Announcement

Collapse
No announcement yet.

Golden words of Vallalaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Golden words of Vallalaar

    "வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்
    நல்லோர் மனத்தை - நடுங்கச் செய்தேனோ!
    வலிய வழக்கிட்டு - மானங் கெடுத்தேனோ!
    தானங் கொடுப்போரைத் - தடுத்து நின்றேனோ!
    கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
    மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
    குடிவரி யுயர்த்திக் - கொள்ளை கொண்டேனோ!
    ஏழைகள் வயிறு - எரியச் செய்தேனோ!
    தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
    மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
    உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
    களவு செய்வோர்க்கு - உளவு சொன்னேனோ!
    பொருளை இச்சித்துப் - பொய் சொன்னேனோ!
    ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
    வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
    வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
    பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
    இரப்போர்க்குப் பிச்சை - இல்லை யென்றேனோ!
    கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
    நட்டாற்றில் கையை - நழுவ விட்டேனோ!
    கலங்கி யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
    கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
    காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
    கணவன் வழி நிற்போரைக் - கற்பழித் தேனோ!
    கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
    குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
    குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
    கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
    பெரியோர் பாட்டிற் - பிழை சொன்னேனோ!
    பட்சியைக் கூண்டில் - பதைக்க அடைத்தேனோ!
    கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி வைத்தேனோ!
    ஊன்சுவை உண்டு - உடல் வளர்த்தேனோ!
    கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
    அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ!
    குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ!
    வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ மழித்தேனோ!
    பகைகொண்டு அயலோர் - பயிரழித்தேனோ!
    பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
    ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ!
    சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ!
    தவஞ் செய்வோரைத் - தாழ்வு சொன்னேனோ!
    சுத்த ஞானிகளைத் - தூஷணஞ் செய்தேனோ!
    தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
    தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந் தேனோ!
    என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.


    "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"
Working...
X