Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    15.அறிவழிய


    அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
    அனலவிய மலமொழுக அகலாதே
    அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
    அழலினிகர் மறலியெனை யழையாதே
    செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
    திருவடியி லணுகவர மருள்வாயே
    சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
    செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே
    நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
    நிருதிநிதி பதிகரிய வனமாலி
    நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
    நிருதனுர மறஅயிலை விடுவோனே
    மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
    மகிழமடி மிசைவளரு மிளையோனே
    மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
    மறையவுயர் கரையிலுறை பெருமாளே.

    - திருச்செந்துர்





    சுருக்க உரை


    அறிவு அழிய, மயக்கம் பெருக, பேச்சு அடங்க, உடல் சூடு தணிய, மலம்
    ஒழுக, தாயும், மனைவியும் உறவினரும் பக்கத்தில் இருந்து அழ,
    கொடிய இயமன் என்னை அழையாதபடி, இரு வினைகளும்,மனமும்,
    ஐம்புலன்களும் ஒழிந்து நீங்க, உனது திருவடியில் நான் அணுக வரம்
    தருவாய்.


    சிவனுக்கு ஒப்பான அகத்திய முனிவர் உள்ளம் மகிழ இரு
    செவிகளிலும்‘ இனிய தமிழை ஓதியவனே. சூரியன், சந்திரன்,
    இயமன், இந்திரன், அக்கினி, குபேரன், திருமால், பிரமன் இவர்கள்
    யாவரும் தம் கடமைகளைச் செய்ய முடியாதவாறு அலையும்படி
    அரசாண்ட சூரனது மார்பு பிளக்கும்படி வேலைச் செலுத்தியவனே.
    சிவபெருமானும் உமாதேவியும் மகிழ அவர்கள் மடியில் வளரும்
    இளையோனே. மரக்கலங்கள் தவழும் கடலினிடை வரும் முத்துக்கள்
    மணல் மேட்டில் மறையும்படி உயர்ந்த திருச்செந்தூர்க் கடற்கரையில்
    வீற்றிருக்கும் பெருமாளே. உன் திருவடியில் அணுக வரம் தருவாய்.



    விளக்கக் குறிப்புகள்
    அ. அறிவழிய மயல் பெருக உரையும் உற......
    (புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
    அலமந்த போதாக அஞசே லென் றருள் செய்வா னமருங் கோயில்
    வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
    சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே)----- சம்பந்தர்
    தேவாரத் திருமுறை 1-130-1.
Working...
X