Announcement

Collapse
No announcement yet.

மாத்ரு சோடஷி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாத்ரு சோடஷி.

    1. கர்பஸ்ய உத்கமனே துக்கம் விஷமே பூமி வர்த்மனி தஸ்ய நிஷ்க்ரமணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.

    என்னை கர்பத்தில் தாங்கிய வண்ணம்மேடு பள்ளம் ஏறி இறங்கும் போது வேதனை அனுபவித்த என் தாய்க்கு இந்த பிண்டம்.

    2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதனா ப்ரஸவே ததா தஸ்ய நிஷ்க்ரமணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.

    ஒவ்வொரு மாதத்திலும் மற்றும் ப்ரஸவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகள் உண்டாக்கிய பாபத்திற்கு பரிஹாரமாக இந்த பிண்டம்.

  • #2
    Re: மாத்ரு சோடஷி.

    3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநன்யாஹா பரிவேதநம் தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.
    என் தாயில் வயிற்றில் நான் என் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை உண்டாக்கிய பாபத்திற்கு பரிஹாரமாக இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.

    4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ரு பீடநம். தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.
    பத்து மாத நிறை கர்பிணியாக என் தாயென்னை சுமந்து சுற்றி வந்த போது அவளுக்கு உண்டான வேதனைகள் உண்டாக்கிய பாபத்திற்கு பரிஹாரமாக இந்த பிண்டத்தை அளிக்கிறேன்

    Comment


    • #3
      Re: மாத்ரு சோடஷி.

      5. ஸைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாதா விந்ததி துஷ்க்ருதம் தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பின்டம் ததாம்யஹம்.
      என் தாய்க்கு கர்ப்ப காலத்தில் ஏர்பட்ட களைப்பு மூர்ச்சை போன்றவற்றால் ஏற்பட்ட வேதனைகள் உண்டாக்கிய பாபத்திற்கு பரிஹாரமாக இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.

      6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதானி விவிதானி ச தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.
      எனக்கு வியாதிகள் வராமலிருபதற்காக தான் கசப்பான மருந்துகள் சாப்பிட்டாளே என் தாய் இந்த கொடுமைகள் வேதனைகள் உண்டாக்கிய பாபத்திற்காக பரிஹாரமாய் இந்த பிண்டத்தை அளிக்கிறேன்

      Comment


      • #4
        Re: மாத்ரு சோடஷி.

        7. அக்னினா ஷோஷயேத் தேஹம் த்ரிராத்ரோ போஷணேன ச தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.

        நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன ஆஹாரமின்றி பசியின் கொடுமையை பொறுத்துகொண்டு இருந்த கொடுமைகளை வேதனகளை உன்டாக்கிய பாபத்திற்கு பரிஹாரமாக இந்த பிண்டம் அளிக்கிறேன்..

        8 ராத்ரெள மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்நஹ ஸ்யாந் மாத்ரு கர்படஹ தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம்.

        இரவில் நான் எனது தாயின் உடைகளை மல மூத்ராதிகளால் அசுத்தி செய்த பாபத்தை போக்க இந்த பிண்டம் அளிக்கிறேன்

        Comment

        Working...
        X