Announcement

Collapse
No announcement yet.

A lady - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • A lady - Periyavaa

    கோவிந்தா!.....


    கர்நாடகா மஹாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற க்ராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் ஜோராக கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள்.


    பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.


    எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு ஶிஷ்யர்களை கூப்பிட்டார்.....


    "டேய்! ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !"


    யாருக்கும் ஏன் இப்படி சொல்கிறார்? என்று புரியவில்லை.


    மிக மிக புதுமையான உத்தரவு!


    துண்டைப் போட்டார்கள்.


    பெரியவா சுற்றி சுற்றி, அங்கே இங்கே பார்த்தார். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் ( பெரியவா ஸங்கல்ப ஸ்ருஷ்டி!) நின்று கொண்டு பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


    "இந்தாடா....! கொழந்தே! இங்க வா"


    ஸைகை பண்ணி அழைத்தார்.


    வந்தான்.


    நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அஸாத்யமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.


    பெரியவா அந்த குட்டிப்பையனிடம் அழகான கன்னடத்தில் உத்தரவிட்டார்....


    " இ... இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே....! அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா!"
    [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு]


    அந்த பையனும் அழகாக, எதிர் கரைக்கு நீந்திப் போய், நீருக்குள் மூழ்கியபடி, தன் தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான்.


    கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!


    ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன !


    எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்?


    பெரியவாளும் மற்றவர்களும் திடீரென்று அங்கே வந்துவிட்டதால், அவளால் வெளியில் வந்து எங்கும் மறைந்து கொள்ள முடியவில்லை ! படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த க்ராமத்துப் பெண்களுக்கு!


    "இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!" என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவஶ்யமும் ஏற்படவில்லை.


    அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா?


    த்ரௌபதி "கோவிந்தா" என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே? ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.


    பெண்களின் மானத்தை காப்பாற்றுவதுதான் புருஷோத்தமனான பகவானின் லக்ஷணம்.


    Compiled & penned by Gowri sukumar
Working...
X