Announcement

Collapse
No announcement yet.

Shiva & Potri

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Shiva & Potri

    நமசிவாய


    நாம் வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்!
    ~~~~~~~~~~~


    * காலையில் எழுந்திருக்கும் போது -அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி


    * குளிக்கும் போது -
    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி


    * கோபுர தரிசனம் காணும் போது -
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


    * வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது -
    காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி


    * நண்பரைக் காணும் போது -
    தோழா போற்றி துணைவா போற்றி


    * கடை திறக்கும் போது -
    வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி


    * நிலத்தில் அமரும் போது -
    பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி


    * நீர் அருந்தும் போது -
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி


    * அடுப்பு பற்ற வைக்கும் போது -
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி


    * உணவு உண்ணும் போது -
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி


    * மனதில் அச்சம் ஏற்படும் போது -
    அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி


    * உறங்கும் போது -
    ஆடக மதுரை அரசே போற்றி
    கூடல் இலங்கு குருமணி போற்றி


    இப்படி எங்கும் சிவம் எதிலும் சிவமே என்று வாழ்ந்தால் இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் நம்மை எந்த துன்பமும் அணுகாது.


    சிவார்ப்பணம்.
Working...
X