Announcement

Collapse
No announcement yet.

Frog & our life

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Frog & our life

    தவளை ஒன்று காட்டில் வாழ்ந்தது - அது
    தினம் கிடைக்கும் பூச்சி தின்றது
    கவலை இன்றி வாழ்ந் திருந்தது - அதை
    கவ்விட வோர் பாம்பும் வந்தது


    இரண்டு காலை பாம்பு பிடித்தது - தவளை
    அந்த வலியில் துடி துடித்தது
    இறக்கும் தவளை வாயருகிலோர் - பூச்சி
    இறக்கை ஆட்டி பறந்து வந்தது


    அரவம் கவ்வி நின்ற போதிலும் - தவளை
    அதனை வாயிற் போட்டுக் கொண்டது
    மரணம் காத்து நிற்கும் போதிலும் - நாம்
    மண்டூகம் போலே வாழ லாகுமோ?
Working...
X