Announcement

Collapse
No announcement yet.

4 paths - Sariyai, Kiriyai, Yogam & Gyanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4 paths - Sariyai, Kiriyai, Yogam & Gyanam

    *பரம்பொருளை அதாவது கடவுளை அடைவதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன :*
    *பரம்பொருளை அதாவது கடவுளை அடைவதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன :*
    *சரியை மார்க்கம்*
    *கிரியை மார்க்கம்*
    *யோக மார்க்கம்*
    *ஞான மார்க்கம்*
    *1)சரியை மார்க்கம் :* சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் *'சரியை மார்க்கம்'* எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை.இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.
    கல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.
    *2)கிரியை மார்க்கம்:*
    தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் *கிரியை மார்க்கம்* எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.
    சிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.
    *3)யோக மார்க்கம்:*
    ஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.
    இது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.
    உண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.
    *4)ஞானமார்க்கம்*
    எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் 'கனி' எனப் பாராட்டுவார்.
    சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர்,காய், கனிக்கு இணையாகும்!' என்பது அவரது கருத்து.
    *ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா?*
    வற்றாத அன்பு,
    குறையாத ஆனந்தம்,
    கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,
    குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,
    கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,
    இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க' வணங்கும் விசுவாசம்
    இவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.
    திருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும். காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனைஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.
    இந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில்இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)
    'சரியையிலே ஈசன்
    சட வடிவாய் நிற்பான்
    கிரியையிலே மந்திரத்தில்
    கிட்டி அருகிருப்பான்
    ஊனமில்லா யோகத்தில்
    உள் ஒளியாய் நிற்பான்
    ஞானத்தில் தானாகுவான்!'
    ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள் .


    இனி எந்த
    மார்க்கத்தில் செல்வது?
    என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள்....
Working...
X