Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    2. பக்கரை


    பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
    பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டள்கை வடிவேலும்
    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப னிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனஎ னக்கருள்கை மறவேனே
    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
    ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் அருளாழி
    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய பெருமாளே.







    பதம் பிரித்தல்



    பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
    பட்சி எனும் உக்ர துரகமும் நீப


    பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய
    பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்


    திக்கு அது மதிக்க வரு(ம் குக்குடமும் ரட்சை தரும்
    சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்


    செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பு என எனக்கு அருள்கை மறவேனே


    இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
    எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு


    எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்fடு வெளரி
    பழம் இடி பல்வகை தனி மூலம்


    மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு
    விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி


    வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள்
    வித்தக மருப்பு உடைய பெருமாளே.


    பதம் பிரித்தல்
    பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
    பட்சி எனும் உக்ர துரகமும் நீப


    பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய
    பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்


    திக்கு அது மதிக்க வரு(ம் குக்குடமும் ரட்சை தரும்
    சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்


    செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பு என எனக்கு அருள்கை மறவேனே


    இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
    எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு


    எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்fடு வெளரி
    பழம் இடிபல்வகை தனி மூலம்


    மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு
    விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி


    வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள்
    வித்தக மருப்பு உடைய பெருமாளே.





    பத உரை


    பக்கரை = அங்கவடி. { குதிரைக்கு முதுகில ஏறி உட்காருவதற்காக போடப்படும்அணி}


    விசித்ர மணி = பேரழகான மணி.


    பொன் கல்லணை இட்ட = பொன் நிறமான சேணம் (இவைகளைப் பூண்டு).


    நடை = நடக்கும்.


    பட்சி எனும் = பறவையாகிய.


    உக்ர = மிடுக்குள்ள.


    துரகமும் = (மயிலாகிய) குதிரையையும்.


    நீப = கடம்ப (மரத்தின்).


    பக்குவ மலர்த் தொடையும் = தக்க மலர் மாலையையும்.


    அ = அந்த.


    குவடு = (கிரௌஞ்ச) மலை.


    பட்டு ஒழிய = அழிந்து ஒழியும்படி.


    பட்டு உருவ = அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லும்படி.


    விட்டு அருள் = விட்டருளிய.


    கை = கையில் உள்ள.


    வடிவேலும் = கூர்மையான வேலையும்.


    திக்கு அது = திக்குகள்.


    மதிக்க வரும் = மதிக்கும்படி எழுந்துள்ள.


    குக்குடமும் = சேவலையும்.


    ரட்சை தரு = காத்தளிக்கும்.


    சிற்றடியும் = சிறிய திருவடிகளையும்.


    முற்றிய = திரண்ட, வலிமைப்பெற்ற


    பன்னிரு தோளும் = பன்னிரண்டு தோள்களையும்.


    செய்ப்பதியும் = வயலூரையும்.


    வைத்து = வைத்து.


    உயர் திருப்புகழ் = உயர்ந்த திருப்புகழை.


    விருப்பமொடு செப்பு என = விருப்பமோடு சொல்லுக என்று.


    எனக்கு அருள்கை மறவேனே = எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.


    இக்கு = கரும்பு. அவரை = அவரை.


    நல் கனிகள் = நல்ல பழங்கள். சர்க்கரை = சர்க்கரை. பருப்புடன் நெய் = பருப்புநெய். எள் பொரி = எள், பொரி.


    அவல் = அவல். துவரை = துவரை.


    இள நீர் = இள நீர். வண்டு எச்சில் = தேன்.


    பயறு அப்ப வகை = பயறு, அப்ப வகைகள்.


    பச்சரிசி பிட்டு = பச்சரிசி, பிட்டு.


    வெ(ள்)ளரிப் பழம் = வெள்ளரிப்பழம்.


    இடி = மாவு.


    பல் வகை = பல வகையான.


    தனி = ஒப்பற்ற.


    மூலம் = கிழங்குகள்.


    மிக்க அடிசில் = சிறந்த உணவு (வகைகள்).


    கடலை = கடலை (இவைகளை).


    பட்சணம் எனக் கொள் = பட்சணமாகக் கொள்ளும்.


    ஒரு = ஒப்பற்ற.


    விக்கிந சமர்த்தர் = வினைகளை நீக்க வல்லவர்


    என்னும் = என்று சொல்லப்படும்.


    அருள் ஆழி = அருட் கடலே.


    வெற்ப = (அருள்) மலையே.


    குடில = வளைந்த. ( குடிலம் என்றால் குரா மலர் என்றும் பொருள் உண்டு –தொகுப்பாசிரியர்கள் )


    சடில = சடையையும்.


    வில் = (பினாகம்) என்னும் வில்லையும் (கொண்ட).


    பரமர் அப்பர் அருள் = மேலான அப்பர் பெற்றருளிய.


    வித்தக = திறலோனே.


    மருப்பு உடைய பெருமாளே = (யானைக்) கொம்பு உடையபெருமாளே.



    சுருக்க உரை


    அங்கவடி, அழகிய மணி, சேணம் இவைகளைப் பூண்டு நடக்கும், மிடுக்கானமயிலான குதிரையையும், கடம்ப மரத்தின் மலர்களையும், கிரௌஞ்ச மலைபொடிபடச் செலுத்திய, கரத்தில் ஏந்திய வேலையும், திக்குகள் மதிக்கும்சேவலையும், வயலு\ரையும் வைத்துத் திருப்புகழ் பாடுக என்று எனக்கு அருள்செய்ததை நான் மறவேன்.


    கரும்பு, அவரை, அப்பம் முதலிய உணவு வகைகளைப் பட்சணமாகக் கொண்டுவிக்கின சமர்த்தர் என்று பெயர் கொண்ட அருள் கடலே, அருள் மலையே. வளைந்த சடையைக் கொண்ட சிவபெருமான் அருளிய திறலோனே. யானைக்கொம்பு உடைய பெருமாளே. திருப்புகழ் பாடுக எனக்குச் செப்பியதை நான்மறவேன்.






    விரிவுரை குகஸ்ரீ ரசபதி



    23 வகையதான, நிவேதனப் பொருள்களை அன்பர்கள் மேன்மேலும்இடுகின்றனர். உலகம் அனைத்தையும் தன் பெருத்த தொந்தியில் வைத்துகாக்கும் பெருமாற்கு அவைகள் பட்சணம் என்னும் சிற்றுண்டி அளவுதான். அதற்காக நாம் சும்மா இருந்து விடலாமா? மலையத்தனை சுவாமிக்குகடுகத்தனை கற்பூரம் என்பது பழைய பழமொழி. அது போல் நம்அன்பின்
    அறிகுறியாக நாம் விரும்பும் பொருள்களை நம்பனிடம் சமர்ப்பிப்போம் என்பதுசிறந்த பக்தர்களின் சிந்தனை.
    வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தார் ஒருவர். அதையே சிறிதுகிள்ளி நிவேதித்தார் அவர். அவர் உள்ளம் அறிந்து அதையும் மகிழ்ந்தார்ஆனைமுகர். – எள்ளரே ஆயினும் யாவர் ஒன்று எண்ணுதல் முன்னரே உனது தாள்முடியுறப் பணிவரேல் அள்ளர் தம் சிந்தை போல் ஆக்குதி அலது உனைஉள்ளலார் செய்தியை ஊறு செய்திடு நீ – என்று அந்த ஓங்கார மூர்த்தியின்உளத்தில் உணர்த்தினார் சிவபிரான். அந்த நாள் முதல் விக்கினங்களை ஆக்கவல்லார், வந்த விக்கினங்களை போக்க வல்லார் விநாயகர் என்று உணர்ந்துவழிபட்டு உய்கின்றார் மேலோர்.


    மும்மல அழுக்கில் மூழ்கிய உயிர்களை கழுவிக் காக்கும் அருட் கடலே, மேலேற்றும் அருள் மலையே, சிவனார் அருளிய அருளாளர், இமையவர் இடர்தவிர்க்கும் ஒற்றைக் கொம்பால் ஆணவ யானையை அடர்ப்பவனே, தடத்தநிலையில் கம்பீரா, சொரூப நிலையில் ப்ரம்ம சைத்தன்யமாக பிரகாசிப்பவனே, மோசமான உலக வாழ்வில் நாசமாகதபடி என்னையும் பொருளாகக் கொண்டுஎன் முன் எழுந்தருளினை.


    அருணகிரி, அமுதினும் இனிக்கும் பழமைத் தமிழால் ஓங்கார மயிலின்பெருமையைப் பாடு. சிவபோகம் தரும் கடப்ப மாலையை கனிவு கொண்டுபாடு. சாதுக்களை சாய்த்த வஞ்சக் க்ரவுஞ்ச பகை அழிய ஊடுருவி பாய்ந்துஅயை ஒழித்த ஞான சக்தியாம் வேற்படைப் பாடு. அகில உலகமும் அன்போடுபாரட்டும் நாதச் சேவலை பாடு. பரிபூரண ஞானம் பாலிக்கும் பரம குமரன் இளம்திருவடிகளைப் பாடு. வரத முருகன் வயலு\ர் வாசியைப் பாடு. பாடிக் கொண்டேஇரு. என்று கணேசா, நீர் செய்த மா பெரும் உபதேசத்தை மறக்கவே மாட்டேன். உமது வாக்கு என் நாக்கில் வாழுகிறது என்று மூத்த பிள்ளையாரைஅருணகிரியார் ஏத்திய பாடல் இது.
Working...
X