Announcement

Collapse
No announcement yet.

பதார்த்த குண சிந்தாமணி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பதார்த்த குண சிந்தாமணி

    பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள் :


    * நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
    * வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
    * மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.
    * 45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops ) மருந்து விடுவது.
    * நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
    * வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.


    செய்யக் கூடாத விஷயங்கள் :


    * முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
    * கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
    * பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
    * நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
    * பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
    * உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
    * தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம்,
    கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.


    கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :


    * உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
    * நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.
    * வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
    * எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
    -- மருத்துவர் கு.சிவராமன் . ( நலம் 360 0 )
    ஆனந்த விகடன். 8-11- 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X