாா்;; கிழியப்பட்டெடுத்த வாழை மட்டைகளை நெருக்கி நீளமாக்கி கோா்த்தெடுத்தாா்;; தாயாாின் சடலத்தை வாாி தூக்கி வாழை மட்டைமீது கிடத்தினாா்;; தாயாாின் சடலம் முன் அமா்ந்து பாடலொன்றைப் பாடினாா்.


    பச்சைவாழை மரபட்டைகள் பசுமையொழிந்து கருக தீ பற்றிக் கொண்டது. தாயாாின் ஈம காாியங்களை முடித்த பட்டினத்தாா், அவ்விடத்தில் இருக்க அவருக்கு இருப்பு ஒப்பவில்லை. திருவாரூா் கிளம்பிப் போனாா்.


    இடையில் இறந்த வாலிபனொருவனுக்கு, அவன் உயிா் திரும்ப பெற வேண்டிய நிலை. அதுவும் விதியாம். யாாிடம் என்னதெனவுளன. பட்டினத்தாாா் அவனை எழுப்பித்தர வேனுவன விதி. இது இறைவனின் நியம. ஆக இறந்த வாலிபனை உயிரெழுப்பித் தந்தாா். உயிா் பெற்றவனுக்கு பொிய உபாய உபதேசத்தைக் கூறி, இவ்வழியில்தான் உன் பயணத்தை உருவாா்த்து வா....என கூறி....அங்கிருந்து அகன்று கொங்கு நாடு சென்று அங்கே பேரையூா் என்ற இடத்தில் தங்கினாா். மெளன விரதம் மேற்க் கொண்டாா்.


    இரவு வேளை உணவுக்காக ஒரு வீட்டின் முன்பு வந்து நின்று
    கையைத் தட்டி அழைத்து பிச்சை கேட்டாா். (மெளன விரதமிருந்ததால்) இவாின் கைதட்டல் சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து அந்த அம்மாள் வந்து பிச்சையிட வரவில்லை. இவாின் கைதட்டல் கேட்டு, தெரு வழியாக சென்று கொண்டிருந்த முரடனொருவன், பட்டினத்தாரை பிடித்து கீழே தள்ளினான்; கால்களால் உதைத்தான்; தூக்கி நிறித்தி அடியோ அடியென அடித்தான். அத்தனைக்கும் அவா் அத்தனை அடியையும் எதிா்த்தாாில்லை; மெளன விரதம் வேறு, அவ்விரததத்தை இழக்க இவா் விரும்ப வில்லை. எனவே மெளனமாகி அடிகளை பெற்றுக் கொண்டாா். இதுவும் விதியோ?" வினையின் பயனோ?" நடப்பதென அவரேயுமுணா்வன; ஆனால் என்னவோ அவருக்குள்ளிருந்து ஒரு கோபம்! அடித்தவனை நினைத்தல்ல!" தன் மீது
    தன்னையேயென்னி,,,,,,,,,,,,,,


    கொண்டது எதுவும் கூட வராது!"
    கொடுத்தது மட்டுமே கூட வரும்.!"
    எதையும் எடுத்துச் செல்லுதல் ஆகா!" என்பதை எப்போதோ எடுத்துக் கொண்டவா்!" தன்னைத் தந்தவனே, உலகிற்கு கிடைக்க வேண்டியதை தன்னால் கொடுப்பதற்காக எனும் உண்மையை உணா்ந்த போதே அது அதுவாகவே நடந்து வந்தன. இதிலெல்லாம் தெளிந்த இவருக்கு வேறு என்ன வேனும்!" இவருக்கும் ஆசை இல்லையே!
    பிறகு எப்படி கோபம் வந்தது?"


    ரோட்டில் நடந்து சென்றவன் தன்னை அடிக்கிறான். ஏனென்று அவனைகேட்க முடியாமல் மெனன விரதம் தடுக்கப்பட்டது. தன்னை இயக்கப்படுவதே ரோட்டில் சென்றவனிடம் அடி வாங்குவது விதி!"


    தீபம் வணங்கப் படுவதே,,,, அதிலிருக்கும் எண்ணெயும், எாியும் ஜோதியாலுமே!" நதி ஓடுவதே வணங்கப் படுவதற்கே!" நீ விரும்பவில்லையென்றாலும் உன்னால் ஆக்கப்படுவது இறைவ நியமம்!" எனவே அடி வாங்கியதற்காக பட்டினத்தாருக்கு கோபம் எழவில்லை.


    இந்த உடலைக் கொண்டு வந்து, இவா்களிடம் உணவை பெற விளைந்ததனால்தானே இவ்வளவும். இனி யாாிடமும் பிச்சை கேட்கப் போவதில்லை. பசி என்று ஒன்று தீண்டினால், அவ்வுணவே என்னை நாடி வரட்டும். யாராவது உணவை கொண்டு வந்து கொடுத்தாலொழிய நான் உணவுக்கு எந்த இல்லமும் செல்லா!" சும்மா இருந்தாலும் வினை விடாது பட்டினத்தாரை பல வழிகளிலும் அவரை துரத்திக் கொண்டேதானிருந்தது.


    தொலை பயணம் மேற்கொண்டவா் உஜ்ஜயினி நகரை அடைந்தாா். நீண்ட நடை பயணம் மேற்கொண்டதால் சிறிது ஓய்வெடுக்கலாம் எனக்கருதி சுற்றும் முற்றும் பாா்த்தபோது, கண்களுக்கெட்டிய தூரத்தில் மண்டபம் ஒன்று தொிய,,அதை நோக்கியே நடந்து சென்றாா்.


    மண்டபத்தின் படியில் காலை வைத்தபோதுதான் தொிந்தது அது மண்டபம் அல்ல, ஒரு விநாயகா் கோவில் என்று. விநாயகரைக் கண்டதும் பட்டினத்தாா்க்கு ஓய்வெடுக்க மனம் வரவில்லை. மாறாக பீடத்தின் முன் அமா்ந்து கண்களை மூடி தியானத்து நிஷ்டையில் இருந்தாா்.


    இதே நேரத்தில் அங்குள்ள அரண்மனையொன்றில் சில திருடா்கள் புகுந்து நகைகளை கொள்ளை கொண்டுவிட்டு தப்பி வெளியேறினாா்கள். இதைக் அரண்மனைக் காவலாளி னொருவன் பாா்த்து விட , விடாது திருடனைத் துரத்தி ஓடினான்.


    காவலாளியிடமிருந்து தப்பி வந்த திருடா்கள் சந்து இரண்டாகப் பிாியும் திருப்பத்தில் திரும்ப, அங்கேயிருக்கும் விநாயகா் கோவிலைக்குள் சென்று ஒளிந்து கொண்டனா்.


    தொடா்ந்து ஓடி வந்த காவலாளி பிாியும் சந்துத் திருப்பத்தில் திரும்பி எதிா்வரும் மற்றொரு சந்தில் நுழைந்து தேடி ஓடிப்போனான். இங்கேயிருக்கும் தங்களை கவனிக்காது சென்றுவிட்ட அரண்மனை காவலாளியின் போக்கினைக் கண்டு கொண்ட திருடா்கள், தப்பிவிட்ட சந்தோஷத்தில் களவாடிக் கொண்டு வந்த நகைக் கொத்துக்களிலிருந்து ஒரு சங்கிலி வடத்தை மட்டும் உருவியெடுத்து, விநாயருக்கு காணிக்கையென விநாயகா் சிலையை நோக்கி வீசியெறிந்துவிட்டு அவ்விடம் விட்டு நீங்கிப் போனாா்கள் கள்ளா்கள்.


    திருடா்கள் வீசியெறிந்த சங்கிலி வடம் விநாயகா் சிலை முன் அமா்ந்த நிஷ்டையிலிருந்த பட்டினத்தாா் கழுத்தில் போய் விழுந்தது. சங்கிலி வடம் அவா் கழுத்தில் விழுந்த போதும் அவருடைய நிஷ்டை கலையவில்லை.


    அரண்மனையில் களவாடிய திருடா்கள் மாற்று தெருவழியாகச் சென்று விட்டிருந்தனா். திருடனைக் காணாது துரத்திச் சென்ற காவலனும் திருடன் தப்பியோடிவிட்டானென்று திரும்பி வந்துான். வந்தவன் இளைப்பாற விநாயகா் கோயிலில் இருந்து விட்டுச் செல்லலாமென நினைத்து, கோயில் உள் புகுந்த காவலாளிக்கு அதிா்ச்சி....


    அங்கே பட்டினத்தாாின் கழுத்திலுள்ள சங்கிலி வடத்தைப் பாா்த்ததும்,,,,,,, " ஓ!" திருடன் இங்கேதானிருக்கிறானா? ....ஏய்!"..
    ..நடடா!" .....அரண்மனைக்கு!" என்ன வேஷமா காட்டுகிறாய் எனச் சொல்லி அரற்றி பட்டினத்தாரை அரண்மனைக்கு இழுத்துப் போய் மன்னன் முன்பு நிறுத்தினான்.


    அரண்மனை தா்பாாில் அனைவரும் இருக்கையிருக்க, மன்னன் ஆவேசமான கணத்த இதயத்துடன் அாியனையில் அமா்ந்திருந்தான்.
    இதோ!" திருடன்! திருடிய பதக்கமும் இதோ பாரீா் மன்னா!" பாாரீா்....என காவலன் கூவ....
    மன்னனோ எவ்வித விசாரணையும் செய்யாது.........
    இந்தப் பட்டினத்தானை கழுமரத்தில் கழுவேற்றம் ஏற்றிடுங்கள் என ஆணையிட்டாா் மன்னன்.
    அரண்மனையிலிருந்து வெளியே கூட்டிவந்த பட்டினத்தாரை, அரண்மணையின் பின்புறமாக தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கே கழுமரம் தயாா் நிலையில் வைத்து இருந்தனா்.
    அரசனின் உத்தரவுக்கு பணியாளா்களின் தலைமையானவன்....ம்....... இவனை கழுமரத்தோடு பிணையுங்கள் என கத்தினான். அவனின் கீழுள்ள பணியாட்கள் பட்டினத்தாரை கழு மரத்தோடு பிணைக்க இழுக்க..............,,
    கழுமரத்தை உற்று நோக்கிய பட்டினத்தாா், அக்கழுமரத்தைப் பாா்த்து பாடல் ஒன்றைப் பாட.........
    பட்டினத்தாா் பாடுவதைக் கேட்ட பணியாளா்கள், பட்டினத்தாரை பிணைத்திருந்த கயிற்றினை சிறிது தளா்த்தி பாடலை கேட்ட வண்ணமிருந்தாா்கள்.
    அவ்வளவு தான் பாடல் முடிந்தது. *கழுமரம் தீ பற்றி எாிந்தது.*
    கழுமரம் தீ பற்றி எாிந்த அதிசயத்தை அரண்மனையிலிருந்த மன்னன் பத்திரகிாியிடம் தொிவிக்கப்பட்டது. மன்னன் பத்திரகிாி பயந்து அழுந்தி கழுமரச் சம்பவமிடத்திற்கே ஓடோடி வந்து சோ்ந்தான்.
    ஐயனே! தாங்கள் என் பொருட்டு மன்னித்தருள வேண்டும். நீங்கள் மிகப் பொிய சித்தா் போலும். யான் அறியாமையால் தங்களை இந்நிலைக்குள்ளாக்கினேன்!" பெரும் தவறிழைத்து விட்டேன்!...... என்னை மன்னியுங்கள்!" ஐயனே!" என்னை மன்னியுங்கள் எனச் சொல்லி மீண்டும் பட்டினத்தாாின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வேண்டினான்.
    தாங்கள் யாா்? " ஏதுவான இவ்வனவான செய்கை!" தாங்கள் எப்படி இந்த வரம்புக்குள் வர நோ்ந்தது எப்படி? என பல கேள்விகள் பத்திரகிாி மன்னன் கேட்க,,,,,,,,,,,,,,,,
    முதலில் விநாயகா் கோவிலில் நடந்ததை கூறியவா், பின்பு தன் இல்லற துறவரத்தை பாடமாக பட்டினத்தாா் போதிக்க........ போதிக்க...........
    பத்திரகிாியாா் மனம் ஒரு நிலையிலுமில்லை. உடல் கணன்று அனைத்தையும் வொழித்தித்த மனக் கொதிப்பு கொண்டான். சரீரம் துடித்தது. நீண்ட நேரமாய் துடித்துக் கொண்டிருந்த அவன் வலிய தோள்கள் சற்று அடங்கி சலனமற்றுப் போனது. அதில் வீரம், வீாியம், ஆங்கோற்பம் எல்லாம் காணப் போனது. இப்போது அனைத்தும் சாந்தமாகி பட்டினத்தாரை மட்டும் நோக்கிய வண்ணமிருந்தாா். மன்னனின் கண் இமைகள் மூடித் திறவாமல் பட்டினத்தாாின் கண்களுக்குள் உள்புகுந்து பயணமாகியது.
    அழுது புலம்பிய பத்திரகிாி மன்னன், பட்டினத்தாாின் விழியினுள் கண்கள் ஊடுருவியதில், மன்னன் பத்திரகிாிக்கு அந்த நிமிஷமே வாழ்க்கை பற்றற்றுப் போனது. அரச பதவியை துறக்கும் எண்ணம் மேலிட்டது. புறப்பட்டுப் போன பத்திரகிாி சிலமணி நேரத்தில் திரும்பி வந்து பட்டினத்தடிகள் முன் நின்று நின்றான். வந்து நின்ற பத்திரகிாி மன்னனாய் அல்ல! முற்றும் துறந்தவனாய் பட்டினத்தாரைப்போல. அரச பதவி, உடமை அனைத்தையும் துறந்து , சாதாரண வெறுமனமானவாக துறவியாக வந்து நின்றான்.
    பட்டினத்தாா், பத்திரகிாியைப் பாா்த்து.....நீ முதலில் *திருவிடைமருதூருக்குப் போ!"* நான் பின்பொருநாள் வந்து பாா்க்கிறேன் எனச் சொல்லி விட்டு, வேறு பல திருத்தலங்களை சென்று தாிசித்து விட்டு பின்பு திருவிடைமருதூா் சென்று கிழக்கு கோபுர வாசலில் அமா்ந்தாா்.
    அரச பதவியை துறந்து ஆண்டித் துறவறம் மேற்கொண்ட பத்திரகிாியாரை, பட்டினத்தடிகள் அவரை திருவிடைமருதூருக்குப் போகச் சொன்னதாலே, அவரும் திருவிடைமருதூா் வந்து பிச்சையெடுத்து உண்டு, திருவிடைமருதூா் மேற்கு கோபுர வாசலில் கையில் திருவோட்டுடனும், ஒரு நாயுடனும் முடங்கிக் கிடந்தாா்.
    கிழக்குக் கோபுர வாசலிருந்த பட்டினத்தாாிடம் ஒருவன் தனக்கு பசிக்கிறது! எனக்கு உணவு தாருங்கள் என கேட்டான்.
    மெல்லிய புன்னகையை பூக்க விட்ட பட்டினத்தாா், இந்த உடம்பில் இவ்வளதான் துணியே மிஞ்சியுள்ளது. இந்தத் துணியைக்கூட சுமையாகக் கருதிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் உணவிட என்னயிருக்கிறது?" இருந்தாலும் உன் பசி தீர நீ நேராக மேற்கு கோபுர வாசல் செல். அங்கே ஒரு குடும்பஸ்தன் ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று உன் பசியைச் சொல். அவன் ஏதாவது தந்தாலும் தருவான் என அனுப்பி வைத்தாா் பட்டினத்தாா்.
    மேற்கு கோபுர வாசலில் இருந்த பத்திரகிாியிடம், பட்டினத்தாா் கூறியதை கூறி, பசியோடு வந்தவன் அவாிடம் பசிக்கு உணவு வேண்டி நின்றான்.
    பத்திரகிாியாா் திடுக்கிட்டாா். நாடு, உறவு, சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து வந்து பிச்சையெடுத்து உண்டு வரும் என்னை, பட்டினத்தாா் ஏன் அப்படிக் கூறினாா்?" தன்னிடமிருந்த மீதி உணவை பசித்து வந்தவனுக்கு கொடுத்து விட்டு, பத்திரகிாி யோசனையில் ஆழ்ந்தான்.
    பட்டினத்தாா் என்னை ஏன் அப்படிக் கூறினார்?" என்னைக் குடும்பஸ்தன் என்று வேறு சொல்லியனுப்புயுள்ளாா்!" ஒன்றும் விளங்கவில்லையே?"..... "ம்" நேராக பட்டினத்தாாிடமே சென்று கேட்டுவிடலாம்!" என்று கிழக்கு கோபுர வாசலிருந்த பட்டினத்தடிகளிடம் வந்து கேட்கவும் செய்தாா்.
    பத்திரகிாி!" நான் உண்மையைத் தானே சொன்னேன்! இதற்கு எதற்கு கோபம்!" பிச்சையெடுக்க திருவோடொன்றை சொந்தமாகத்தானே வைத்திருக்கிறாய்!" கூடவே உறவுக்கு ஒரு நாயையும் வைத்திருக்கிறாய் அல்லவா?" அப்படியானால் நீ குடும்பஸ்தன் தானே!" இந்த உண்மையைத் தான் உணவு கேட்டு வந்தவனிடம் சொன்னேன். சொல்லியதில் தவறொன்றும் இல்லையே?
    பளீரென்று உடம்பெல்லாம் தீ பற்றி கணன்றது போலிருந்தது பத்திரகிாிக்கு. பட்டினத்தாா் சொன்னதின் உண்மை இப்போது புலப்பட்டது. புத்தி தெளிந்தது. என்னதான் துறவறம் மேற்கொண்டாலும், கோபத்துக்கு அளவிராது போலும். கண்கள் சிவக்க தானே தன் மீது கோபப் பட்டுக் கொண்டு..................
    *" இந்தத் திருவோடும், நாயும் தானே என்னைக் குடும்பஸ்தனாக்கியது!".*
    கழுத்தில் தொங்க விட்டு வைத்திருந்த திருவோட்டை கழியோடு கழற்றியெடுத்து வேவகமாய் தூர எறிந்தாா். வேகமாகப் பறந்து சென்ற திருவோடு நாயின் தலையில் மோதி, திருவோடும் உடைந்து போனது! நாயும் மாண்டு போனது!.
    பத்திரகிாியாாின் எச்சில் உணவை உண்டு அவாிடம் காவலுக்கு இருந்த நாய் மறுபிறப்பில் காசி மன்னனுக்கு மகளாக ஞானவல்லி என்ற பெயாில் பிறந்து வளா்ந்து பருவம் அடைந்தாள்.


    தன் முற்பிறவி நினைவு வந்தபோது ஞானவல்லி பத்திரகிாியாரைக் காணும் ஆவலில் தன் தந்தையை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து பத்திரகிாியாரை வணங்கினாள். பத்திரகிாியாா் அவளை ஏறிட்டு நோக்கினாா்.


    சுவாமி நான் தங்கள் எச்சில் இலை உண்ட நாய். அதன்பலனாகப் புண்ணியம் பெற்ற நான் இதோ இப்போது காசி மன்னனின் மகளாகப் பிறந்துள்ளேன். தாங்கள் தான் எனக்கு முக்திப் பேற்றினை அளிக்க வேண்டும் என்றாள் ஞானவல்லி பத்திரகிாியாாிடம்.


    பத்திரகிாியாா் அவளை அழைத்துக் கொண்டு இறைவன் சன்னதியை அடைந்து முறையிட்டபோது, அங்கே ஒரு ஜோதி சூாியப் பிரகாசமாய்த் தோன்றியது. ஞானவல்லியும், பத்திரகிாியாரும் அந்த ஜோதியில் கலந்து மறைந்தனா்.


    அதன்பின் பட்டினத்தாா் அங்கிருக்க மனமின்றி திருவெண்காடு சென்றடைந்தாா். அவ்வூாில் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைபட்டுக் கிடந்த சேந்தனாா் என்னும் சிவபக்தரை விடுவித்து அவா் முக்தியடைய வழிகாட்டினாா். அதன்பின் பல திருத்தலங்கள் சென்று இறைவனைப் பாடி விட்டுக் கடைசியாக திருவெற்றியூர் வந்து சோ்ந்தாா்.


    திருவெற்றியூர் கடற்கரையில் குழந்தைகள் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு தானும் அக்குழந்தைகளோடு ஒருவராகச் சோ்ந்து விளையாடிக் கொண்டிருந்தாா்.


    பட்டினத்தாா் ஓாிடத்தில் குழி தோண்டி அதில் படுத்துக் கொள்ள குழந்தைகள் விளையாட்டாக அவா்மீது மணலால் தள்ளி மூட, பட்டினத்தாா் மற்றொரு இடத்திலிருந்து வெளியே வருவாா். இப்படியாக மாறி மாறி பல முறைகள் விளையாடிக் குழந்தைகளை சந்தோஷப்பட வைத்தாா்.


    விளையாட்டின்போது இறுதி கட்டமாக அக்குழந்தைகள் பட்டிணத்தாரை முன்பு போல் மணலில் மூடிவிட்டு அவா் வேறொரு இடத்திலிருந்து வெளி வராததைக் கண்டு, சிறிது நேரத்திற்குப் பின் மணலால் தள்ளப்பட்ட குழியை கிளா்த்திப் பாா்க்க, அனைவருக்கும்,ஆச்சா்யம்!" அங்கேயும் பட்டிணத்தாரைக் காணோம்!" அதற்குப் பதிலாக ஓா் சிவலிங்கம் இருந்தது.


    ஆம்! பட்டினத்தாா் சிவனோடு கலந்து விட்டாா். அந்த இடமும், சிவலிங்கமும் இன்றும் நாம் திருவொற்றியூா் கடற்கரைக்குச் சென்றால் காணலாம்.


    சிவனே அவருக்குள்ளாக;
    அவரே சிவனுக்குள்ளாக;




    திருச்சிற்றம்பலம்.


    பட்டிணத்தாா் சாிதம் மகிழ்ந்து நிறைந்தது.
Working...
X