Announcement

Collapse
No announcement yet.

அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

    ஸ்ரீ:
    அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?
    "ஸ்ரீதரா! கிட்டு மாமா வந்துருக்காடா, வந்து ஸேவிச்சு அபிவாதி பண்ணுடா! விசேஷமா ஆசீர்வாதம் பண்ணுவார்" என்று ஆத்துக்குள் ப்ரவேசித்த கிட்டு மாமாவைப் பார்த்ததும் அம்மா ஸ்ரீதரனைக்குக் குரல் கொடுத்தாள்.

    ஸ்ரீதரனுக்கு 11 வயசு, 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ரொம்ப சுட்டி. "மாசிக் கயிறு பாசி படரும்னு யாரோ சொன்னான்னு எனக்கு பரிட்சை சமயத்துல பூணலை போட்டு வச்சுட்டு, ஆத்துக்கு ஒரு ப்ராஹ்மணா வரப்டாது, ஓடியாடா, ஸேவிடா, அபிவாதிபண்ணுடான்னு அம்மாவின் தொல்லை தாங்க முடியல!" என்று முணுமுணுத்துண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தான் ஸ்ரீதரன்.

    "ஓ இந்த மாமாவா?! ரொம்ப நாளாச்சே இந்த மாமாவைப் பார்த்து? முன்னெல்லாம் வரும்போது, "உனக்கு ஒரு குட்டிக் குதிரை வாங்கி வச்சுருக்கேன், அதுக்கு இன்னும் வால் வளரல, அடுத்த தரம் வரச்சே, கண்டிப்பா கொண்டுவரேன்னு" ஒவ்வொரு தரமும் ஏமாத்துவாரே! அந்த மாமாவா"?
    என்றான் ஸ்ரீதரன்.
    "அடேய், யமகாதகண்டா நீ! நன்னா ஞாபகம் வச்சிண்டிருக்கியே"! - கிட்டு மாமா.
    "அதுசரி, பூணலுக்கு ஏன் மாமா வரலை?" - ஸ்ரீதரன்.
    "ஒனக்கு பூணல்னு தெரியாம, முன்னாடியே வடதேச யாத்ரைக்கு ஒத்துண்டுட்டேன், அதண்டா வரமுடியலை"-கிட்டு மாமா.
    "போகட்டும் மாமா, இப்பவாவது, ஞாபகமா வந்தேளே! குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுங்கோ"-அம்மா.
    "அதுக்குத்தானடிம்மா வந்திருக்கேன், ஸேவிடா கண்ணா"-கிட்டு மாமா.
    ஸ்ரீதரன் அவைர ஸேவித்து அபிவாதி பண்ணினான் "அபிவாதயே ஆங்கீரச, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ, த்ரையாருஷேய, ப்ரவரான்வித, பாரத்வாஜ கோத்ர:, ஆபஸ்தம்ப ஸூத்ர:, யஜூர் ஸாகா அத்யாயி, ஸ்ரீதர சர்மாநாம அஹம் அஸ்மிபோ:"- என்றான்.
    "ஆயுஷ்மான் பவா ஸ்ரீதர சர்மாஆ... ஆ...ன்! நன்னாச் சொல்றடா அபிவாதி, யாரு சொல்லிவச்சா? அப்பாவா? வாத்யார் மாமாவா?"-கிட்டு மாமா.
    "மாமா அப்பாதான் மொதல்ல அபிவாதி சொல்லிவச்சா, அதுக்கப்பறம் ஆத்துக்கு வரவாளையெல்லாம் ஸேவிச்சு அபிவாதி பண்ணச்சொல்லி அம்மா தொந்தரவு பண்ணிண்டிருக்கா. ஒருதரம் நம்ப திருப்பதி கோவிந்தன் மாமா வந்திருந்தா, ஸேவிச்சு அபிவாதி சொன்னேன். என்னடா தப்பு தப்பா சொல்றே, நான் சொல்லித்தரேன்னு சொல்லி சொல்லிக்கொடுத்தா. கரெக்டா இருக்கா மாமா"? - ஸ்ரீதரன்.
    "ரொம்ப கரெக்ட்டா இருக்குடா கண்ணா"! - கிட்டு மாமா.
    "மாமா என்ன சாப்ட்றேள்"?-அம்மா.
    "என்னம்மா புதுசா கேக்கறே. உனக்குத் தெரியுமே எனக்கு என்ன புடிக்கும்னு"! - கிட்டு மாமா.
    "மாமா பரிட்சை கிட்ட வந்துடுத்து, நான் படிக்கணும், மாடிக்குப் போகட்டுமா"? - ஸ்ரீதரன்.
    "நன்னா படிச்சு நெறைய மார்க்கு வாங்கி, நம்பர் ஒண்ணா வருணம்டா நீ!
    ரொம்ப நன்னாருப்பேடா கொழந்தை! ஆமாங் ...! நீ அபிவாதி சொன்னியே அது எதுக்குச் சொல்றதுன்னு தெரியுமாடா ஒனக்கு"? - கிட்டு மாமா.
    "மாமா, போன வாரம் வாசு மாமான்னு ஒருத்தர் வந்தார், அவரை ஸேவிச்சு அபிவாதி பண்ணுன்னு அம்மா சொன்னான்னு, ஸேவிச்சு அபிவாதி பண்ணிட்டு அந்த மாமாகிட்ட இதத்தான் நான் கேட்டேன், அந்த மாமா சொன்னா, டேய், ஒங்கப்பன்ட்ட கேள்டா இத, அவனுக்குத் தெரியரதான்னு பாப்போம் அப்படின்னுட்டு போயிட்டார். அதுக்கப்பறம், அப்பாகிட்ட கேட்டேன், இருடா வாத்யார் மாமா வரட்டும் கேக்கறேன்னார்"! - ஸ்ரீதரன்.
    "வாத்யார் மாமாவை கேட்டுட்டு என்ன சொன்னான் ஒங்கப்பா"? - கிட்டு மாமா.
    "வாத்யார் மாமாவை அப்பா கேட்டபோது நான் அங்கதான் இருந்தேன்.
    வாத்யார் மாமா சொன்னார், அடேய், இதப்பத்தி எங்க வாத்யார்கிட்ட கேக்கணும்னு எனக்குத் தோணவேல்ல, கேட்டுட்டு வந்து சொல்றேண்டான்னார்" - ஸ்ரீதரன்.
    "கேட்டுட் வந்து என்ன சொன்னார்"?- கிட்டு மாமா.
    "மாமா, அதுக்கப்பறம் அவர் இந்தப்பக்கம் வரதேயில்லை, போன் பண்ணினா,
    கட்பண்ணிடறார்"-ஸ்ரீதரன்.
    "மாமா இந்தாங்க ஒங்களுக்குப் பிடிச்ச மோர்" - அம்மா
    "ஆஹா! இந்த பங்குனி வெய்யக்காலத்துக்கு ஏத்தமாதிரி, அளவா ஜலம் உட்டு, அளவா உப்பு போட்டு, இஞ்சியைத் தட்டிப்போட்டு, பச்ச மொளகாயை சின்ன சின்னதா வெட்டிப்போட்டு, பெருங்காயப் பவுடரை துளி அதிகமாவே போட்டு, கடுகு திருமப்பாரி, அதுல குளுகுளுன்னு நாலு ஐஸ் கட்டியையையும் போட்டு, கொத்தமல்லி கருவேப்பிலையை கிள்ளிப்போட்டு, நீ குடுக்குற மோர் இருக்கே, நிஜமாச் சொல்றேன், இந்த தேவாம்ருதம், தேவாம்ருதம்னு சொல்றாளே, அதெல்லாம் பிச்சை வாங்கணும்"- உணர்ச்சிபொங்க ச்லாகித்தார் கிட்டு மாமா.
    "மாமா, ஐஸ் மோரை கையில வச்சுண்டு, ஐஸ் வைக்கறேளா? பேச்ச மாத்றேளா?
    உங்களுக்கும் அபிவாதின்னா என்னன்னு தெரியாதா"? - ஸ்ரீதரன்.
    "ஏண்டா, பரிட்சைக்குப் படிக்கணும் நாழியாடுத்துன்னியே! ஆத்துக்கு வரவாளெல்லாம் வம்பிழுக்கறதே ஒனக்கு வேலையாப்போச்சு"! - அம்மா.
    "கோமளா, கொழந்தையைக் கோவிச்சுக்காதே, ஆர்வமா இருக்கான், தோ, மோரைச் சாட்டுட்டு அவனுக்கு நன்னா விவரமாச் சொல்றேன்"- கடைசிச் சொட்டு மோரையும் அண்ணாந்து கவிழ்த்துக்கொண்டே சிதறிய குரலில் சொன்னார் கிட்டு மாமா.

    "சரி மாமா, எனக்குத் தளிகை வேலை தலைக்குமேல இருக்கு, நீங்க எதானும் வம்பு பேசுங்கோ, நாம்போறேன் உள்ளே"! என்று அம்மா தளிகை அறைக்கு விரைந்தாள்.
    கிட்டுமாமா அபிவாதிக்கு விளக்கம் சொன்னாரா இல்லையா?
    தொடரும் .....


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

    Very interesting topic sir How many days we have to wait to know the suspense? Sir pse bring more such topics thanks

    Comment


    • #3
      Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

      sri:
      I expect few more resposes to continue this.
      It is written for a popular periodical, will be published shortly.
      Also, is there any comment about the style of this write up?


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

        ஸ்ரீ: NVS, அவர்களுக்கு

        இந்த ஐயம் பூணூல் தரிக்கும் பிரம்மச்சரி எல்லோருக்கும் உண்டாவது இயற்கையே
        ஆனால் சரியான விளக்கம் கிடைக்காததினால் மேற்கொண்டும் தொடருவதில்லை. இவற்றை தாங்கள் ஒரு கதை வழியாக விளக்கமளிப்பது நல்லதொரு முயற்சி. தொடரவும்.
        நமஸ்காரம்,
        ப்ரஹ்மண்யன்
        பெங்களூரு
        Last edited by Brahmanyan; 02-09-12, 17:48.

        Comment


        • #5
          Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

          சரி சட்னு சொன்னேர்நா பரவாஇல்ல

          Comment


          • #6
            Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

            "சரி சட்"
            சொல்லிட்டேன்.


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

              The style of the write up is nice no comments on that thanks for immediate reply

              Comment


              • #8
                Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

                Please provide the remaining phrases to complete the full explanation for Abhivathi Suthra? Thanks .. Venkat
                Venkataraghavan Narayanan

                Comment


                • #9
                  Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

                  Sir, While I search forSutra, I found the following information:
                  There are 14 Sroutha Sutras meant for the performance of rituals
                  mentioned in the Vedas. These are -
                  Rik - Saankalaayana and Aaswalaayana Krishna Yajus
                  Aapasthambha, Hiranyakesi, Bodhaayana, Bhaaradwaaja, Maanava,
                  Vaikhaanasa. Sukla Yajus- Kaathyaayana Saama - Masaka or
                  Aarsheya, Laatyaayana, Draahyaayana Atharva – Vaithaana,
                  Kaushitaki
                  4
                  There are various other classes of Sutras which have nothing to do
                  with Abhivadaye, such as Grihya Sutras, Dharma Sutras, Sulba Stras,
                  Vyakarana Sutras, Brahma Sutras and so on.
                  But what is a Sutra?
                  A Sutra is a concise statement which could be easily memorised.
                  Its defenition is:
                  alpaaksharam asandigdham saaravat vishvathomukham /
                  asthobham anavadyam cha suthram suthravido viduh //
                  "People learned in sutra literature say that a sutra should be concise
                  and unambiguous, give the essence of the arguments on a topic but
                  at the same time deal with all aspects of the question, be free from
                  repetition and faultless."
                  The desire for brevity has made the sutras, particularly in Vedanta,
                  unintelligible leading to divergent interpretations.
                  I shall end this dry subject in a humorous note.
                  Dealing with nityakarma or day to day practice to be observed by a
                  Brahmana, there is a Sutra "shvaanam sprishtvaa snaanam
                  aachareth", meaning "take bath after touching the dog".
                  There was a Brahmin who was very meticulous in obeying the Sutras.
                  Every morning he would be searching for a dog to touch before
                  taking his bath. Obviously, the correct meaning is that if you happen
                  to touch a dog, you should take a bath.
                  concepts of customary law. They are known as the "angas" or limbs
                  of the four Vedas, but are considered smriti.

                  This information is a copied one and honestly not that of mine. But await your completing the narration your own style.

                  Comment


                  • #10
                    Re: அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு?

                    Sri:
                    Whoever may be the author of the content, but really a good information with a wonderful humor;
                    I enjoyed it.
                    The narration stated by me in this thread was already completed but in other thread.
                    I have copied the same for members like you and nvr venkat who had asked for the same today.

                    அபிவாதியில்-ஸூத்ர: - முடிவு

                    அபிவாதியில்-ஸூத்ர: - முடிவு

                    "ஸ்ரீதரா எங்கே அபிவாதியை திரும்பவும் சொல்லு பாப்போம்" என்றார் கிட்டு மாமா.
                    "அபிவாதயே ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ த்ரையாருஷேய ..."-ஸ்ரீதரன் சொல்லிக்கொண்டே போக
                    "நிறுத்து நிறுத்து" என்று அவனுக்கு ப்ரேக் போட்டுவிட்டு,
                    "வத: என்ற ஸம்ஸ்க்ரு சொல்லுக்கு - சொல்லுதல் என்று அர்த்தம்"
                    "ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய, பாரத்வாஜ - ஆகிய மூன்று ரிஷிகளின் வம்சம்தான் பாரத்வாஜ கோத்ரம் என்பது, த்ரையாருஷேய என்றால் - மூன்று ரிஷிகளை உடைய - என்று அர்த்தம்" என்றார் கிட்டு மாமா.
                    "எல்லா கோத்ரத்துக்கும் மூணு ரிஷிதானா மாமா"-ஸ்ரீதரன்.
                    "பெரும்பாலான கோத்ரங்களுக்கு மூணு ரிஷிகள், ஸ்ரீவத்ஸம் மாதிரி சில ஐந்து ரிஷி கோத்ரங்களும், சாண்டில்யம் மாதிரி சில ஏழு ரிஷி கோத்ரங்களும் இருக்கின்றன"-கிட்டு மாமா.
                    "ஏன் மாமா, இந்த கோத்ரங்கள்லே, இன்னின்ன கோத்ரங்கள் ஐயருக்கு, இன்னின்ன கோத்ரங்கள் ஐயங்காருக்குன்னு இருக்கா மாமா?" - ஸ்ரீதரன்.
                    "நன்னா கேட்டடா, அப்டியெல்லாம் ஒண்ணுமில்லை, எல்லா கோத்ரத்திலியும் ஐயரும், இருப்பா ஐயங்காரும் இருப்பா"- கிட்டு மாமா.
                    "அப்பறம் ஏன் மாமா, ஐயர் வேற, ஐயங்கார் வேறன்னு வைச்சுருக்கா?" - ஸ்ரீதரன்.
                    "டேய், வர வர ரொம்ப விவஹாரமான கேள்வியெல்லாம் கேட்கிறாய், இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்"-கிட்டு மாமா.
                    "மாமா, எதோ தெரிஞ்சுக்கணும்னற ஆர்வத்துல கேட்டுட்டேன், ஏதானும் தப்பா கேட்டுட்டனா மாமா" - ஸ்ரீதரன்.
                    "அப்டில்லாம் ஒண்ணுமில்லேடா, இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி, ஒனக்கு அது புரியணும்னா, சில அடிப்படை விஷயங்கள் ஒனக்கு மொதல்ல சொல்லணும்" - கிட்டு மாமா.
                    "சரி மாமா, எனக்கும் பரிட்சைக்குப் படிக்கணும், நீங்க இந்த அபிவாதியைப் பத்தி சொல்லிட்டு இப்போதைக்கு என்ன உட்டுறுங்கோ, பரிட்சை முடிஞ்சு லீவுல ஒங்காத்துக்கு வரேன், அப்பச் சொல்றேளா"? - ஸ்ரீதரன்.
                    "அதான் சரி. இப்போதைக்கு, ஆதியிலே ப்ராஹ்மணன்னு ஒரு வர்ணம்தான் இருந்தது, ஆனா நெறைய கோத்ரம் இருந்தது. கோத்ரம் எதுக்குன்னா, ஒரே வம்சத்த சேர்ந்தவா, பங்காளி, அண்ணா தம்பின்ற உறவு உள்ளவான்னு தெரிஞ்சுண்டு, அவளோட, ஸஹோதர பாசத்தோட பழகவும், அவாத்து பெண்களை கூடப்பிறந்த ஸஹோதரியா நினைச்சு பழகணும்றதுக்குத்தான் கோத்ரம்.
                    அதுமட்டுமில்ல, நாளைக்கே நோக்கு கல்யாணம்னு வச்சுக்கோ ...." கிட்டு மாமா.
                    ஸ்ரீதரன் குறுக்கிட்டு, "மாமா, இப்ப நீங்கதான் விவஹாமா பேசறேள், நான் ஒண்ணும் ஒங்ககிட்ட எந்த விளக்கமும் கேட்கலை, நீங்களாத்தான் சொல்றேன் ஆரம்பிச்சு, இப்ப நீங்க என்னைக் கிண்டல் பண்றேள்".
                    கிட்டு மாமா குறுக்கிட்டு "இருடா, நாளைக்குன்னா நாளைக்குன்னு அர்த்தமில்லடா, ப்யூட்சர்லன்னு அர்த்தம். சரி உடு, உனக்கு கல்யாணம் வேண்டாம், உங்கண்ணாவுக்குன்னு வச்சுக்குவோம், கல்யாணத்துக்கு பொண் தேடும்போது, ஒங்க பாரத்வாஜ கோத்ரத்தை சேர்ந்த பொண்ண கல்யாணத்துக்குப் பார்க்கக் கூடாது".
                    "ஸ்ரீதரன் குறுக்கிட்டு, அதான் ஸஹோதரின்னு சொல்லிட்டேளே மாமா"
                    "சரி கெட்டிக்காரன் புரிஞ்சுண்டுட்டே, இப்ப அபிவாதியின் அடுத்த பகுதிக்கு வருவோம்.
                    பாரத்வாஜ கோத்ர: ன்னு சொல்லிட்டு, ஆபஸ்தம்ப ஸூத்ர: ன்னு சொன்னியோன்னோ,
                    அதுல „ஸூத்ர:…ன்னா என்னன்னா, ஒனக்கு வேதம்னா என்னன்னு தெரியுமா"? கிட்டு மாமா.
                    "மாமா நீங்களே சொல்லுங்கோ, நான் எதையானும் கேட்பேன், அப்பறம் விவஹாரம்பேள்"-ஸ்ரீதரன்.
                    "சரிடா, வேதம்னறது, மனுஷா யாராலையும் படைக்கப்படாத ஒரு ஆதி இலக்கியம்"-கிட்டு மாமா.
                    "மனுஷனால படைக்கப்படாத ஒரு இலக்கியத்தை, எந்த மனுஷன் எப்பிடிக் கண்டுபிடிச்சான்"?-ஸ்ரீதரன்.
                    "இங்கதாண்டா நம்ப காமன் சென்ஸ உபயோகிக்கணும்,
                    ஒரு குழந்தை வாய் தொறந்து பேசறத்துக்கு 2 வயசு ஆறது, அதுவரைக்கும் அந்தக் கொழந்தை என்ன நினைக்கறது, என்ன விரும்பறதுன்றது அதைப் பெத்தவளுக்குத் தெரியறது, ஏன்னா, அதத் தெரிஞ்சுக்கறதுல அவ அவளோ ஆழமா கவனம் செலுத்தறா, போராடறா, தெரிஞ்சுக்கறா. அதுமாதிரி, சாதாரணமா, நம்ப தினசரி வாழ்க்கைல ஒருத்தர் ஒரு விஷயத்தைப்பத்தி என்ன நினைக்கிறாங்கறத ஓரளவுக்கு நம்மால கெஸ் பண்ண முடியறது இல்லியா? இதெல்லாம் சின்ன விஷயம் ஒனக்குப் அடிப்படை புரியணும்ன்றதுக்காகச் சொன்னேன்.
                    ஒனக்குத் திருக்குறள் தெரியுமா?" - கிட்டு மாமா.
                    "ஏதோ கொஞ்சம் தெரியும் மாமா"- ஸ்ரீதரன்.
                    "திருவள்ளுவர் 1330 குறள்ல இந்த உலகத்துல உள்ள அத்தனை விஷயங்களைப் பத்தியும் ரொம்ப நன்னாச் சொல்லிருக்கார்னு, கேள்விப்பட்டிருக்கியோ"?-கிட்டு மாமா.
                    "ஆமாம் மாமா, கேள்விப்பட்டிருக்கேன்"--ஸ்ரீதரன்.
                    "அவருக்கு அவ்ளோ ஜ்ஞானம் ஏற்படறதுக்கு, தெய்வ அநுக்ரஹமும், ஒருவிஷயத்துல மிக ஆழமான ஆராய்ச்சியும், அதுவும் விஷயத்த உள்ளபடி தெரிஞ்சுக்கணும், நம்மோட விருப்பு - வெறுப்ப அதுல எள்ளளவும் நுழைக்கக்கூடாதுன்ற கண்ணியத்தோடையும் ஆராய்ச்சி பண்ணினா - அதுக்குப்பேர்தான்டா தபஸ். திருவள்ளுவரப்போல, ஆயிரம் மடங்கு ச்ரத்தையோட ஆராய்ச்சிலே, அதாவது தபஸ்ல ஈடுபட்டவா ரிஷிகள். அவாதான், பகவானோட திருவுள்ளம், பகவானோட அறிவுன்னு சொல்லப்படற வேதத்தை கண்டுபுடிச்சு, கண்டுபுடிச்சு வகைதொகை இல்லாம ஒரே குவியலா வச்சிருந்தா. பகவானோட அவதாரமான வ்யாஸ பகவான்தான், ஒரு ஸமயம் அந்த வேதங்களை நாலா பிரிச்சார். அதுதான், ரிக் வேதம், யஜூர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம்னு நாலு. ஒவ்வொரு வேதத்திலியும் பல பகுதிகள் இருக்கு. அதுல "ப்ராஹ்மணம்"ன்ற பகுதியிலதான் கர்மாக்கள் பண்ணவேண்டியதப் பத்திச் சொல்லிருக்கு.
                    காதால மட்டுமே, கேட்டுக் கேட்டு கர்ண பரம்பரையா வந்துண்டிருந்ததுனால, வேதத்துக்கு ச்ருதின்னு பேரு. கடினமான, இலக்கியத்தரம் வாய்ந்த, வெளிப்படையற்ற தன்மையோட வேதம் இருக்கறதுனால, அதை மநுஷாளுக்குப் புரியும்படியா, ரிஷிகள் எழுதினதுக்குச் ச்ருதின்னு பேரு. இதெல்லாந்தான் அடிப்படை சாஸ்த்ரம்ன்னு பேரு. இதுக்கப்பறம், இதை மேல மேல விளக்கறத்துக்காக எழுதப்பட்ட புராணங்களுக்கும் சாஸ்த்ரம்னு பேர்.
                    இந்த சாஸ்த்ரங்களை “ ... கிட்டு மாமா.
                    அம்மா குறுக்கிட்டு "மாமா, ஏதோ சின்னப்பையன் கேட்டான்றதுக்காக ஒரு பெரிய ப்ரசங்கமே பண்ணிண்டிருக்கேளே, தேவளுக்கு எங்கியானும் போகணுமா, நாழியாயிடப்போறது".
                    "அதுக்கில்லடிம்மா, அப்புறம் உம்புள்ள, வாத்யார் மாமாவ கேலி பண்றமாதிரி எனக்கும் ஒண்ணுந் தெரியாதுன்னு, எல்லாரிட்டியும் கேலி பேசுவான். ஏன், நான் கிளம்பினதும் ஏதானும் காரியம் பண்ணணுமா"? - கிட்டு மாமா.
                    "தப்பா எடுத்துக்காதிங்கோ மாமா, உங்களை சிரமப்படுத்திடப்போறானேன்னுதான் சொன்னேன்"-அம்மா.
                    "அம்மா நீன் ஒம்வேலையப் பாரும்மா-ஸ்ரீதரன்.
                    "சரிடா, மாமா, தேவளுக்க வேற ஏதானும் சாப்பிடக் குடுக்கவா, இல்லாட்டா சாப்ட்ற நாழியாயிடுத்து நம்பாத்லியே ஒரு வா சாட்டுட்டு போயிடுங்களேன்"?
                    "இல்லம்மா, நான் ஆத்துல சொல்லிட்டு வரலை, தோ ஆயிடுத்து, கிளம்பிடறேன்"-கிட்டு மாமா.
                    மாமா அவசரமாகத் தொடர்ந்தார் "சரிடா ஸ்ரீதரா, தர்ம சாஸ்த்ரம், வர்ணாச்ரமம், ஆஹ்நிகம், ப்ராயச்சித்தம், ச்ராத்தம் நாலு காண்டமா இருக்கு. அதுலல்லாம், என்ன கர்மா எவன் பண்ணணும், எதப் பண்ணக்கூடாது, பண்ணவேண்டியத எப்பப் பண்ணணும், பண்ணாட்டா என்ன ப்ராயச்சித்தம், பண்ணக்கூடாதத பண்ணினா என்னன்னு எழுதி வச்சிருக்கா. ஆனா, ஒவ்வொரு ப்ராஹ்மணனும் அவனோட வாழ்க்கைல உனக்கு உபநயனம் பண்ணினாளே அதுமாதிரி 40 ஸம்ஸ்காரம் அவச்யம் பண்ணனும்னு எழுதி வச்சிருக்கா. அதுல கல்யாணம் வரைக்கும் உள்ளத தவிர்க்கவே முடியாததா எழுதி வச்சிருக்கா. அப்படிப்பட்ட அந்தக் கர்மாக்களை என்னென்ன மந்த்ரங்கள் சொல்லி எப்படிப் பண்ணனும்னு ஒரு வழிகாட்டி அல்லது ப்ரொசீசர்னு சொல்வேளே அது வேணுமில்லியா? அந்த ப்ரொசீசரை சுருக்கமா சட்டுன்னு ஞாபகம் வச்சுக்கறமாதிரி சின்னச் சின்ன ச்லோகத்துல சில ரிஷிகள் எழுதி வச்சுருக்கா. அல்ஜீப்ராவுல ஏப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர் மாதின்னு வச்சுக்கோயேன்.
                    அந்த ச்லோகங்களுகத்தான் „ஸூத்ரம்னு… பேர். பொதுவா ஸூத்ரம்ன்ற வார்த்தைக்கு பார்முலான்றதுதான் அர்த்தம்.
                    இந்த ஸூத்ரத்தைத்தான் ஒவ்வொரு வேதத்துக்கும் கொறைஞ்சது ரெண்டு ரெண்டு ரிஷிகள் எழுதி வச்சிருக்கா.
                    ருக் வேதத்திற்கு - ஆஶ;வலாயனம், கௌஷீதகம் என்று இரு ஸூத்ரங்கள்.
                    யஜூர் வேதத்தில் க்ருஷ்ண - சுக்ல என இரு பிரிவுககள் உள்ளன.
                    க்ருஷ்ண யஜூர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம்,
                    ஸத்யாஷாடம், வைகானஸம் என்று ஐந்து ஸூத்ரங்கள் உள்ளன.
                    சுக்ல யஜூர் வேதத்திற்கு - காத்யாயனம் என்று ஒரு ஸூத்ரம்.
                    ஸாம வேதத்திற்கு - த்ராஹ்யாயனம், ஜைமனீயம் என இரு ஸூத்ரங்கள்.
                    இப்ப பாரு, அபிவாதியில அடுத்தாப்ல என்ன சொல்ற, ஆபஸ்தம்ப ஸூத்ர: - யஜூர் சாகா அத்யாயின்னு சொல்றியா?
                    அதுனால, ஆபஸ்தம்பர் வகுத்துக்கொடுத்த ஸூத்ரப்படி கர்மாக்களைச் செய்கிறவனும்,
                    யஜூர் வேதத்தை அத்யயனம் செய்பவன் அல்லது அநுஷ்டிப்பவனும்
                    ஸ்ரீதரன் என்னும் நாமத்தை சர்மாவாக உடையவனுமான எனது பணிவான நமஸ்காரத்தை
                    தேவரீருக்குச் ஸமர்ப்பிக்கிறேன், தேவரீர் அருள்கூர்ந்து அடியேனை ஆசீர்வதிக்க வேண்டும் - இதுதான் அபிவாதியோட அர்த்தம்.
                    புரிஞ்சாப் பாரு,
                    புரியாட்டா, மேல சந்தேஹம் இருந்தா - வாசு வாத்யார்னு ஒருத்தர் பொழுது போகாம ப்ராமின்ஸ்நெட்.காம் னு ஒரு வெப்சைட்ல இதுமாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றத பொழப்பா வெச்சிண்டிருக்காராம்,
                    ஒனக்குதான் கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் தண்ணிபட்ட பாடாச்சே,
                    போய்ப் பாத்துக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ.
                    இன்னும் கொஞ்ச நாழியாச்சுன்னா, எனக்கு ரெண்டு பக்கத்துலேருந்தும் வசவு வரும்,
                    சரி கேமளா நான் போயிட்டு வரேன்,
                    கொழந்தைய ஒண்ணும் சொல்லாதே,
                    விஷயம் தெரிஞ்சவா யாரும், இந்த மாதிரி கேள்விகள, தொந்தரவா நெனைக்க மாட்டா,
                    நம்பள யாரும் கேக்கமாட்டாளா, நமக்குத் தெரிஞ்சத நாலு பேருக்குச் சொல்ல மாட்டமான்னுதான் அவா எதிர்பார்க்கறா"- கிட்டு மாமா.
                    "ரொம்ப சந்தோஷம் மாமா, மாமியைக் கேட்டதாச் சொல்லுங்கோ"-அம்மா.
                    "மாமா, நீங்க சொன்னது எனக்கு ரொம்ப நன்னாவே புரிஞ்சிருக்கு, ஆனா வேற பல சந்தேஹங்கள் வந்திருக்கு, நான் வாசு வாத்யாரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன் மாமா, ரொம்ப தேங்க்ஸ் மாமா"- ஸ்ரீதரன்.
                    கிட்டு மாமா ஆத்தை விட்டு வெளியேறிச் சென்றார், ஏதோ வேலுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி வந்து உபந்யாஸம் பண்ணிட்டு போனமாதிரி உணர்ந்தனர் அம்மாவும், பிள்ளையும்.


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment

                    Working...
                    X