Announcement

Collapse
No announcement yet.

CONTD__kasi-gaya yathra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • CONTD__kasi-gaya yathra

    அக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.
    மாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.


    கங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று வைத்து ஊருக்கு எடுத்துசெல்ல தயார் செய்து கொள்ளலாம்.கங்கையைபூஜித்து கங்கா ஸமாராதனைசெய்து ஆச்சார்ய ஸபாவனை செய்துகிளம்ப வேண்டும் காசிக்கு..


    தேசீயநெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்துகாசிக்கு 170கிலோ மீட்டர்.உள்ளது.நடுவில் 85கிலோ மீட்டரில்விந்தியாசல் உள்ளது.இங்கு துர்க்காவிந்தியா வாஸினி என்ற பெயருடன்அருள் பாலிக்கிறாள்.;


    காசியிலிருந்துகயா 276கிலோ மீடர்.ரயிலில் சென்றால்220கிலோ மீட்டர்.
    கோஆசூப்பர் எக்ஸ்ப்ரஸ் (12358 ) 4 மணி நேரத்தில்சென்று விடலாம்..


    ப்ரயாகையில்ஆண்கள் வபநம் பெண்கள் வேணிதாநம் செய்து வேணி மாதவர்உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவேண்டும் .இதனால்ஆத்ம ருணம் விலகுகிறது.


    காசியில்கங்கா ஸ்நானம் செய்து காலபைரவரிடமும் தன்டபாணியிடமும்
    தண்டத்தால்அடி பெற்றுக் கொண்டு அங்குபல தெய்வங்களை வழி படுவதால்தேவ ருணம் விலகும்.


    ராமேஸ்வரம்ப்ரயாகை;காசி;கயா ஆகியக்ஷேத்ரங்களில் தீர்த்தசிராத்தம் செய்து விஷ்ணுபாதத்திலும் அக்ஷய வட சாயையிலும்பிண்டங்கள் இடுவதால் பித்ருருணம் விலகும்..
    ..சிலர்சென்னையிலிருந்து நேரேகாசிக்கு ரயிலில் சென்றுவிட்டு காசியிலுள்ள வாத்யாரையும்அழைத்து கொண்டு 3மணி நேரத்தில்கார் மூலம் ப்ரயாகை வந்துஒரே நாளில் எல்லாம் முடித்துகோண்டு காரில் காசி


    திரும்பிவிடுகிறார்கள்.மறுபடியும்காசியிலிருந்து காரில் 4மணி நேரத்தில்கயா சென்று ஒரே நாளில் எல்லாம்முடித்துக்கொண்டு காசிவருகிறார்கள்.காசியிலிருந்துநேரே ரயிலில் சென்னை வருகிறார்கள்.இது அதம பக்ஷம்.


    சிலவாத்யாரிடம் சொந்த கார்உள்ளது.அதில் வாத்யாரேகாரை ஓட்டி சென்று திரும்பிவிடுகிறார்.


    திரிவேணிக்குமுதல் முறை போகும் போது மட்டும்தான் வேணி தானம்.அதன் பிறகு எத்தனைமுறை சென்றாலும் வேணிதானம்செய்ய வேண்டியது இல்லை.
    சாஸ்திரிகள்வீட்டிலேயே ஸ்நானம் செய்துவிட்டு பிள்ளையார் பூஜை மஹாஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதிக்ருச்சர ப்ரதிநிதி தானம்செய்து
    விட்டுமனைவி கணவனுக்கு பாத பூஜைசெய்து கணவனின் நல்வாழ்வுவேண்டி வேணி தானம் செய்யஅநுமதி கேட்டு பெற வேண்டும்.பிறகு நதிக்கரைசெல்ல வேண்டும்.யுவதிகளும்வேணி தானம் செய்ய வேண்டும்.


    வேணிதானம் செய்வதனால் ஸெளபாக்கியம்,செல்வ செழிப்புசந்ததி ஆயுள் விருத்தி பதியிடம்ப்ரியமும் உண்டாகும்...
    பரித்ராஜகோபனிஷத்எல்லா பாபங்களும் தலை முடியில்போய் தங்குகிறது.ஆதலால் முடியைசுத்தமாக எடுத்து.காணிக்கையாகஅளித்து விட வேண்டும் என்கிறது.


    வேணிதானம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்.


    திரிவேணிதேவிக்கு அநேக நமஸ்காரங்கள்.எனக்கு எப்போதும்பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக;.என் ஸெளபாக்கியம்பெருகட்டும்;.நான் இங்கு வந்துவேணி தானம் செய்ததால் இந்தஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும்நான் செய்த பாபங்கள் என்னைவிட்டு நீங்கட்டும்..


    வேணிதானம் சுக்கில பக்ஷத்தில்செய்ய வேண்டும்.திதி,நக்ஷத்திரம்இரண்டும் நன்மை செய்ய க்கூடியதினம் பார்த்து ப்ரயாகைக்குசென்ற நாளன்றோ அல்லது மறுநாளோ வேணி தானம் செய்ய வேண்டும்.
    தலைமுடிபிரிந்து விடா வண்ணம் முடிந்துகொண்டு முகத்தில் மஞ்சள்பூசிக்கொண்டு கணவன் மனைவிஇருவரும் கைகோர்த்து கொண்டுஇருவரும் சேர்ந்து திரிவேணிசங்கம ஸ்நானம் செய்ய வேண்டும்


    பிறகுஇருவரும் போட்டில் வந்துகிழக்கு அல்லது வடக்கு நோக்கிஉட்கார்ந்து மனைவி கணவனிடம்வேணி தானம் செய்ய அனுமதிவாங்கி
    பின்னர்கணவன் மனைவியின் தலை முடியைபிண்ணி விட்டு பூச்சூடி தலைமுடியை இரண்டு அங்குலம்நுனியில் வெட்டி மனைவியிடம்கொடுக்க வேண்டும்.மனைவி அதை ஸெளபாக்கியத்ரவ்யங்களுடன் சேர்த்து


    பண்டாவிடம்தானம் செய்து விட்டு பண்டாவிடம்முடியை த்ரிவேணியில் போடசொல்லி கொடுக்க வேண்டும்முடி மிதந்து வெளியே போகாமல்தண்ணிரில் அடியின் செல்வதுநல்லது.பிறகு தம்பதிகள்கை கோர்த்து
    மறுபடியும்ஸ்நானம்:போட்டிற்கு வந்துவேறு காய்ந்த ஆடை உடுத்தித்ரிவேணிக்கு பூஜை செய்யவேண்டும்.ப்ராஹ்மணர்களுக்கும்


    சுமங்கலிகளுக்கும்தானம் செய்ய வேண்டும்.பிறகு தம்பதியர்வீட்டுக்கு வந்து தம்பதிபூஜை செய்து சாப்பாடு போடவேண்டும்.பிறகு தம்பதியர்சாப்பிட வேண்டும்..
    தலைமுடி நுனியை கத்தரித்துபண்டாவிற்கு தானமாக கொடுத்துஅதை கங்கை,யமுனை ஸரஸ்வதிசங்கமிக்கு மிடத்தில்போடச்சொல்லி முத்தேவியற்கும்காணிக்கையாக போடுவதற்கு வேணீதானம் எனப்பெயர்...


    வேனிமாதவர் மணலை தண்ணீரில் கரைக்கவேண்டும்.ஸங்கம இடத்திலிருந்துசற்று நகர்ந்து சுத்த கங்கைநீரை கேனில் பிடித்து கொள்ளவேண்டும்.
    த்ரிவேணிஸங்கமம் இடத்திலும் மற்றஇடங்களிலும் சுமங்கலிகளுக்குதாம்பூலம் பழம் புஷ்பம்ரவிக்கை துண்டு.கண்ணாடி சீப்பு;மஞ்சள் பொடி;குங்குமம்;கண்ணாடி வளையல்;;கண்மை;மருதாணி பவுடர்தக்ஷிணை கொடுக்க வேண்டும்


    வீட்டிற்குவந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்யவேண்டும்.


    தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள்பிண்ட தானம்;தர்பணம் செய்யவேண்டும்.சிராத்தம்முடித்த பிற்கு வேணி மாதவர்கோயில் செல்ல வேண்டும்.தச தானம் செய்யவேண்டும்.
    த்ரிவேணிகரையில் பூஜை செய்யும் போதுஅந்தந்த தேவிகளுக்கு இந்தப்ரார்த்தனைகளும் சொல்லலாம்.


    த்ரிவேணிசங்கமத்தில் கங்கைக்கு பூஜைசெய்யும் போது இந்த ஸ்லோகம்சொல்லலாம்.


    விஷ்ணுபாதோத்பவே தேவி மாதவ ப்ரியதேவதே தர்சனே மம பாபம் மேதஹத்வக்நிரிவேந்தனம்.லோக த்ரயேபிதீர்த்தாணி யானி ஸந்தி சதேவதாஹா.தத் ஸ்வரூபாத்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்


    கங்கேதேவி நமஸ்துப்யம் சிவசூடாவிராஜிதே சரணத்ராண ஸம்பன்னேத்ராஹி மாம் சரணாகதம்.


    யமுநாவிற்குபூஜை செய்யும் போது இந்தஸ்லோகம் சொல்லலாம்.


    இந்த்ரநீலோத்பலாகாரே பானுகன்யேயசஸ்வினி ஸர்வ தேவஸ்துதேமாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
    ஸர்வதீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காமவரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸேநமஸ்தே விஸ்வபூஜிதே.
    ஸம்ஞ்ஞாகர்பஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதேவிஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டேநமோ நமஹ.


    ஸரஸ்வதிநதிக்கு பூஜை செய்யும்போதுஇதை சொல்லலாம்.


    ப்ரஜாபதிமுக்கோத்பூதே ப்ரணதார்திப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதேதேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
    பத்மராகதலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனேபத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யைதே நமோநமஹ
    வீணாவாதரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதேகீத வீணாரவே மாதஹ பாஹிமாம்சரணாகதம்;


    த்ரீவேணியில்பூஜிக்கும் போது சொல்லக்கூடியஸ்லோகம்


    த்ரிவர்ணேத்ரியம்பிகே தேவி த்ரிவித–அக-விநாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹித்ரிவேணி சரணாகதம்;ஸம்சார அநலசந்தர்பம் காம க்ரோதாதிவேஷ்டிதம் பதிதம் த்வத்பாதாப்ஜே மாம் சீதளம் குருவேணிகே
    தீர்த்தராஜே ப்ரயாகே அஸ்மின்ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதேநானா ஜன்ம க்ருதா ப்யாஸாத்பாதகாத் உத்தரஸ்வ மாம்


    அரசமரத்தின் வேர் அக்ஷயவடம்காணும் போது சொல்ல வேண்டியஸ்லோகம்


    ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதிமாதவஹ;க்ருத்வா முகாம்புஜேபாதெள நமோ அக்ஷயவடே நமஹ
    த்வன்மீலேவஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹத்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம்த்வாம் நமாம்யஹம்.
    ஸெளவர்ணானிதலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாயதே நமஹ.


    வேணிமாதவரை காணும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்;


    நீலஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷிதப்ரயாக நிலய ஸ்வாமின் வேணிமாதவ தே நமஹ
    சங்கசக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜசதுர்வர்க பலாதார வேணி மாதவதே நமஹ; த்வத் பாத ப்ரணதம்மாம் த்வம் கமல ஸ்ரீ முகாத்ருசா உத்தரஸ்வ மஹோதாரவேணீமாதவ தே நமஹ.
    சனகாதிமுனிவருக்கு ஆதிசேஷன் உரைத்தத்ரிவேணி தேவி ஸ்தோத்ரம்வ்யாஸர் அருளிச்செய்தது.


    உடல்இந்திரியங்கள்.ப்ராணன் மனது,புத்தி.சித்தம் அஹங்காரம்அஞ்ஞான துகள்கள் போன்றஅனைத்தையும் தனது ப்ரகாசத்தால்ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்.


    ஜாக்ரத்ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்றுநிலைகளிலும் ப்ரகாசிக்கசெய்பவளும் இவற்றின் விகாரங்களைமாற்றுபவளும் விகாரங்களைஅகற்றுபவளுமாக உபனிஷத்துகளால்போற்றப்படும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்.


    ஸுஷுப்திநிலையில் அறிவு அழியும்போதும்இந்திரியங்களின் ஆளும் சக்திகுறையும் போதும் கூட என்னைநடமாட வைக்கும் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்
    அனைத்துஉலக விஷயங்களிலும் தினம்கட்டுண்டு கிடக்கும் எம்மோடுதாமே வந்து கலந்து அபரிமிதமானப்ரியம் செலுத்தி ஆதரிக்கும்ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.


    மறைபொருளானவிஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின்பலவிதமான வேறுபாடுகளைப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும்த்ரிவேணி தேவி எனக்கு ஸித்திஅளிக்கட்டும்.
    ஆரம்பத்தில்ப்ருஹ்மாவையும் மத்தியில்விஷ்ணுவையும் இறுதியில்சிவனையும் ப்ரகாசபடுத்திகாட்டும் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிக்கட்டும்.
    .

    அகாரவடிவில் ப்ருஹ்மா விசுவேதேவஸ்வரூபி;மகார வடிவில்அக்னி ஸ்வரூபி;என்றுதேஜஸ் ஸூத்ரம் சொல்வதைஉணர்த்தும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்;
    சிவபெருமானின்தேகத்திலிருந்து வேறுபடாதவளும்முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும்ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீதேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்


    இந்ததுதியை தினமும் காலை,மதியம் மாலைசொல்பவர்களுக்கு திரிவேணிதேவிபிரசன்னமாகி அருள் புரிவாள்என்பதில் சந்தேகம் இல்லை;
    மந்திரஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸபகவான் செய்தது.இதை ஜபிப்பதால்திரிவேணி தேவி நம்மோடு எப்போதும்இருந்து காபாற்றுவாள்.


    சிவமடம் தாரா கஞ்ச் அலஹாபாத் (0532 ) 2500799.


    இனிகாசியில் செய்ய வேண்டுபவற்றைபார்ப்போம்..

  • #2
    Re: CONTD__kasi-gaya yathra

    காசியில் செய்ய வேண்டியவைகள்.இந்த தலத்தில் பந்த பாசங்களும் இதற்கு ஆதாரமான அஞ்ஆனமும் சுட்டெறிக்கபடுகிறது. மனித பிறவி கிடைத்தல் அரிது. காசி வாசம் கிடைத்தல் அரிது. இது இரண்டும் சேர்ந்தால் முக்தி கிடைப்பது நிச்சயம்.





    முதுமையில் வாடி, பிணிகளால் அவதி பட்டு வாடுவோர்க்கு வாராணசியே கதி.


    சாஸ்திரங்களில் விதிக்க பட்டுள்ள ஆசார அனுஷ்டானங்களை மதியாமல் வாழ்ந்தோர்க்கு வாராணசியே கதி.


    காசியில் வடக்கு நோக்கி செல்லும் கங்கையில் ஸ்நானம் செய்து பக்தியுடன் விசுவ நாதரை தரிசிக்க வேண்டும்.


    காசி விசுவ நாதரின் கருவரை லிங்கத்திருமேனியை , வரிசையாக சென்று கங்கா ஜலம் கொண்டு தாங்களே அபிஷேகம் செய்து ஐயனின் திருமேனியை தொட்டு


    வணங்க அனைவருக்கும் அனுமதி உண்டு.
    ஸப்த ரிஷி பூஜை:- ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு எழுவர் வந்து விரிவான அபிஷேக, ஆராதனை அலங்காரங்களை செய்து கற்பூர ஹாரத்தி காட்டுவார்கள். இதை அவசியம் காண வேண்டும்.


    மணிகர்ணிகா கட்டத்தில் ஸ் நானம் செய்து விட்டு, இங்க்கு ஞானவாபியிலும் ஸ் நானம் செய்து விட்டு ஞ்ஆன வாபியின் பின் பக்கத்தில் உள்ள தாரகேஶ்வரரை தரிசனம், வழிபாடு செய்ய வேண்டும்.


    இதனால் தாரக மந்திரம் ஞ்ஆனம் ஸித்திக்கும்.பிறகு இங்குள்ள சூலடங்கேஸ்வர லிங்கத்தை தரிசிக்க வேண்டும்.


    சிவ பார்திவ லிங்க பூஜை:-
    ஓம் ஹராய நமஹ என்று சொல்லி மண்ணை எடுத்து ஓம் மஹேஸ்வராய நமஹ என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து இங்கமும் பீடமும் செய்ய வேண்டும்.


    ஓம் ஶூல பாணயே நமஹ என்று சொல்லி ஜலம் ப்ரோக்சனம் செய்க. ஓம் பசுபதயே நமஹ என்று சொல்லி பூஜை செய்க; ஓம் மஹாதேவாய நமஹ என்று சொல்லி ஜலத்தில் கரைத்து விட வேண்டும். இதுவே மிக எளிதான பார்த்திவ லிங்க பூஜை.


    கால பைரவர் ஆலயத்தில் கால பைரவாஷ்டகமும், அன்னபூரணி ஆலயத்தில் அன்ன பூரணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகமும் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெற வேண்டும்.


    பஞ்சாட்சரம் ஓதி சிவனை வில்வத்தால் சிரத்தையுடன் அர்ச்சிக்க வேண்டும்.


    இலை, புஷ்பம், பழம், ஜலம், அன்னம், பானம், நெய் , மருந்து போன்ற எந்த பொருளையும் சிவார்ப்பணம் செய்தே உட்கொள்ள வேண்டும்.


    சிவனின் ப்ரஸாதம் வரும் போது அதை வாங்கி கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கி சிவ நாமம் சொல்லிய வண்ணம் பய பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
    திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லையை தரிசித்தால் முக்தி; அண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி; காசியில் மரிக்க முக்தி.


    தர்ம ஸாதனங்கள்:- பொய் பேசாமை; மடி-ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்,வள்ளல் தன்மை, கருணை, அடக்கம், புலனடக்கம், திருட்டு புத்தி இல்லாமை
    இவையே அற நெறி பற்றி ஒழுகும் வழிகள்.
    காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த ஆசார வஸ்த்ரம் அணிந்து விக்னேஸ்வர பூஜை செய்து விட்டு, கங்கா ஸ்நான ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரணம், ப்ராயஸ்சித்தங்கள், தானங்கள் செய்ய வேண்டும்.


    அருகிலுள்ள கங்கா கட்டத்திற்கு சென்று ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். தங்கி இருக்கும் இடத்தில் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். பார்வணமாக செய்வது சாலச்சிறந்தது. 17 பிண்டங்கள் வைத்து பிண்ட தானம் செய்ய வேண்டும். தர்ப்பணம் .பிண்டங்களை பசுவிற்கும் தரலாம். கங்கையிலும் கரைக்கலாம்.


    5 சாஸ்த்ரிகளுக்கு -9-5 வேஷ்டி, ஹோமம் உண்டு. சாப்பாடு உண்டு.


    இரண்டாம் நாள் காலையில்:-- பஞ்ச கட்ட ஸ்நானம், சிராத்தம், பிண்ட ப்ரதானம், தர்பணம், போட்டில் சென்று செய்து வர வேண்டும்.


    மூன்றாம் நாள் காலையில்:-- தம்பதி பூஜை:- 9-5 வேஷ்டி; 9 கஜம் புடவை, ரவிக்கை துண்டு, திருமாங்கல்யம், மெட்டி, வளையல், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், நலங்கு சாமான்கள், பால் கொடுக்க கிண்ணம், ஸெளபாக்கிய திரவியங்கள், உங்கள் ஊரிலிருந்தே வாங்கி வருவதே நல்லது.
    ஒரு ஸ்வாசினியும், அவரது கணவரயும் வரித்து தம்பதி பூஜை செய்வது நல்லது.


    ஸுவாசினி என்பவர்:-- தனக்கு மட்டும் கணவராக உள்ள , தனது ஒரே கணவரோடு சேர்ந்து மகிழ்ந்து இல் வாழ்க்கை நடத்தும் ஸுமங்கலியாகவும், தனக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஜீவித்து கொண்டிருக்கிற பேறு பெற்றவறாகவும்,
    இனியும் கூட தன் கணவரோடு மகிழ்ந்திருந்து மழளை செல்வங்களை ஈன்றெடுக்கும் பாக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவருக்கே ஸுவாஸினி என்று பெயர்.


    தம்பதி பூஜைக்கு பிறகு ஸமாராதனை 5 ப்ராஹ்மணர்கள் வைத்து செய்ய வேண்டும்.
    பஞ்ச கங்கா கட்டத்தில் ஸ்நானம் செய்து பித்ரு தர்ப்பணம் செய்து பிந்து மாதவரை அர்சிப்பவருக்கு புனர்ஜன்மம் கிடையாது. இங்கு பித்ரு தர்ப்பணத்தில் எந்த எண்ணிக்கையில் எள் தரப்படுகிறதோ அத்தனை வருடங்களுக்கு பித்ருக்களுக்கு த்ருப்தி ஏற்படுகிறது.


    காலை வேளையில் ஆரம்பித்து ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்தக்கரை ஶ்ராத்தம், பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும். 1. அஸி கட்டம்,2. த்ரிலோசன கட்டம்,3. பஞ்ச கங்கா கட்டம், 4. தஶாஸ்வமேத கட்டம், 5. மணிகர்ணிகா கட்டம்.


    பஞ்ச கட்ட தீர்த்த ஶ்ராத்தத்திற்கு செல்லுமுன் தங்கி இருக்கும் இடத்தில் ஸ் நானம் செய்து விட்டு ஸுத்த வஸ்த்ரம் பாரம்பரிய முறையில் உடுத்திக்கொண்டு ,ஸங்கல்பம் செய்து கொண்டு கிளம்ப வேண்டும்.


    அருகில் உள்ள ஒரு கங்கா ஸ்நான கட்டத்தில் ஸ்நானம் செய்துவிட்டு படகில் ஏறிக்கொள்ள வேண்டும். படகில் குமுட்டி அடுப்பு, பாத்திரங்கள் தயாராக இருக்கும்.


    படகில் ஏறிய கட்டத்திலிருந்து , முதல் கட்டமான அஸி கட்டத்திற்கு படகு சென்று கொண்டிரிக்கையில் கர்த்தாவின் மனைவி சிறிது அரிசி போட்டு ,கங்கை தண்ணிரை வேண்டிய அளவு விட்டு அன்னத்தை தயாராக்கி 17 பிண்டங்களும், சிறிது உதிரி அன்னம் நிவேதனத்திற்கும் தயாராக்கி கொள்ள வேண்டும்.
    அஸி கட்டத்தை அடைந்தவுடன் , அங்கே தம்பதியர் இருவரும் ஸ்நானம் செய்து விட்டு , ஹிரண்ய ஶ்ராத்தம் செய்து, 17 பிண்டங்களை கொண்டு பிண்ட ப்ரதானம் செய்து , பிண்டங்களை கங்கையில் கரைத்து விட வேண்டும்.


    பின்னர் தர்ப்பணம், -பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளவும். தர்பைகளை கங்கையில் போடக்கூடாது. படகில் ஏறி அமர்ந்து அடுத்த கட்டதிற்கு (த்ரிலோசன் கட்டம்)படகு செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டங்கள் உதிரி அன்னமும் கர்த்தாவின் மனைவி தயார் செய்திட வேண்டும்.


    அடுத்த கட்டம் அடைந்த வுடன் மீண்டும் தம்பதியர் ஸ்நானம், ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம், பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளுதல், படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் (பஞ்ச கங்கா கட்டம்) செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயார் செய்து கொள்ளுதல்.


    அடுத்த கட்டத்தில் தம்பதியர், ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டங்கள் கங்கையில் கரைத்தல், பாத்திரம் தேய்த்தல், தர்ப்பணம். இங்குள்ள பிந்து மாதவரை அவசியம் செங்குத்து படிக்கட்டுகளை பொறுமையாக இறை சிந்தனையுடன் மேலே ஏறி தரிசித்து பிறகு படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் அடைதல்.(தசாஸ்வமேத கட்டம்)


    படகில் வரும்போது சிறிது அரிசி போட்டு வேக வைத்தி அன்னமாக்கி 17 பிண்டங்கள், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். இந்த கட்டத்தில் ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம் முடித்து கொண்டு


    படகில் ஏறி சிறிது அரிசி போட்டு கங்கை தண்ணிரிலேயே வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். படகு இப்போது ஐந்தாவது கட்டமான மணிகர்ணிகா கட்டம் வந்தடையும். இனு ஒரு தடாகம் உள்ளது, முதலில் இதில் ஸ் நானம் செய்ய வேண்டும். பின்னர் கங்க்கையில் நீராட வேன்டும்.


    ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்திடல், தர்ப்பணம் முடிக்க வேண்டும். கங்கை கரையிலுள்ள ஸுமங்கலியர் களுக்கு ரவிக்கை துண்டு , ஸெளபாக்கிய சாமாங்கள் கொடுத்து ஆசி பெறலாம். கங்கை பூஜை செய்ய வேண்டும்.
    16 உபசார பூஜை கங்கைக்கு செய்ய வேண்டும். பூஜை முடிந்த வுடன் கங்கைகென சாற்றியிருந்த வஸ்த்திரம், ஆபரணம், செளபாக்கிய சாமாண்கள் போன்றவற்றை படகோட்டிக்கு தானமாக தந்திடல் வேண்டும்.


    கால பைரவர் காசிக்கு ஷேத்திர பாலகர். இது விசுவ நாதர் கோயிலுக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கால பைரவரை செவ்வாய் கிழமை, ஞாயிறு கிழமை, அஷ்டமி, சதுர்தசி போன்ற நாட்களில் தரிசிப்பது மிக நல்லது.


    இங்கு பண்டாவினால் மயில் பீலியினால் தரப்படும் அடியே காலபைரவரினால் நமக்கு தரப்படும் தண்டனை. இதை பெற்று கொண்ட பின் பிறகு மீண்டும் பாவ செயல்களை செய்யக்கூடாது.


    கால பைரவர் ஆலயம் செல்லும் வழியில் கரு நிற ரட்சை கயிறு தேவைப்பட்ட எண்ணிக்கை வாங்கி கொண்டு பூஜாரியிடம் கொடுத்து பைரவர் பாதத்தில் வைத்து வாங்கி வர வேண்டும்.


    இந்த ரட்சை கயிறை யாத்திரை முடிவு அடைந்தபின் செய்யும் ஸமாராதனை போது இந்த ரட்சை கயிற்றில் கால பைரவரை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து பிறகு எல்லோருக்கும் இந்த கயிற்றை கொடுக்க வேண்டும்.



    இந்த மூன்று நாட்கள் காலை வேளை காசியில் முடிந்து சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் கோவில்கள் சுற்றி பார்த்து வர வேண்டும்.


    காசியை காலை 8 மணிக்கு மேல் சென்றடைந்தால் ஆலயங்கள் பார்ப்பதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், கங்கா ஹாரத்தி தரிசனம், ஸப்தரிஷி பூஜை பார்ப்பதற்கும் இந்த நாளை ஒதுக்க வேண்டும்.


    காசிக்கு மாலை வேளையில் வந்தடைந்தால் தசாஸ்வமேத கட்டத்தில் நடக்கும் கங்கா ஆரத்தி 6-30 மணி அளவில் ஆரம்பிக்கும்.இதை கண்டு களியுங்கள். அல்லது ஸப்த ரிஷி பூஜை விசுவ நாதர் கோயிலில் 7-30 மணிக்கு ஆரம்பிக்கும். இதை பாருங்கள்.
    காசி விசுவ நாதர் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது.


    தேவையற்ற பொருட்களை கையில் எடுத்து செல்லாதீர்கள். ஒரு பொருளுக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் இதை இழக்க வேண்டி வரும்.
    காசியில் எத்தனை நாட்கள் காலை வேளயில் இருக்கிறீர்களோ அத்தனை நாட்களும் ஸங்கல்பம் செய்து கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்யுங்கள்.


    பல முறை கங்கா ஸ்நானம் செய்த த்ருப்தி மனதில் வர வேண்டும். கங்கையில் வெள்ள பெருக்கு ஏற்படும் நாட்களில் படகு ஓட்ட அரசு தடை விதிக்கும். கடுங்குளிர் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். கடும் கோடை காலமான ஏப்ரல், மே. ஜுன் மாதங்களிலும் யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். தீபாவளி, தை திரு நாள் திரு விழா காலங்கள்.


    சிறு சந்துகள் அதிகம். அதில் தடை விதிக்க பட்டிருந்தாலும் இரு சக்கர வாஹனம் பயங்கரமாக செல்லும். கவனம் தேவை. மாலை வேளியில் கடை வீதிகளில் சைக்கிள் ரிக்ஸா கூட செல்ல நிரந்தர தடை உண்டு. விவரங்கள் கேட்டு அறிந்து செல்ல வேண்டும்.


    காசியில் ஷாப்பிங் செய்வோர் காசியில் அனுபவம் பெற்று உள்ளோர் துணை கொண்டு தெரிவு செய்து வாங்குவதே புத்தி சாலித்தனம்.

    Comment


    • #3
      Re: CONTD__kasi-gaya yathra

      ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம் -உப்புச்சார்,

      பஞ்சகவ்ய ப்ராசனம்- சாணிச்சார்,

      கங்கா ஸ்நானம் - சடைச்சார்.(பரமசிவனின் சடையிலிருந்து வெளிப்பட்டதால்);
      அதனாலே, சம்பிரதாய விரோதமாக ராமேஸ்வரம் போக வேண்டாம்.



      1.நித்தியம் சாளக்ராமம் (பெருமாள்) திருவாராதனம் செய்து, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும்.



      2. ஏகாதசியன்று உபவாசம். பால்,பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு உங்கள் வீட்டுக்காரர் பன்னிரண்டு திருமண் இட்டுக்கொண்டு திருவாராதனம் செய்யணும். மறுநாள் துவாதசியன்னிக்கு சீக்கிரமாகவே திருவாராதனம் செய்து, துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டுப் பாரணை செய்யணும்.



      3. தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி அளவு புல் தரணும்.



      இப்படியெல்லாம் செய்தால், சர்வப் பிராயச்சித்தம் செய்ததாகும் then kalaiyaar may do like this.

      Comment


      • #4
        Re: CONTD__kasi-gaya yathra

        காசியில்திருவண்ணாமலை கிரி வலம் மாதிரிகோவில்கள் சுற்றும் வழக்கம்உண்டு. இது 16கிலோமீட்டர் பாதை.நடந்தோ,பல்லக்கிலோ, ஊர்திகளிலோசெல்கின்றனர். இதற்குபஞ்ச க்ரோஸி பரிக்ரமா என்றுபெயர்.


        காசிரஹஸ்யம் என்ற நூலில் இது பற்றிவிவரம் உள்ளது.அந்தகால பழக்கம் இதை ஐந்து நாட்களில்செய்வர். தற்காலத்தில்ஒரே நாளில் சில மணி நேரத்தில்முடித்து விடுகின்றனர்.


        இந்தபரிக்ரமாவை மல மாஸத்தில்செய்வது விசேஷம் . ஆண்,பெண் இரு பாலரும்,அனைத்து ஜாதியினரும்வேறுபாடின்றி ஒன்றாக செல்வர்.மாதவிடாயின் போதுபங்கேற்க கூடாது.செறுப்புஅணிந்து செல்லக்கூடாது.கையில் கட்டுச்சோறுஎடுத்து செல்லக்கூடாது.


        ஹர ஹரசம்போ மஹாதேவ , காசிவிசுவநாத் கி ஜய் என்று கோஷமிட்ட வாறு செல்ல வேண்டும். ஆண், பெண்உடலுறவு அறவே தவிர்க்க வேண்டும்.


        பரிக்ரமாவிற்குமுதல் நாள் கங்கையில் ஸங்கல்பஸ்நானம்; டுண்டிகணபதி மற்றும் விசுவ நாதர்தரிசனம். மறு நாள்அதிகாலை மணிகர்ணிகா கட்டத்தில்ஸ் நானம்.
        ஞானவாபியில்கணேசரின் நாமங்கள் 56; நரசிம்மர் நாமங்கள்-13;விஷ்ணுவின் நாமங்கள்16; சூரியனின்நாமங்கள்12; பைரவர்நாமங்கள் 8; சிவ,விஷ்ணு நாமங்கள்ஆகியவை கூறி ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

        ஸங்கல்பம்செய்து வைக்கும் குரு ,பரிக்ரமாவில் கூடவேவந்து பூஜைகள் செய்து வைப்பார்.விசுவ நாதரையும்,அன்னபூரணியையு தரிசனம்செய்து விட்டு மெளன
        மாகமணிகர்ணிகா வந்து அங்கிருந்துபரிக்ரமாவை துவங்க வேண்டும்.


        பரிக்ரமா நிறைந்தவுடன் மணிகர்ணிகாகட்டத்திற்கே வந்து வணங்கிவிட்டு ஞானவாபியில் முடித்துகொள்ள வேண்டும். பரிக்ரமாவில்ஐந்து தங்குமிடங்கள்குறிப்பிடபடுகின்றன. இந்தஇடங்களில் மட்டுமே பூஜைகள்சற்று நிதானமாக


        செய்யபடுகின்றது. மற்றஇடங்களில் வழியில் காணும்தெய்வங்களுக்கு புஷ்பம்,அட்சதை, சந்தனம்,கங்கா ஜலம் ஆகியவற்றைஅர்பணித்த வண்ணமே செல்கின்றனர். ஒரே நாளில் பரிக்ரமாவைமுடிப்பவர் கை கூப்பி தொழுதவண்ணம் சென்று கொண்டேஇருக்கின்றனர்.


        தீவிரவ்ருதம் மேற்கொண்டோர் மட்டும்ஐந்தாம் நாளில் கபில் தாராவிற்குபிறகு செல்லும் வழியில்பார்லியை பாதை முழுவதும் ஸர்வ விநாயகர் கோவிலி லிருந்துஸப்த வருண விநாயகர் கோவில்வரை இறைத்து கொண்டே செல்வர்.


        ஐந்துதங்குமிடங்களும் அங்குள்ளபூஜிக்கபடும் தெய்வங்களும்.
        1. கர்த்தமேஸ்வர்- இங்கு கிணற்றில் ஸ் நானம். ஐந்து தான்யங்கள் அளித்து சிவாராதனை.
        2. பீம் சண்டி--உக்கிரமான பீம் சண்டி மாதாவிற்கு குங்குமம் ஸெளபாகிய ஸாமாங்களால் ஆராதனை. ஸ்ருங்கார் ஹாரத்தி.
        3. ராமேஸ்வர்--வருணா நதியில் ஸ்நானம்; பிண்ட ப்ரதானம்; லிங்க பூஜை. ஸ்ருங்கார் ஹாரத்தி.
        4. சிவாப்பூர்- பஞ்ச பாண்டவர் கோவிலில் வழிபாடு.
        5. கபில்தாரா- கபில் தார குண்டத்தில் ஸ்நானம். வ்ருஷபத்வஜேஸ்வர மஹா தேவர் ஆலய வழிபாடு. சமபந்தி போஜனம்.

        வழியில்தென்படும் தெய்வங்களில் சில.முதல் நாள்;-ஸோமநாதர்; விருபாட்சர்;நீல்கண்டர். இரண்டாம்நாள்;-நாகனாதர்,சாமுண்டா தேவி;மோட்சேஸ்வரர்,கார்ணேஸ்வரர்; வீர்பத்ரர்; உன்மத்தபைரவர்; பீம்லதுர்கா; நந்த கேஸ்வர்;கெளரி ப்ரியர்;விரூபாட்சர்;குஸ்மேஸ்வரர்;பீம்லேஸ்வரர்;ஞானேஸ்வரர்;அம்ருதேஸ்வரர்;கந்தர்வேசர்;


        மூன்றாவதுநாள்;-மஹாபீம பைரவர்;பூதநாத்; ஸிந்தூரோடி;குலநதாஸ்வரர்;காமேஸ்வரர்,வீரபத்ரர்;சதுர்முகஞானேஸ்வரர்;டெல்லிவிநாயகர்;குந்தாஸ்வி நாயகர்; உட நாடுவிநாயகர்; தபோபூமி


        நாங்காம்நாள்:- பரதேஸ்வர்;லட்ஸ்மனேஸ்வர்;சத்ருக்னேஸ்வர்;பூமிஸ்வர்;ஹரேஸ்வர்; ஐந்தாம்நாள்:-ஜ்வாலாநரசிம்மர்; ஸர்வநாயக்; வருண ஸங்கமம்;
        ( காசி மாநகருக்குள் நுழைந்து)பிந்து மாதவர்;கவிஷ்டினீஸ்வரர்,மங்கள கெளரி,


        வசிஷ்டேஸ்வரர்;வடேஸ்வர்; ஸித்திவிநாயகர்; ஸப்தவருண விநாயகர்;
        விசுவநாதர்,அன்ன பூர்ணா; தண்டபாணி,டுண்டி விநாயகர்,கால பைரவர்.

        இந்தயாத்திரையை ஆண்டுக்கு இருமுறை செய்யலாம். ஐந்துமுறை பஞ்ச க்ரோசி பரிக்ரமாசெய்தவர்கள் ஸப்த வருணாவிநாயகர் கோவிலில் சிறப்புபூஜை செய்து முடித்து கொள்ளலாம்.


        இதை செய்யஇயலாதவர்கள் பஞ்சக்ரோசிமந்திர் என்ற ஆலயத்திலுள்ளசிவலிங்கத்தை தரிசித்தால்போதுமானது என்பது ஒரு ஐதீகம்.
        இந்தஆலயம் வாராணாசியில் செளக்பகுதியில் காஷ்மீரி மால்ஹவேலிக்கு பின்புறம்,கோலாகல்லில் உள்ளது.இந்த ஆலயம் தான்அவிமுக்த ஷேத்திரம் என்றும்


        மூலவர்தான் ஜ்யோதிர் லிங்கம் என்றும்சொல்ல படுகிறது. பஞ்சக்ரோசி பரிக்ரமா வழியிலுள்ள128 சிவ லிங்கங்களும்இந்த ஆலயதினுள் ப்ரதிஷ்டைஆகி இருக்கிறது.


        இந்தஆலயம் அந்தர் கேஹ யாத்ராஆலயங்களுள் ஒன்று. காசிகண்டம் நூறாவது அத்யாயத்தில்அந்தர் கேஹ யாத்ரா பற்றிகுறிப்புகள் உள்ளன.ப்ருஹ்மவைவர்த்த புராணத்திலும்உள்ளது. காசி மாநகரின்உள் வட்டத்திற்குள் உள்ள பலசிவ லிங்கங்களை தரிசனம்செய்வதே அந்தர்கேஹ யாத்ரா.தீர்த்தேந்துசேகரஹ என்ற நூலிலும் இதன்விவரம் உள்ளது.


        மற்றதலங்களில் செய்த பாபம் கங்கைகரையில் கரைகிறது. காசிமாநகர் உள் வட்டத்தில் செய்தபாபம் பஞ்ச க்ரோசி ப்ரதட்சினம்விதிபடி செய்தால் போகிறது.
        சங்கடமோசன ஆஞ்சனேயர், காசிராஜா அரண்மனை ; சாரநாத்,பனாரஸ் ஹிண்டுயூனிவர்சிடி,பிர்லாமந்திர்,கெளடி மாதாஆலயம், சோழி சமர்ப்பிபதுஸம்ப்ரதாயம்.காசிகேதார் காட் அருகே சுயம்புமூர்த்தி கேதாரேஸ்வரர்ஆலயத்தில் உள்ள தண்ட பாணியைதரிசிக்க வேண்டும்.

        Comment


        • #5
          Re: CONTD__kasi-gaya yathra

          கயாயாத்திரை:--

          சிராத்தபாரிஜாதம் மற்றும் கயா சிராத்தபத்ததி புத்தகங்களில்தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள்இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்குதர்பணம் செய்யலாம் என்றுசொல்லப்பட்டிருக்கிறது.கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான்தர்பணம்.


          தனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி;மாற்றாந்தாய்;
          அன்னையின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா,அன்னையின்அம்மா, பாட்டி,கொள்ளு பாட்டி,


          அப்பாவின்சகோதரர்கள், சகோதரர்களின்மனைவிகள், புத்ரன்;புத்ரி; அப்பாவின்சகோதரிகள்; சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி,


          அம்மாவின்சகோதரர்கள் ;சகோதரர்களின்மனைவிகள். பையன்,பெண்;அம்மாவின்சகோதரிகள் ; சகோதரிகளின் கணவர்கள்,பையன்;பெண்;


          தனதுசகோதரர்கள், ,சகோதரர்களின்மனைவிகள், பையன்,பெண். தனது சகோதரிகள்;சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி.


          தனதுமனைவி, பெண்,பையன்.தனது மாமனார்,மாமியார்;
          தனதுகுரு; குருபத்னி; சிஷ்யன்;யஜமானன்;சினேகிதன்;பணியாட்கள்;


          தனதுவீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள்,இஷ்ட ஜந்துக்கள்;தனது வம்சத்தில்தெரியாமல் விட்டுப்போனபித்ருக்கள்; இவர்களுக்கும்பிண்டம் தனிதனியே வைக்கவேண்டும்.


          ராமேஸ்வரம்,காசி,அலாஹா பாத்தில்17 பிண்டங்கள்வைக்க வேண்டும். இதுதனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா:அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி,அம்மாவின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மாவின்அம்மா; பாட்டி;கொள்ளுபாட்டி;காருணீகபித்ருக்கள்; க்ஷேத்ரபிண்டம்-4.


          இந்தநா ன்கில் மூன்று தனக்குஉதவியவர்கள்; துர்மரணம் அடைந்துள்ளோர்;வாரிசு இல்லாமல்பிண்டம் கிடைக்காதவர்கள்,நரகத்தில்உழல்பவர்கள்; நமக்குதெரிந்த, தெரியாதஉறவினர்கள், நரகங்களில்கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காகஇடப்படுகிறது.


          நாங்காவதுபிண்டம் தர்ம பிண்டம் --தர்மதேவதைக்கும்,பிண்டம்கிடைக்காது தவிக்கும் மற்றஅனைத்து ஆத்மாக்களுக்கும்இடப்படுகிறது.


          ஆதலால்மு ன்னதாகவே அம்மாவின்சகோதரிகளின் கோத்திரம்,சர்மா ,பெயர்மற்றும் அப்பாவின் சகோதரிகளின்கோத்திரம், சர்மா,பெயர் பட்டியல்தயார் செய்து கொண்டு கயா செல்லவேண்டும்.


          உத்தேசம்ஆக64 பிண்டங்கள்கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீகபித்ருக்கள் ஒவ்வொருவருக்கும்ஒரு பிண்டம் என்று வைக்கும்போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவை படலாம்.அதிகம்தேவை படுபவர்கள் மட்டும்முன்னதாக தனியாக ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும்.


          மாத்ருஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19பிண்டங்கள்.ஸ்த்ரீ ஷோடசி19 பிண்டங்கள்சிலர் இடுவர்.ஒரேநாளில் கயா ஸிராத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றால்இவ்வளவு பிண்டங்கள் செய்துகார்யம் செய்து முடிக்கமுடியாது.


          கயாவிலுள்ள புண்ணிய தலங்கள்தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத்என்ற புத்தகத்தில் உள்ளது.ப்ருஹ்ம குண்டம்;ப்ரேத பர்வதம்;ப்ரேத சிலா;ராம குண்டம்;ராம சிலா;உத்திர மானஸ்;ஸூர்ய குண்டம்;கனக்கல்;தக்ஷிண மானஸ்;பல்குனதி;ஜிஹ்வாலோலம்;


          ஸரஸ்வதிதீர்த்தம்; மதங்கவாபி;தர்மாரண்யம்;புத்த கயா;ப்ரஹ்ம ஸரோவர்,விஷ்ணுபாதம்;ருத்திர பாதம்;ப்ருஹ்ம பாதம்;கார்த்திகேயபதம்; தக்ஷிணாக்னிபதம்; கார்ஹபத்னியாக்னிபதம்ஆவஹயாக்னிபதம்; ஸூர்யபதம்; சந்திரபதம்; ஸப்யாக்னிபத,கணேச பதம்;ஸப்யாக்னிபதம்;


          ஆவஸ்த்யாக்னிபதம்; மாதங்கபதம்; க்ரெளஞ்சபதம்;இந்திர பதம்;அகஸ்த்ய பதம்;தெளதபதம்;கஸ்யபபதம்;கஜகர்ணம்;ராம பாதம்;ஸீதா குண்டம்;கயா சிரஸ்;கயா கூபம்;முண்டப்ருஷ்டம்;ஆதி கயா;பீம கயா; கோப்ரசார்;கதாலோலம்;வைதரணி;அக்ஷய வடம்;


          17 நாட்கள்;8 நாள். 5நாள்; 3நாள் ;ஒரேநாள்; ஆகியபல்வகையாக பல கட்டங்களில்
          சிராத்தம்செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது.

          இதில்அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள்கூப கயா; மதுகயா; பீமகயா; வைதரணி;கோஷ்பதம்;பல்குகங்காநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம்ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும்ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.


          பஞ்சகயா சிராத்தம் செய்ய விரும்புவோர்பல்குகங்கா நதி; கயாசிரஸ்; ப்ரஹ்மசிரஸ்;ப்ரேத சிலா;மதங்க வாபிஆகிய இடங்களில் செய்தல்வேண்டும்.5 நாட்கள்தங்கி தினம் ஒன்றாக செய்யவேண்டும்.


          ஒளபாசனஅக்னியில் தான் கயா சிராத்தம்செய்ய வேண்டும். ஆதலால்மனைவியை அவசியம் அழைத்துசெல்ல வேண்டும்.


          கர்த்தாவின்தாய் உயிருடன் இருந்தால்அம்மா வர்கத்திற்கு வரணம்,பிண்டம் இல்லை.
          பெற்றோர்உயிருடன் இருப்பவர்களுக்குகயா சிராத்தம் கிடையாது.பிள்ளை இல்லாவிதவை பிள்ளை இருந்தும் வரஇயலாத நிலைமையிலும் இருப்போர்ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயாசிராத்தம் செய்ய வேண்டும்.


          தாய்இல்லாத, தகப்பன்மட்டும் ஜீவித்திருக்கும்கர்த்தா அம்மாவிற்கு பார்வணசிராத்தம் மட்டுமே செய்யமுடியும் கயாவில். பல்குநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷயவடம் சிராத்த, பிண்டதானம் செய்ய முடியாது. ஆனால் மற்றநதீ தீரங்களில் அப்பாவிற்குயார் பித்ரு தேவதைகளோ அவர்களைஉத்தேசித்து கர்த்தா தீர்த்தசிராத்தம் செய்யலாம்.


          கயாவிற்குபிண்ட தானம் செல்லும் வழியில்பாதியில் திரும்ப நேர்ந்தால்ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ளவேண்டும்.யாத்திரைமத்தியில் தீட்டு குறுக்கிட்டால், நிவ்ருத்திஆன பிறகு தொடர வேண்டும்.மாத விடாய்குறுக்கிட்டால் ஐந்து நாட்கள்ஆன பிறகு தொடர வேண்டும்.


          கயாவில்மங்களா கெளரி கோயில்,புத்த கயா,ப்ருஹ்ம யோனி,மாத்ரு யோனிகோவில்கள்
          குன்றுக்குள்மிக குறுகலான பாதைகள் உள்ளன,.ஊர்ந்து சென்றுமீள இயல்வோர்கு மீண்டும்கருவடையும் கஷ்டம் இருக்காதுஎன்று ஒரு நம்பிக்கை.


          புத்தகயாவிலிருந்து மூன்று கிலோமீட்டரில் தர்ம ராஜர் யக்யம்செய்த இடம் உள்ளது.இங்கிருந்து10 கிலோமீட்டர் தூரத்தில் அக்ஷயவடம் உள்ளது. இங்கிருந்துமூன்று கிலோ மீட்டர் தூரத்தில்விஷ்ணுபாதம் உள்ளது.


          மாலைவேளையில் விஷ்ணு பாதத்தின்மேல் ஒரு வெள்ளை துணி இட்டுநகல் எடுத்து கொடுப்பார்கள்.அதை உடனே எதிரில்உள்ள கடையில் கொடுத்தால் அதைஅழகு படுத்தி மறு நாள் கொடுப்பர்.அதை லேமினேட்செய்து ஊருக்கு எடுத்து வந்துப்ரேம் போட்டு,


          யாத்ராஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்துபூஜித்து பூஜை அறையில் வைத்துகொண்டு தாய் தந்தையர்சிராத்தமன்று சந்தன கட்டைக்குபதிலாக இந்த விஷ்ணு படத்தைவிஷ்ணு ப்ரதினிதியாக பயன்படுத்தலாம்.


          கயாவில்தங்க வேண்டுமென்றால் பழையவேஷ்டி, பேட்டரியுடன்கூடிய டார்ச் லைட், கொசுவத்தி , ஸ்ப்ரே,மெழுகுவர்த்தி,குடிக்க தேவையானகுடி தண்ணீர் கேன் ,காசியிலிருந்துஎடுத்து வர வேண்டும்.


          கயாவில்முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம்செய்ய வேண்டும். வேதங்களில்உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும்.தீர்த்தாடனம்செய்ய வேண்டும். சரீரத்தைவருத்திக்கொண்டு கர்மாக்களைசெய்வதினால் பாப விமோசனம்கிடைக்க பெற வேண்டும்.


          நம்பிக்கையுடன்செய்யப்படும் கார்யங்களால்தான் உலகம் உருவாகி இருக்கிறது.சிராத்தம்செய்வதால் தர்மம் நிலை நிறுத்தபடுகிறது. சிராத்தம்செய்வதால் யாகம் செய்த பலன்கிடைக்கிறது. மனஆசைகள் கிடைக்கிறது.




          ஒருபுத்திரன் புத்திரனாக பிறந்தபலனை முழுவதுமாக பெற பெற்றோர்ஜீவித காலத்தில் அவர்கள்சொல் படி கேட்டு நடத்தல்.அவர்கள் இறந்தபின் சிராத்தம் , பித்ருபோஜனம் செய்வித்தல்;கயாவிற்குசென்று பிண்ட தானம் செய்தல்ஆகியமூன்றும் செய்தல் வேண்டும்.


          கயாவில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராகத்யானம் செய்து பிண்ட ப்ரதானம்,சிராத்தம்செய்பவன் தனது பரம்பரையில்நூறு தலை முறையை கரை ஏற்றிப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கசெய்கிறான்.


          பொதுவிதியாக சாந்திரமான படி அதிகமாதம், குருசுக்கிர அஸ்தமன காலங்களில்க்ஷேத்ராடனம் செய்ய கூடாதுஎன்று உளது. வைத்னாததீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின்படி காசி, கயா,கோதாவரிக்குமட்டும் விதி விலக்கு உள்ளது.


          கயாவில்செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்குஆவாஹனம் கிடையாது.அன்னியரால்பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில்அங்கு கடை பிடிக்கபடும்ஸம்ப்ரதாயங்களே முக்கியம்.வெளியூர்ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோகபத்ததிகள், மடி,ஆசாரம்,ஜாதிகளின்வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள்,குலங்களின்தனித்வம் ஆகிய அனைத்தும்தள்ளுபடி.


          அங்குள்ளஆசார்யன் சொல்வதை கேட்டுஅதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கிமன நிறைவு பெற வேண்டும்.


          சிராத்தஆரம்பத்திலும், நடுவில்,முடிவில்மூம்மூன்று தடவை பித்ருமந்திரம் ஜபிக்க வேண்டும்.பித்ருமந்திரம்:---தேவதாப்யஸ்சபித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்சஏவச
          நமஹ்ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவநமோ நமஹ.


          கயாசிராத்தம் , கயாவில்குறைந்த பக்ஷம் மூன்றுசிராத்தங்கள் ஒரே நாளில்செய்யபடுகிறது. தான்தங்கி இருக்கும் சாவடியில்ஒன்று. பல்குநதி கரையில் மண்டபத்தில்இரண்டு. பல்குநதியில் ஊற்று தோண்ட நீர்எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்துகொள்ள வேண்டும்.




          பல்குநதியில் நீராடி ஈரம் ஆனாலும்ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தைதான் அக்ஷயவட சாயா கிரியைகளைமுடித்து திரும்பும் வரைஅணிந்திருக்க வேண்டும்.பல்குநதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம்,பல்கு தீர்த்தஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம்,பிறகு பல்குதீர்த்த சிராத்தம்,பிறகு பிண்டப்ரதானம்.


          பலகர்த்தாக்களுக்கு ஒன்று சேரக்ரியைகள் நடக்கும்.அந்தந்தகர்தாவிற்கு மண்டபத்திலேயேதனி தனி மண் பானைகள் அவரவர்மனைவிகள் அன்னம் தயாரிக்கவகை செய்ய படுகிறது.
          அவற்றில்ஒரு பானை அன்னத்தில் பல்குதீர்த்த சிராத்தமும்,17 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.


          மற்றொருபானை அன்னத்தில் விஷ்ணுபாதசிராத்தத்திற்கும் ,64 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.அன்னம்தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்துகர்த்தாக்கள் சிராத்தம்செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கிவரும் படிகள் மிக செங்குத்தாகஇருப்பதால் கவனம் தேவை.


          பல்குநதி 17 பிண்டப்ரதானம் முடிந்த வுடன்பிண்டங்களை பல்கு நதி நீரில்கரைக்க வேண்டும்.பசுமாட்டிற்கு வைப்பது இரண்டாம்பக்ஷம். இங்கேயேவிஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம், 64 பிண்டம்வைத்து பிண்ட ப்ரதானம் செய்துஇந்த 64 பிண்டங்களைஎடுத்து சென்று விஷ்ணு பாதத்தில்கொட்டி வணங்க வேண்டும்.தர்பணங்கள்இல்லை.


          அவரவர்தங்கி இருக்கும் இடங்களுக்குஇந்த 64 பிண்டங்களுடன்திரும்பி சென்று, அங்கேதாக சாந்தி செய்து கொண்டுஅக்ஷய வட கயா சிராத்தம் பார்வணமுறைப்படி ஹோமத்துடன் செய்யவேண்டும், குறைந்தது5 கயா வாலிஅந்தணர்களை வரித்து போஜனம்செய்து வைக்க படுகிறது.இதற்காகத்தான்கயா வருகிறோம். அப்பாவர்கம், அம்மாவர்கம், அம்மாவின்அப்பா அம்மா வர்க்கம்.விசுவேதேவர்,காருண்ய பித்ருஎன ஐந்து பேர்.


          இந்தகயா வாலீ அந்தணர்களுக்குஒவ்வொருவற்கும் குறைந்தபக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம்,விசிறி,ஆஸனம்,தீர்த்த பாத்திரம்,தக்ஷிணைதர வேண்டும், உங்கள்ஊரிலிருந்து இவைகளை வாங்கிகொண்டு வந்து கொடுக்க வேண்டும்.மிக சிறந்ததேன், நெய்உங்கள் ஊரிலிருந்து வாங்கிவந்து இங்கு இவர்களுக்குகொடுக்க வேண்டும்.


          ஒருசாவடியில் ஒரே சமயத்தில் பலகர்த்தாக்கள் சிராத்தம்செய்தாலும் அவரவர்களுக்குதனி தனியே சிராத்த சமையல்செய்யப்பட வேண்டும்.அவரவர்மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்திதனியாக ஏற்பாடு செய்தும்செய்யலாம்.


          கர்த்தாவின்மனைவியே அன்னம், பாயஸம்,பரிமார வேண்டும்.ஆபோசனம்,உத்திராபோஜனம்,கர்த்தாவின்மனைவியே போட வேண்டும்.


          பித்ருபோஜனம் முடிந்த உடன் கயாவாலிகட்கு விடை கொடுத்துஅனுப்பி விட்டு , நைவேத்தியபக்ஷணங்கள், 64 பிண்டங்கள்எடுத்து க்கொண்டு அக்ஷய வடசாயாவிற்கு செல்ல வேண்டும்,.இங்குதான்பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.


          அக்ஷயவட சாயாவில் ஒரு ப்ராஹ்மணபோஜனம் செய்தால் ஒரு கோடிப்ராஹ்மண போஜனம் செய்த பலன்உண்டு. முன்னோர்களுக்குப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறதுஎங்கிறது கயா மாஹாத்மியம்எனும் புத்தகம்.


          பித்ருபோஜனம் சாப்பிட்ட ஒருவர்அக்ஷய வட சாயாவிற்கு வருவார்.அவரிடம் த்ருப்திகேட்டு பெற வேண்டும்.ஒரு இலை,ஒரு காய்,ஒருபழம் ஆகியவற்றை ஆயுட் காலம்முடியும் வரை பயன்படுத்தமாட்டோம் என கர்த்தாவும்,அவரது மனைவியும்ஸங்கல்பம்


          செய்துகொள்ள வேண்டும். இந்தஇலை, காய்,பழத்தினைகார்த்திகை மாதத்தில் உங்கள்ஊரில் நிறைய தானமாக வழங்கவேண்டும். இந்தகாய் ,இலை,பழத்தினைஇவர்கள் இறந்த பிறகு வருடாவருடம் வரும் சிராத்தத்தில்உபயோக படுத்த கூடாது.இவர்கள்விடும் காய்,பழம்ப்ரத்யாப்தீக சிராத்தத்தில்உபயோக படுத்த கூடியதாக இருக்கவேண்டும்.


          கயாவில்சிராத்தம் செய்து வைத்தவாத்யாருக்கு அக்ஷய வடசாயாவிலேயே வஸ்த்ர தானம்,ஸம்பாவனைபோன்றவற்றை கொடுக்கவேண்டும்.கர்த்தாவிடும்காய், பழம்வாங்கி கயா வாத்யாருக்குகொடுக்க வேண்டும். அல்லதுஇதற்குண்டான பணம் தர வேண்டும்.


          பிறகுகர்த்தா தான் தங்குமிடம்வந்து சாப்பிட வேண்டும்.னிச்சயம் 3மணிக்குமேலாகிவிடும்.


          பிறகுகிளம்பி காசி செல்ல வேண்டும்.

          Comment


          • #6
            Re: CONTD__kasi-gaya yathra

            ராமேஸ்வரம்,,ப்ரயாகை,காசி,கயா யாத்திரைவிவரம்.
            முதலில்தேவையானவைகளை தயார்படுத்திக்கொள்ளுதல்.


            எந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.


            தன்வீட்டிற்கு புது மருமகள்கல்யாணம் செய்துகொண்டு வந்தஒரு வருடம்;தான் கல்யாணம்செய்து கொண்ட ஒரு வருஷம்;தான் கன்னிகாதானம்செய்து கொடுத்த ஒரு வருஷம்;
            தன்நெருங்கிய உறவினர்களுகுஇறுதி க்ரியை செய்த ஒரு வருஷம்,வேறுவகையான சூதகங்கள்//தீட்டுகள்ஏற்பட்டுள்ள காலங்களிலும்தீர்த்த யாத்திரை செய்யக்கூடாது.


            பெண்கள்மாதவிடாய் ஆன ஐந்தாவது நாள்முதல் தேவ ,பித்ரு கார்யங்களில்கலந்து கொள்ளலாம் .யாத்திரைதொடங்கிய பின்னர் தீட்டுதெரிந்தால் தீட்டு முடியும் வரை சென்ற இடத்திலேயே தங்கிவிட்டு தீட்டு போன பின்னர் யாத்திரை தொடர வேண்டும்.


            மனைவிகர்பமாக இருக்கும்போது தீர்த்தயாத்திரை செல்லக்கூடாது.செல்லும்படிநேர்ந்தால் முண்டனம் (வபனம்)முடி நீக்கல்செய்யக்கூடாது.கர்ப காலம் ஏழுமாதத்திற்கு மேல் ஆகியிருந்தால்தீர்த்த சிராத்தமும்செய்யக்கூடாது.




            தீர்த்தயாத்திரையின் போது பொய்சொல்லக்கூடாது.உடலுறவு கொள்ளக்கூடாது.ஒரு கால சாப்பாடேஉட்கொள்ள வேண்டும்.


            அசைக்கமுடியாத நம்பிகையும்,பக்தியும்,சுத்தமும்முக்யமானது.தீர்த்த வாஸிகளைதூஷிக்ககூடாது.


            தன்சக்திக்கு அதிகமாகவும்குறைவாகவும் இல்லாமல் தானங்கள்தீர்த்த கரையில் செய்ய வேண்டும்.


            செய்யும்கர்மாவிற்கு உரிய பலன் கிடைக்கவேண்டும் அல்லவா.ஆதலால் எவ்விதகுறையுமில்லாமல் வைதீககர்மங்களை எவ்விதம் செய்யவேண்டும் என்பதை முதலில்தெரிந்து கொள்ளவும்.


            தான்செய்த தான தர்மங்களை புகழ்ச்சியாகயாரிடமும் சொல்ல வேண்டாம்.


            அகம்பாவம்,ஆணவம்,ஆடம்பரம் வேண்டாம்..அறிந்தோ அறியாமலோசெய்த பாபங்களுக்கு பஸ்சாதாபத்துடன்பரிஹாரம் செய்து கொள்ளவும்.
            செய்யும்கர்மாக்களை ப்ரஹ்மார்பணமாகசெய்ய வேண்டும்.தீர்த்த யாத்திரையின்போது தான் பிறரிடம் தானம்எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது.
            தேவிபாகவதத்தில் எல்லா ஆஸ்ரமத்தாரும்,எல்லா வர்ணத்தாரும்,பெண்களும்ருத்ராக்ஷம் அணியலாம் என்றுசொல்லபட்டிருக்கிறது.


            பாத்ரூம் செல்லும்போதும் தூங்கும்போதும் ருத்ராக்ஷம் அணியவேண்டாம்.ஐந்து முகருத்ராக்ஷம் அணிந்து யாத்திரைசெல்லலாம்.
            யாத்ராதானம் செய்து விட்டு தீர்த்தயாத்திரைக்கு தேவையானவைகளைசேகரித்து கொண்டு சுவாமிக்குஅஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்ப வேன்டும்.


            அடுத்துசெல்ல உள்ள க்ஷேத்திரத்திற்குமட்டும் ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்,அங்கு சென்றுமுடிந்த பிறகு அங்கிருந்துஅடுத்த க்ஷேத்திர த்திற்குசெல்லும் போது அடுத்தக்ஷேத்திறத்திற்கு மட்டும்ஸங்கல்பம்


            செய்துகொண்டு செல்ல வேண்டும்.ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி,கயா என்று எல்லாஊர்களுக்கும் மொத்தமாகஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாதுஎன்கிறது த்ரிஸ்தலி யாத்ராவிதானம் புத்தகம்.


            பயணம்செல்லும் வழியில் உங்கள்உறவினர்களோ நண்பர்களோ இருந்தால்சாப்பாட்டிற்கு அவர்கள்உதவியை நாடலாம்.இல்லாதவர்கள்கையில் வேண்டியதை தயார் செய்துவைத்துகொண்டு எடுத்து செல்லவேண்டும்..ரயிலில் கொடுக்கும்உணவு உங்கள் உடலுக்குஒத்துக்கொள்ளாமல் ஆகிவிட்டால்அதனால் பேதி,வயிற்றுவலி வந்துவிட்டால் நாம் செல்லும்நோக்கம் நிறைவேறாது.


            இங்குகிடைக்கும் வெற்றிலை வடமாநிலங்களில் கிடைக்காது.நீங்கள்வெற்றிலை எடுத்து செல்லவிரும்பினால் கிளம்பும் நாள்அண்று வெற்றிலை வாங்கி தண்ணிரில்நனைத்து ஒவ்வொன்றாக எடுத்துஇரு பக்கமும்
            துடைத்துஅடுக்கி ஈர துணியில் சுற்றிஅதன் மேல் அடிக்கடி தண்ணீர்தெளித்து காற்று புகாத ஜிப்லாக்கவரில் போட்டு வைத்துகொள்ளவேண்டும்.


            வாடிய,அழுகும் நிலையில்உள்ள வெற்றிலைகளை பார்த்துமுதலில் உபயோகிக்க வேண்டும்.பாக்கு,சுன்னாம்புஏலக்காய்,கிராம்பு தேவையானவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.


            பித்ருக்களுக்குதீர்த்த சிராத்தம் ராமேஸ்வரம்,அலஹாபாத்,காசி.கயா என்ற நான்குஊர்களிலும் செய்ய பட வேண்டும்.,அதில் பெறப்படும்ஆசீர்வாத அக்ஷதைகளை நம்குழந்தைகளுக்கும்,,பேரன் பேத்திகளுக்கும்,மற்றும்


            உறவினர்களுக்கும்எடுத்து செல்ல வசதியாகப்லாஸ்டிக் கவர் பெயர் எழுதிவைத்து கொள்ளவும்.ஆசிர்வாத அக்ஷதைகளைஅதில் போட்டு விட்டு ஜிப்போட்டு மூடி பையில் பத்திரமாகவைத்து கொள்ள வேண்டிய ஏற்பாடு


            செய்துகொள்ளவும். மார்க்கர் பேனா.எடுத்து செல்லவும்,அந்தந்த கவரில்அந்தந்த ஊர்களில் பெயர் எழுதிபோட்டு வைத்து கொள்ளவும்.
            தேவையானஅளவு,தர்பை,ஸமித்து,பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்.அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை..


            காசியிலிருந்துகயா விற்கு காரில் செல்பவர்களுக்குவழியில் சாலை ஓரங்களில் தர்பை இருக்கும்.கத்தி,கத்திரிக்கோல்எடுத்து சென்று
            பச்சையாகதர்ப்பையை வெட்டி எடுத்துசெல்லலாம்.தர்பை செடிகளில்பூச்சிகள் இருக்கும்.கவனமாக இருக்கவேண்டும்.பச்சை தர்பைஉபயோகபடுத்தலாம்.
            தோலினால்ஆன பெல்ட் வேண்டாம்.ப்லாஸ்டிக்அல்லது ரப்பர் பெல்ட் அணிவதற்குவாங்கி எடுத்து செல்ல வேண்டும்.நதி நீர் ஓடும்வேகம் நம்மையே

            கீழே தள்ளும்
            .வேஷ்டி எம்மாத்திரம்,.
            பிவி சி அல்லது ரப்பர் செறுப்புவாங்கி கொள்ள வேண்டும்,இதில் நடந்துபழக்கி கொள்ள வேண்டும்முன்பாகவே. தோல் செறுப்புவேண்டாம்.
            ரயிலில்செல்லும் போது வியாபாரிகள்தொல்லை இருக்கும்.நமது பொருட்கள்திருட்டு போகாமலும் ரயிலில்வியாபாரிகள் திணிக்கும்மோசமான பொருட்களை வாங்காமலும்இருக்க வேண்டும்.


            சிலஊர்களில் குரங்கு தொல்லைஇருக்கும்.மூக்கு கண்ணாடி,அங்கு அணியக்கூடாது.கை பை கையிலோஅல்லது தோளிலோ இருக்க கூடாது.
            அணிகலன்கள்,ஆபரணங்கள் மிகமிக குறைவாக அணிந்து கொள்ளவேண்டும். ரூம் ப்ரஷ்னர்,கொசு விரட்டி,; ஸ்ப்ரேஸ் எடுத்துசெல்ல வேண்டும்.இது ரயிலிலும்நாம் சென்று தங்கும் இடங்களிலும்தேவை படுகின்றது.எல்லா இடங்களிலும்திருடர்கள் இருப்பார்கள்.கவனம் தேவை


            ஊருக்குவந்தவுடன் சமாராதனை செய்தபிறகே நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும்,அன்னபூர்ணி,கங்கை ஜலம்,ரக்ஷை கயிறுமுதலியன கொடுக்க வேண்டும்.
            ரயிலில்ப்ரயாணத்தின் போது சாப்பிடபேப்பர் கப்புகள்,அட்டை ப்லேட்டுகள்.


            அல்லதுஅலுமினியம் ப்லேட்டு,அலிமினியம்டம்ப்லர்,ஸ்பூன்கள்,தேவையானவற்றைகணக்கு செய்து வாங்கி செல்லவேண்டும்.
            லேன்ட்லைனிற்கு வரும் கால்களை உங்கள்செல் போனுக்கு வரும்படி செய்துகொள்ளுங்கள்.செல் போன் சார்ஜர்,ஷேவிங் செட்,வேஷ்டி,ஒன்பது ஐந்து துண்டுகள்,,புடவைகள் 9கஜம் உள்ளாடைகள் பேஸ்ட்,ப்ரஷ்,சோப்பு,சீப்பு,


            கண்ணாடி,தலைக்கு தடவஎண்ணெய்,குங்குமம்,மஞ்சள்,பொடி;துணி துவைக்கும்சோப்பு;ஈரமான உடைகளைவைத்துக்கொள்ள ப்லாஸ்டிக்பைகள்,பஞ்சபாத்திரஉத்திரிணி,பித்தளைதாம்பாளம்,பாக்கு மட்டை
            கிண்ணங்கள். உடை உலர்த்தப்லாஸ்டிக் கயிறு,,வீபூதி,சந்தனம்பொடி க்லிப்புகள்;பித்தளை சொம்பு.எடுத்து செல்லவேண்டும்.

            Comment


            • #7
              Re: CONTD__kasi-gaya yathra

              போதுமானதர்பை அங்கு கிடைக்காது.ஆதலால் 10கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்.புரச இலை-10எடுத்து கொள்ளவும்.காசிகயா விற்கு செல்லும் போது.
              தோலினால்ஆன பொருட்கள் வேண்டாம்,ரப்பர் அல்லதுப்லாஸ்டிக் பெல்ட் இடுப்புக்குதேவை.. ரப்பர் அல்லதுபி.வி.சிமிதியடி வாங்கி காலில்

              போட்டுகொண்டு நடந்து பழகிகொள்ளுங்கள்
              .விலைஅதிகமில்லாமல் வாங்கிபோட்டுக்கொள்ளவேண்டும்.


              ரயிலில்திருட ர் அதிகம் இருக்கும்.ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும்.வியாபாரிகள்மட்டமான பொருட்களை உங்கள்தலையில் கட்ட முயற்சிப்பார்கள்..எச்சரிக்கை தேவை.
              ரயிலிலும்,போய் தங்கும்இடங்களிலும் கொசுவத்தி ;கொசுவிரட்டி,ரூம் ப்ரஷ்னர்ஸ்ப்ரேஸ்.தேவை படும்.எடுத்து வரவும்.


              உங்கள்செல்போனில் உங்கள் லேன்ட்லைன் டெலெபோன் வரும் படிசெய்து கொள்ளவும்(கால் டைவர்சன்)..செல் போன் சார்ஜர்எடுத்து வரவும்.
              உங்கள்வீட்டிற்கு செக்யூரிட்டிஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.


              சென்னைபக்கத்திலிருந்து ரயிலில்வருவோர் ராமேசுவரத்திற்குகாலை 4மணி சுமாருக்குவந்தடையும் ரயிலில் ரிசர்வ்செய்து கொண்டு வந்தால் உங்களைவாத்யார் ரயில் நிலையத்திலிருந்துஅவர் வீட்டிற்கு அழைத்துவருவார்.


              ,தில ஹோமம் செய்யவேண்டியவர்கள் அன்று காலையில்ஆரம்பித்து தில ஹோமம் முடிந்தபிறகு ஜீப்பில் தனுஷ்கோடிசென்று திரும்ப வரலாம்..
              மற்றவர்கள்அன்று ஜீப்பில் தனுஷ்கோடிசென்று சங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டு வேணி மாதவர் பூஜைசெய்துவிட்டு மணல் எடுத்துகொண்டுவாத்யார் வீட்டுக்கு வந்துதீர்த்த சிராத்தம் செய்யலாம்.


              மாலைராமநாத ஸ்வாமி கோவிலுக்குசெல்லலாம்.
              திலஹோமம் செய்தவர்கள் மறுநாள்தீர்த்த சிராத்தம் செய்துவிடலாம்.


              மறுநாள் அக்னி தீர்த்தத்திலும்கோவிலுக்குள் இருக்கும் 22நாழி கிணறு களிலும்காலையில் குளித்துவிட்டு மாலையில் பக்கத்திலுள்ள சீதாதீர்த்தம்;ராமர் தீர்த்தம்,லக்ஷமண தீர்த்தம்;கந்த மாதன பர்வதம்கோதண்ட
              ராமர்கோவில்;நம்பு நாயகிஅம்மன் கோயில்;உஜ்ஜயினிமாகாளியம்மன் கோவில்;பாம்பன் ரயில்பாலம்,பாம்பன் சாலைபாலம் பார்க்கலாம்.



              தீர்த்தசிராத்தம் ஒரு முறை செய்துவிட்டு பிறகு ஒரு வருடத்திற்குள்மறுபடியும் எத்தனை முறைராமேஸ்வரம் வந்தாலும் மறுபடியும்தீர்த்த சிராத்தம்

              செய்யவேண்டாம்
              ..ஒரு வருடத்திற்குமேல் வந்தால் மறுபடியும்தீர்த்த சிராத்தம் செய்யஅநுமதி உண்டு..
              சமுத்ரஸ்நானம் கோவில் கிணறுகளில்குளிப்பது ஒவ்வொரு முறை வரும்போதும் செய்யலாம்.


              ராமேஸ்வரம்ராமநாத சுவாமி கோவில் காலைஐந்து மணி முதல் ஒரு மணிவரையிலும் மாலை மூன்று மணிமுதல் இரவு ஒன்பது மணி வரையிலும்திறந்திருக்கும்.
              ராமேசுவரம்வந்து அடைந்தவுடன் பித்ருகள்ஆவலாக உணவுக்கு காத்திருப்பார்கள்.ஆதலால் முதல்நாள் தீர்த்த சிராத்தம் செய்துவிட்டு மறு நாள் தில ஹோமம்செய்யலாம்..தில ஹோமமும்பித்ருக்களூக்கு தான்செய்கிறோம்.


              ராமேஸ்வரம்ராமநாத ஸ்வாமி கோவிலில்தினந்தோறும் காலை ஐந்துமணிக்கு ஸ்படிக லிங்கத்திற்குஅபிஷேகம் செய்கிறார்கள்.காலை 4மணிக்கு எழுந்துகுளித்துவிட்டு கோவிலுக்குசென்று ஸ்படிக லிங்க அபிஷே

              Comment

              Working...
              X