Announcement

Collapse
No announcement yet.

Death

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Death

    மரணம் என்ற சொல் உணர்த்தும் மெய் யாது ?? மரணிக்காமல் காக்க வல்லான் ஈசன் ஒருவனே !! அப்படி பிறவாநிலை அடைய என்ன செய்யவேண்டும் !! என்று என்னை உணர்த்திய வெளிப்பாடு !!
    மரணம் பலரும் அஞ்சும் சொல் !! என்று வரும் ?? எப்படி வரும் ?? என்று அறியாத சூட்சமம் கொண்ட சொல் !! நித்தம் பல மரணத்தை நோக்கியும் தெளிவடையாத ?? வாழ்வு !! குறித்தே இப்பதிவு !!
    மரணம் என்ற சொல்லை ஈசன் திருவருளால் சிந்தித்ததின் விளைவே இப்பதிவு !!
    நமச்சிவாய
    மா ( பெரிய )+ ரணம் ( புண் )
    நாம் பிறந்தது முதல் !! இன்று வரை நித்தமும் ரணப்பட்ட வாழ்வே வாழ்கிறோம் !! அந்த ரணம் நம் உடல் !! மனம் !! சொல் !! பிறர் சொல் !! பிறர் செயல் !! என்று ஒன்றின் மூலம் அந்த ரணம் பட்டுக்கொண்டே இருக்க வாழ்கிறோம் !! கடைசியாக அந்த ரணம் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு மரிக்கிறோம் !! பின் மீண்டும்மீண்டும் பிறக்கிறோம் !!
    இந்த ரணப்பட்ட வாழ்கையை ரணப்பட்டு வாழ்ந்து !! மீண்டும் ஒரு ரணப்பட்ட வாழ்க்கையை வாழ வழிவகுப்பதே !! மரணம் !!
    அப்போது !! எப்போது !! மீண்டும் பிறவாத நிலை எய்துவது !!
    நம் வாழ்வில் அனுபவிக்கும் ரணங்கள் யாவும் நீக்கபெற வாழ்ந்தது !! ரணமற்ற வாழ்வாக வாழ்ந்து எய்துவதே பிறவாநிலை !!
    இதுதான் அண்டத்திலுள்ள ஒவ்வொரு உயிரின் இலக்கு !! இந்த இலக்கை புரியாமலே பற்பல பிறவி எடுத்து !! உயிர் உய்யும் கூடு பலவாக பெற்று !! ரணப்பட்டு !! ரணப்பட்டு !! மரணம் அடைந்து மறுபடி ரணப்பட பிறக்கிறோம் !!
    இந்த உயிரின் இலக்காய் இருப்பது ஈசன் திருவடியே !! அதையும் அருளுபவன் ஈசன் மட்டுமே !! இதைத்தான் பிறவிதோறும் தன் அரவணைப்பின் மூலம் உணர்த்துகிறார் !! மூலத்தை உணராத முட்டாளாய் வாழ்ந்ததின் பயனே மரணம் !! மீண்டும் பிறப்பு ??
    எப்படி பிறவா நிலை பெறுவது ??
    மா + ரணமான வாழ்க்கையை ஈசன் திருவருளால் !! இருக்கும் ரணம் யாவும் மறையும் படி !! ரணமற்ற வாழ்வாக வாழ்ந்தது வாழக்காரணமானவன் திருவடி அடைவதே பிறவாநிலை !!
    முதலில் உனக்கான ரணம் ஆற !! பிறரை !! பிற உயிரை !! ரணபடுத்த கூடாது !! அது உன் மனத்தால் !! உடலால் !! சொல்லால் !! செயலால் !! எந்த உயிரையும் ரணபடுத்தாமல் இருந்தால் தான் !! உன் ரணம் ஆறும் முதல் படி !!
    அடுத்து " அன்பே சிவம் " என்ற சொல்லின் பொருளை போல !! சிவத்தை போல வாழ்வது !! ஒரு உயிர் விரும்பினாலும் !! விரும்பாவிட்டாலும் !! அது உணர்ந்தாலும் !! உணராவிட்டாலும் !! தன்னை முன்னிறுத்தாமல் !! அன்பு செய்ய வேண்டும் !!
    உன்னை ரணப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் வருந்தும் வண்ணம் அன்பு செய்யவேண்டும் !!
    என் செயல் என்று யாதும் இல்லை !! எல்லாம் உன் செயலே !! என்ற எண்ணம் கொண்டால் !! உன்னை வாழ்த்தினாலும் !! தூற்றினாலும் !! அது உன்னை ரணப்படுத்தவே முடியாது !!
    இதுபோல் ஈசன் திருவருளை முன்னிறுத்தி !! அவர் திருவருளை உணர்ந்து !! அவர் திருவருளை அனுபவித்து !! அவரால் வாழ்கிறோம் !! என்று ஈசனுடன் அவர்தம் திருவருளை போற்றி வாழ்ந்தால் !! பிறவாநிலை நிச்சியம் கிட்டும்
    ஏதோ இந்த பதிவை போட்டு ஊரையும் !! முகநூல் நட்புகளையும் !! உணர்வித்து திருத்தவேண்டும் என்ற எண்ணம் அல்ல !! என்னையே நான் திருத்திக்கொள்ளவேண்டும் !! எந்த கடைநிலையில் இருக்கிறேன் நான் !! என்று என்னை உணர்த்தவே இப்பதிவு !!
    இத்தகைய பதிவுக்கு காரணமும் – காரியமும் ஈசனே
    திருச்சிற்றம்பலம்
Working...
X