Announcement

Collapse
No announcement yet.

RAMESWARAM -prayag-- KASI-GAYA- TRAVELOGUE-

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • RAMESWARAM -prayag-- KASI-GAYA- TRAVELOGUE-

    ராமேஸ்வரம்,,ப்ரயாகை,காசி,கயா யாத்திரைவிவரம்.
    முதலில்தேவையானவைகளை தயார்படுத்திக்கொள்ளு
    தல்
    .
    எந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.


    தன்வீட்டிற்கு புது மருமகள்கல்யாணம் செய்துகொண்டு வந்தஒரு வருடம்;தான் கல்யாணம்செய்து கொண்ட ஒரு வருஷம்;தான் கன்னிகாதானம்செய்து கொடுத்த ஒரு வருஷம்;
    தன்நெருங்கிய உறவினர்களுகுஇறுதி க்ரியை செய்த ஒரு வருஷம்,வேறுவகையான சூதகங்கள்//தீட்டுகள்ஏற்பட்டுள்ள காலங்களிலும்தீர்த்த யாத்திரை செய்யக்கூடாது.


    பெண்கள்மாதவிடாய் ஆன ஐந்தாவது நாள்முதல் தேவ ,பித்ரு கார்யங்களில்கலந்து கொள்ளலாம் .யாத்திரைதொடங்கிய பின்னர் தீட்டுதெரிந்தால் தீட்டு முடியும் வரை சென்ற இடத்திலேயே தங்கிவிட்டு தீட்டு போன பின்னர் யாத்திரை தொடர வேண்டும்.


    மனைவிகர்பமாக இருக்கும்போது தீர்த்தயாத்திரை செல்லக்கூடாது.செல்லும்படிநேர்ந்தால் முண்டனம் (வபனம்)முடி நீக்கல்செய்யக்கூடாது.கர்ப காலம் ஏழுமாதத்திற்கு மேல் ஆகியிருந்தால்தீர்த்த சிராத்தமும்செய்யக்கூடாது.




    தீர்த்தயாத்திரையின் போது பொய்சொல்லக்கூடாது.உடலுறவு கொள்ளக்கூடாது.ஒரு கால சாப்பாடேஉட்கொள்ள வேண்டும்.


    அசைக்கமுடியாத நம்பிகையும்,பக்தியும்,சுத்தமும்முக்யமானது.தீர்த்த வாஸிகளைதூஷிக்ககூடாது.
    தன்சக்திக்கு அதிகமாகவும்குறைவாகவும் இல்லாமல் தானங்கள்தீர்த்த கரையில் செய்ய வேண்டும்.


    செய்யும்கர்மாவிற்கு உரிய பலன் கிடைக்கவேண்டும் அல்லவா.ஆதலால் எவ்விதகுறையுமில்லாமல் வைதீககர்மங்களை எவ்விதம் செய்யவேண்டும் என்பதை முதலில்தெரிந்து கொள்ளவும்.
    தான்செய்த தான தர்மங்க
    ளை புகழ்ச்சியாகயாரிடமும் சொல்ல வேண்டாம்
    .அகம்பாவம்,ஆணவம்,ஆடம்பரம் வேண்டாம்..அறிந்தோ அறியாமலோசெய்த பாபங்களுக்கு பஸ்சாதாபத்துடன்பரிஹாரம் செய்து கொள்ளவும்.


    செய்யும்கர்மாக்களை ப்ரஹ்மார்பணமாகசெய்ய வேண்டும்.தீர்த்த யாத்திரையின்போது தான் பிறரிடம் தானம்எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது.
    தேவிபாகவதத்தில் எல்லா ஆஸ்ரமத்தாரும்,எல்லா வர்ணத்தாரும்,பெண்களும்ருத்ராக்ஷம் அணியலாம் என்றுசொல்லபட்டிருக்கிறது.


    பாத்ரூம் செல்லும்போதும் தூங்கும்போதும் ருத்ராக்ஷம் அணியவேண்டாம்.ஐந்து முகருத்ராக்ஷம் அணிந்து யாத்திரைசெல்லலாம்.
    யாத்ராதானம் செய்து விட்டு தீர்த்தயாத்திரைக்கு தேவையானவைகளைசேகரித்து கொண்டு சுவாமிக்குஅஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்ப வேன்டும்.
    அடுத்துசெல்ல உள்ள க்ஷேத்திரத்திற்குமட்டும் ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்,அங்கு சென்றுமுடிந்த பிறகு அங்கிருந்துஅடுத்த க்ஷேத்திர த்திற்கு

    செல்லும் போது அடுத்தக்ஷேத்திறத்திற்கு மட்டும்ஸங்கல்பம்

    செய்துகொண்டு செல்ல வேண்டும்.ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி,கயா என்று எல்லாஊர்களுக்கும் மொத்தமாகஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாதுஎன்கிறது த்ரிஸ்தலி யாத்ராவிதானம் புத்தகம்.


    பயணம்செல்லும் வழியில் உங்கள்உறவினர்களோ நண்பர்களோ இருந்தால்சாப்பாட்டிற்கு அவர்கள்உதவியை நாடலாம்.இல்லாதவர்கள்கையில் வேண்டியதை தயார் செய்துவைத்துகொண்டு எடுத்து செல்லவேண்டும்..ரயிலில் கொடுக்கும்உணவு உங்கள் உடலுக்குஒத்துக்கொள்ளாமல் ஆகிவிட்டால்அதனால் பேதி,வயிற்றுவலி வந்துவிட்டால் நாம் செல்லும்நோக்கம் நிறைவேறாது.


    இங்குகிடைக்கும் வெற்றிலை வடமாநிலங்களில் கிடைக்காது.நீங்கள்வெற்றிலை எடுத்து செல்லவிரும்பினால் கிளம்பும் நாள்அண்று வெற்றிலை வாங்கி தண்ணிரில்நனைத்து ஒவ்வொன்றாக எடுத்துஇரு பக்கமும்
    துடைத்துஅடுக்கி ஈர துணியில் சுற்றிஅதன் மேல் அடிக்கடி தண்ணீர்தெளித்து காற்று புகாத ஜிப்லாக்கவரில் போட்டு வைத்துகொள்ளவேண்டும்.


    வாடிய,அழுகும் நிலையில்உள்ள வெற்றிலைகளை பார்த்துமுதலில் உபயோகிக்க வேண்டும்.பாக்கு,சுன்னாம்புஏலக்காய்,கிராம்பு தேவையானவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.


    பித்ருக்களுக்குதீர்த்த சிராத்தம் ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி.கயா என்ற நான்குஊர்களிலும் செய்ய பட வேண்டும்.,அதில் பெறப்படும்ஆசீர்வாத அக்ஷதைகளை நம்குழந்தைகளுக்கும்,,பேரன் பேத்திகளுக்கும்,மற்றும்
    உறவினர்களுக்கும்எடுத்து செல்ல வசதியாகப்லாஸ்டிக் கவர் பெயர் எழுதிவைத்து கொள்ளவும்.ஆசிர்வாத அக்ஷதைகளைஅதில் போட்டு விட்டு ஜிப்போட்டு மூடி பையில் பத்திரமாகவைத்து கொள்ள வேண்டிய ஏற்பாடு
    செய்துகொள்ளவும்.

    மார்க்கர் பேனா.எடுத்து செல்லவும்,அந்தந்த கவரில்அந்தந்த ஊர்களில் பெயர் எழுதிபோட்டு வை
Working...
X