Announcement

Collapse
No announcement yet.

பாட்டி வைத்தியம் - சளி , ஜுரத்துக்கு என்ன ச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாட்டி வைத்தியம் - சளி , ஜுரத்துக்கு என்ன ச

    முதலில் சளி , ஜுரத்துக்கு என்ன சாப்பிடலாம் என்ன கூடாது என பார்போம். சாதாரணமாக எல்லோருக்கும் சளி பிடிக்கும் , அது உடம்பு சூட்டாலா அல்லது குளுமையாலா என முதலில் தெரிந்து கொள்ளனும்.

    குளுமையால சளி என்றால் தலை கனக்கும், கழுத்து , அள்ளை பக்கம் வலிக்கும். மூக்கில் சளி வரும். அப்ப என்ன சாப்பிடணும் என்றால், மிளகு சீரக ரசம், பூண்டு ரசம், மிளகு குழம்பு, மிளகு டீ என மிளகு அதிகம் சேர்த்துகனும்.

    இதுக்கு ரூல் என்ன வென்றால், "சளி பிடித்தால் வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு நல்ல தூங்கணும். ஜுரம் வந்தால் "லங்கனம் பரம ஔஷதம் " அதாவது சாப்பிடாமல் பட்டினி போடணும்" என்பா என் பாட்டி .

    நல்லா விக்க்ஸ் வேடு பிடிக்கலாம், உடல் சூடுதரும் பண்டங்களை சாப்பிடலாம். அதாவது அத்திபழம் - இதை சூடு நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். பப்பாளி சாப்பிடலாம். கேழ்வரகால் ஆன பண்டங்களை சாப்பிடலாம்.

    தவிர்க்க வேண்டியவை: குளுமையான கறிகாய்கள், அதாவது பூசணி, சௌ சௌ,
    சுரைக்காய், வெந்தய கீரை போன்றவை. மற்றும் சோம்பு, பனம் கல்கண்டு , பனை வெல்லம். (சாதாரண வெல்லம் சூடு , ஆனா பனை வெல்லம் குளுமை )

    இப்ப மிளகு ரசம் வைப்பதை பார்போம்.

    தேவையானவை:

    ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
    புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்

    தாளிக்க:

    கடுகு 1/2 ஸ்பூன்
    சீரகம் 1 ஸ்பூன்
    தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
    மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
    பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
    உப்பு
    கறி வேப்பிலை 1 கை
    2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
    1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
    நெய் 2 ஸ்பூன்

    செய்முறை :

    வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
    1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
    நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
    உப்பு போடவும்.
    நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
    ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
    மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
    அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
    உங்களது மிளகு ரசம் தயார்.
    சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
    வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

    குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும்சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X