Announcement

Collapse
No announcement yet.

ஒரு நல்ல Whatsup பகிர்வு!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு நல்ல Whatsup பகிர்வு!

    ஒரு நல்ல Whatsup பகிர்வு!


    நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே




    ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்கிறீர்கள்?






    கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.






    ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.


    வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.






    வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.






    ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.






    உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.






    ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.






    உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.






    நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.






    கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: ஒரு நல்ல Whatsup பகிர்வு!

    Originally posted by krishnaamma View Post
    ஒரு நல்ல Whatsup பகிர்வு!


    நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே
    இது எத்தனை பேருக்கு சாத்தியம்? மேலும் தவறு எது? சரி எது?
    ஒரு காலத்தில், ஒரு தேசத்தில் எது ஒன்று தவறெனப்பட்டதோ
    அதுவே வேறு காலத்தில் அதே தேசத்தில் அல்லது வேறு தேசத்தில்
    சரி எனப்படுவதற்கும் வாய்ப்புண்டு. இதற்கு ஏராளமான நடைமுறை உதாரணங்கள் உள்ளன.

    அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. என்கிறார் வள்ளுவர்.


    எனின் பிறன் பழியின்றி வாழ்தலே அறன் என்றாகிறது.


    ஓர் உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்கிறீர்கள்?
    இதிலும் எநதச் சிறந்த தத்துவமும் இல்லை, அவனவன் அல்லது அது அது செய்த கர்ம வசத்தினால் பிறவி எடுத்தலும்
    எந்த யோனியில் பிறக்க வேண்டும், எப்படி மறிக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானமாகிறது.
    மரணம் என்பது சரீரத்துக்குத்தானே ஒழிய, ஆன்மாவுக்கு இல்லை.
    அதுசரி படைக்கப்ட்ட அல்லது சரீரத்தைப் பெற்ற உயிர்களெல்லாம் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால்
    விளைவு என்னாகும்? மேனியைத் தின்று, உயிரை விடுவிக்கும் பொறுப்பை மற்றொரு உயிரிடமே விட்ட இறைவனின் கருணை
    கண்ணுக்குத் தெரியவேண்டுமானால் நிறைய ஞானம் வேண்டும்.
    இறைவனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்
    ஆனால் எந்த விமரிசனமும் அந்தத் துறையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவரால் மட்டுமெ செய்யப்படவேண்டும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: ஒரு நல்ல Whatsup பகிர்வு!

      Originally posted by bmbcAdmin View Post
      இது எத்தனை பேருக்கு சாத்தியம்? மேலும் தவறு எது? சரி எது?
      ஒரு காலத்தில், ஒரு தேசத்தில் எது ஒன்று தவறெனப்பட்டதோ
      அதுவே வேறு காலத்தில் அதே தேசத்தில் அல்லது வேறு தேசத்தில்
      சரி எனப்படுவதற்கும் வாய்ப்புண்டு. இதற்கு ஏராளமான நடைமுறை உதாரணங்கள் உள்ளன.

      அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
      பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. என்கிறார் வள்ளுவர்.


      எனின் பிறன் பழியின்றி வாழ்தலே அறன் என்றாகிறது.




      இதிலும் எநதச் சிறந்த தத்துவமும் இல்லை, அவனவன் அல்லது அது அது செய்த கர்ம வசத்தினால் பிறவி எடுத்தலும்
      எந்த யோனியில் பிறக்க வேண்டும், எப்படி மறிக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானமாகிறது.
      மரணம் என்பது சரீரத்துக்குத்தானே ஒழிய, ஆன்மாவுக்கு இல்லை.
      அதுசரி படைக்கப்ட்ட அல்லது சரீரத்தைப் பெற்ற உயிர்களெல்லாம் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால்
      விளைவு என்னாகும்? மேனியைத் தின்று, உயிரை விடுவிக்கும் பொறுப்பை மற்றொரு உயிரிடமே விட்ட இறைவனின் கருணை
      கண்ணுக்குத் தெரியவேண்டுமானால் நிறைய ஞானம் வேண்டும்.
      இறைவனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்
      ஆனால் எந்த விமரிசனமும் அந்தத் துறையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவரால் மட்டுமெ செய்யப்படவேண்டும்.
      அருமையான விளக்கம் மாமா......மிகவும் நியாயமானதும் கூட !
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X