Announcement

Collapse
No announcement yet.

நோய்களை விரட்டும் காய்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நோய்களை விரட்டும் காய்கள்!

    உணவே மருந்தாக இருக்க வேண்டும்.
    இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை
    உருவாகும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்
    சாந்தி விஜய்பால்.

    நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நோயை முற்றிலும்
    விரட்ட வேண்டுமானால் சில காய்கறி, பழங்கள்
    உட்கொண்டாலே போதும். அவை அருமருந்தாகச்
    செயல்பட்டு நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

    சரியான உணவுப் பழக்க வழக்கத்தை நாம் பின்பற்றினால்
    மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்றவர் எந்த
    நோய்க்கு என்ன மாதிரியான காய்கறி பழங்களை உட்கொள்ள
    வேண்டும் என்று பட்டியலிட்டார்
    -
    அதிகம் வெளியே சாப்பிடுபவர்கள் ரோட்டோரக் கடைகளில்
    சாப்பிடுபவர்கள் தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு
    அமீபியாஸ் என்ற நோய் தொற்றிக் கொள்ளும். சிலருக்கு இது
    மரபு வழி நோயாகக்கூட வரலாம்.

    இதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சரியான மருந்து.
    வேகவைத்த கிழங்கை மோருடன் இரண்டு சிட்டிகை சீரகம்
    சேர்த்து சாப்பிடலாம். வயிற்றுப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டால்
    மாதுளம் பழச்சாறு குடிக்கலாம்.
    -
    ----------------------
    -
    * எப்போது மனது சரியில்லையோ அது உடலை பாதிக்கும்.
    உடல்நிலை சரியில்லை என்றால் மனதை பாதிக்கும். இவை
    இரண்டையும் சரி செய்யும் தன்மை கொண்டது ஆப்பிள்,
    மாம்பழம், அதிகம் மனக்கவலை உள்ளவர்களுக்கு நாள்தோறும்
    ஒரு ஆப்பிள் அருமருந்து. இது கவலைகளைப் போக்கும்.
    அடிக்கடி மாம்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் இதுபோன்ற
    பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை 7.30 மணிக்குள் முடித்துவிட
    வேண்டும். உறங்குவதற்கு முன் பாலில் கசகசா சேர்த்துப்
    பருகலாம்.
    -
    -------------------------------
    -
    * உஙகளுக்கு சர்க்கரை நோய் வரலாம்.
    ஹெல்த் செக்அப்னு செய்யச் சொல்லி பயமுறுத்தி விடுகிறார்கள்.
    சிலருக்குச் சர்க்கரை நோய் என்பது பரம்பரையாக உள்ளது.
    இதற்குச் சரியான தீர்வு நாவல் பழம். இது ரத்தத்தில் சர்க்கரை
    அளவு கூடாமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.

    .......
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: நோய்களை விரட்டும் காய்கள்!

    * அசிடிட்டி இன்று அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்னை.
    இதற்குக் காரணம் காரமான பொருட்கள், கூல் டிரிங்ஸ், காபி, டீ
    அதிகம் குடிப்பதால் கூட ஏற்படலாம். சர்க்கரை நோய்
    இல்லாதவர்கள் மலை வாழைப்பழத்தை வெற்றி அதில் தேன் கலந்து
    சாப்பிட்டால் உணவுக் குழாயிலுள்ள புண்ணை சரியாக்கிவிடும்.
    -
    * நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் செயற்கைப் பழங்கள்,
    உடல்நலம் பாதிக்கும்போது எடுத்துக் கொள்ளும் ஆங்கில
    மருந்துகள் உடலில் உள்ள ரத்தத்தில் மாசு ஏற்படுத்துகின்றன.
    இதனை மெட்டல் கன்டாமினேஷன் என்று சொல்வார்கள்.
    இது ரத்தத்தில் அதிக மாசு ஏற்படுத்தும் போது ரத்த அழுத்தம்
    ஏற்படலாம்.
    -
    * மாதத்திற்கு ஒர வாரம் கொத்தமல்லியைச் சாறாக எடுத்துக்
    குடித்துவர உடலில் உள்ள தேவையில்லாத மெட்டல்
    கண்டாமினேஷனை நீக்கிவிடும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
    ரத்த அழுத்தம், டென்ஷன், அதிகம் ஆண்டிபயாடிக் மாத்திரை
    எடுத்துக் கொள்பவர்கள் இதனைச் செய்ய அற்புதமான பலன்
    கிடைக்கும்.
    -
    * தக்காளியை வெட்டினாலே நான்கு அறைகள் இருக்கும்.
    தக்காளி இதயத்திற்கு நல்லது. ஒருநாள் விட்டு ஒருநாள்
    தக்காளிசாறு குடித்துவர இதயக் கோளாறுகள் வராது.

    இதயத்தை வலுவாக்கும். குறிப்பாக நாட்டுத் தக்காளி சாறு
    குடிக்கலாம். செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
    தக்காளிகளை பயன்படுத்துவது பலனைத் தராது.
    -
    * உங்கள் குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் அடிக்கடி
    தும்முகிறார்களா? அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறதா?
    புளிப்பு இல்லாத கமலா ஆரஞ்சப் புழங்களைச் சாறு எடுத்துக்
    கொடுத்து வர தும்மல், ஜலதோஷம் அண்டாது.
    -
    * பருவ வயதை அடைபவர்களுக்குப் பெரும் பிரச்னை தருவது
    முகப்பரு. இவர்களுக்கு ரத்தத்தில் அசிடிட்டி அதிகமாக
    இருக்கும்.நன்னாரிச் சாறு அருந்தலாம். கொடுக்கலாம்.
    சர்பத் செய்து குடிக்கலாம்.
    -
    * பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை பி.சி.ஓ.டி.
    அதாவது மாதவிடாய்க் கோளாறுகள் இதற்கு மருத்துவரிடம்
    சென்றால் ஈஸ்ட்ரோஜனை மருந்தாக கொடுப்பார்கள்.
    இந்த முருந்தைச் சாப்பிடும்நேரங்களில் மட்டுமே சரியாகும்.
    நிரந்தர தீர்வு வேண்டுமானால் வாழைப்பூவை வாரத்திற்கு
    மூன்று நாட்கள் சாறாக எடுத்துச் சாப்பிடலாம். அதைச்
    சாப்பிடப் பிடிக்காதவர்கள் வாழைப்பூச் சாறுடன் மோர்
    கலந்து சீரகப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம்.

    கர்ப்ப பை மற்றும் சினைப்பை கோளாறுகளைச் சரி
    செய்வதுடன்
    நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.

    * பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு
    பேரிக்காய் அருமருந்து. வாரத்தில் மூன்று நாட்கள்
    சாப்பிடலாம்.
    * பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை
    மூலம் இந்த மூல நோய்க்கு கருணைக் கிழங்கு சரியான மருந்து,
    மூன்று நாட்களுக்கு ஒருதடவை வௌ்ளை வெங்காயத்துடன்
    மசியலாகச் செய்து சாப்பிடலாம். பொதுவாகவே கருணைக்
    கிழங்கை அன்றாட உணவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல்
    ஏற்படாது.

    - வனராஜன்
    -கல்கி
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X