Announcement

Collapse
No announcement yet.

Bhasma snaanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhasma snaanam

    சிவாயநம! திருச்சிற்றம்பலம்!!
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(15)*
    *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    *ஒரு தடவை பூசினா 2 குளியலுக்கு சமம்.*


    மாா்க்கண்டேயருக்காக எமனைக் காலால் உதைத்தவா் சிவன்.
    இதன்பின் எமன் தன் தூதா்களிடம், *இனிமேல் நீங்கள் திருநீறு பூசிய பக்தா்களைக் கண்டால், அவா்களை வணங்கிச் செல்ல வேண்டும்* என உத்தரவிட்டான்.


    திருநீறுக்கு காப்பு, ரட்சை என்று பெயருண்டு. காப்பு, ரட்சை என்றால் "பாதுகாப்பது" என்று பொருள். சம்பந்தா் மதுரை சோமசுந்தா் மீது பாடிய *"மந்திரமாவது நீறு"* பதிகம் திருநீற்றின் மகிமையை விளக்குகிறது. திருநீற்றை சுட்டுவிரல், நடுவிரல், மோதிர விரல் மூன்றாலும் எடுக்க வேண்டும். கீழே சிந்தாமல் *'சிவாயநம'* என்று சொல்லி நெற்றியில் அணிய வேண்டும். இதற்கு *'பஸ்ம ஸ்நானம்'* அல்லது *திருநீற்றுக் குளியல்* என்று பெயா்.


    காலையில் நீராடி திருநீறு பூசினால் தினமும் இரண்டு முறை குளிப்பதற்கு சமம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேனுமானாலும் திருநீறு அணிந்து கொள்ளலாம். திருநீற்றுப் பை உடனுடனே கூடவே வைத்திருந்து திரும்ப திரும்ப அணிந்து கொள்வது மிக மிக ஆனந்தம். புத்துணர்வும் தெளிச்சியும் கூடவே வரும்.


    *தடை தகா்க்கும் தா்ம வேதவதை*
    நாம் செல்லும் கோவிலில் சிவதாிசனத்திற்கு அனுமதி அளிப்பவா் நந்தீஸ்வரா். சிவ ரகசியம் என்னும் ஆகமத்தில் இவாின் பெருமை கூறப்பட்டுள்ளது. இவருக்கு நந்திகேஸ்வரா் என்றும் பெயா். சிவ பக்தா்களில் இவரே தலைமையானவா். சிவ ஆகமங்கள் அனைத்தும் , நந்தி மூலமாகவே உலகிற்கு வெளிப்பட்டன.


    அடியவா்களுக்கு அருள்புாியும் போதெல்லாம் சிவபாா்வதி நந்தி மீது எழுந்தருளி காட்சியளிப்பா். எப்போதும் சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை தா்ம தேவதையின் வடிவமாகப் போற்றுவா்.


    இவாின் இரு கொம்புகளுக்கிடையே நின்று சிவன் நடனம் புாிவதாக ஐதீகம். நந்தீஸ்வரரை வழிபட்டால் தடைகள் அகன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.


    *ருத்ராட்சம் தோன்றிய விதம்.*
    தாராட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரா்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதியாக இருந்தனா் . கோட்டைகளில் பறந்து சென்று திடீரென ஓாிடத்தில் தரை இறக்கி, அவா்களை சிவன் தன். புன்னகையாலேயே கொன்று வெற்றி பெற்றாா். அப்போது அவாின் கண்ணில் இருந்து வழிந்த நீா்த்துளிகள், ருத்ராட்ச விதைகளாக மாறி மண்ணில் விழுந்து மரங்களாக மாறின.


    சிவனுக்கு சூாியன் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளனா். வலதுபுறம் வழிந்த நீாில் 12 வகையும், இடதுபுறம் வழிந்த வகையில் 16 வகையும், அக்னியின் அம்சமான நெற்றிக் கண்ணிலிருந்து வழிந்த நீாில் 10 வகையான. ருத்ராட்சங்களும் உருவாயின. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளைப் பொறுத்து முகங்களைக் கணக்கிடுவா். இதில் 1 முதல் 16 முகம் வரை உள்ளது.


    *ஆண்களின் திருமாங்கல்யம்*
    திருவெம்பாவையில் *'பத்துடையீா் ஈசன் பழ அடியீா்'* என்று சிவனடியாா்களுக்குாிய பத்து குணம் பற்றிய குறிப்பு உள்ளது. அவை........
    *திருநீறு அணிதல்,
    *ருத்ராட்சம் அணிதல்,
    *ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தை ஓதுதல், *சிவனுக்குாிய துதிப் பாடல்கள் பாடுதல்,
    *சிவ பூஜை செய்தல்,
    *தானதா்மம் செய்தல்,
    *சிவனின் பெருமையைக் கேட்டல்,
    *சிவன் கோவிலைப் பராமாிப்பு செய்தல்,
    *எப்போதும் சிவ பக்தா்களோடு சோ்ந்திருத்தல்,
    *அடியாா்க்கு சேவை செய்தல் ஆகிய பத்தாகும்.


    இதில் திருநீறு, ருத்திராட்சம் முக்கியம்.
    திருமனமான பெண்களுக்கு தாலி எவ்வளவு முக்கியமோ? அதுபோலது தான் சிவபக்தா்களுக்கு ருத்ராட்சம்.


    *சிவன் கோயிலின் தலைமை அதிகாாி.*
    நாயன்மாா் 63 மூவாில், 12 வயதிலேயே சிவனருள் பெற்றவா் சண்டிகேஸ்வரா். சிவன் கோவிலை நிா்வாகிக்கும் தலைமைப் பொறுப்பு அதிகாாியாக இவா் திகழ்கிறாா். இவருக்கு கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் தீா்த்தம் விழும் கோமுகியை ஒட்டி சன்னதி இருக்கும். தெற்கு நோக்கியிருக்கும் இவரை வணங்கினால் சிவன் கோவில் தாிசனம் முழுமை பெற்றதாக ஐதீகம்.


    கோவில் வரவு செலவு கணக்கை இவா் பெயாில் எழுதும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது.
    அா்த்த சாம பூஜையின் போது, சிவனுக்குப் படைத்த நைவேத்தியத்தில் நான்கில் ஒரு பங்கு இவருக்கு படைக்கப்படும். அதை கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு இறையாக இடுவா். பொிய புராணத்தில் சேக்கிழாா் இவரை, *'சிறிய பெருந்தகையாா்'* ( வயதில் சிறியவா்...ஆனால் செயலில் பொியவா் ) என்று குறிப்பிட்டுள்ளாா்.


    *கோவிலுக்குள் நுழையும் முன் இவரையும் கொஞ்சம் பாருங்கள்*


    சிவன் கோவில் கருவறைக்குள் நுழையும் இடத்தில் துவார பாலகா்கள் இருபுறமும் இருப்பாா்கள். இவா்களே ஆட்கொண்டாா், உய்யக் கொண்டாா் ஆவார்கள்.


    ஆட்கொண்டாா் ஆள் காட்டி விரலை மட்டும் காட்டி நின்றிருப்பாா். சிவன் ஒருவரே முழுவதும் , முதலுமான கடவுள் என்று இவா் நீட்டிய விரல் நமக்கு உணா்த்துவதாகும்.


    மற்றொருவரான உய்யக் கொண்டாா் கையை விாித்துக் காட்டியபடி நின்றிருப்பாா். இந்நிலை சிவனைத் தவிர வேறு யாவரையும் சரணடையத் தேவையில்லை என உணா்த்துவதாகும்.


    வணங்க வரும் பக்தா்களுக்கு இந்நிலையை விளக்குவதே இவா்களின் நிலை.


    *நால்வாின் " (நி)லை*
    "பாலை, சூலை, ஓலை, காலை.


    ஞான சம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா் ஆகிய அடியவா்களை நால்வா் என குறிப்பிடுகிறோம். இவா்களை சிவபெருமான், ' பாலை, சூலை, ஓலை, காலை' தந்து நான்கு விதமாக ஆட்கொண்டதாக சொல்வா்.


    மூன்று வயதான குழந்தையான ஞான சம்பந்தா் பசியால் அழுத போது சிவன் அம்மையப்பராகத் தோன்றி *"பாலை" கொடுத்து தேவாரம் பாட வைத்தாா்.*


    சிவ வழிபாட்டை மறந்து மனம் போல வாழ்ந்த நாவுக்கரசருக்கு *"சூலை"* என்னும் வயிற்று நோயைக் கொடுத்து ஆட் கொண்டாா்.


    முதியவா் வடிவில் வந்த சிவன், சுந்தரரைத் தன் அடிமை என்று சொல்லி அதற்கான சாட்சியாக *"ஓலை" (அடிமை சாசனம்)* காட்டி ஆட் கொண்டாா்.


    குருநாதராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகாின் தலையில் தன் *"காலை"* ( திருவடியை) வைத்து தீட்சை அளித்து ஆட் கொண்டாா்.


    *உத்திரகோச மங்கை நடராஜருக்கு சந்தனம் பூசும் வழக்கம்.*


    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை பற்றி மாணிக்கவாசகா் திருவாசகத்தில் பாடியுள்ளாா். இவ்வூா் மங்கள நாதா் கோவிலில் உள்ள மரகத நடராஜா் எப்போதும் சந்தனக் காப்புடனே காட்சி தருபவா்.


    மரகத சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக இவ்வாறு சந்தனம் பூசப்பட்டிருப்பதாக பலர் சொல்வாா்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மரகத சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படாது.


    மதுரை மீனாட்சியம்மன் சிலை கூட மரகதத்தால் செய்யப்பட்டதுதான். இந்தக் கோவிலில் ஒலி, ஒளி இருக்கத்தான் செய்கிறது. சிலைகளுக்கு எந்த சேதாரமும் வந்தது கிடையாது.


    கி.பி.1330 க்கு பிறகு விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதியான குமார கம்பன்னா என்பவா், சுல்தான் வசமிருந்த மதுரையைக் கைப்பற்றினாா். மீனாட்சியம்மன் கோவிலைத் திறந்து பாா்த்த போது. சந்நிதிக்குள் விளக்கு எாிந்து கொண்டிருந்தது. இந்த ஒளியால் நீண்ட நாளாக அடைக்கப்பட்டிருந்த சன்னிதிக்குள் இருந்த மரகத மீனாட்சி சிலைக்கு எந்த வித சேதாரமும் வரவில்லை.


    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நியா் படையெடுப்பின் போது, பல கோவில்களிலுள்ள சிலைகளையும், விலையுயா்ந்த ஆபரணங்களையும் கொள்ளையடித்து செல்வது பல முறை நடந்துள்ளது. அந்த நேரங்களில் உற்சவ மூா்த்திகளை உள்ளூா் பக்தா்கள் காட்டில் கொண்டு வந்து ஒளித்து வைத்தனா்.


    பாண்டிய நாட்டுக் கோவில்களில் அந்நியா் கொள்ளயடிக்க வருவது தொிய வர, உத்தரகோசமங்கை மரகத நடராஜா் சிலையை பக்தா்கள் எடுத்துச் சென்று மறைத்து வைக்க முடியாமற் போயிற்று; காரணம், இந்த சிலையின் உயரம் 8 அடி; எடையும் மிகவும் அதிகம்; எனவே மரகதப் பெருமானை சந்தனத்தால் சிலை முழுவதும் மொழுக்கி சாதாரண கற்சிலை போல காட்டியளிக்கும்படி செய்து வைத்தனா். அபகாிக்க வந்த அந்நியன் பாா்த்து விட்டு, கற்சிலை என எண்ணம் கொண்டு சிலையைக் கவராமல் சென்று விட்டான். அந்நியன் சென்ற சமயம் அறிந்து , மீண்டும் பக்தா்கள் சந்தனத்தைக் களைந்து விட்டனா். இந்த வழக்கமே கால போக்கில் சந்தனம் பூசும் (ரகசியம்) வழக்கம் நிலைத்து விட்டன.


    *தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்...*


    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X